என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • மத்திய மந்திரி எல்.முருகன் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சிக்கு இதர பிற்படுத்தப்பட்டோர் அணி தலைவர் என்ஜினீயர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.
    • இலவச எரிவாயு திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளிலும் எரிவாயு பயன்படுத்தப்படுகிறது.

    புதுச்சேரி:

    மத்திய மந்திரி எல்.முருகன் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சிக்கு இதர பிற்படுத்தப்பட்டோர் அணி தலைவர் என்ஜினீயர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.

    பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார், பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் மோகன்குமார், எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், ரிச்சர்ட், சிவசங்கரன், வி.பி.ராமலிங்கம், இதர பிற்படுத்தப்பட்டோர் அணி தேசிய செயற்குழு உறுப்பினர் காசிலிங்கம், பொதுச்செயலாளர் சக்தி கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகன் பேசும் போது பிரதமர் மோடியால் கொண்டு வரப்பட்ட தூய்மை பாரத திட்டத்தின்கீழ் அனைத்து வீடுகளுக்கும் கழிவறை கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

    இலவச எரிவாயு திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளிலும் எரிவாயு பயன்படுத்தப்படுகிறது. பிரதம மந்திரி யின் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் புதுவையில் இதுவரை 5 ஆயிரம் பேருக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து புதுவையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வணிகர்களை சந்தித்து மத்திய மந்திரி எல்.முருகன் பேசினார்.

    • புதுவை விடுதலை நாளில் முதல்-அமைச்சர் ரங்கசாமி புதுவை மாநிலம் முழுமையான விடுதலை அடைய மாநில அந்தஸ்தினை மத்திய அரசு வழங்க வேண்டும் என கோரிக்கையினை முன்வைத்துள்ளது வரவேற்கத்தக்கது.
    • மாநிலத்திற்கு முழு அதிகாரம் வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசினை வலியுறுத்தி வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. துணை அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி கொறடாவுமான அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை விடுதலை நாளில் முதல்-அமைச்சர் ரங்கசாமி புதுவை மாநிலம் முழுமையான விடுதலை அடைய மாநில அந்தஸ்தினை மத்திய அரசு வழங்க வேண்டும் என கோரிக்கையினை முன்வைத்துள்ளது வரவேற்கத்தக்கது. புதுவை சட்டப்பேரவையில் ஏறக்குறைய 13 முறை தீர்மானங்கள் பல்வேறு அரசுகளால் மாநில அந்தஸ்து வேண்டி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுகளுக்கு அனுப்பியும் இதுவரை நமக்கான அதிகார விடுதலை இன்னும் கிடைக்கவில்லை.

    புதுவை மாநிலம் முன் எப்பொழுதும் இல்லாத வகையில் பல நெருக்கடிகளை தற்பொழுது சந்தித்து வருகிறது. புதுவை மாநிலத்தை நிதிக் குழுவில் சேர்த்து, நமக்கான வரி வருவாய் பங்கினை முறையாக, உரிமையாக, அளிப்பதில் கூட மத்திய அரசு இதுநாள்வரை முன்வரவில்லை என்பது வேதனை அளிக்கக்கூடிய செயலாகும்.

    மாநிலத்தில் நிலவுகின்ற பல்வேறு முக்கியமான பிரச்சனைகளை உடனுக்கு டன் தீர்ப்பதற்கு, நமக்கு நிதி அதிகாரமும் இல்லை. நிர்வாக அதிகாரமும் இல்லை என்பதனை உணர்ந்துதான்  முதல்-அமைச்சர் நமது மாநிலத்திற்கு முழு அதிகாரம் வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசினை வலியுறுத்தி வருகிறார்.

    கூடாநட்பு கேடாய் முடியும்! என்பது போல மாநிலத்தின் அரசு வேலை வாய்ப்பு பணியிடங்களை ஏதோ மத்திய அரசு சொல்லித்தான் நிரப்பப்பட உள்ளது போன்ற ஒரு தவறான கண்ணோட்டத்தினை மக்கள் மத்தியில் விதைக்க பா.ஜனதாவினர் முயல்வது போன்ற ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் புதுவை முதல்வர் தள்ளப்பட்டுள்ளார்.

