search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    600 சதுர அடிக்கு வீடுகள் இருக்க வேண்டும்- முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவுறுத்தல்

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 600 சதுர அடிக்கு வீடுகள் இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவுறுத்தினார்.
    புதுச்சேரி:

    ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஒட்டல் அண்ணாமலையின் நடந்தது.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். தலைமைச் செயலாளர் ராஜீவ் வர்மா முன்னிலை வகித்தார். அரசு செயலாளர் அருண் வரவேற்றார். 
    கூட்டத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    கடந்த காலங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்கு ரூ.60 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. புதிய அரசு அமைந்த பிறகு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 99 கோடியே 70 லட்சத்துக்கு ஓராண்டிற்குள் பணிகள் செய்து முடிக்க வேண்டிய வேண்டிய நிலை உள்ளது.

    ஸ்மார்ட் சிட்டி திட்டம் கடந்த ஆட்சியில் கேலிக்கூத்தாக இருந்துள்ளது. பல மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டம் புதுவையில் சொல்லும்படி இல்லை. ஸ்மார்ட் திட்டத்தின் மூலம் கட்டப்படும் வீடுகள் சிறிய அளவில் உள்ளது. நாம் கட்டித்தரும் வீடுகள் குறைந்தது 600 சதுர அடியாக இருக்க வேண்டும். 

    இப்போது 375 சதுரடி தான் உள்ளது. இனி அமைக்கும் வீடுகளாவது குறைந்தது 600 சதுர அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

     புதுவையில் உட்புற சாலைகள் மோசமாக உள்ளது. புதிய சாலைகள் அமைத்து ஓராண்டாவது தாக்கு பிடிக்க வேண்டும்.

    ஆனால் புதிய சாலைகள் அமைந்த சில நாட்களிலேயே ஜல்லிகள் பெயர்ந்து சேதமடைகிறது. தமிழக சாலைகள்  வழியாக  புதுவை எல்லையை அடையும் போது திடீரென பள்ளத்தில் வாகனம் விழுகிறது. ஒரு காலத்தில் புதுவை சாலைகள் நன்றாக இருக்கின்றது என்றனர். இன்றைக்கு தமிழகத்தில் நன்றாக உள்ளதை பார்க்க முடிகிறது. 

    கிராமப்புற இணைப்பு சாலைகள் அமைக்க கடந்த ஆட்சியில் ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் இதுவரையில் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படவில்லை சாலை அமைக்கும் பணியின் போது தரம் கண்டிப்பாக இருக்க வேண்டும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதனை சரியாக கண்காணிக்க வேண்டும்.

    அரசு பணிகள் மேற்கொள்ளும் போது தரத்தில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் நிதிப் பற்றாக்குறை இருப்பது உண்மைதான். கோப்புகள் திரும்பி வருகிறது. பணிகளை காலத்தோடு செய்தால் எந்தவித பிரச்சனையும் இருக்காது காலங்கடந்து செய்தால் விலைவாசி உயர்வு காரணமாக பணியில் தொய்வு ஏற்படும்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார். 

    கூட்டத்தில் அமைச்சர் லட்சுமிநாராயணன்,எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், அனிபால் கென்னடி, வைத்தியநாதன், சம்பத், சிவசங்கர், கே.எஸ்.பி. ரமேஷ், பிரகாஷ் குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
    Next Story
    ×