என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவை பல்கலைக்கழகத்தில் நிலைத்தன்மை மற்றும் காலநிலை மாற்றத்திற்கான மையம் தொடங்கப்பட்டுள்ளது.
    • தலைவர் மதிமரன் நடராஜன், மையத்தின் நோக்கம் குறித்து விளக்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை பல்கலைக்கழகத்தில் நிலைத்தன்மை மற்றும் காலநிலை மாற்றத்திற்கான மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில் புதுவை பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் துறை தலைவர் சுப்பிரமணியம் ராஜூ வரவேற்றார். கல்வி புதுமைகள், கிராமப்புற மறுசீரமைப்பு இயக்குனர் தரணிக்கரசு தொடக்க உரையாற்றினார். மையத்தின் தலைவர் மதிமரன் நடராஜன், மையத்தின் நோக்கம் குறித்து விளக்கினார்.

    துணைவேந்தர் குர்மீத்சிங் தலைமை வகித்து மையத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். பதிவாளர் ராஜ்நீஷ்பூதானி, சுற்றுச்சூழல் துறை தலைவர் ராமமூர்த்தி சிறப்புரை யாற்றினர். பெங்களூருவில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரக தலைமை நிர்வாக அதிகாரி ஜோனாஸ்பு ருன்ஸ்வி தனது கருத்துக்களை பகிர்ந்தார்.

    அரசியல், சர்வதேச ஆய்வுகள் துறை இணை பேராசிரியர் நந்தகிஷோர் நன்றி கூறினார்.

    • புதுவை தொழிலாளர் துறை ஆணையர் மாணிக்கதீபன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
    • தொழிலாளர் துறை வளாகத்தில் நடத்தப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை தொழிலாளர் துறை ஆணையர் மாணிக்கதீபன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசு தொழிலாளர் துறை வேலைவாய்ப்பகம் சார்பில் பல தனியார் நிறுவனங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை தொழிலாளர் துறை வளாகத்தில் நடத்தப்படுகிறது.

    100-க்கும் மேற் பட்ட இடங்களை நிரப்ப என்ஜினியரிங், கலை, அறிவியல், டிப்ளமோ, ஐ.டி.ஐ. 10, 12-ம் வகுப்பு படித்த அனைத்து மாணவ ர்களும் பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்போர் தங்கள் தற்குறிப்பு, கல்விதகுதி உண்மை, நகல் சான்றிதழ்களுடன் வர வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • புதுவை பிள்ளைச்சாவடி சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் மீனவர் சந்திரன்.
    • போலீசாரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.

    புதுச்சேரி:

    புதுவை பிள்ளைச்சாவடி சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் மீனவர் சந்திரன். இவரது மனைவி கலைச்செல்வி. கடந்த 27-ந் தேதி காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் கலைச்செல்வி தீக்குளித்து தற்கொலை செய்தார்.

    கடன் தொகை வசூலிப்பது தொடர்பான பிரச்சினையில் போலீசார் ஒருதலைபட்சமாக செயல்பட்டதால் கலைச்செல்வி தற்கொலை செய்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

    இதையடுத்து சந்திரனிடம் கடன் வாங்கிய ஏழுமலை கைது செய்யப்பட்டார். காலாப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ, உதவி சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். கலைச்செல்வி குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் வழங்கவும், கலெக்டர் விசாரணைக்கும் முதல்- அமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டார்.

    மேலும் இந்த சம்பவத்தில் சப்-கலெக்டர் கந்தசாமி கடந்த 30-ந் தேதி விசாரணையை தொடங்கினார். கலைச்செல்வியின் கணவர், குடும்பத்தினர், பணியில் இருந்த போலீசாரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.

    ஆனால் போலீஸ் நிலைய ஜி.டி. புத்தகம், சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் விசாரணைக்கு ஒப்படைக்க வில்லை. சி.சி.டி.வி. பதிவு மாயமாகி உள்ளது. மற்ற விசாரணைகளை முடித்த சப்கலெக்டர் சந்தசாமி அறிக்கையாக ஓரிருநாட்களில் அரசுக்கு சமர்பிக்க உள்ளார்.இதனிடையே இறந்த பெண்ணின் உறவினர்கள் தேசிய மனித உரிமை ஆணையம், தேசிய மகளீர் ஆணையத்திடம் புகார் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • சுமார் 10 வருடமாக தார் சாலை இல்லாமல் இருந்து வந்தது
    • வாகன ஓட்டிகள் சேறு சகதியில் சிக்கி அவதி அடைந்து வந்தனர்.