    சென்ற 2 சட்டமன்ற கூட்டத் தொடர்களிலும் தி.மு.க. மற்றும் பிரதான கட்சிகள் வைத்த கோரிக்கைகளை நிறை வேற்றும் வகையில் அரசு பணியிடங்களை நிரப்ப முதல்-அமைச்சார் முயற்சி எடுப்பதை கூட பா.ஜனதாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

    எனவே முதல்-அமைச்சர் ரங்கசாமி, அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தை கூட்டி மத்திய உள்துறை மந்திரி, பிரதமர் ஆகியோரை சந்தித்து மாநில அந்தஸ்து கோரிக்கை மனுவை நேரடியாக அளிக்க வேண்டும்.

    பொது வெளியில் மாநில அந்தஸ்து வேண்டும் என கூறுவதை விட்டுவிட்டு அதற்கான முன்னெடுப்புகளை உண்மையாக மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • புதுவை மாநில கராத்தே சங்கம் மற்றும் சிட்டோரியா கராத்தே பயிற்சி பள்ளி இணைந்து சிறப்பு கராத்தே பயிற்சி வகுப்புகளை புதுவை வேல்ராம்பட்டு ஓய்ஸ்மேன் பள்ளியில் தொடங்கி உள்ளது.
    • இலவசமாக அனைத்து தற்காப்பு நுணுக்கங்களையும் பயிற்சியளித்து அதில் சிறப்பாக பயிற்சி பெற்ற மாணவ-மாணவிகளை அகில இந்திய அளவில் நடைபெறும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில கராத்தே சங்கம் மற்றும் சிட்டோரியா கராத்தே பயிற்சி பள்ளி இணைந்து சிறப்பு கராத்தே பயிற்சி வகுப்புகளை புதுவை வேல்ராம்பட்டு ஓய்ஸ்மேன் பள்ளியில் தொடங்கி உள்ளது.

    நிகழ்ச்சிக்கு அகில இந்திய கராத்தே சங்க துணைத் தலைவர் வளவன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். புதுவை மாநில சங்க துணைத் தலைவர் ராஜ் முன்னிலை வகித்தார். தலைமைப் பயிற்சியாளர் அசோக் பயிற்சிகளை கராத்தே வீரர்கள் வீராங்கனைகளுக்கு அளித்தார்.

    மேலும் பயிற்சியாளர் ராமராஜ் இந்த பயிற்சி வகுப்புகளை தொடர்ந்து நடத்தி வருகிறார். இது முழுக்க முழுக்க இலவச கராத்தே பயிற்சி பள்ளியாகும்.

    இலவசமாக அனைத்து தற்காப்பு நுணுக்கங்களையும் பயிற்சியளித்து அதில் சிறப்பாக பயிற்சி பெற்ற மாணவ-மாணவிகளை அகில இந்திய அளவில் நடைபெறும்.

    தேசிய போட்டிகளுக்கும் மற்றும் சர்வதேச கராத்தே போட்டிகளுக்கும் அழைத்து செல்லப்படுவார்கள். இந்த கராத்தே பள்ளி மாநில அரசு மற்றும் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற கராத்தே பள்ளியாகும். பயிற்சிக்கு வரும் மாணவர்களுக்கு தகுதி சான்றிதழ்கள் மற்றும் பெல்ட் சான்றிதழ்கள் பயிற்சி முடிந்த பின்பு வழங்கப்படும்.

    • மணவெளி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்று சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஓராண்டில் செய்த பணிகள் குறித்த சாதனை மலரை மத்திய மந்திரி எல்.முருகன் வெளியிட்டார்.
    • தொகுதி மக்கள் அறியும் வகையில் ஓராண்டு சாதனை மலர் வெளியீட்டு விழா சின்ன வீராம்பட்டினம் பகுதியில் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    மணவெளி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்று சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஓராண்டில் செய்த பணிகள் குறித்த சாதனை மலரை மத்திய மந்திரி எல்.முருகன் வெளியிட்டார்.

    சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மணவெளி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஓராண்டு காலத்தில் தொகுதி மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பணிகள் குறித்து தொகுதி மக்கள் அறியும் வகையில் ஓராண்டு சாதனை மலர் வெளியீட்டு விழா சின்ன வீராம்பட்டினம் பகுதியில் நடைபெற்றது.

    சபாநாயகர் ஏம்பலம் செல்வம் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை மந்திரி எல் முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஓராண்டு சாதனை மலரை வெளியிட்டார். பின்னர் தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் தொகுதி முக்கிய பிரமுகர்கள் அப்பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • மங்களம் தொகுதி மேல்சாத்தமங்கலம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த செங்கீழ்நீரம்மன் கோவில் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கோவில் புனரமைக்கப்படாததால் ஆங்காங்கே விரிசல்கள் உண்டாகி சேதம் அடைந்திருந்தது.
    • இதனைய்டுத்து அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கோவிலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    புதுச்சேரி:

    மங்களம் தொகுதி மேல்சாத்தமங்கலம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த செங்கீழ்நீரம்மன் கோவில் உள்ளது.

    கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கோவில் புனரமைக்கப்படாததால் ஆங்காங்கே விரிசல்கள் உண்டாகி சேதம் அடைந்திருந்தது.

    இந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் கோவிலை புனரமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

    ஆனால் புனரமைப்பு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான தேனீ.ஜெயக்குமாரிடம் முறையிட்டனர்.

    இதனைய்டுத்து அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கோவிலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிறகு கோவில் திருப்பணிகளை மீண்டும் தொடங்க தனது சொந்த பணம் ரூ.3 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார்.

    மேலும், கோவில் திருப்பணிகளை விரைவாக முடிக்குமாறும், தேவையான உதவிகளை செய்வதாகவும் கோவில் அறங்காவலர் குழு நிர்வாகிகளிடம் கூறினார்.

    கோவில் நிர்வாகிகளும், அந்த பகுதி மக்களும் திருப்பணியை தொடர நிதி அளித்த அமைச்சர் தேனீ.ஜெயக்குமாருக்கு பாராட்டு தெரிவித்தனர். இன்னும் ஒரிரு நாளில் கோவில் திருப்பணி தொடங்க உள்ளது.

    • சேதராப்பட்டில் தாயுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பட்டதாரி வாலிபரை வழிமறித்து தாக்கியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • அங்கு இறுதி சடங்கு முடித்து விட்டு பின்னர் தாயுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

    புதுச்சேரி:

    சேதராப்பட்டில் தாயுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பட்டதாரி வாலிபரை வழிமறித்து தாக்கியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேதராப்பட்டு அருகே தமிழக பகுதியான பூத்துறை பாரதி வீதியை சேர்ந்தவர் அன்பு (வயது23). இவர் பி.எஸ்.சி. படித்து முடித்து விட்டு வேலை தேடி வருகிறார்.

    இவர் தனது உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு தனது தாயுடன் மோட்டார் சைக்கிளில் வானூருக்கு சென்றார்.

    அங்கு இறுதி சடங்கு முடித்து விட்டு பின்னர் தாயுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

    சேதராப்பட்டு போலீஸ் நிலையம் எதிரே தனியார் கல்லூரி அருகே வந்த போது வானூர் காலனியை சேர்ந்த ஈழவேந்தன் என்பவர் திடீரென அன்புவை வழி மறித்தார்.

    இதையடுத்து அன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியதும் அவரை ஈழவேந்தன் சரமாரியதாக தாக்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த அன்புவும், அவரது தாய் கஸ்தூரியும் அலறல் சத்தம் போட்டனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் திரண்டு வரவே ஈழவேந்தன் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

    இந்த தாக்குதலில் காயமடைந்த அன்பு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இதுகுறித்து சேதராபட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளி பள்ளியின் மதில் சுவரை ஒட்டி அமைந்துள்ள கழிவுநீர் சாக்கடை அம்பேத்கர் சாலை மட்டத்தை விட உயரமாக அமைந்துள்ளது.
    • மேலும் இதனால் வாக னங்கள் நிறுத்துவதற்கும் வாகன நெரிசல் குறைந்து போக்குவரத்து தடையின்றி நடைபெறுவதற்கும் உதவியாக இருக்கும்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளி பள்ளியின் மதில் சுவரை ஒட்டி அமைந்துள்ள கழிவுநீர் சாக்கடை அம்பேத்கர் சாலை மட்டத்தை விட உயரமாக அமைந்துள்ளது.

    எனவே கழிவுநீர் சாக்கடையை சீரமைத்து சாலை மட்டத்திற்கு அமைத்து கொடுக்கும்படி பெத்தி செமினர் முதல்வர் பஸ்கல் ராஜ் உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியிடம் மனு அளித்தார்.

    அதனைத் தொடர்ந்து அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வல்லவன், உதவி பொறியாளர் பார்த்தசாரதி, உதவி பொறியாளர் சந்திரகுமார், உதவி பொறியாளர் பன்னீர் மற்றும் இளநிலை பொறியாளர் வேல்முருகன் ஆகியோரை நேரில் சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

    மேலும் இதனால் வாக னங்கள் நிறுத்துவதற்கும் வாகன நெரிசல் குறைந்து போக்குவரத்து தடையின்றி நடைபெறுவதற்கும் உதவியாக இருக்கும்.

