என் மலர்
வேலூர்
- அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர் தப்பினர்
- போலீசார் விசாரணை
வேலூர்:
கர்நாடகா மாநிலம், பெங்களூரில் இருந்து வேலூர் வழியாக சென்னைக்கு இன்று காலை கார் ஒன்று வேகமாக வந்து கொண்டு இருந்தது.
வேலூர் அடுத்த வள்ளலார் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது முன்னால் சென்ற கார் மீது பயங்கரமாக மோதியது.
இதில் முன்னால் சென்ற கார் சாலை நடுவில் இருந்த தடுப்புகளை தாண்டி அந்தரத்தில் பறந்து சென்று மறுபுற சாலையில் விழுந்தது. கார் அந்தரத்தில் பறந்து வருவதை அங்கிருந்தவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்போது வேலூர் நோக்கி வந்த மற்றொரு கார் பய்ந்து சென்று விழுந்த கார் மீது மோதியது.
இந்த விபத்தில் காரில் முன் பகுதிகள் நொறுங்கியது. அங்கிருந்தவர்கள் இது குறித்து சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் காரில் சிக்கி இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அதிர்ஷ்டவசமாக 5 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். வழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் சிக்கியவர்கள் குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை.
வேலூரில் அடுத்தடுத்து 3 கார்கள் விபத்தில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சதுப்பேரி ஏரியில் கரைப்பு
- 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
வேலூர்:
விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண் டாடப்பட்டது. இதனை தொடர்ந்து, பொது இடங்களில் வழிபாட்டுக்காக வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை பாதுகாப்புடன் நீர்நிலைகளில் கரைக்கும் பணி இன்று நடைபெற்றது.
வேலூரில் விநாயகர் விஜர்சன ஊர்வலத்தையொட்டி வேலூர் சரக டிஐஜி முத்து சாமி மேற்பார்வையில் போலீஸ் சூப்பிரண்டு மணி வண்ணன் தலைமையில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சத்துவாச்சாரியில் கலெக்டர் அலுவலகம் எதிரே இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விஜர்சன ஊர்வலம் கோட்டத் தலைவர் மகேஷ் முன்னிலையில் நடைபெற்றது.
நாராயணி ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் பாலாஜி, நாராயணி பீட இயக்குனர் சுரேஷ்பாபு, அரசு ராஜா, அப்புபால் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அங்கிருந்து புறப்பட்ட ஊர்வலம் சைதாப்பேட்டை முருகன் கோவில், சந்தா சாகிப் மசூதி, கிரு பானந்தவாரியார் சாலை, தெற்கு போலீஸ் நிலையம், கோட்டை சுற்றுச்சாலை, மாங்காய்மண்டி, பைபாஸ் சாலை வழியாக சதுப்பேரிக்கு சென்றது.
அதேபோல், மற்றொரு ஊர்வலம் கொணவட்டத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் பிற்பகல் தொடங்கியது.
சதுப்பேரி ஏரியில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக பிரத்யேகமான இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு கிரேன் உதவியுடன் விநாயகர் சிலைகளை ஒன்றன் பின் ஒன்றாக கரைக்கப்படுகின்றன.
வேலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைக்கப்பட்ட சுமார் 500-க்கும் மேற்பட்ட சிலைகள் இன்று ஒரே நாளில் கரைக்கப்பட்டன.
வேலூரில் விநாயகர் சதுர்த்தி விழா முழுவதையும் போலீசார் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
கேமரா காட்சி பதிவை காவல் துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்து தேவைப்படும் இடத்தில் அறிவிப்பு செய்தனர்.
- அணைக்கட்டு பீ.டி.ஓ. அலுவலகத்தில் நடந்தது
- அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்
அணைக்கட்டு:
தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு அணைக்கட்டு பீடிஓ அலுவலகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு கண்கா ட்சியை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு தொடங்கி வைத்தார்.
