என் மலர்
புதுச்சேரி
- சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
- கலால்துறை அதிகாரி ஜான்சன் நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டார்.
புதுச்சேரி:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பம் பகுதியில் கள்ள சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலை யில் காரைக்கால் மாவட்ட துணை கலெக்டரும், கலால்துறை அதிகாரியுமான ஜான்சன், வட்டாட்சியர் மதன்குமார் மற்றும் பலர், மாவட்டம் முழுவதும் உள்ள 100-க்கு மேற்பட்ட மதுக்கடைகள், பார்கள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட சாராயக் கடைகளில், அதி ரடி சோதனை மேற்கொ ண்டனர்.
இந்த சோதனையின் போது, மதுபானக் கடை மற்றும் சாராயக்கடைகளில் காலாவதியான மது பாட்டில்கள் உள்ளதா? எனவும், மொத்தமாக அண்டை மாநிலங்களுக்கு மது விற்பனை செய்யப்ப டுகிறதா? என்பது குறித்தும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் முறை யாக கணக்குகளை பராமரி க்காத மதுபான கடைகளுக்கு கலால்துறை அதிகாரி ஜான்சன் நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டார். மேலும், காரைக்கால் பகுதியில் இருந்து தமிழக த்துக்கு மது கடத்தலை எல்லையோரங்களில் கண்காணிக்கவும், அரசால் தடை செய்யப்பட்ட பிளா ஸ்டிக் கப்புகள் பயன்ப டுத்தும் மதுபான கடைக ளுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டார்.
- குழாயின் வழியாக கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்த நாய்க்குட்டி கழிவறையின் உள்பகுதிக்குள் மாட்டி கொண்டது.
- கழிப்பறையை முழுமையாக இடித்து துளையிட்டுப் பார்த்தபோது சுமார் 8 அடி ஆழத்தில் நாய்க்குட்டி மாட்டிக்கொண்டு இருந்தது தெரியவந்தது.
புதுச்சேரி:
கடலூர் சாவடி பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் வீட்டு தோட்டத்தில் உள்ள கழிப்பறை அருகே நாய் ஒன்று 3 குட்டிகளை போட்டிருந்தது.
அதில் ஒரு குட்டி வீட்டு கழிவறை குழாய் அருகே விளையாடிக்கொண்டிருந்தது. கழிவறை குழாயின் ஒரு பகுதி உடைந்திருந்தது குழாயின் மேல் பகுதி வழியாக சென்ற நாய்க்குட்டி கால் வழுக்கி ஓட்டைக்குள் விழுந்தது.
குழாயின் வழியாக கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்த நாய்க்குட்டி கழிவறையின் உள்பகுதிக்குள் மாட்டி கொண்டது. அங்கிருந்து வெளியே வர முடியாமல் தவித்தது.
குழாய்க்குள் இருந்து வந்த நாய்க்குட்டியின் முனகல் சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த முருகன் விலங்கு நல ஆர்வலரான செல்லா என்பவருக்கு தகவல் தெரிவித்து அவரது உதவியை நாடினார்.
அங்கு சென்றார் விலங்கு நல ஆர்வலர் செல்லா. குழாயில் சிக்கிய நாய்க்குட்டியை கழிப்பறை ஓட்டை வழியாக வெளியே எடுக்க முயற்சித்தார். அது பலன் அளிக்கவில்லை. கழிப்பறையை உடைத்தால் தான் குட்டியை காப்பாற்ற முடியும் என்ற நிலையில் முருகன் கழிப்பறையை முழுமையாக உடைக்க முடிவு செய்தார். இதையடுத்து கழிப்பறையை முழுமையாக இடித்து துளையிட்டுப் பார்த்தபோது சுமார் 8 அடி ஆழத்தில் நாய்க்குட்டி மாட்டிக்கொண்டு இருந்தது தெரியவந்தது.
சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு நாய்க்குட்டியை உயிருடன் மீட்டனர்.
பின்னர் அந்த நாய்க்குட்டியை குளிப்பாட்டி சுத்தம் செய்தனர். 6 மணி நேரத்திற்கு மேலாக குழாயில் சிக்கிக் கொண்டிருந்த நாய்க்குட்டி வெளியே வந்ததும் தனது தாயின் அரவணைப்பை தேடி அழுதுகொண்டே வேகமாக ஓடி தனது தாயுடன் சேர்ந்து பால் குடித்தது.
