search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "land grabbing"

    • புதுவை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் கல்பனா தாலு
    • இவரின் மகன்கள் பிரான்சு நாட்டில் வசிக்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் கல்பனா தாலு. பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். இவரின் மகன்கள் பிரான்சு நாட்டில் வசிக்கின்றனர். இவருக்கு சொந்தமான ரூ.15 லட்சம் மதிப்புள்ள 770 சதுரஅடி மனை அபிஷேகப்பாக்கம் கிராமத்தில் உள்ளது. இந்த இடம் குறித்து சமீபத்தில் விசாரித்தபோது இடத்துக்கு போலி ஆவணம் தயாரித்து, விற்றது தெரியவந்தது.

    இதுகுறித்து கல்பனா தாலு நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் புகார் அளித்தார். முதல்கட்ட விசாரணை முடிந்து, போலீசாருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. உருளையன்பேட்டை போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த சில மாதங்களாக பிரெஞ்சு குடியுரிமை பெற்றோர் நிலம், வீடு அபகரிப்பு செய்யப்படுவதாக புகார்கள் வந்தது. தற்போது அதேநிலை நீடிப்பது பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களி டையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் இது பிரான்சு நாட்டில் வசிக்கும் புதுவை யைச் சேர்ந்தவர்களிடையே கவலையை எற்படுத்தி உள்ளது. தங்கள் உறவினர்கள் மூலம் வீடு, நிலம் குறித்த தகவல்களை கேட்டும் விசாரித்தும் வருகின்றனர்.

    • போலி ஆவணம் தயாரித்து நிலம் அபகரிக்கப்பட்டது.
    • சிவகாசி டவுன் போலீசார் 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    சிவகாசி உசேன் காலனியை சேர்ந்தவர் தெய்வமணி(வயது22), பட்டதாரி ஆசிரியர். இவர் கடந்த 2000 ஆண்டில் மகாராஜா நகரில் நிலம் வாங்கினார். இந்த நிலையில் தற்போது மகளின் படிப்பு செலவிற்காக வங்கியில் நில பத்திரத்தை அடமானம் வைக்க முடிவு செய்தார். இதற்காக வில்லங்க சான்றி தழை சரிபார்த்தபோது, தெய்வமணிக்கு சொந்த மான இடம், கடந்த ஆண்டு தனலட்சுமி என்பவரிடம் இருந்து அவரது கணவர் செந்தில்குமாருக்கு விற்கப்பட்டதாகவும், பின்னர் அதனை அவர் மாரிக்கனி, முத்துலட்சுமி ஆகியோருக்கு விற்றுள்ள தாகவும் குறிப்பிடப்பட்டி ருந்தது. மேலும் அந்த நிலப்பத்திரத்தை வைத்து தனியார் வங்கியில் ரூ.9 லட்சம் கடன் வாங்கி யிருப்பது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி யடைந்த தெய்வமணி இதுகுறித்து விசாரித்தபோது, தனலட்சுமி மகள் என போலி ஆவணத்தை தயார் செய்துள்ளார். மேலும் தெய்வமணி இறந்ததாக கூறி போலி சான்றிதழையும் தயார் செய்து அதன் மூலம் நிலத்தை அபகரித்தது தெரியவந்தது. இதற்கு உடந்தையாக பத்திர எழுத்தர் வைரமுத்து, சிவகாசி சார்பதிவாளர் செந்தில் ராஜ்குமார் உள்பட 8 பேர் இருந்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • மக்கள் பாதுகாப்பு பேரியக்கம் முடிவு
    • மழை நீரை நிரந்தரமாக தங்கு தடை இன்றி வெளியேற்று வதற்கான எந்த ஒரு புதிய திட்டங்களையும் அரசு செயல்படுத்தவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை மக்கள் பாதுகாப்பு பேரியக்கத் தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பேற்று கடந்து விட்ட நிலையில் புதுவை மாநில மக்களின் வளர்ச்சிக்கு மக்களுக்கு என்று எந்த ஒரு உருப்படி யான திட்டங்களையும் அரசு நடை முறைப்ப டுத்தவில்லை.

    புதுவை மாநிலத்தில் போதைப் பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை அமோகமாக நடை பெறுவதாகவும் , பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பொதுமக்கள் மற்றும் பெற்றோர் இடத்தில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அதேபோல் நில அபகரிப்பு செய்பவர்கள் மீது புகார் பல கொடுத்தாலும் போதுமான நடவடிக்கைகளை அரசு எடுப்பதில்லை.

    மேலும் பெயரளவில் ஒரு வழக்கு பதிந்து விட்டு அந்த இடங்களை மீட்கவும் நடவடிக்கை எடுப்பதில்லை.

    இது தொடர்பாக விரைவில் சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரடியாக புகார் தெரிவிக்க உள்ளோம். பல்வேறு இடங்களில் தரமான சாலை வசதிகள் பல வருடங்களாக இல்லாமல் உள்ளது. சில இடங்களில் மட்டும் ஜனாதிபதி வருகையை முன்னிட்டு அவசர கோலத்தில் அரைகுறையாக புதுவை நகரத்தை அழகுபடுத்தி உள்ளனர்.

