என் மலர்
வேலூர்

வேலூர் அருகே மேட்டு இடையம்பட்டி, எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 43). இவர் தொரப்பாடியில் கடப்பா கல் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவரது மனைவி வெளியூருக்கு சென்றார். சிறிதுநேரம் கழித்து செல்வம் வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 9 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது. வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து நகையை திருடிச் சென்றது அவருக்கு தெரியவந்தது. அதைத் தொடர்ந்து பாகாயம் போலீஸ் நிலையத்தில் செல்வம் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், திருடப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் இருக்கும். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றனர்.
வேலூர்:
வேலூர் தொகுதி தி.மு.க.வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. இதில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசியதாவது:-
இந்தியாவில் ஜநாயகம் ஒவ்வொரு மாநிலத்திலும் கண்ணை மூடிக்கொண்டு கோமா நிலைக்கு போய்க்கொண்டுள்ளது. மேற்கு வங்கத்தில் மம்தாவை கூட ஸ்டெக்சரில் படுக்க வைத்துவிட்டது.
ஆனால் ஆண்மை சிங்கமாக எழுந்து நிற்கிற மு.க.ஸ்டாலின் மட்டும் தான் சுதந்திர வீரனாக இந்தியாவில் இருக்கிறார்.
இந்தியாவில் சுதந்திரத்தை விரும்புகிறவர்கள் மு.க.ஸ்டாலின் ஆட்சி வரவேண்டும் என்று கருதுகிறார்கள். அதனால் தான் கருணாநிதி இருந்த போதே மாறுபட்டிருந்த கம்யூனிட்ஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தை, காங்கிரஸ் என யார்? யார்? ஜனநாயத்தை விரும்புகிறார்களோ அவர்கள் நம்மோடு கரம் கோர்த்து நிற்கிறார்கள்.
ஜனநாயத்தை காக்கும் வல்லமை மு.க.ஸ்டாலினுக்கு தான் உண்டு என்று இந்திய நாடு மகத்தான நம்பிக்கையோடு உள்ளது. அந்த நம்பிக்கைக்கு உயிரூட்ட வேண்டும் என்றால் அவரது கரத்தை பலப்படுத்த வேண்டும்.
கரத்தை வலம்படுத்த நாம் வெற்றி பெற வேண்டும். கடந்த 10 ஆண்டு காலம் இருண்ட ஆட்சி நடந்துள்ளது. ஒரு இம்மி அளவு முன்னேற்றத்தை அது தந்திருந்தால் கூட சற்று பாராட்டலாம்.
தி.மு.க.வுக்குள் சண்டை இருந்தால் இப்போது நிறுத்துங்கள், தேர்தலுக்கு பின் தொடருங்கள். கட்சிக்கு துரோகம் செய்தவர்களுக்கு இடம் கொடுக்காது தி.மு.க. 24 மணி நேரம் அல்ல 12 மணி நேரத்திற்குள் தூக்கி எறியப்படுவார்கள்.
தி.மு.க.வில் இருக்கும் வரை தான் மரியாதை. இதில் இல்லாவிட்டால் அனாதை பிணம் போல தான். கட்சியை நினைத்து பகைமையை மறக்க வேண்டும். தற்போது நாம் வெற்றி பெற்றால் வீரர்கள். தோற்று விட்டால் அடிமையை விட கேவலமானவர்கள்.
இவர் அவர் பேசினார்.
வேலூர் சலவன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் ஸ்ரீஹரி (வயது 28). விஜய் மக்கள் இயக்க மாணவரணி நிர்வாகியாகவும் 32-வது வார்டு கடை துணை செயலாளராகவும் இருந்தார். இவர் நேற்று மாலை ஆற்காட்டில் இருந்து வேலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பெருமுகை அருகே வந்த போது நிலைதடுமாறி கீழே விழுந்தார். அதில் அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வேலூர் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. தேர்தல் அறிக்கை கதாநாயகன் என்றால் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வில்லன். நாங்கள் இந்த தேர்தலில் வெற்றி சிறகடித்து வெளியே வருவோம். தி.மு.க. எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் பா.ஜ.க.வில் சேர்ந்திருப்பது இதெல்லாம் தேர்தல் நேரத்தில் நடப்பது தான். இதனை சீரியசாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
10 முறை ஒரே தொகுதியில் நான் போட்டியிடுகின்றேன் என்றால் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை குறைவின்றி செய்துள்ளேன். அதனால் தான், மக்கள் என்னை தொடர்ந்து வெற்றி பெறச் செய்கிறார்கள். அவ்வாறு செய்தால் 10 முறை என 15-வது முறையும் வெற்றி பெறச் செய்வார்கள்.
இவ்வாறு துரைமுருகன் கூறினார்.