இதுகுறித்த வீடியோ வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. விலங்கு நல ஆர்வலர் செல்லா மற்றும் வீட்டு உரிமையாளர் முருகனை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
- கள்ளச்சாராயம் உடம்புக்கு எவ்வளவு கேடு என்பதை, தயாரிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
- புதுவையில் போதை பொருட்களாக இருந்தாலும், கள்ளச்சாராயமாக இருந்தாலும் அதை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் மாளிகையில் சிக்கிம் மாநில விழா நடந்தது. இதில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த சம்பவம் மிகவும் வருத்தம் தரக்கூடிய விஷயம். இது விழுப்புரத்தில் நடந்த ஒரு கரும்புள்ளி என்றே சொல்ல வேண்டும். முதலில் இத்தகைய கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
கள்ளச்சாராயம் உடம்புக்கு எவ்வளவு கேடு என்பதை, தயாரிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
கள்ளச்சாராயம் குடித்தவர்கள் உயிர்வாழ்ந்தால்கூட கண்பார்வை போய்விடும். எவ்வளவு உயர்தர சிகிச்சை கொடுத்தாலும் சிலரை காப்பாற்ற முடியாத சூழ்நிலை மனதுக்கு வருத்தமான ஒன்று. எனவே கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
புதுவையில் போதை பொருட்களாக இருந்தாலும், கள்ளச்சாராயமாக இருந்தாலும் அதை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்து சென்றது, அங்கிருந்து சென்றது என சொல்லி நமது கடமை, பொறுப்பை தட்டிக்கழிக்கக்கூடாது. கள்ளச்சாராயம் எந்த பகுதியிலிருந்து வந்தாலும், அதை கட்டுப்படுத்த வேண்டும்.
கள்ளச்சாராயம் புதுவையில் இருந்து வந்தது என்று சொல்லி, சில பொறுப்புகள் எங்களுக்கு இல்லை என எந்த பகுதியை சேர்ந்தவர்களும் சொல்லிவிட முடியாது.
இந்த நிகழ்வுக்கு அப்படிப்பட்ட சூழ்நிலை இருந்தாலும், அது கட்டுப்படுத்தப்படும். தவறான வழியில் தயாரிக்கப்படும் இத்தகைய போதை பொருட்கள் புதுவையில் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், ஐ.என்.டி.யூ.சி நிர்வாகிகள், இணைப்பு தொழிற்சங்க பிரதிநிதிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
- புதுவை மாநில தலைவராக ஜி.ஆர்.பாலாஜி தேர்வு செய்யப்பட்டதற்கும், புதிய நிர்வாகிகளுக்கும் பொதுக்குழு பாராட்டு தெரிவிக்கிறது.
புதுச்சேரி:
புதுவை மாநில ஐ.என்.டி.யூ.சி, இணைப்பு தொழிற்சங்கங்களின் பொதுக்குழு கூட்டம் ஓட்டல் செண்பகாவில் நடந்தது. ஐ.என்.டி.யூ.சி தலைவர் ஜி.ஆர்.பாலாஜி தலைமை வகித்தார். கேரளா மாநில ஐ.என்.டி.யூ.சி தலைவர் சந்திரசேகரன், புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், ஐ.என்.டி.யூ.சி நிர்வாகிகள், இணைப்பு தொழிற்சங்க பிரதிநிதிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
ஐ.என்.டி.யூ.சி தொழிற்சங்க தேசிய தலைவராக மீண்டும் சஞ்சீவரெட்டி தேர்வு செய்யப்பட்டதற்கு பொதுக்குழு வாழ்த்துக்களை தெரிவிக்கிறது. மாநாட்டில் அகில இந்திய துணைத்தலைவராக சந்திரசேகரன், புதுவை மாநில தலைவராக ஜி.ஆர்.பாலாஜி தேர்வு செய்யப்பட்டதற்கும், புதிய நிர்வாகிகளுக்கும் பொதுக்குழு பாராட்டு தெரிவிக்கிறது.
ராகுல்காந்தி எம்.பி பதவிநீக்கம் செய்யப்பட்டதற்கு ஐ.என்.டி.யூ.சி கண்டனம் தெரிவிக்கிறது. பா.ஜனதா அரசை தூக்கியெறிந்த கர்நாடக மக்களுக்கு நன்றி. புதுவை ஸ்பின்கோ ஆலையை மீண்டும் அரசே இயக்க வேண்டும். தனியார் பெயிண்ட் ஆலையில் சம்பள உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியதற்கு பொதுக்குழு நன்றி தெரிவிக்கிறது. புதுவை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும். அவரை மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபட வேண்டும். என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- கொம்பாக்கம் குமரன் நகர், கோதண்டபாணி நகர், நெசவாளர் நகர், ஒட்டாம்பாளையம் ரோடு ஆகிய இடங்களில் தொகுதி மேம்பாட்டு நிதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி.
