என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • பி.ஆர்.டி.சி ஊழியர்கள் சங்க சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • பி.ஆர்.டி.சி தலைமை அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொழிற்சங்க தலைவர் சக்திசிவம் தலைமை வகித்தார்.

    புதுச்சேரி:

    புரட்சியாளர் அம்பேத்கர் புதுவை சாலை போக்குவரத்துக்கழக ஊழியர்கள் சங்கம், பி.ஆர்.டி.சி ஊழியர்கள் சங்க சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பி.ஆர்.டி.சி தலைமை அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொழிற்சங்க தலைவர் சக்திசிவம் தலைமை வகித்தார். பாஸ்கரன் வரவேற்றார். வேலையன், பக்கிரிசாமி, பூபாலன், வடிவேலு, முருகன், அருள்மணி முன்னிலை வகித்தனர்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவபொழிலன், அமைப்பு செயலர் தலையாரி, மகாசம்மேளனம் பிரேம தாசன், ராமச்சந்திரன், மணித்கோவிந்தராஜ் கண்டன உரையாற்றினர். தமிழ்செல்வன் நன்றி கூறினார்.

    பணிநிரந்தரம் கேட்டு போராடியதால் பணிநீக்கம் செய்யப்பட்ட 12 தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும். தினக்கூலி, ஒப்பந்த தொழிலாளர்கள், பெண் நடத்துனர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். 3 ஆண்டாக வழங்கப்படாத போனஸ் வழங்க வேண்டும்.

    அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும். புதிய பஸ்கள் வாங்கி தொலைதூர வழித்தடத்தில் இயக்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    • பத்ரகாளியம்மன் தேவஸ்தானத்திற்குட்பட்ட மகாமாரியம்மன் தீமிதி திருவிழா, கடந்த 1-ந் தேதி பூச்சொரிதல் உற்சவத்துடன் தொடங்கியது.
    • சில பக்தர்கள் அலகு காவடி ஏந்தியவாறு தீக்குழியில் இறங்கி அம்மனை வழிபட்டனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த அம்பகரத்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் தேவஸ்தானத்திற்குட்பட்ட மகாமாரியம்மன் தீமிதி திருவிழா, கடந்த 1-ந் தேதி பூச்சொரிதல் உற்சவத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வீதி உலாவாக வந்து தீக்குழி நடைபெற்ற இடத்தின் முன்பு நிறைவு பெற்றது.

    தொடர்ந்து, திரளான பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு தீக்குழியில் இறங்கி மாரியம்மனை வழிபட்டனர். சில பக்தர்கள் அலகு காவடி ஏந்தியவாறு தீக்குழியில் இறங்கி அம்மனை வழிபட்டனர். விழாவில் கோவில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசித்தனர்.

    • பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் காரைக்காலில் நடைபெற்றது.
    • பொதுமக்களுக்கான குடிநீர் கூட அரசுத்துறை அலுவலகங்களில் இல்லை.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து அரசு துறை அலுவலகங்களிலும் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் 15-ந் தேதி நடத்த வேண்டும். அன்றைய தினம் பொது விடுமுறையாக இருந்தால், அடுத்த வேலை நாளில் பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்து தீர்த்து வைக்க வேண்டும் என, கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கடந்த சில மாதங்களுக்கு முன் உத்தரவிட்டார்.

