என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்தியா 2030-க்குள் பொருளாதாரத்தில் 3-வது இடம் பெறும்
    X

    அறிவு சார் திருவிழாவில் மாணவர்கள் கண்டுபிடித்த தயாரிப்புகளை கண்காட்சிக்கு வைத்திருந்தனர். இதனை வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன், சிறப்பு விருந்தினர்கள் அனுஜ் பல்லா, பராஷ் பரிக், வி.ஐ.டி துணை தலைவர்கள் சங்கர் விசுவநாதன், டாக்டர் ஜி.வி.செல்வம் உள்ளிட்டோர் பார்வையிட்ட காட்சி.

    இந்தியா 2030-க்குள் பொருளாதாரத்தில் 3-வது இடம் பெறும்

    • வி.ஐ.டி.யில் அறிவுசார் தொழில்நுட்ப திருவிழா
    • அறிவியல் தொழில்நுட்ப தலைவர் அனுஜ் பல்லா பேச்சு

    வேலூர்:

    விஐடி பல்கலைக்க ழகத்தில் 14-வது ஆண்டாக அறிவுசார் தொழில்நுட்பத் திருவிழா இன்று தொடங்கியது.

    இதில் 150 க்கும் மேற்பட்டதொழில்நுட்ப பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது.

    அறிவுசார் திருவிழா

    இதில் 13000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.இந்த போட்டியில் சிறப்பான படைப்புகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்புள்ள பரிசு பொருள்கள் வழங்கப்பட உள்ளது.

    அறிவு சார் தொழில்நுட்ப திருவிழாவை வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது,

    வி.ஐ.டி.யில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் 60 நாடுகளில் இருந்து படித்து வருகிறார்கள்.

    கடந்தாண்டு 400-க்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச நிறுவனங்களில் இருந்து மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற்றனர். இந்தியாவில் அரசு பள்ளிகளில் 14 வயது வரை இலவச கல்வி அளிக்கப்படுகிறது.

    ஆனால் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி அளிக்கப்படுவதில்லை.உலகின் உள்ள 25 நாடுகளில் பல்கலைக்கழக அளவில் கல்வி இலவசமாக அளிக்கப்படுகிறது.

    குறிப்பாக ஜெர்மெனியில் வெளிநாட்டு மாணவர்களும் உயர்கல்வி இலவசமாக பெற இயலும்.தற்போது மாணவர்களாகிய நீங்கள் இங்கு அமர்ந்துள்ளீர்கள் என்றால்அதற்கு உங்கள் பெற்றோர்களே காரணம். அனைவருக்கும் உயர் கல்வி அறக்கட்டளை மூலமாக 8 ஆயிரம் மாணவர்கள் உயர் கல்வி படிக்கின்றனர்.

    உயர்கல்வி

    தமிழ்நாடு உயர்கல்வி பயிலும் மாணவர்கள் விகிதத்தில் 50 சதவீதத்தை தாண்டி உள்ளது.

    இந்தியாவிலேயே உயர் கல்வி பெறுவதில் பீகார் மிகவும் பின்தங்கி உள்ளது.இதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்.இந்தியாவில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

    அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து அதற்கு அதிகளவில் பணம் செலவு செய்ய வேண்டும்.

    உலகிலேயே கல்விக்கு அதிகமாக செலவு செய்யக்கூடிய நாடு இஸ்ரேல். தற்போது இந்தியா கண்டுபிடிப்புகளில் 46-வது இடத்தில் உள்ளது.உலக அளவில் பொருளா தாரத்தில் 5-வது இடத்தில் உள்ளது.நாம் தற்போது தொழில் துறையில் வளர்ந்துள்ளோம்.அனைவரும் உயர் கல்வி பெறவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    பொருளாதார வளர்ச்சி

    சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திய அரசின் அறிவியல் தொழில் நுட்ப தலைவர் அனுஜ் பல்லா பேசியதாவது:-

    உக்ரைன் போரால் ஐரோப்பாவில் தகவல் தொழில்நுட்பம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவிலும் வீட்டுக் கடன் அதிகமாக உள்ளது. இது தற்போது இந்தியாவிற்கு சாதகமாக உள்ளது.

    நமக்கு போட்டியாக இருக்கும் சீனாவில் 20 சதவீத வேலையின்மை உள்ளது.இந்தியாவில் ஸ்டார்ட் அப் கம்பெனிகள் வேலையின்மையை சரி செய்வதற்காக அதிகமாக உருவாக்கப்பட்டு வருகிறது.

    உலகில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஸ்டார்ட் அப் கம்பெனிகள் இந்தியாவில் அதிகமாக உள்ளது.இந்தியா 2030-ம் ஆண்டிற்குள் உலக பொருளாதாரத்தில் முதல் 3 இடத்திற்குள் இடம்பெறும்.

    தற்போது இந்தியாவில் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன.மாணவர்களாகிய நீங்கள் கல்வி பயில்வதற்கு விஐடி சிறந்த இடமாக உள்ளது.

    இந்தியாவின் ஜிடிபியில் தகவல் தொழில்நுட்பம் 7.2 சதவீத பங்கு வகிக்கிறது.தகவல் தொழில்நுட்பத்துறை அடுத்த 10 -20 ஆண்டுகளில் வேகமாகக வளர்ச்சி அடையும்.

    மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்.தற்போது உலகம் மாறி வருகிறது.முழு நேர வேலை, பகுதி நேர வேலை போன்றவை உருவாகிறது.இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் கவுரவ விருந்தினராக யு.பி.எஸ். நிறுவன தலைமை மேலாளர் பராஷ் பரிக், வி.ஐ.டி துணை தலைவர்கள் சங்கர் விசுவநாதன், டாக்டர் ஜி.வி.செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    வி.ஐ.டி. அண்ணா அரங்கில் ரோபோ எந்திரம் மூலம் வி.ஐ.டி. வேந்தர் கிராவிடாஸ் அறிவுசார் திருவிழாவை தொடங்கி வைத்தார். பின்னர் மாணவர்கள் கண்காட்சிக்கு வைத்திருந்த படைப்புகளை பார்வையிட்டனர்.

    Next Story
    ×