    புதுச்சேரி:

    ஊசுடு தொகுதி க்குட்பட்ட அரசூர் பகுதியில் உள்ள குமரன் நகர் மற்றும் முத்துக்குமரன் நகருக்கு சுமார் 10 வருடமாக தார் சாலை இல்லாமல் இருந்து வந்தது. மழைக்காலங்களில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சேறு சகதியில் சிக்கி அவதி அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் அப்பகுதி மக்கள் தார் சாலை அமைத்து தர வேண்டும் என தொகுதி எம்.எல்.ஏ.வும் குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சருமான சாய்.ஜெ.சரவணன்குமாரிடம் கோரிக்கை வைத்தனர்.

    இந்நிலையில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் ஆணை பெறப்பட்டு சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வில்லியனூர் கொம்யூன் ஆணையர் எழில் ராஜன், உதவி பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலை பொறியாளர் கருத்தையன், பா.ஜனதா ஊசுடு தொகுதி தலைவர் தியாகராஜன், பொதுச் செயலாளர் இளவரசன், கிளை தலைவர் அன்பு, கட்சி நிர்வாகிகள் உத்திரகுமார், செல்வம், அபிஷேக், தொகுதி பா.ஜனதா சாலை பொறு ப்பாளர் கருணாகரன், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • புதுவை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் கல்பனா தாலு
    • இவரின் மகன்கள் பிரான்சு நாட்டில் வசிக்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் கல்பனா தாலு. பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். இவரின் மகன்கள் பிரான்சு நாட்டில் வசிக்கின்றனர். இவருக்கு சொந்தமான ரூ.15 லட்சம் மதிப்புள்ள 770 சதுரஅடி மனை அபிஷேகப்பாக்கம் கிராமத்தில் உள்ளது. இந்த இடம் குறித்து சமீபத்தில் விசாரித்தபோது இடத்துக்கு போலி ஆவணம் தயாரித்து, விற்றது தெரியவந்தது.

    இதுகுறித்து கல்பனா தாலு நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் புகார் அளித்தார். முதல்கட்ட விசாரணை முடிந்து, போலீசாருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. உருளையன்பேட்டை போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த சில மாதங்களாக பிரெஞ்சு குடியுரிமை பெற்றோர் நிலம், வீடு அபகரிப்பு செய்யப்படுவதாக புகார்கள் வந்தது. தற்போது அதேநிலை நீடிப்பது பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களி டையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் இது பிரான்சு நாட்டில் வசிக்கும் புதுவை யைச் சேர்ந்தவர்களிடையே கவலையை எற்படுத்தி உள்ளது. தங்கள் உறவினர்கள் மூலம் வீடு, நிலம் குறித்த தகவல்களை கேட்டும் விசாரித்தும் வருகின்றனர்.

    • பாகூர் அருகே சோரியாங்குப்பத்தில் 10-க்கும் மேற்பட்ட மதுக்கடை கள் இயங்கி வருகிறது.
    • மது பிரியர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் மது அருந்திவிட்டு செல்கின்றனர்

    புதுச்சேரி:

    பாகூர் அருகே சோரியாங்குப்பத்தில் 10-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் இயங்கி வருகிறது.

    இங்கு தினமும் புதுவை மட்டுமின்றி தமிழகத்தைச் சேர்ந்த மது பிரியர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் மது அருந்திவிட்டு செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சோரியாங்குப்பம் தனியார் மதுக்கடையில் உள்ள கேண்டீன் கீற்றுக் கொட்டகை திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

    கீற்றுக் கொட்டகை எரிவதை கண்ட மதுக்கடை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து பாகூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இருப்பினும் காற்று பலமாக அடித்ததால் கீற்றுக்கொட்டகை முழுவதும் எரிந்து சாம்பலானது. சம்பவ இடத்திற்கு வந்த பாகூர் போலீசார் தீ விபத்து குறித்து மதுக்கடை ஊழியர்க ளிடம் விசாரணை நடத்தினர். பின்னர் இது குறித்து பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா? என்ற பல்வேறு கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மதுக்கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்யவும் திட்டமிட்டு ள்ளனர்.

    நள்ளிரவில் மதுக்கடையில் உள்ள கீற்றுக்கொட்டகை திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

    • ஒப்பந்த நர்சுகள் கொரோனா பரவல் குறைந்தவுடன் நீக்கப்பட்டனர்.
    • நர்சுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை.