    அதன்படி, கடந்த சில மாதங்களாக காரைக்காலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளில் மாதந்தோறும் பொதுமக்கள் குறை கேட்பு நாள் நடந்து வந்தது. அதேபோல், மாவட்ட கலெக்டர் குலோத் துங்கன் அனைத்து அரசுத் துறை அலுவலகங்களில் திடீர் ஆய்வு செய்து, காரைக் கால் மாவட்டங்களில் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங் களில் பணிபுரியும் ஊழி யர்கள் அரசு உத்தரவுப்படி காலை 8:45 மணிக்கு பணியில் இருக்க வேண்டும் என்றும், குறித்த நேரத்திற்கு பணிக்கு வராதவர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    அந்தவகையில், மாதம் ஒரு முறை நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் காரைக்காலில் நடைபெற்றது ஆனால் பல்வேறு அரசுத் துறைகளில் துறை அதிகாரி கள், ஊழியர்கள் காலை 10 மணிவரை வரவில்லை. அதேபோல், கோடை வெயி லில் பொதுமக்களுக்கான குடிநீர் கூட அரசுத்துறை அலுவலகங்களில் இல்லை. பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருந்து தங்கள் புகார் களை வழங்கி சென்றனர். இது குறித்து மாவட்ட கலெக்டர் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • கல்லூரி மாணவர் அன்பரசன் சர்வதேச பளுதூக்கு போட்டியில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
    • பொதுச் செயலாளர் சிட்டிபாபு தலைமையில் அன்பரசனை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    தமிழ்நாடு மீனவர் பேரவையின் நிறுவனத் தலைவர் அன்பழகனார் ஆணைப்படி, புதுவை மாநிலம் வைத்திக்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அன்பரசன் சர்வதேச பளுதூக்கு போட்டியில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    தமிழ்நாடு மீனவர் பேரவை புதுவை மாநில நிர்வாகிகள் நேரில் சென்று மாநில பொதுச் செயலாளர் சிட்டிபாபு தலைமையில் அன்பரசனை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    புதுவை மாநில தலைவர் புகழேந்தி மாணவனுக்கு தேவையான உபகரணங்கள், அரசு உதவிப் பெற்று தருவதாக உறுதியளித்தார்.

    அப்போது ஆலோசகர் புத்துப்பட்டார், துணைத்தலைவர் ஜெயவேலு, பொதுச் செயலாளர் குணசீலன், செயலாளர் சுகுமார், சரவணன் உடனிருந்தனர்.

    • கரியமாணிக்கம் பகுதியில் நெட்டப்பாக்கம் போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டு கொண்டிருந்தனர்.
    • பொதுமக்களிடம் ரகளையில் ஈடுப்பட்டு வந்தது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் அருகே உள்ள கல்மண்டபத்தில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர்களை போலீசார் 3 பேரை கைது செய்தனர்.

    கரியமாணிக்கம் பகுதியில் நெட்டப்பாக்கம் போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டு கொண்டிருந்தனர்.

    கல்மண்டபம் தனியார் தொழிற்சலை அருகில் 3 வாலிபர்கள் குடித்துவிட்டு, சாலையில் செல்லும் பொதுமக்களிடம் தகாத வார்த்தைகளில் ஈடுப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நெட்டப்பாக்கம் போலீசார் விரைந்து சென்று பார்த்த போது, குடித்துவிட்டு சாலையில் செல்லும் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுப்பட்டு வந்தது தெரியவந்தது.

    3 இளைஞர்களை பிடித்து விசாரித்ததில் விழுப்புரம், பஞ்சமாதேவி பகுதியை சேர்ந்த சசிகுமார் மகன் சரத்பாபு நல்லப்பரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த மண்ணாங்கட்டி மகன் வேணுகோபால்சாமி மற்றும் ஏரிப்பாக்கம் பகுதியை சேர்ந்த அரிகிருஷ்ணன் மகன் வினோத் என்பது தெரியவந்தது.

    போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நெட்டப்பாக்கம் அருகே உள்ள பண்டசோழ நல்லூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் மகன் ஜீவானந்தம்.
    • சுற்றுலா செல்வதற்காக புறப்பட்டு சென்றதாக தெரிகின்றது.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் அருகே உள்ள பண்டசோழ நல்லூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் மகன் ஜீவானந்தம். இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10மணி அளவில் வாழப்பாடி முருகன் கோவிலுக்கு செல்வதற்காக காரில் புறப்பட்டு சென்றார்.

    சொக்கம்பட்டு அருகே சென்ற போது, காரை ஓரமாக நிறுத்துவதற்காக முயற்சி செய்தார்அப்போது, எதிரே உள்ள கார்மீது லேசாக உராசியதாக தெரிகின்றது. எதிரே உராசிய காரில் பண்டசோழ நல்லூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் இருந்துள்ளார். இவரும் சுற்றுலா செல்வதற்காக புறப்பட்டு சென்றதாக தெரிகின்றது.

    கார் உரசியதில் இருதரப்பிற்கும் வாய்தகராறு ஏற்பட்டது. பின்னர் இந்த தகராறு, மோதலாக மாறியது. இந்த மோதலில் ஜீவானந்தம் தரப்பிற்கு ஆதரவதாக ஸ்ரீதர், ஸ்ரீபன், தரணி ஆகியோரும், கார்த்திக் தரப்பில் கார்த்திக் மற்றும் அவரது இரு நண்பர்கள் ஆகியோரும் மாறிமாறி கத்தி மற்றும் கல் ஆகியவற்றை கொண்டு தாக்கி கொண்டனர்.

