search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் தொடரும் நில அபகரிப்பு
    X
    கோப்பு படம்.

    புதுவையில் தொடரும் நில அபகரிப்பு

    • புதுவை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் கல்பனா தாலு
    • இவரின் மகன்கள் பிரான்சு நாட்டில் வசிக்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் கல்பனா தாலு. பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். இவரின் மகன்கள் பிரான்சு நாட்டில் வசிக்கின்றனர். இவருக்கு சொந்தமான ரூ.15 லட்சம் மதிப்புள்ள 770 சதுரஅடி மனை அபிஷேகப்பாக்கம் கிராமத்தில் உள்ளது. இந்த இடம் குறித்து சமீபத்தில் விசாரித்தபோது இடத்துக்கு போலி ஆவணம் தயாரித்து, விற்றது தெரியவந்தது.

    இதுகுறித்து கல்பனா தாலு நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் புகார் அளித்தார். முதல்கட்ட விசாரணை முடிந்து, போலீசாருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. உருளையன்பேட்டை போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த சில மாதங்களாக பிரெஞ்சு குடியுரிமை பெற்றோர் நிலம், வீடு அபகரிப்பு செய்யப்படுவதாக புகார்கள் வந்தது. தற்போது அதேநிலை நீடிப்பது பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களி டையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் இது பிரான்சு நாட்டில் வசிக்கும் புதுவை யைச் சேர்ந்தவர்களிடையே கவலையை எற்படுத்தி உள்ளது. தங்கள் உறவினர்கள் மூலம் வீடு, நிலம் குறித்த தகவல்களை கேட்டும் விசாரித்தும் வருகின்றனர்.

    Next Story
    ×