- தினசரி குப்பை அள்ளுதல், கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாருதல், கொசு மருந்து தௌித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமாரை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.
அப்போது, வில்லியனூர் கொம்பாக்கம் வார்டுக்கு உட்பட்ட கொம்பாக்கம் குமரன் நகர், கோதண்டபாணி நகர், நெசவாளர் நகர், ஒட்டாம்பாளையம் ரோடு ஆகிய இடங்களில் தொகுதி மேம்பாட்டு நிதியில் தார்ச்சாலை அமைத்தல், கொம்பாக்கம்பேட் காந்தி பள்ளி வழியாக செல்லும் வாய்க்கால் சீரமைப்பது, குப்பம், குப்பம்பேட், பாப்பாஞ்சாவடி, ஒட்டாம்பாளையம் ஆகிய பகுதிகளில் தினசரி குப்பை அள்ளுதல், கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாருதல், கொசு மருந்து தௌித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
கொம்பாக்கம், குப்பம்பேட் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட பொதுக்கழிப்பிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில், நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் வெங்கடாஜலபதி, இளநிலைப் பொறியாளர் ஞானசேகர், மருத்துவ அதிகாரி துளசிராமன், நில அளவை அதிகாரி அண்ணாமலை, கொம்பாக்கம் தி.மு.க நிர்வாகிகள் கந்தசாமி, ஜெகன்மோகன், ராஜேந்திரன், கதிரவன், ஜனார்த்தனன், தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, துணைச் செயலாளர் அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜூக்கு, விழுப்புரம் மாவட்டமும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.
- போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் மரக்காணம் வந்தார். அங்கு கள்ளச்சாராய வழக்கு குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார்.
சேதராப்பட்டு:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்ததில் இன்று அதிகாலை வரையில் 13 பேர் உயிரிழந்தனர். 38-க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரி, புதுவை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக கள்ளச்சாராய வியாபாரிகளான அமரன், முத்து, ஆறுமுகம், ரவி, மண்ணாங்கட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், மதுவிலக்கு பிரிவு உதவி போலீஸ் சூப்பிரண்டு, மரக்காணம் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், கோட்டக்குப்பம் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் ஏட்டுகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருந்ததால், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று மதியம் நேரில் வந்தார். அங்கு சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், காலியாக உள்ள விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யாக ஜியாவுல் ஹக் நியமிக்கப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜூக்கு, விழுப்புரம் மாவட்டமும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை 6 மணிக்கு போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் மரக்காணம் வந்தார். அங்கு கள்ளச்சாராய வழக்கு குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக மரக்காணம், அனுமந்தை, நடுக்குப்பம், ஆலந்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 10 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் அளித்த தகவலின்படி, மெத்தனால் விற்பனை செய்த புதுவை முத்தியால்பேட்டையை சேர்ந்த பர்கத் என்ற ராஜா, ஏழுமலை, ஆகிய 2 பேரை மரக்காணம் போலீசார் கைது செய்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு மெத்தனால் எங்கிருந்து கிடைத்தது. அதனை யார்? யாரிடம் விற்றனர்? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. மேலும், இதில் அரசியல் கட்சியினர் யாருக்கேனும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மரக்காணம் கள்ளச்சாராய வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கும் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
மரக்காணம் எக்கியார் குப்பத்தில் மருத்துவக் குழுவினர் முகாமிட்டுள்ளனர். அவர்கள் அக்கிராம மக்களுக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், எக்கியார்குப்பத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவுதால் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கைதான ராஜா புதுவையின் பல்வேறு இடங்களில் சாராயக்கடை ஏலம் எடுத்து நடத்தி வந்ததும் தெரியவந்தது. இவர் எந்த வகையான வேதிப்பொருளை சாராயம் தயாரிக்க கொடுத்தார்? இவருக்கு யார் மூலம் கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் மேலும் புதுவையை சேர்ந்த முக்கிய அரசியல் புள்ளிகள் சிக்குவார்கள் என கூறப்படுகிறது.
- கூடப்பாக்கம் அர்ஜுனா ஹாக்கி விளையாட்டு குழு சார்பில் தேசிய அளவிலான 5.ஏ.சைட் எனப்படும் ஹாக்கி போட்டி நடந்தது.