    இதில் கார்த்திக் மற்றம் ஜீவானந்தத்திற்கு கத்தி குத்து விழுந்தது.காயம் அடைந்த அவர்கள் இருவரும் புதுவை அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று, நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இருதரப்பினரும் புகார் அளித்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெண்ணுக்கு ஆன்லைன் மூலம் பல கட்டங்களாக கடந்த 4-ந் தேதி வரை ரூ.5 லட்சம் பாலமுருகன் அனுப்பி இருக்கிறார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    சேலம் மாவட்டம், பி.என்.பாளையம், சின்ன மண்கொடு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (27). வேலை காரணமாக புதுவை வந்துள்ள இவர் தேங்காய்திட்டு வடக்கு தெருவில் தனது நண்பர் மணிகண்டன் என்பவருடன் வசித்து வருகிறார்.

    திருமணத்திற்கு பெண் பார்ப்பதற்காக, கடந்த பிப்ரவரி மாதம் திருமண இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். பதிவு செய்த 2 நாட்களுக்கு பிறகு ஊர், பெயர் தெரியாத பெண் ஒருவர், பாலமுருகனை அவரது வாட்ஸ்அப் எண் மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.

    அப்போது, அவரது பெயர் இந்தியஸ்ரீ ராதாகிருஷ்ணன் என்றும், கடலூரில் வசிப்பதாகவும், இணையதளத்தில் புகைப்படம், குடும்ப விவரங்களை பார்த்ததாகவும், அவரை திருமணம்செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

    பிறகு அந்த பெண்ணின் புகைப்படம் மற்றும் குடும்ப விவரங்களை பார்த்துவிட்டு, அவருடன் பாலமுருகன் பேச ஆரம்பித்த போது, தன்னுடைய வருமானம் ரூ.15 ஆயிரம் என கூறியுள்ளார்.

    அதற்கு அந்த பெண், தான் கடலூரில் உதவி கலெக்டராக இருப்பதாகவும், ரூ.30 ஆயிரம் சம்பளம் வாங்குவதாகவும் பாலமுருகனுக்கு நல்ல வேலை இருந்தால் நன்றாக இருக்கும் என கூறியிருக்கிறார்.

    மேலும் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் அரசு வேலை இருக்கிறது. அந்த வேலையை வாங்குவதற்கு ரூ.5 லட்சம் கேட்கிறார்கள். பணத்தை கொடுத்தால் வேலை வாங்கி தருகிறேன். அதன்பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.

    இதை நம்பி அந்த பெண்ணுக்கு ஆன்லைன் மூலம் பல கட்டங்களாக கடந்த 4-ந் தேதி வரை ரூ.5 லட்சம் பாலமுருகன் அனுப்பி இருக்கிறார்.

    அதன்பிறகு அந்த பெண் பாலமுருகனிடம் பேசுவதை நிறுத்திவிட்டு அவரது செல்போன் எண்ணையும் பிளாக் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே சம்பந்தப் பட்ட இணையதளத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு சென்று பார்த்தபோது அது தவறான முகவரி என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மே 30-ந்தேதி காலை தேரோட்டம் நடக்கிறது.
    • ஜூன் 1-ந்தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.

    காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    இத்தகைய சிறப்புவாய்ந்த சனீஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு இன்று காலை 5.30 மணி அளவில் ரிஷப வானத்தில் கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அதனை தொடர்ந்து கொடிமரத்து விநாயகருக்கு திரவியப்பொடி, மஞ்சள், பால், சந்தனம் இளநீர் விபூதி, பழரசம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், அதனை தொடர்ந்து புனிதநீர் கொண்டு அபிஷேகமும் நடைபெற்றது.

    தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, மங்கல வாத்தியங்கள் இசைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் கொடிமரத்தில் கொடியை ஏற்றினர். அதனைத் தொடர்ந்து மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, மே 23-ந் தேதி அடியார்கள் நால்வர் புஷ்பப் பல்லக்கில் வீதியுலாவும், மே 30-ந் தேதி காலை தேரோட்டமும், 31-ந் தேதி சனீஸ்வரர் பகவான் தங்க காக வாகனத்தில் சகோபுர வீதியுலாவும், ஜூன் 1-ந் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் தலைமையில், ஊழியர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    விழாவை முன்னிட்டு இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறுக்கு வருகை தருவார்கள் என்பதால் அவர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர், சாலை சீரமைத்தல், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்ட வருகின்றது.

    • கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மத்திய அரசு 2006-ல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை கொண்டு வந்தது.
    • இந்த திட்டம் 100 நாள் வேலை திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மத்திய அரசு 2006-ல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை கொண்டு வந்தது.

    இந்த திட்டம் 100 நாள் வேலை திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. புதுவையில் பல ஆண்டாக பணிகள் நடைபெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. சட்டசபையிலும் எம்.எல்.ஏக்கள் அதிகாரிகள் மீது புகார் தெரிவித்தனர்.

    குறைகள் களையப்பட்டு திட்டம் தொடங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்திருந்தார். இதன்படி இந்த ஆண்டு 41 லட்சம் மனித நாட்கள் வேலையை ஊரக வளர்ச்சி முகமை மூலம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

    வனத்துறை ஒத்துழைப்புடன் நாற்றுப்ப ண்ணைகள் அமைத்தல், காடு வளர்ப்பு உட்பட பல திட்டங்களில் வேலை நடக்க உள்ளது. தொண்டமாநத்தத்தில் நாற்று பண்ணை திட்ட விழாவில் விதைகளை தூவி திட்டத்தை முதல்- அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்சரவணக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திதர பிரதமர் கவனம் செலுத்தி வருகிறார். நமது அரசு பொறுப்பே ற்றவுடன் அதிக நாட்கள் வேலைதர முடிவு செய்தோம். ரூ.20 கோடியாக இருந்த நிதியை ரூ.100 கோடியாக அமைச்சர் பெற்று வந்துள்ளார்.

    இதனால் ஆண்டுக்கு 100 நாள் வேலை தர முடியும். இதேபோல் சாலை பணிக்கான நிதியும் முழுமையாக செலவிட நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு திட்டங்களை முழுமையாக பயன்படுத்தினால் அதற்கான நிதியை பெற முடியும். அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நலத்திட்டங்களை செயல்படுத்த முடிய வில்லை. நடைமுறையில் இருந்த பல திட்டங்கள் முடங்கிப்போனது. நமது ஆட்சி வந்தவுடன் நலத்திட்டங்கள், அறிவித்தபடி முதியோர் உதவித்தொகை வழங்கப் பட்டுள்ளது.

     27 ஆயிரம் பேருக்கு புதிதாக உதவித்தொகை வழங்கியுள்ளோம். அனைவருக்கும் 10-ந் தேதிக்குள் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கி விட்டோம். சீருடை வழங்கி வருகிறோம். லேப்டாப் வழங்க ரூ.60 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ள்ளது. விரைவில் லேப்டாப் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பாலமுருகன், மாணவியை வீட்டில் இருந்து கடத்தி சென்று, திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
    • தவளக்குப்பத்தில் வாடகை வீட்டில் பாலமுருகனுடன் இருந்த மாணவியை போலீசார் மீட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை தவளக்குப்பம் பகுதியில் பிளஸ்-2 தேர்வு எழுதி விட்டு, வீட்டில் இருந்த 17 வயது மாணவி கடந்த 3-ந்தேதி மாயமானார்.

    அவரது தாய் அளித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    மாணவியை காதலித்து வந்த டிரைவரான பூரணாங்குப்பம் காமராஜ் நகரை சேர்ந்த புண்ணியக்கோடி மகன் பாலமுருகன் (21). மாணவியை வீட்டில் இருந்து கடத்தி சென்று, திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    தவளக்குப்பத்தில் வாடகை வீட்டில் பாலமுருகனுடன் இருந்த மாணவியை போலீசார் மீட்டனர்.

    குழந்தைகள் திருமண தடை சட்டம், கடத்தல் மற்றும் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து பாலமுருகனை போலீசார் கைது செய்தனர்.

    • பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி ஒருவார காலம் ஆகிறது.
    • மாணவர் சேர்க்கை குறித்து அரசிடமிருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை.

