search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "underground drains"

    • திடீரென மழை பெய்ததால் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள், பாதசாரிகள் மழையில் நனைந்தபடி சென்றனர்.
    • மழை நீரானது சாலையில் தேங்கி சேரும் சகதியுமாக மாறி உள்ளது இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் மற்றும் மயிலம், பகுதியில் நேற்று இரவு 8 மணியில் இருந்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை இன்று காலை 5 மணி வரையில் கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் திடீரென மழை பெய்ததால் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள், பாதசாரிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். திண்டிவனம் சுற்றுப்புற பகுதிகளில் இடியுடன் கூடிய பெய்த கனமழையால் பல்வேறு தாழ்வான இடங்களில் மழை நீரானது புகுந்தது.

    திண்டிவனம் நகராட்சியில் பாதாள சாக்கடை பணி நடைபெறுவதால் பல்வேறு இடங்களில் மழை நீரானது சாலையில் தேங்கி சேரும் சகதியுமாக மாறி உள்ளது இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர். இந்த பாதாள சாக்கடை பள்ளத்தில் வாகனங்கள் சிக்கி தொடர்ந்து விபத்துக்கள் நடந்து வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • பாதாள வடிகால் வாய்க்கால் அமைத்து கொடுக்கும் படி பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.
    • பாதாள வடிகால் வாய்க்கால் அமைத்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட திப்புராயப்பேட்டையில் பாதாள வடிகால் வாய்க்கால் அமைத்து கொடுக்கும் படி பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    அதனை தொடர்ந்து கென்னடி எம்.எல்.ஏ. பொதுப்பணித்துறை அதிகாரிகளை அணுகி, விடுபட்ட லேசர் கோவில் வீதியில் பாதாள வடிகால் வாய்க்கால் அமைத்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.

    அதன்படி அப்பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் பாதாள வடிகால் வாய்க்கால் அமைப்பத ற்கான தொடக்கவிழா நடந்தது. இதில் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இதில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் வைத்தியநாதன், இளநிலை பொறியாளர் சங்கர், தொகுதி தி.மு.க. செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேல் இளைஞர் அணி ராஜி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×