    புதுச்சேரி:

    அரசு மருத்துவ மனைகளில் நியமிக்கப்பட்ட ஒப்பந்த நர்சுகள் கொரோனா பரவல் குறைந்தவுடன் நீக்கப்பட்டனர். பின்னர், 3 மாதத்திற்கு ஒரு முறை அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஜூன் மாதம் முதல் ஒப்பந்த நர்சுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் சுகாதாரத்துறை 105 நர்சு பணியிடங்களை நிரப்ப வெளியிட்ட அறிவிப்பில் ஒப்பந்த நர்சுகளுக்கு முன்னு ரிமை வழங்கவில்லை.

    இதில் முன்னுரிமை வழங்க கோரி சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தை 2 நாட்கள் முற்றுகையிட்ட ஒப்பந்த நர்சுகள் முதல்-அமைச்சர் ரங்கசாமி அளித்த உறுதியை ஏற்று போரா ட்டத்தை கைவிட்டனர். இந்த நிலையில் முதல்- அமைச்சர் ரங்கசாமியை சந்திக்க எதிர்கட்சி தலைவர் சிவா, அ.தி.மு.க. மாநில செய்லாளர் அன்பழகன் ஆகியோர் ஒப்பந்த நர்சுகளை அழைத்து சென்றனர்.அப்போது முதல் அமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:-

    கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த நர்சுகளை பணி நிரந்தரம் செய்ய முடியாது என மத்திய அரசே கூறிவிட்டது. செவிலியர் பணி நியமனத்தில் சலுகை வழங்க முடியாது என விதிகளை காட்டி அதிகாரிகள் மறுக்கின்றனர். தன்னால் முடிந்த வரை முயற்சித்து விட்டேன்.இருப்பினும் ஒப்பந்த பணியை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்ய கோப்பு தயாரித்து கவர்னருக்கு அனுப்பி உள்ளேன். கவர்னர் அனுமதி கிடைத்த பிறகு சம்பளம் உயர்த்தப்படும். இனி அதிகாரி களின் அலுவல கத்தை முற்றுகையிடுவது, மறியல் செய்யக் கூடாது என அறிவுறுத்தினார்.

    இதனையடுத்து முதல் -அமைச்சருக்கு நன்றி தெரிவித்து ஒப்பந்த நர்சுகள் புறப்பட்டனர்.

    • புதுவை தவளகுப்பத்தை அடுத்த பூரணாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம்.
    • பல்வேறு வகைகளில் தங்களது திறமையை வெளிக்காட்டினார்.

    புதுச்சேரி:

    புதுவை தவளகுப்பத்தை அடுத்த பூரணாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம். விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் சுமார் 23 வருடங்களாக ஓவியராக பணிபுரிந்து வருகிறார்.

    டிஜிட்டல் வருவதற்கு முன்பு, துணியில் எழுதுவது, சுவரில் வண்ணம் தீட்டுதல், அரசு கட்டிடங்களுக்கு பெயர் எழுதுதல், விழிப்பு ணர்வு ஓவியங்கள் வரைதல் உள்ளிட்ட பல்வேறு வகை களில் தங்களது திறமையை வெளிக்காட்டினார்.

    இந்த நிலையில் தற்போது டிஜிட்டல் ஆன பிறகு சுவரில் எழுதுதல், பெயர் எழுதுதல் உள்ளிட்ட குறிப்பிட்ட வேலைகள் மட்டுமே வருவதால் 5 வயதுக்கு மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் பகுதி நேர ஓவிய பயிற்சி பள்ளி சில ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் இவரது ஓவிய கலைத்திறமையை பாராட்டி முருங்கப்பாக்கம் கலை மற்றும் கைவினை கிராமத்தில் நடந்த ஓவிய அகடாமி நிகழ்ச்சியில் ஓவிய ரத்னா விருதினை அமைச்சர் லட்சுமி நாராயணன் வழங்கி சிறப்பித்தார்.

