என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Career Pioneers Program"

    • கடனுதவியோடு இணைந்த மானியம் வழங்கப்படும்
    • கலெக்டர் தகவல்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் பட்டியலின மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கான சிறப்பு திட்டமான அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் இவ்வாண்டு முதல் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ், ஆர்வமுள்ள தொழில்முனைவோர் உற்பத்தி, வாணிகம் மற்றும் சேவை சார்ந்த எந்தத் தொழில் திட்டத்துக்கும் கடனுதவியோடு இணைந்த மானியம் வழங்கப்படும்.

    உணவுப்பதப்படுத்தல், தானியங்கி உதிரி பாகங்கள் உற்பத்தி ஆயத்த ஆடைகள் தைத்தல், வாணிகப் பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை, அழகு நிலையம், உடற்பயிற்சிக் கூடம், டிராவல்ஸ், காங்கிரீட் மிக்சர், ஆம்புலன்ஸ் ரிக் போரிங், ரெப்ரிஜரேட் ட்ரக் உள்ளிட்ட திட்டமாகவும் இருக்கலாம்.

    மானியம் மொத்த திட்டத் தொகையில் 35 சதவீதம் உச்ச வரம்பு ரூ.150 கோடி வரை வழங்கப்படும். திட்டத் தொகையில் 65 சதவீதம் வங்கிக் கடனாக வழங்க வழிவகை செய்யப்பட்டு 35 சதவீதம் அரசின் பங்காக முன்முனை மானியம் வழங்கப்படும்.

    கடன் திரும்பச் செலுத்தும் காலம் முழுதும் 51சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும், வயது வரம்பு 18 முதல் 55 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர்களுக்கு கல்வித் தகுதி தேவையில்லை.

    பட்டியலின மற்றும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்த எந்தத் தனி நபரும் மற்றும் பங்குதாரர் கூட்டாண்மை, பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் www.msmeonlinetn.gov.in என்ற தளத்தில் இணைய வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு வேலூர், காந்திநகர், காங்கேயநல்லூர் சாலையில் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அல்லது 0418-2242512, 2242413 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.

    இத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் கலெக்டர் தலைமையில் வருகிற 26-ந் தேதி காலை 10.30 மணிக்கு காயிதே மில்லத் கூட்ட அரங்கம் கலெக்டர் வளாகத்தில் நடைபெற வுள்ளது.

    ஆர்வமுள்ள பட்டியலின மற்றும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்த தொழில்மு னைவோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    ×