search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ. 1 ½ கோடி நிலத்தை அபகரித்த மருமகள்
    X

    ரூ. 1 ½ கோடி நிலத்தை அபகரித்த மருமகள்

    • அகரம் ஊராட்சி ஓலப்பாளையம் கிராமம், அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் முத்தான் (வயது 90).
    • எங்களது சொத்தை அபகரித்து மோசடி செய்த எனது மருமகள் சாந்தியை அழைத்து விசாரணை செய்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம் எலச்சிபாளையம் அருகில் உள்ள அகரம் ஊராட்சி ஓலப்பாளையம் கிராமம், அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் முத்தான் (வயது 90).

    இவர் தனது மனைவி பாவாயியுடன் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து, மனு கொடுத்தார். அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது:-

    திருச்செங்கோடு வட்டம், அகரம் கிராமம், ஓலப்பாளையம் அருந்ததியர் தெருவில் குடியிருந்து வருகிறேன். எனது மகன் நடேசன் கடந்த 23.02.2016-ல் இறந்து விட்டார். இந்த நிலையில், எனது தந்தை கந்தன் எனக்காக கொடுத்த பூர்வீக சொத்தை, மகன் நடேசன் இறந்த பிறகு, என் பேரன் சிதம்பரம், எனது மருமகள் சாந்தி ஆகியோர் என்னை ஏமாற்றி, என்னிடம் கையொப்பம் பெற்று அபகரித்து விட்டனர்.

    மேலும் எனது கையிலிருந்த ரொக்கம் இருப்பு ரூ.7 லட்சத்தையும் எனது பேரன் சிதம்பரம், மருமகள் சாந்தி ஆகியோர் வாங்கிக் கொண்டார்கள். இப்போது எனது பேரன் சிதம்பரமும் இறந்து விட்டார். எனது மருமகள் சாந்தி, பூர்வீக சொத்தான 76 சென்ட் நிலத்தை ரூ.1.50 கோடிக்கு விற்று விட்டார்.

    எனவே என்னை ஏமாற்றி கையொப்பம் பெற்றுக் கொண்டு, எங்களது சொத்தை அபகரித்து மோசடி செய்த எனது மருமகள் சாந்தியை அழைத்து விசாரணை செய்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் நான் கொடுத்த ரூ.7 லட்சம் பணமும், கண்தெரியாமல், உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் எனக்கும், எனது மனைவிக்கும் உயிர் உள்ள வரை சாப்பாட்டிற்கும், மருத்துவ செலவிற்கும், இறந்துவிட்டால் இறப்பு செலவிற்கும் என ரூ.20 லட்சத்தை எனது மருமகள் சாந்தியிடம் இருந்து பெற்றுத் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்

    Next Story
    ×