இதில் ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள், பிறந்த குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய காய்கறிகள் பழங்கள் கீரை வகைகள் என அனைத்தும் காட்சிப்ப டுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சுஜாதா, அணைக்கட்டு சேர்மன் பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகரன், சாந்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- கொலையா? விசாரணை
- குற்றவாளிகள் பிடிபட்ட பின்பே கொலைக்கான காரணம் தெரிய வரும்
வேலூர்:
வேலூர் கோட்டை அகழியில் சிவப்பு போர்வையால் சுற்றப்பட்ட பிணம் கிடப்பதாக வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் கோட்டை அகழிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
பெரியார் பூங்கா மற்றும் பொருட்காட்சி நடக்கும் திடல் இணையும் இடத்தில், போர்வையால் சுற்றப்பட்ட நிலையில் பிணம் மிதந்தது.
அதிக அளவில் துர்நாற்றம் வீசியதால், போலீசாரால் அருகில் செல்ல முடியவில்லை. சுமார் 2 மணி நேரம் ஆம்புலன்சுக்காக போலீசார் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
பின்னர் அனைவரும் மூக்கில் மாஸ்க் உள்ளிட்ட துணிகளை அணிந்து கொண்டு, அருகில் இறங்கி பிணத்தை மீட்டனர்.
புதரில் சிக்கிக் கொண்டிருந்ததால் பிணத்தை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. உடல் அழகிய நிலையில் இருந்ததால் இறந்தது ஆணா, பெண்ணா என்பது தெரியவில்லை.
சம்பவ இடத்தில் மோப்ப நாய் சாரா கொண்டுவரப்பட்டது. அது அகழியில் இருந்து பூங்கா நோக்கி ஓடியது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.
மீட்கப்பட்ட உடலை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில்:-
மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு, உடலை சிவப்பு போர்வையால் சுற்றி கொண்டு வந்து வீசி சென்றுள்ளனர்.
அதிக அளவில் துர்நாற்றம் வீசுவதால் சுமார் 2 நாட்களுக்கு முன்பு கொலை சம்பவம் நடந்திருக்கும் என தெரிகிறது.
கடந்த ஒரு வாரத்தில் வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் யாராவது காணாமல் போனார்களா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்.
விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். கண்கானிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம். குற்றவாளிகள் பிடிபட்ட பின்பே கொலைக்கான காரணம் தெரிய வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ஐ.டி.ஐ. படித்து வந்தனர்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
திருவலம் அடுத்த குப்பிரெட்டிதாங்கல் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபிநாத் மகன் அஜய்கீர்த்தி (வயது 20). ஐ.டி.ஐ. படித்து வந்தார். அதேபகுதியை சேர்ந்தவர் ராமன் மகன் ராஜசேகர் (28).
நண்பர்களான அஜய்கீர்த்தி, ராஜசேகர் ஆகியோர் நேற்று பைக்கில் சென்னை- பெங்களூரு சாலையில் சென்றனர். மேல்மொணவூர் அருகே சென்றபோது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது பைக் மோதியது.
இதில் பைக் சேதமடைந்து லாரியின் அடிப்பகுதியில் சிக்கிக்கொண்டது.
அஜய்கீர்த்தி, ராஜசேகர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். சிறிது நேரத்தில் அஜய்கீர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உயிரிருக்கு போராடிக்கொண்டிருந்த ராஜ சேகரை பொது மக்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை க்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜசேகர் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வருவாய் துறையினர் சீல் வைத்தனர்
- உயிர்பலி ஏற்படுத்திய சுவரை அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
வேலூர்:
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள தனியார் ஓட்டலில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக சுவர் ஈரமாக இருந்தது. நேற்று முன்தினம் இரவு சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இதனை அப்புறப்படுத்த நிர்வாகம் முடிவு செய்தது.
வேலூர் சலவன்பேட்டை ராமமூர்த்தி (வயது 50 ) என்ற கட்டிட மேஸ்திரி. கருகம்புத்தூரை சேர்ந்த வெண்ணிலா உள்பட 2 பெண்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழுந்தது. இதில் ராமமூர்த்தி வெண்ணிலா உள்பட 3 பேரும் சிக்கி காயம் அடைந்தனர்.
அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டனர். 3 பேரும் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர் .அங்கு பரிசோதனை செய்த டாக்டர் 3 பேரில் ஒரு பெண் இறந்து விட்டதாக தெரிவித்தார். அதன் பிறகு மற்ற இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் கட்டிடமேஸ்திரி ராமமூர்த்தியும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
தொடர்ந்து ஓட்டலுக்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இந்த நிலையில் இன்று காலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் சம்பவம் நடந்த ஓட்டலுக்கு சென்று ஆய்வு செய்தார். தாசில்தார் செந்தில் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.
உயிர்பலி ஏற்படுத்திய சுவரை ஆய்வு செய்து அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
- பொதுமக்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி விண்ணப்பத்தின் நிலையினை தெரிந்துகொள்ளலாம்
- கலெக்டர் தகவல்
வேலூர்;
வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதேமில்லத் கூட்டரங்கில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட உதவி மையத்தை கலெக்டர்குமாரவேல் பாண்டியன் இன்று ஆய்வு செய்தார்.
அப்போ அவர் கூறியதாவது:-
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விடுபட்ட அல்லது தகவல்கள் பெறாத பயனாளிகளுக்கு அவர்களின் விண்ணப்பத்தின் நிலை குறித்து தெரிவிக்கவும், அவர்கள் இ-சேவை மையங்கள் வாயிலாக மேல் முறையீடு செய்வது குறித்து அறிவுறுத்தவும் கலெக்டர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் விண்ணப்பபடிவம் அளிக்கப்பட்டு, குறுஞ்செய்தி வரப்பெற்றும் அல்லது வரப்பெறாத பொதுமக்கள் உதவி மையத்தினை அணுகி, பொதுமக்கள் தங்களது ஆதார் எண்ணையோ அல்லது குடும்ப அட்டை எண்ணையோ தெரிவித்து தங்களது விண்ணப்பத்தின் நிலையினை தெரிந்துகொள்ளலாம்.
மேலும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் எந்த விதிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை என்பதை பொதுமக்கள் http:/Kmut.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது ஆதார் எண் மூலமாக உள்ளீடு செய்து தெரிந்துகொள்ளலாம்.
தங்களது விண்ணப்பமானது நிராகரிக்கப்பட்டிருப்பதாக குறுஞ்செய்தி வரப்பெற்று 30-நாட்களுக்குள் தாங்கள் தகுதிவாய்ந்த பயனாளி என்பதற்கான உரிய ஆதார ஆவணங்களுடன் வருவாய் கோட்ட அலுவலருக்கு பொதுமக்கள் இ சேவை மையத்தினை அணுகி மேல்முறையீடு செய்துகொள்ளலாம்.
மேல்முறையீடு செய்வதற்கு எவ்வித கட்டணமும் செலுத்தவேண்டியதில்லை.
தங்களது விண்ணப்பம் பரிசீலனையில்
இருக்கும்பட்சத்திலும் குறுஞ்செய்தி உடனே வராது. தங்களது மனுவின் நிலையை அறிய
ஆதார் எண்ணை உள்ளீடுசெய்து இணையதளத்தில் சரிபார்த்து தெரிந்துகொள்ளலாம்.
ஏற்கனவே கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்காமல்
விடுபட்டவர்கள், விண்ணப்பிக்க அரசால் அறிவிக்கப்படும் தேதியிலிருந்து தங்களது
மனுவினை இ-சேவை மையங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம் .
இவ்வாறு அவர் கூறினார்.
- விடிய, விடிய இடி, மின்னலுடன் பெய்தது
- பல்வேறு பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது
வேலூர்:
வேலூரில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் காரணமாக பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் வேலூரில் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமார் 3 மணி நேரம் மழை கொட்டித்தீர்த்தது. மேலும் இரவு முதல் விடியும் வரை தொடர்ந்து மழை பெய்தது.