    • அறிநிலையத்துறை மூலம் கோவில் நிர்வாக அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • ஒதியம்பட்டு காசி விஸ்வநாத ஆலயத்திற்கு வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் தொகுதிக் குட்பட்ட கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் தேவஸ்தானம், தென்கலை வரதராஜ பெருமாள் தேவஸ்தானம், முத்தால வாழியம்மன் ஆலயம், புதுவை நகராட்சிக்கு உட்பட்ட பாப்பாஞ்சாவடி முத்து மாரியம்மன் ஆலயம், ஒதியம்பட்டு முத்தமாரியம்மன் ஆலயம், காசி விஸ்வநாதர் ஆலயம் ஆகிய 6 கோவில்களுக்கு எதிர்க்க ட்சித் தலைவர் சிவா பரிந்துரைச் செய்த அரசு அதிகாரிகள் முதல்- அமைச்சர் ரங்கசாமி உத்தர வின்படி, புதுவை அரசின் இந்து அறிநிலையத்துறை மூலம் கோவில் நிர்வாக அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    திருக்காமீஸ்வரர் கோவிலுக்கு பட்டாதாரி ஆசிரியர் திருக்காமீஸ்வரன், தென்கலை வரதராஜ பெருமாள் தேவஸ்தா னத்திற்கு கால்நடை டாக்டர் சந்தானராமன், முத்தால வாழியம்மன் ஆலயத்திற்கு பட்டாதாரி ஆசிரியர் சரவணன், பாப்பாஞ்சாவடி முத்து மாரியம்மன் ஆலயத்திற்கு தலைமை எழுத்தர் இளங்கோவன் என்ற சத்தீஷ், ஒதியம்பட்டு முத்து மாரியம்மன் ஆலயத்திற்கு பற்குணன், ஒதியம்பட்டு காசி விஸ்வநாத ஆலயத்திற்கு வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    புதியதாக நியமிக்கப்பட்ட 6 கோவில்களின் நிர்வாக அதிகாரிகள் முதல் அமைச்சர் ரங்கசாமி, எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆகியோர் முன்னி லையில் பதவியேற்று தங்கள் பணிகளை தொடங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில், ஊர் முக்கியஸ்தர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • புதுடெல்லியில் விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
    • 2021-ம் ஆண்டு போராட்டம் நடத்திய விவசாயிகள், கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுடெல்லியில் விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தினர். உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி என்ற இடத்தில் 2021-ம் ஆண்டு போராட்டம் நடத்திய விவசாயிகள், கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்டனர்.

    இதற்கு காரணமான மத்திய மந்திரியை பதவியி லிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி அக்டோபர் 3-ந் தேதியை கறுப்பு தினமாக கடைபிடிக்க அகில இந்திய தொழிற்சங்க தலைவர்கள் முடிவெடுத்தனர்.

    இந்த முடிவின்படி புதுவையில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் சுதேசி மில் அருகே கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச்செயலா ளர் சேது செல்வம் தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யூ.சி. தினேஷ் பொன்னையா, அபிஷேகம், சி.ஐ.டி.யூ. சீனிவாசன், பிரபுராஜ், ஐ.என்.டி.யூ.சி. பாலாஜி, ஞானசேகரன்,

    ஏ.ஐ.சி.சி.டி.யூ. மோதிலால், புருஷோத்தமன், எல்.எல்.எப். செந்தில், எல்.எல்.எப்.வேணு கோபால், மாசிலாமணி, என். டி. எல். எப். மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் விவசாய சங்கங்க ளின் பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடு பட்டவர்கள் கருப்புக்கொடி ஏந்தி, கருப்புசட்டை, கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் பங்கேற்ற னர். மத்திய அரசு விவசாயி கள், தொழிலாளர்கள் நலனுக்கு எதிராக கொண்டு வரப்படும் சட்டங்களை கண்டித்தும், கியாஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது.

    • வேதபாரதி மற்றும் பாரதிய ஜனதா கட்சி இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தியது.
    • மாநிலத் தலைவர், செல்வகணபதி எம்.பி. தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடி பிறந்த நாள் சேவை நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக பாரத பண்பாட்டு அமைப்பான வேதபாரதி மற்றும் பாரதிய ஜனதா கட்சி இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தியது.

    லாஸ்பேட்டை சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடந்த மருத்துவ முகாமை பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர், செல்வகணபதி எம்.பி. தொடங்கி வைத்தார். பா.ஜனதா மாநில முன்னாள் தலைவர் சாமிநாதன் முன்னிலை வகித்தார். முகாமில் லாஸ்பேட்டை ஈ.சி.ஆர் சாலையில் அமைந்துள்ள எம்.வி.ஆர் மருத்துவமைய மருத்துவ இயக்குனரும் முதுநிலை பொது மருத்துவம் மற்றும் நீரிழிவுநோய் சிறப்பு நிபுணருமான டாக்டர் எம்.ஆர்.வித்யா தலைமையி லான மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த முகாமில், பொது மற்றும் நீரிழிவுநோய் சிறப்பு மருத்துவம், இருதய நல சிறப்பு மருத்துவம், மகளிர் மற்றும் மகப்பேறு நல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவ ஆலோசனைகள், ரத்த சர்க்கரை அளவு பரிசோதனை, ரத்தசோக பரிசோதனை, இ. சி. ஜி., எலும்பு அடர்த்தி கண்டறியும் சிறப்பு ஸ்கேன் பரிசோதனைகள் மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    முகாமில் பா.ஜ.க மாநில செயலாளர் லதாகோபு, உழவர் கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், மாவட்ட துணை தலைவர் முருகன்,தொகுதி தலைவர் சோமசுந்தரம், திருமால், நடராஜன், கனகவள்ளி,வேத பாரதியின் பொது செயலாளர் பட்டாபிராமன், வேதராமன்,ரவிச்சந்திரன், மெடிகல் கிருஷ்ண மூர்த்தி, கல்யாண் குமார்,வெங்க டேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பொய் பேசுவதை நாராயணசாமி வாடிக்கையாக கொண்டுள்ளார்.
    • கூட்டணி கட்சியில் யார் வேண்டுமா னாலும் பிரதமராக வரலாம் என்ற கருத்தை கூறுகிறார்

