search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக் விபத்தில் வாலிபர் பலி
    X

    பைக் விபத்தில் வாலிபர் பலி

    • தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    சென்னை பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் பிரமேத்குமார் (வயது 25). இவர் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி நேற்று இரவு தனது பைக்கில் சென்றார்.

    அகரம்சேரி அருகே சென்றபோது பைக் நிலை தடுமாறி மேம்பால தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் தூக்கி வீசப்பட்ட பிரமேத்குமார் பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×