search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தொடர் நில அபகரிப்பு குறித்து சி.பி.ஐ. அலுவலகத்தில் புகார்
    X

    கோப்பு படம்.

    தொடர் நில அபகரிப்பு குறித்து சி.பி.ஐ. அலுவலகத்தில் புகார்

    • மக்கள் பாதுகாப்பு பேரியக்கம் முடிவு
    • மழை நீரை நிரந்தரமாக தங்கு தடை இன்றி வெளியேற்று வதற்கான எந்த ஒரு புதிய திட்டங்களையும் அரசு செயல்படுத்தவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை மக்கள் பாதுகாப்பு பேரியக்கத் தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பேற்று கடந்து விட்ட நிலையில் புதுவை மாநில மக்களின் வளர்ச்சிக்கு மக்களுக்கு என்று எந்த ஒரு உருப்படி யான திட்டங்களையும் அரசு நடை முறைப்ப டுத்தவில்லை.

    புதுவை மாநிலத்தில் போதைப் பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை அமோகமாக நடை பெறுவதாகவும் , பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பொதுமக்கள் மற்றும் பெற்றோர் இடத்தில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அதேபோல் நில அபகரிப்பு செய்பவர்கள் மீது புகார் பல கொடுத்தாலும் போதுமான நடவடிக்கைகளை அரசு எடுப்பதில்லை.

    மேலும் பெயரளவில் ஒரு வழக்கு பதிந்து விட்டு அந்த இடங்களை மீட்கவும் நடவடிக்கை எடுப்பதில்லை.

    இது தொடர்பாக விரைவில் சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரடியாக புகார் தெரிவிக்க உள்ளோம். பல்வேறு இடங்களில் தரமான சாலை வசதிகள் பல வருடங்களாக இல்லாமல் உள்ளது. சில இடங்களில் மட்டும் ஜனாதிபதி வருகையை முன்னிட்டு அவசர கோலத்தில் அரைகுறையாக புதுவை நகரத்தை அழகுபடுத்தி உள்ளனர்.

    அதேபோல் வரும் மழைக்கா லங்களை கருத்தில் கொண்டு மழை நீரை நிரந்தரமாக தங்கு தடை இன்றி வெளியேற்று வதற்கான எந்த ஒரு புதிய திட்டங்களையும் அரசு செயல்படுத்தவில்லை.

    எனவே கவர்னர் அனைத்து பகுதிகளிலும் தரமான சாலைவசதி மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு இட வேண்டும்.

    அதேபோல் மாநிலத்தில் பேனர் கலாச்சாரம் முழுவதுமாக ஆக்கிரமித்து உள்ளது. அரசு இந்த பேனர் கலாச்சாரத்தை முழுவது மாக தடை செய்ய வேண்டும் லாபத்தில் இயங்கி வரும் மின் துறையை தனியார் மின்மயமாக்கல் திட்டத்தை அரசு முழுவதுமாக கைவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×