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முரண்பட்ட கொள்கை களை கொண்ட கட்சிகளும், ஏற்றுக்கொள்ள முடியாத கட்சிகளும் ஒருங்கிணைந்து இண்டியா என்ற கூட்டணியை உருவாக்கி ராகுல்காந்தியை பிரத மராக்க பல்வேறு முயற்சி களை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கட்சி தலைமையால் புறக்க ணிக்கப்பட்ட முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, இண்டியா கூட்டணி கட்சியில் யார் வேண்டுமா னாலும் பிரதமராக வரலாம் என்ற கருத்தை கூறுகிறார். காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ராகுல்காந்தி, சோனியாகாந்தியை சந்திக்க கடந்த 2 ஆண்டாக பல முறை வாய்ப்பு கேட்டும், கிடைக்காமல் முன்னாள் முதல்- அமைச்சர் நாராயண சாமி திரும்பி யுள்ளார். இதை காங்கிரசார் உணர வேண்டும்.

    பொய் பேசுவதை நாராயணசாமி வாடிக்கையாக கொண்டுள்ளார். சுதந்திரத்தை பெற்றுத்தந்த கட்சி காங்கிரஸ் என தொடர்ந்து பொய் கூறி வருகிறார். சுதந்திரத்தை பெற்றுத்தந்தது ஸ்தாபன காங்கிரஸ். நாராயணசாமி இருப்பது இந்திரா காங்கிரஸ்.

    அதுபோல ஜனநாயகம், மாநில உரிமை பற்றி யெல்லாம் நாராயணசாமி கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகிறார். நாட்டின் ஜனநாயகத்தை முடக்கி எமர்ஜென்சியை கொண்டு வந்தது இந்திரா காங்கிரஸ்தான். 356-வது சட்டப்பிரிவை பயன்படுத்தி பல மாநில அரசுகளை அகற்றியும் இந்திரா காங்கிரஸ்தான்.

    எனவே நாராயண சாமிக்கு ஜனநாயகம், மாநில உரிமை பற்றி பேச தகுதி யில்லை. புதுவையில் காங்கிரஸ் கட்சி இருக்கிறதா? இல்லையா? என தெரியாத நிலை உள்ளது. தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து இண்டியா கூட்டணி என்ற பெயரில் தொடர்ந்து பொய் பிரசாரம் செய்கின்றனர்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுவையில் 40 தொகுதிக ளையும் அ.தி.மு.க. கைப்பற்றும். பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பிரதமரை தேர்வு செய்யும் கட்சியாக அ.தி.மு.க.வும், எடப்பாடி பழனிசாமியும் உயர்வார்கள். புதுவை அரசு மக்களைப்பற்றி எந்த கவலையும் இல்லாமல் மின் கொள்முதல் விலைக்கு ஏற்ப கட்டணத்தை 3 மாதத்திற்கு உயர்த்தியுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் ஆண்டுக்கு ஒருமுறைதான் மின் கொள்முதல் செய்யப்படுகிறது.

    ஆனால் புதுவையில் 3 மாதத்திற்கு ஒரு முறை மின் கொள்முதல் செய்வதாக கூறுகின்றனர். இது எந்த மாநிலத்திலும் இல்லாத முறை. கொள்முதல் விலை ஏற்றத்தின் மூலம் ரூ.38 கோடிதான் உயர்ந்துள்ளது. ஆனால் அரசு கட்டணத்தை உயர்த்தியதன் மூலம் கூடுத லாக ரூ.60 கோடியை பெற முயற்சிக்கிறது. மின்துறைக்கு அரசு மானியமாக வழங்கி கொள்முதல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×