    எனவே உடனடி நடவடிக்கை எடுத்து சாக்கடையை சீரமைத்து தருமாறு எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அதிகாரிகளை வைத்துக்கொண்டு பஸ்கல் ராஜியிடம் செல்போனில் பேசி இதற்கான தீர்வு காணப்பட்டது.

    அதாவது பள்ளியின் இரு நுழைவு வாயில்களிலும் இரும்பு பாலம் அமைத்து போக்குவரத்து தடையின்றி இயங்கிட பள்ளி நிர்வாகமே செலவிட ஒப்புக்கொண்டது. இதில் அவைத்தலைவர் ரவி, மாநில இளைஞரணி ராஜி, மாநில மீனவர் அணி விநாயகம், கிளைச் செயலாளர்கள் செல்வம், காலப்பன் மற்றும் ராகேஷ் கவுதமன், லாரன்ஸ், ரகுமான், மதி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • முதலியார்பேட்டை தொகுதி உழந்தை ஜோதி நகரில் ரூ .14¾ லட்சம் செலவில் கழிவுநீர் வாய்க்கால் பணியை மத்திய மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்தார்.
    • இப்பணி தொடக்க விழா அசோக்பாபு எம்.எல்.ஏ. முன்னிலையில் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை தொகுதி உழந்தை ஜோதி நகரில் ரூ .14¾ லட்சம் செலவில் கழிவுநீர் வாய்க்கால் பணியை மத்திய மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்தார்.

    முதலியார்பேட்டை தொகுதி உழந்தை ஜோதி நகரில் கழிவுநீர் வாய்க்கால் வசதி செய்து தரும்படி அப்பகுதி மக்கள் அசோக்பாபு எம்.எல்.ஏ.விடம் முறையிட்டனர். இதையடுத்து அசோக்பாபு எம்.எல்.ஏ. தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.14 லட்சத்து 70 ஆயிரம் செலவில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

    இப்பணி தொடக்க விழா அசோக்பாபு எம்.எல்.ஏ. முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் மத்திய மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து கழிவுநீர் வாய்க்கால் பணியை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் சபா நாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜனதா தலைவர் சாமிநாதன், செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிவசங்கரன், வி.பி.ராமலிங்கம், வெங்கடேசன் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • முத்தியால்பேட்டை தொகுதி சோலை நகர் மீனவர்களுடன் மத்திய மீன்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் கலந்துைரயாடல் நிகழ்ச்சி நடந்தது.
    • இந்த கோரிக்கைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த மத்திய மந்திரி, கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் பார்வையிட்டார்.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை தொகுதி சோலை நகர் மீனவர்களுடன் மத்திய மீன்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் கலந்துைரயாடல் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் பங்கேற்ற மீனவர்கள், கடல் அரிப்பை தடுக்க சோலைநகர் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும், படகு நிறுத்துவதற்கு இடவசதி செய்து கொடுக்க

    வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர். இந்த கோரிக்கைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த மத்திய மந்திரி, கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் பார்வையிட்டார்.

    பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் முத்தியால்பேட்டை செந்தில்குமரன் ஏற்பாட்டில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

    இதில் பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், அமை ச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், அசோக் பாபு எம்.எல்.ஏ, பா.ஜனதா பொதுச்செயலாளர் மோகன்குமார், மீனவர் அணி தலைவர் பழனி, மகளிர் அணி தலைவர் ஜெயலட் சுமி, மாநில துணை தலைவர் ஜெயக்குமார், பட்டியலின தலைவர் தமிழ்மாறன், இளைஞரணி நிர்வாகிகள் உமா சங் கர், ராக்பெடரிக், அஸ்வின், வணிகர் பிரிவு செயலாளர் ராயல் சீனிவாசன், பிரபாகரன், எம்.ஆர்.சரவணன், ஜெ.சரவணன், அருண்குமார், விஜய், வடிவேலு, சசிதரன், கணேஷ்குமார், அர்ஜூன், அரவிந்த், தமிழ், ஹரீஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் ஆயிரத்து க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு மத்திய மந்திரியுடன் உரையாடினர்.

    • மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையை சேர்ந்த மாணவர்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் கீழ் புதிய கண்டுபிடிப்பாக சூரிய சக்தியை பயன்படுத்தி குறைந்த செலவில் சார்ஜிங் ஸ்டேஷனை உருவாக்கி உள்ளனர்.
    • இந்த கண்டு பிடிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் கல்லூரியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் துணைத்தலை வர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையை சேர்ந்த மாணவர்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் கீழ் புதிய கண்டுபிடிப்பாக சூரிய சக்தியை பயன்படுத்தி குறைந்த செலவில் சார்ஜிங் ஸ்டேஷனை உருவாக்கி உள்ளனர்.

    இதன் செயல்விளக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மயிலம் கல்விக்குழுமத்தின் இயக்குனர் செந்தில், கல்லூரி முதல்வர் ராஜப்பன், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத்தலைவர் முரளி கிருஷ்ணன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தினர்.

    இந்த கண்டு பிடிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் கல்லூரியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் துணைத்தலை வர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

    இந்த புதிய கண்டுபிடி ப்பினை மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையின் இறுதி ஆண்டு மாணவர்கள் ஹரிகிருஷ்ணா சங்கர், கோகுல், மணிகண்டன், கவுதமன், சதாசிவன், ஆகியோர் இணைந்து உருவா க்கியது குறிப்பிடத்தக்கது.

    • புதுவையில் நிரப்பப்பட உள்ள அரசு பணியிடங்களில் நடப்பில் உள்ள இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராக, அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அறிவித்துள்ளதை கடுமையாக எதிர்க்கிறோம்.
    • மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதற்கு ஏற்ப இட ஒதுக்கீடு முறைப்படுத்த வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பும் நடை முறைப்படுத்தவில்லை.

    புதுச்சேரி:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை–யில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் நிரப்பப்பட உள்ள அரசு பணியிடங்களில் நடப்பில் உள்ள இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராக, அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அறிவித்துள்ளதை கடுமையாக எதிர்க்கிறோம்.

    அரசியல் அமைப்புச் சட்டம் 50 சதவீதம் வரையே இட ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் பொருளாதார ரீதியான பின்தங்கிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு குறித்து வழக்கு நிலுவையில் உள்ளன. மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதற்கு ஏற்ப இட ஒதுக்கீடு முறைப்படுத்த வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பும் நடை முறைப்படுத்தவில்லை.

    ஆகவே புதுவை மாநிலத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய சமூகத்திற்கான இட ஒது க்கீட்டு அறிவிப்பை அதுவரை ரத்து செய்திட வேண்டும்

    இவ்வாறு ராஜாங்கம் அறிக்கையில் கூறீயுள்ளார்.

    • மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரியில் நேஷனல் இன்ஸ்டியூஷன் போர் குவாலிட்டி அண்ட் ரிலியபிலிடி, எந்திரவியல் துறை மாணவர் அமைப்பு சார்பில் உலகத் தர நிர்ணய நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • அதில், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்காக, கட்டுப்பா ட்டாளர்கள், நுகர்வோர் மற்றும் தொழில்துறையினர் மத்தியில் உலகப் பொருளாதாரத்தில் தரப்படு த்தலின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    புதுச்சேரி:

    மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரியில் நேஷனல் இன்ஸ்டியூஷன் போர் குவாலிட்டி அண்ட் ரிலியபிலிடி, எந்திரவியல் துறை மாணவர் அமைப்பு சார்பில் உலகத் தர நிர்ணய நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தலைவர் தன சேகரன், துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மலர்க்கண் முன்னுரை வழங்கினார். எந்திரவியல் துறைத் தலைவர் மற்றும் இன்ஸ்டியூஷன் ஆப் என்ஜினீயர்ஸ் (இந்தியா) புதுவை மாநிலமைய தலைவர் ராஜாராம், உதவி பேராசிரியர் நடராஜன் வரவேற்றனர்.

    போசெகோ இந்தியா லிமிடெட் பொறியியல் மேலாளர் கிருஷ்ணராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, நிலையான அபிவிருத்தி இலக்குகளுடன் கூடிய சிறந்த உலகத்திற்கான பகிரப்பட்ட பார்வை எனும் தலைப்பில், மாணவர்களிடையே உரையாற்றினார்.

    அதில், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்காக, கட்டுப்பா ட்டாளர்கள், நுகர்வோர் மற்றும் தொழில்துறையினர் மத்தியில் உலகப் பொருளாதாரத்தில் தரப்படு த்தலின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். எந்திரவியல் துறை உதவி பேராசிரியர் கணேஷ் குமார் நன்றி கூறினார்.

    ×