    புதுச்சேரி:

    இந்திய மாணவர் சங்கம் தலைவர் ஜெயப்பிரகாஷ் செயலாளர்-ரவீன் குமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பிளஸ்-2 மாணவர்க ளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி ஒருவார காலம் ஆகிறது. ஆனால் தற்போது வரை இளங்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்து அரசிடமிருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை. ஒவ்வொரு ஆண்டும் சரியான திட்டமிடல் இல்லா மல் மாணவர் சேர்க்கையில் பல குழப்பங்களை ஏற்படுத்தி, மாணவர்களையும் பெற்றோர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி, தனியார் கல்லூரி களை நோக்கி செல்ல வைக்க கூடிய வேலை என்பதை அரசே செய்து வருவதை பார்க்க முடிகிறது. இது அரசின் தனியார் கல்வி வியாபாரிகள் மீது கொண்டுள்ள அதீத பாசத்தை வெளிப்படுத்துகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டும் தனியார் கல்வி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு மாணவர் சேர்க்கையை தொடங்கியுள்ளனர். மேலும் அரசிடமிருந்து எந்த அறிவிப்பும் வராததால் பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்குமா கிடைக்காதா என்ற குழப்பத்தில் தங்களது குழந்தைகளை தனியார் கல்லூரிகளில் அதிக பணம் கட்டி மாணவர்களை சேர்த்து விடுகின்றனர்.

    ஆனால் பின்னர் பணம் கட்ட முடியாமல் பல மாண வர்கள் கல்வியை தொடர முடியாமல் இடைநிற்றல் என்பதும் சமீபத்திய காலத்தில் அதிகரித்து வருகிறது. மேலும் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையை கல்வி ஆண்டின் இறுதி நேரத்தில் சேர்க்கையை அரசு முடிப்ப தால் பேராசிரி யர்களாலும் பாடத்தை முடிக்க முடியா மல் குறுகிய காலத்தில் மாணவர்கள் பருவத் தேர்வை எதிர்கொள்வதால், பல மாணவர்களால் தேர்ச்சியடைய முடியாத சூழல் நிலவி வருகிறது.

    அதே போக்கை அரசு இந்த ஆண்டும் மேற்கொள் வதை அரசே ஏழை எளிய மாணவர்களின் உயர் கல்வியை சிதைத்து கல்வி உரிமையை பறிக்கும் செயலாக இந்திய மாணவர் சங்கம் பார்க்கிறது. மேலும் இந்த போக்கினை இந்திய மாணவர் சங்கம் புதுவை மாநில குழு வன்மையாக கண்டிக்கிறது.

    ஆகவே புதுவை அரசும் உயர்கல்வித்துறையும் உடனடியாக சரியான திட்ட மிடலுடன் மாணவர் சேர்க்கையை விரைந்து தொடங்கி காலத்தோடு முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதுவை-விழுப்புரம் சாலையில் இந்திரா சிலை சதுக்கத்தில் பேனர் வைத்துள்ளார்.
    • ஊசுடு தொண்டமாநத்தம் கிராமத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தொடங்குவதையொட்டி பேனர் வைத்துள்ளார்.

    புதுச்சேரி:

    வீட்டை பாதுகாக்க கதவுக்கு பூட்டுபோட்டு செல்வது வழக்கம். ஆனால் புதுவையில் பொது இடத்தில் வைத்துள்ள பேனரை யாரும் அகற்ற கூடாது என்பதை தடுப்பதற்காக பா.ஜனதா அமைச்சர் ஒருவர் பேனருக்கு பூட்டு போட்டுள்ளார். இது பார்ப்போரை வியப்படையச் செய்துள்ளது.

    புதுவை குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார். பா.ஜனதா அமைச்சரான இவர் புதுவை ஊசுடு தொகுதியில் இருந்து வெற்றி பெற்றவர்.

    ஊசுடு தொண்டமாநத்தம் கிராமத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தொடங்குவதையொட்டி பேனர் வைத்துள்ளார். அந்த பேனரில் பிரதமர் மோடி, கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி படங்கள் இடம்பெற்றுள்ளது.

    புதுவை-விழுப்புரம் சாலையில் இந்திரா சிலை சதுக்கத்தில் பேனர் வைத்துள்ளார்.

    இந்த பேனரை யாரும் அகற்ற கூடாது என்பதற்காக பின்பக்கமாக பூட்டு போட்டுள்ளார்.

    இதன் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

    ×