    அதேபோல் வரும் மழைக்கா லங்களை கருத்தில் கொண்டு மழை நீரை நிரந்தரமாக தங்கு தடை இன்றி வெளியேற்று வதற்கான எந்த ஒரு புதிய திட்டங்களையும் அரசு செயல்படுத்தவில்லை.

    எனவே கவர்னர் அனைத்து பகுதிகளிலும் தரமான சாலைவசதி மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு இட வேண்டும்.

    அதேபோல் மாநிலத்தில் பேனர் கலாச்சாரம் முழுவதுமாக ஆக்கிரமித்து உள்ளது. அரசு இந்த பேனர் கலாச்சாரத்தை முழுவது மாக தடை செய்ய வேண்டும் லாபத்தில் இயங்கி வரும் மின் துறையை தனியார் மின்மயமாக்கல் திட்டத்தை அரசு முழுவதுமாக கைவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • அகரம் ஊராட்சி ஓலப்பாளையம் கிராமம், அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் முத்தான் (வயது 90).
    • எங்களது சொத்தை அபகரித்து மோசடி செய்த எனது மருமகள் சாந்தியை அழைத்து விசாரணை செய்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம் எலச்சிபாளையம் அருகில் உள்ள அகரம் ஊராட்சி ஓலப்பாளையம் கிராமம், அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் முத்தான் (வயது 90).

    இவர் தனது மனைவி பாவாயியுடன் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து, மனு கொடுத்தார். அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது:-

    திருச்செங்கோடு வட்டம், அகரம் கிராமம், ஓலப்பாளையம் அருந்ததியர் தெருவில் குடியிருந்து வருகிறேன். எனது மகன் நடேசன் கடந்த 23.02.2016-ல் இறந்து விட்டார். இந்த நிலையில், எனது தந்தை கந்தன் எனக்காக கொடுத்த பூர்வீக சொத்தை, மகன் நடேசன் இறந்த பிறகு, என் பேரன் சிதம்பரம், எனது மருமகள் சாந்தி ஆகியோர் என்னை ஏமாற்றி, என்னிடம் கையொப்பம் பெற்று அபகரித்து விட்டனர்.

    மேலும் எனது கையிலிருந்த ரொக்கம் இருப்பு ரூ.7 லட்சத்தையும் எனது பேரன் சிதம்பரம், மருமகள் சாந்தி ஆகியோர் வாங்கிக் கொண்டார்கள். இப்போது எனது பேரன் சிதம்பரமும் இறந்து விட்டார். எனது மருமகள் சாந்தி, பூர்வீக சொத்தான 76 சென்ட் நிலத்தை ரூ.1.50 கோடிக்கு விற்று விட்டார்.

    எனவே என்னை ஏமாற்றி கையொப்பம் பெற்றுக் கொண்டு, எங்களது சொத்தை அபகரித்து மோசடி செய்த எனது மருமகள் சாந்தியை அழைத்து விசாரணை செய்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் நான் கொடுத்த ரூ.7 லட்சம் பணமும், கண்தெரியாமல், உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் எனக்கும், எனது மனைவிக்கும் உயிர் உள்ள வரை சாப்பாட்டிற்கும், மருத்துவ செலவிற்கும், இறந்துவிட்டால் இறப்பு செலவிற்கும் என ரூ.20 லட்சத்தை எனது மருமகள் சாந்தியிடம் இருந்து பெற்றுத் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்

    • கருணாகரன் (வயது 54). விவசாயியான இவருக்கு அதேபகுதியில் 1.5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
    • கடனுக்கு பாதுகாப்பாக சொத்தின் பவரை தனது பெயருக்கு கடன் கொடுத்தவர் எழுதி வாங்கியுள்ளார்.

    சேலம்:

    சேலம் நிலவாரப்பட்டி செம்மலைதோட்டம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 54). விவசாயியான இவருக்கு அதேபகுதியில் 1.5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு இந்த நிலத்தின் ஆவணங்களை வைத்து சேலம் சீலநாயக்கன்பட்டியில் வசிக்கும்

    கந்துவட்டி தொழில் நடத்தி

    வரும் ஒருவரிடம் ரூ.90 ஆயிரம் அவசரத்தே வைக்காக பணம் வாங்கியுள்ளார்.

    அப்போது இவரிடம் கடனுக்கு பாதுகாப்பாக சொத்தின் பவரை தனது பெயருக்கு கடன் கொடுத்தவர் எழுதி வாங்கியுள்ளார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்த கடனை திருப்பி கொடுத்த பிறகு அசல் பவர் பத்திரத்தை ரத்து செய்யுமாறு கருணாகரன் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் பணம் கொடுத்தவர் பல்வேறு காரணங்களைக் கூறி காலம் கடத்தி வந்துள்ளார்.