- ஊசுடு தொகுதி முன்னாள் எம்எல்ஏ கார்த்திகேயன் தேசியக் கொடியேற்றி சீறுடை வழங்கி போட்டியை துவக்கி வைத்தார்.
புதுச்சேரி:
கூடப்பாக்கம் அர்ஜுனா ஹாக்கி விளையாட்டு குழு சார்பில் தேசிய அளவிலான 5.ஏ.சைட் எனப்படும் ஹாக்கி போட்டி நடந்தது.
ஊசுடு தொகுதி முன்னாள் எம்எல்ஏ கார்த்திகேயன் தேசியக் கொடியேற்றி சீறுடை வழங்கி போட்டியை துவக்கி வைத்தார். இதில் வட்டார காங்கிரஸ் தலைவர் சங்கர் பாபு, கே.எம்.பி லோகையன், செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தப் போட்டியில் புதுவை, பூணே, கொச்சின், சென்னை எஸ்.ஆர்.எம்அணி கொல்கத்தா, மதுரை, தர்மபுரி, ஊட்டி ஆகிய பகுதியிலிருந்து 24 அணிகள் பங்கேற்றது. 2 நாட்கள் நடந்த போட்டியில் முதல் பரிசை சென்னை எஸ்.ஆர்.எம் அணி பெற்றது.
முதல் பரிசு வென்ற எஸ்.ஆர்.எம் அணிக்கு அமைச்சர் சாய்.ஜெ.சரவணகுமார் ரூபாய் 20 ஆயிரம் பரிசுத்தொகையுடன் கோப்பை வழங்கி பாராட்டினார்.
இந்த அணிக்கான சுடர் கேடையத்தை ஏ.டி.எஸ் தாமோதரன் வழங்கினார். இரண்டாம் பரிசை தர்மபுரி பாலக்கோடு அணி வென்றது. இந்த அணிக்கு பாஜக மாநில செயலாளர் ஜெயக்குமார் ரெட்டியார் ரூ. 15,000 ரொக்க பரிசு மற்றும் கோப்பை வழங்கி பாராட்டினார். மனிதநேய மக்கள் சேவை இயக்க இளைஞர் அணி தலைவர் விநாயகம் இந்த அணிக்கு சுழற் கேடயத்தை வழங்கினார்.
3-ம் பரிசு வென்ற புதுச்சேரி ஜெம்ஸ் ஹாக்கி கிளப் பணிக்கு ரூபாய் பத்தாயிரம் பரிசு தொகையுடன் கோப்பையை அய்யனார் வழங்கினார் அதற்கான சுழற் கேடயத்தை திவாகர் மேனன் வழங்கினார். இந்த போட்டியில் நான்காம் பரிசு வென்ற அர்ஜுனா ஹாக்கி கிளப் கூடப்பாக்கம் அணியினருக்கு ரூபாய் 5000 ரொக்க பரிசினை ராம.சிவராஜன் வழங்கினார்.
இந்த அணிக்கு சுழற் கேடயத்தை பிரபாகரன் வழங்கினார். இவ்விழாவில் லே பாண்டிச்சேரி ஹாக்கி சங்கத் தலைவர் குமரேசன், செயலாளர் அன்பழகன், முன்னாள் தலைவர் ராஜசேகர், ஓஎன்ஜிசி முன்னாள் செயலர் பழனி, செந்தில் மற்றும் காக்கிசங்க நிர்வாகிகள் பங்கு பெற்றனர் பரிசிறப்பு விழாவில் அர்ஜுனாகி கிளப் தலைவர் ராமு நன்றி கூறினார். தொடர் நாயகன் விருதை எஸ்.ஆர்.எம். அணியின் வீரர் அகிலனுக்கும், தொடரில் சிறந்த தடுப்பு ஆட்டக்காரராக அர்ஜுனா ஹாக்கி கிளப்பை சேர்ந்த அருணாச்சலத்துக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கூடப்பாக்கம் அர்ஜுனா ஹாக்கி கிளப் நிர்வாகிகள் பச்சையப்பன் கருணாகரன் சதீஷ் உலக பிரகாஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- கேரள மாநில ஐ.என்.டி.யூ.சி தலைவருமான சந்திரசேகரன் முன்னிலையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
- நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமிநாராயணன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி:
ஐ.என்.டி.யூ.சி தலைவர் ரவிச்சந்திரன் 2-ம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று காலை 9 மணிக்கு புதுவை மாநில ஐ.என்.டி.யூ.சி தலைமை அலுவலகத்தில் திருவுருவ படத்திற்கு புதுவை மாநில ஐ.என்.டி.யூ.சி தலைவர் ஜி.ஆர்.பாலாஜி தலைமையில், அகில இந்திய துணைத் தலைவரும், கேரள மாநில ஐ.என்.டி.யூ.சி தலைவருமான சந்திரசேகரன் முன்னிலையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ மற்றும் நிர்வாகிகள் பலர் மலரஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் நடந்தது. பின்னர் 12.30 மணிக்கு பாரதிதாசன் மகளிர் கல்லூரி எதிரில் ரவிச்சந்திரன் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்து.
நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமிநாராயணன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். 12.40 மணிக்கு உழவர்கரை நகராட்சி எதிரில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மதியம் 1 மணிக்கு மூலக்குளம், சாலைத் தெருவில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச்சிகளில் ஐ.என்.டி.யூ.சி மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.
- புதுவையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் குடிசைத் தொழில் போல் போலி மதுபான தயாரிப்பு நடப்பதாக புகார் தெரிவித்துள்ளேன்.
- கலால் துறையில் அதிக போலீசாரை நியமிக்க வேண்டும்
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க செயலர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து புதுவைக்கு எரிசாராயம் கடத்தப்பட்டு, சிலரின் துணையோடு போலி மதுபானம் தயாரிக்க பட்டு தமிழகத்தில் டாஸ்மாக் பாட்டிலில் சரக்கு ஏற்றப்படுகிறது. இதனால் புதுவை, தமிழக அரசுக ளுக்கும் வருமானம் இல்லை.
இதில் தமிழக மற்றும் புதுவை அரசுகளின் கலால், போலீஸ் துறையினர் என்ன செய்கிறார்கள் என்று கேள்வி எழுகிறது.
தமிழக அரசு மட்டுமின்றி புதுவை அரசும் ஓர் காரணம். மது கடத்தல் தொடர்பாக புதுவை அரசிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. புதுவையில் இருந்து போலி மதுபானம் கடத்தலை தமிழக போலீஸ் பிடித்தாலும் புதுவை போலீஸ் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை. புதுவையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் குடிசைத் தொழில் போல் போலி மதுபான தயாரிப்பு நடப்பதாக புகார் தெரிவித்துள்ளேன்.
தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் புதுவைக்கு எரிசாராயத்தை கொண்டு வரமுடியாது. 2 மாநில அதிகாரிகளும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. குற்ற வாளிகளை கலால்துறை பாதுகாக்கிறதா.? என்ற கேள்வி எழுகிறது.
இதில் சம்பந்தப் பட்டோரின் சொத்து பறிமுதல் செய்து நிவாரண நிதியில் செலுத்த வேண்டும். கலால் துறையில் அதிக போலீசாரை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அன்பழகன் கூறினார்.
- ராமேஸ்வரம் பகுதியில் இருந்து தனியார் பஸ் சுமார் 40 பயணிகளை ஏற்றுக் கொண்டு சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது.
- இதில் பயணம் செய்த சுமார் 7 பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பின்னர்
புதுச்சேரி:
ராமேஸ்வரம் பகுதியில் இருந்து தனியார் பஸ் சுமார் 40 பயணிகளை ஏற்றுக் கொண்டு சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது.
கடலூர் வழியாக புதுவை நோக்கி நேற்று நள்ளிரவில் வந்து கொண்டிருந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முள்ளோடை நுழைவாயில் அருகில் உள்ள தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த சுமார் 7 பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பின்னர், பஸ் முன்பக்கம் கண்ணாடி மற்றும் எஞ்சின் சேதம் அடைந்து விட்டது.
தகவல் அறிந்தவுடன் கிருமாம்பாக்கம் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்தவர்களை மீட்டு முதலுதவி செய்து மாற்று பஸ்ஸில் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர். மேலும் கிரேன் இயந்திரத்தை வரவ ழைத்து அந்த பஸ்சை சுமார் 2 மணி நேரமாக போராடி எடுத்தனர். இது சம்பந்தமாக கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 100 நாட்கள் வேலை உறுதி திட்ட பணிகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இன்று காலை தொடங்கி வைத்தார்.
