என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
கல்லூரி பேராசிரியரிடம் ரூ.1லட்சம் மோசடி
- தனியார் மருத்துவ கல்லூரி பேராசிரியரிடம் கிரெடிட் கார்டு மூலம் ரூ.1லட்சம் மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இவர் அங்குள்ள விடுதியிலேயே தங்கி பணி செய்து வருகிறார்.
புதுச்சேரி:
தனியார் மருத்துவ கல்லூரி பேராசிரியரிடம் கிரெடிட் கார்டு மூலம் ரூ.1லட்சம் மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருபுவனை அருகே உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் டாக்டர் பாரத்(வயது26). இவர் அங்குள்ள விடுதியிலேயே தங்கி பணி செய்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் தான் வைத்திருந்த தனியார் வங்கி கிரெடிட் கார்டு மூலம் ரூ.1500-க்கு பொருட்கள் வாங்கினார். ஆனால் அதன் பின்னர் அவரது செல்போனில் ரூ.1 லட்சத்து 7 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டதாக தகவல் வந்தது.
இதனை பார்த்து டாக்டர் பாரத் அதிர்ச்சியடைந்தார். அப்போது இதுகுறித்து புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
தற்போது அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சைபர் கிரைம் வழக்குகள் பதிவு செய்யப்படலாம் என போலீஸ் தலைமையகம் அறிவித்ததின் பேரில் டாக்டர் பாரத் இதுபற்றி திருபுவனை போலீசில் புகார் செய்தார்.
இப்புகாரை ஏற்று திருபுவனை போலீசார் முதன்முறையாக சைபர் கிரைம் வழக்காக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்