பலத்த மழை காரணமாக புதிய பஸ் நிலையம், கிரீன் சர்கிள், காமராஜர் சிலை, அண்ணா சாலை, ஆற்காடு சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதேபோல் ஆம்பூர், வாணியம்பாடி, ஆலங்காயம், காவேரிப்பாக்கம், திருப்பத்தூர், சோளிங்கர், குடியாத்தம் உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-
வேலூர்-21, ஆம்பூர்-20.40, வாணியம்பாடி-27, ஆலங்காயம்-24, காவேரிப்பாக்கம்-9.2, சோளிங்கர்-16, திருப்பத்தூர்-21.6, குடியாத்தம்-21, மேல்ஆலத்தூர்-22.6, பொன்னை-5.8, நாட்டறம்பள்ளி-6, காட்பாடி -24.50, அம்முண்டி-8, வடபுதுப்பட்டு-14.6, கே.வி. குப்பம்-32.40, திருப்பத்தூர் -28 ஆற்காடு-20.2, அரக்கோணம் 12.3, கலவை-16.2, ராணிப்பேட்டை-4.2 மில்லி மீட்டர் மழை பதிவானது.
- ஊா்வல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு
- 1,800 போலீசாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை
வேலூர்:
விநாயகா் சதுா்த்தியையொட்டி வேலூரில் சிலைகள் ஊா்வலத்துக்கு அனுமதிக்க ப்பட்டுள்ள சாலைகளில் போலீஸ் சூப்பிரண்டு என்.மணிவண்ணன் ஆய்வு மேற்கொண்டாா்.
விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, வேலூா் மாவட்டம் முழுவதும் சுமாா் 900 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டன.
தொடா்ந்து, இந்த சிலைகள் புதன்கிழமை முதல் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீா்நிலைகளில் விசா்ஜனம் செய்யப்பட உள்ளன. அதற்காக வேலூா் மாவட்ட த்தில் சதுப்பேரி ஏரி, ஊசூா் ஏரி, கருகம்பத்தூா் ஏரி, நெல்லூா்பேட்டை ஏரி ஆகிய இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
"வேலூா் மாநகரில் வழிபாடு செய்யப்படும் விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சதுப்பேரி ஏரியில் கரைக்கப்படுவது வழக்கம்.
இந்த விநாயகா் சதுா்த்தி ஊா்வலத்தின்போது அசம்பாவித சம்பவங்களை தவிா்க்க ஏற்கெனவே வேலூா் வருவாய்க் கோட்டாட்சியா் கவிதா தலைமையில் வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகள் ஊா்வலப் பாதையான வேலூா் சைதாப்பேட்டை முருகன் கோயில், மெயின் பஜாா், லாங்கு பஜாா், அண்ணா கலையரங்கம், கோட்டை சுற்றுச்சாலை, மாங்காய் மண்டி, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, அணுகு சாலை, சிலைகள் கரைக்கப்படும் சதுப்பேரி ஏரி ஆகிய இடங்களையும் ஆய்வு செய்தனா்.
அப்போது, ஊா்வல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி டவும், சாலையோரங்களில் உள்ள தள்ளுவண்டிக் கடை களை அகற்றவும், ஊா்வலப் பாதையில் தாழ்வான நிலையில் செல்லும் மின் வயா்களை உயா்த்திக் கட்டவும் கோட்டாட்சியா் உத்தரவிட்டிருந்தனா்.
இதன்தொடா்ச்சியாக, மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னே ற்பாடுகள் தொடா்பாக போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் சிலைகள் ஊா்வலப் பாதைகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டாா்.
சத்துவாச்சாரியில் தொடங்கி சைதாப்பேட்டை, மெயின் பஜாா், லாங்கு பஜாா், அண்ணா கலையரங்கம், கோட்டை சுற்றுச்சாலை, மாங்காய் மண்டி, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, அணுகு சாலை என சிலைகள் கரைக்கப்படும் சதுப்பேரி ஏரி வரை ஆய்வு செய்தாா்.
அப்போது, முக்கிய இடங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடா்பாக காவல் துறையினருக்கு அறிவுரை வழங்கினாா்.
ஊா்வலத்தையொட்டி, சுமாா் 1,800 போலீசாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஊா்வலம் முழுவதும் ட்ரோன், சிசிடிவி மற்றும் விடியோ கேமராக்கள் மூலமாகவும் பதிவு செய்யப்பட உள்ளது.
- நேற்று இரவு செங்கல் சூளையில் செங்கற்களை வேக வைக்க தீ மூட்டப்பட்டது.
- போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி (வயது 40). இவரது மனைவி அமுல் (30). தம்பதியினருக்கு சந்தியா (16), சினேகா (14), அரவிந்த் (12) ஆகிய பிள்ளைகள் உள்ளனர்.
