search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மாநில உரிமை பற்றி பேச தகுதி இல்லை - அன்பழகன் ஆவேசம்
    X

    கோப்பு படம்.

    மாநில உரிமை பற்றி பேச தகுதி இல்லை - அன்பழகன் ஆவேசம்

    • பொய் பேசுவதை நாராயணசாமி வாடிக்கையாக கொண்டுள்ளார்.
    • கூட்டணி கட்சியில் யார் வேண்டுமா னாலும் பிரதமராக வரலாம் என்ற கருத்தை கூறுகிறார்

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முரண்பட்ட கொள்கை களை கொண்ட கட்சிகளும், ஏற்றுக்கொள்ள முடியாத கட்சிகளும் ஒருங்கிணைந்து இண்டியா என்ற கூட்டணியை உருவாக்கி ராகுல்காந்தியை பிரத மராக்க பல்வேறு முயற்சி களை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கட்சி தலைமையால் புறக்க ணிக்கப்பட்ட முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, இண்டியா கூட்டணி கட்சியில் யார் வேண்டுமா னாலும் பிரதமராக வரலாம் என்ற கருத்தை கூறுகிறார். காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ராகுல்காந்தி, சோனியாகாந்தியை சந்திக்க கடந்த 2 ஆண்டாக பல முறை வாய்ப்பு கேட்டும், கிடைக்காமல் முன்னாள் முதல்- அமைச்சர் நாராயண சாமி திரும்பி யுள்ளார். இதை காங்கிரசார் உணர வேண்டும்.

    பொய் பேசுவதை நாராயணசாமி வாடிக்கையாக கொண்டுள்ளார். சுதந்திரத்தை பெற்றுத்தந்த கட்சி காங்கிரஸ் என தொடர்ந்து பொய் கூறி வருகிறார். சுதந்திரத்தை பெற்றுத்தந்தது ஸ்தாபன காங்கிரஸ். நாராயணசாமி இருப்பது இந்திரா காங்கிரஸ்.

    அதுபோல ஜனநாயகம், மாநில உரிமை பற்றி யெல்லாம் நாராயணசாமி கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகிறார். நாட்டின் ஜனநாயகத்தை முடக்கி எமர்ஜென்சியை கொண்டு வந்தது இந்திரா காங்கிரஸ்தான். 356-வது சட்டப்பிரிவை பயன்படுத்தி பல மாநில அரசுகளை அகற்றியும் இந்திரா காங்கிரஸ்தான்.

    எனவே நாராயண சாமிக்கு ஜனநாயகம், மாநில உரிமை பற்றி பேச தகுதி யில்லை. புதுவையில் காங்கிரஸ் கட்சி இருக்கிறதா? இல்லையா? என தெரியாத நிலை உள்ளது. தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து இண்டியா கூட்டணி என்ற பெயரில் தொடர்ந்து பொய் பிரசாரம் செய்கின்றனர்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுவையில் 40 தொகுதிக ளையும் அ.தி.மு.க. கைப்பற்றும். பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பிரதமரை தேர்வு செய்யும் கட்சியாக அ.தி.மு.க.வும், எடப்பாடி பழனிசாமியும் உயர்வார்கள். புதுவை அரசு மக்களைப்பற்றி எந்த கவலையும் இல்லாமல் மின் கொள்முதல் விலைக்கு ஏற்ப கட்டணத்தை 3 மாதத்திற்கு உயர்த்தியுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் ஆண்டுக்கு ஒருமுறைதான் மின் கொள்முதல் செய்யப்படுகிறது.

    ஆனால் புதுவையில் 3 மாதத்திற்கு ஒரு முறை மின் கொள்முதல் செய்வதாக கூறுகின்றனர். இது எந்த மாநிலத்திலும் இல்லாத முறை. கொள்முதல் விலை ஏற்றத்தின் மூலம் ரூ.38 கோடிதான் உயர்ந்துள்ளது. ஆனால் அரசு கட்டணத்தை உயர்த்தியதன் மூலம் கூடுத லாக ரூ.60 கோடியை பெற முயற்சிக்கிறது. மின்துறைக்கு அரசு மானியமாக வழங்கி கொள்முதல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×