    இதனால் சந்தேகமடைந்த கருணாகரன் சொத்தின் மீது வில்லங்கம் உள்ளதா என ஈசி போட்டு பார்த்துள்ளார். அப்போது கருணாகரனின் கையெழுத்தினை போட்டு போலியான ஆவணங்கள் தயாரித்து சொத்தினை பணம் கொடுத்தவரின் தந்தையின் பெயருக்கு கிரயம் செய்துள்ளது தெரிந்தது.

    இதனால் அதிர்ச்சி யடைந்த விவசாயி இது குறித்து சேலம் மாநகர நில அபகரிப்பு போலீசில் புகார் அளித்தார். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. பின்னர் சேலம் நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்தார். அந்த மனுமீதும் உரிய நடவடிக்கை எடுக்காததால், கருணாகரன் சென்னை உயர்தீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    இதனை அடுத்து விவசாயி கருணாகரன் மனுமீது உரிய விசாரணை நடத்தி 2 வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்குமாறு சேலம் நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • முதலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி, வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.
    • ரூ.3 லட்சம் கடனாகப் பெற்றார். அந்த கடனுக்காக கோபிநாத் அசலுடன் வட்டியும் சேர்த்து மாதம் மாதம் கொடுத்து வந்துள்ளார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் சின்ன முதலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி . வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். அவரிடம் கோழித் தீவன மூலப் பொருள் வியாபாரம் செய்து வரும் கோபிநாத் என்பவர் கடந்த 2011-ம்

    வருடம் வியாபார அபிவிருத்திக்காக ரூ.3 லட்சம் கடனாகப் பெற்றார். அந்த கடனுக்காக கோபிநாத் அசலுடன் வட்டியும் சேர்த்து மாதம் மாதம் கொடுத்து வந்துள்ளார்.

    இந்நிலையில் 2 லட்சம் ரூபாய் கடன் பாக்கி இருக்கும்

    நிலையில் துரைசாமி, கோபி நாத்திடம், 'உடனடியாக பணத்தை கொடு, அவ்வாறு பணத்தை கட்டவில்லை என்றால், மாதம் 2 லட்சம் டபுளிங் வட்டி" என்று மிரட்டி மாதா மாதம் 2 லடசம் பெற்று வந்துள்ளார். மேலும் 'இதை வெளியில் சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன்" என்றும் மிரட்டி வந்துள்ளார்.

    இதனால் கோபிநாத் மன நிலை பாதிப்பு அடைந்து விட்டார். கோபிநாத் கடனுக்காக துரைசாமி யிடம் பிணை யமாக கொடுத்த சொத்து பத்தி ரங்க ளையும் துரைசாமி அவரை கடத்திச் சென்று, கொலை மிரட்டல் விடுத்து, வெற்று பத்தி ரங்களிலும், வெற்று பேப்பர்க ளிலும் கையெழு த்துக்களையும் பெற்று இருக்கிறார்.

    கோபிநாத் சொத்துக்க ளையும் துரைசாமி, அவரது பெய ருக்கு கடந்த 2017-ம் வருடம் மாற்றிக் கொண்டுள்ளார். கடந்த 2020-ம் வருடம் கோபிநாத், துரைசாமியிடம் 'பணம் முழுவதையும் பெற்று க்கொண்டுவிட்டீரே எனது சொத்து ஆவணங்களை யும், நான் கொடுத்த வங்கி காசோலைகளையும் எனக்கு கொடுங்கள்" என்று கேட்டுள்ளார்.

    அப்போது துரைசாமி, கோபிநாத் சொத்துக்களை மோசடி செய்து அவரது பெயருக்கு மாற்றிக்கொண்டுள்ளது தெரியவந்தது ‌‌. இந்த விவரம் தெரிந்த கோபிநாத் காவல் நிலையத்தில் துரைசாமி மீது மோசடி புகார் கொடுத்தார். இதுபற்றிய விவரம் தெரிந்த துரைசாமி, உடனடியாக கோபிநாத்திடம் ஏமாற்றி மிரட்டி பிணையமாக பெற்ற காசோலைகளில் ஒரு காசோலையை வைத்து நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துவிட்டார். மேலும் பல காசோலைகளை வைத்து கோபிநாத்தின் மீது அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கு போடுவதாக கோபிநாத்தை துரைசாமி மிரட்டியுள்ளார். மேலும் அவர் ஏற்கனவே ரேசன் அரிசி கடத்தி குண்டர் சட்டத்தில் கைதாகி, சிறை சென்று ஜாமீனில் வெளியில் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    கந்து வட்டி கொடுமையின் மூலம் பாதிப்பு அடைந்த கோபிநாத் இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் தனது சொத்துக்களையும், தான் கையெழுத்து போட்டுக் கொடுத்த வெற்று பத்திரங்கள், வெற்று பேப்பர்கள், தனது வங்கி காசோலைகள் போன்ற ஆவணங்களையும் துரைசாமியிடமிருந்து மீட்டுத் தரவேண்டி புகார் மனு அளித்துள்ளார். குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது நாமக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×