தெய்வசிகாமணியும், அவரது மனைவி அமுலுவும் அதே ஊரை சேர்ந்த பழனிவேல் என்பவருக்கு சொந்தமான இடத்தில், 15 ஆண்டுகள் வாடகை மூலம் செங்கல் சூளை நடத்தி வருகின்றனர்.
தம்பதியினர் தினமும் பகல் முழுவதும் சூளையில் வேலை செய்துவிட்டு, இரவு நேரத்தில் வீட்டிற்கு சென்று விடுவார்கள்.
இந்நிலையில் நேற்று இரவு செங்கல் சூளையில் செங்கற்களை வேக வைக்க தீ மூட்டப்பட்டது. அப்போது தெய்வசிகாமணி மற்றும் அமுல் ஆகியோர் சூளைக்கு பக்கவாட்டில் இறக்கப்பட்டுள்ள தகர சீட் அருகே தங்கியுள்ளனர்.
மேலும் செங்கல் சூளையில் மூட்டப்பட்ட தீ அணையாமல் இருக்க சூளையை சுற்றி தார்பாய் மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று மாலை முதல் விடியும் வரை கணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
தொடர்மழையின் காரணமாக சூளை மூடப்பட்டு இருந்த தீ அணைந்து புகை மண்டலம் சூழ்ந்தது.
அப்போது கிளம்பிய புகை அதனை சுற்றியுள்ள பகுதி முழுவதிலும் குபீரென பரவியது. அப்போது தூக்கத்தில் இருந்த தெய்வசிகாமணி, அமுலு ஆகியோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அலறி கூச்சலிட்டனர்.
பலத்த மழை பெய்ததால், இவர்களது கூச்சல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை.
இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில், இவர்களது பக்கத்து சூளை உரிமையாளர் சீனிவாசன், அந்த வழியாக சென்றபோது அமுலுவின் முனகல் சத்தம் கேட்டது.
உடனே சீனிவாசன் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் 2 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் தெய்வசிகாமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் ஆபத்தான நிலையில் இருந்த அமுலுவுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
ஆனாலும் சிகிச்சை பலனின்றி அமுலுவும் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த, வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, தாசில்தார் செந்தில், இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ், வருவாய் ஆய்வாளர் சந்தியா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கணியம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வேலை முடிந்து வீட்டிற்க்கு சென்ற போது விபரீதம்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம் அடுத்த காட்டுக் கொல்லையை சேர்ந்தவர் பழனி (வயது 21). இறைவன் காட்டை சேர்ந்தவர் பிரபாகரன் (27). இருவரும் வேலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.
நேற்று இரவு வேலை முடிந்து இருவரும் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தனர்.
பொய்கையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது அவர்களுக்கு முன்னால் சென்ற லாரி திடீரென திரும்பி உள்ளது. இதை கவனிக்காததால் இவர்களது பைக் லாரியின் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் பிணத்தையும் மீட்டு பிரயோக பரிசோத னைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இரவு பெய்த மழையால் விபரீதம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் தனியார் ஓட்டல் இயங்கி வருகிறது.
இந்த ஓட்டலில் உள்ள சமையல் கூட சுற்றுச்சுவரின் ஒரு பகுதி நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக இடிந்து விழுந்தது.
இடிந்து விழுந்த கட்டிட கழிவுகளை அப்புறப்படுத்தும் பணி இன்று நடந்தது. ஓட்டல் உரிமையாளர் சலவன் பேட்டையை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 50). கருகம்புத்தூரை சேர்ந்த வெண்ணிலா, மற்றொரு பெண் ஆகியோர் பணியில் ஈடுபட்டனர்.
அவர்கள் கட்டிட இடிபாடுகளை அகற்றிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக மீதி இருந்த சுவர் இடிந்து பணியில் ஈடுபட்டவர்கள் மீது விழுந்தது.
இடிபாடுகளில் சிக்கி 3 பேரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கும்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
மூன்று பேரில் பெண் ஒருவர் பாதி வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
ராமமூர்த்தி மற்றும் வெண்ணிலாவுக்கு அடுக்கம்பாறை வரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