- தலைவர் மனோகரன், தர்மன், வீரபாலன், சிவா முத்துகிருஷ்ணன் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
அரியாங்குப்பம் வட்டாரம் சார்பாக மணவெளி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளான புதுக்குப்பம் மஞ்சனீஸ்வரர் கோவில் குளத்தை ரூ.3.76 லட்சம் மதிப்பில் ஆழப்படுத்தும் பணி, ஆண்டியார் பாளையம் பகுதியில் உள்ள அல்லிக்குட்டை வாய்க்காலை ரூ.5.74 லட்சம் மதிப்பில் தூர்வாரி ஆழப்படுத்தும் பணி, தவளக்குப்பம் பகுதியில் உள்ள ரெட்டை குட்டை வாய்க்காலை ரூ.3.91 லட்சம் மதிப்பில் தூர் வாரி ஆழப்படுத்தும் பணி மற்றும் டி.என் பாளையம் பகுதியில் நாகப்பனுர் முதல் இரிசன் கோவில் வரை உள்ள மலட்டாறு கரையை ரூ.28.80 லட்சம் மதிப்பில் மேம்படுத்தும் பணி என மொத்தம் 42.21 லட்சம் மதிப்பிலான 100 நாட்கள் வேலை உறுதி திட்ட பணிகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இன்று காலை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரி சத்திய மூர்த்தி, ஐ.எப்.எஸ். செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அதிகாரி சந்திரகுமரன், உதவிப்பொறியாளர் ராமன், இளநிலைப் பொறியாளர் சிவஞானம் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் பா.ஜனதா மாநில விவசாய அணி பொறுப்பாளர் ராமு, கிருஷ்ணமூர்த்தி, தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், புதுக்குப்பம் மீனவ கிராம பஞ்சாயத்தார்கள், ஆண்டியார்பாளையம் பகுதி ஞானசேகரன், வாழுமுனி செந்தில், மதி, டி.என் பாளையம் பகுதி என்.ஆர் காங்கிரஸ் தொகுதி தலைவர் மனோகரன், தர்மன், வீரபாலன், சிவா முத்துகிருஷ்ணன் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- புதுவை அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் குறித்த பயிற்சி வகுப்பு லாஸ்பேட்டை ஆசிரியர் பயிற்சி மையத்தில் தொடங்கியது.
- புதுவை, காரைக்கால் அரசு பள்ளிகளில் தமிழக அரசின் பாடத்திட்டம் பின்பற்றப்பட்டது.
புதுச்சேரி, மே 16-
புதுவை அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் குறித்த பயிற்சி வகுப்பு லாஸ்பேட்டை ஆசிரியர் பயிற்சி மையத்தில் தொடங்கியது.
பயிற்சி வகுப்பை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்து பேசியதாவது:-
புதுவை, காரைக்கால் அரசு பள்ளிகளில் தமிழக அரசின் பாடத்திட்டம் பின்பற்றப்பட்டது. அரசின் முடிவின்படி 5-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத் திட்டம் நடைமுறை யில் உள்ளது. பிற வகுப்புகளையும் இத்திட்டத்தில் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப் பட்டது. முதல் கட்டமாக 127 பள்ளிகளை சி.பி.எஸ்.இ. திட்டத்துக்கு மாற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தினோம். இதில் எவ்வித ஆய்வுமின்றி 78 பள்ளிகளை மாற்ற அனு மதி கிடைத்துள்ளது. பிற பள்ளிகளுக்கு விரைவில் அனுமதி கிடைக்கும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சம்பளம், கல்வித்துறை மேம்பாட்டுக்கு ரூ. ஆயிரத்து 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வி, சுகாதாரம் சிறப்பாக இருந்தால்தான் மாநிலம் வளர்ச்சி பெறும். இந்த நிதி பயனுள்ளதாக மாற மாநில மாணவர்களுக்கு நல்ல கல்வியை கொடுக்க வேண்டும். ஆசிரியர்கள் சிரமப்பட்டு படிக்கும் மாண வர்களுக்கு அதிக முக்கியத்து வம் அளிக்க வேண்டும். கல்வியில் புதிய நுணுக்கங்களை பயன்படுத்தி மாணவர்களை திறமை மிக்கவர்களாக மாற்ற வேண்டும். தனியார் பள்ளிகளு டன் போட்டி போட்ட தேர்ச்சி விகிதத்தை ஆசிரியர்கள் பெற்றுத்தர வேண்டும். சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட புத்தகம் வாங்கி நிதி ஒதுக்கி தலைமை செயலருக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்டாக் புதிய கமிட்டி உருவாக்கி கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் சேர்க்கை விண்ணப்பங்கள் வெளியி டப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.






