search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துரைமுருகன்
    X
    துரைமுருகன்

    வெற்றி பெற்றால் வீரர்கள், தோல்வியடைந்தால் அடிமையை விட கேவலம்- துரைமுருகன் ஆவேச பேச்சு

    இந்தியாவில் ஜநாயகம் ஒவ்வொரு மாநிலத்திலும் கண்ணை மூடிக்கொண்டு கோமா நிலைக்கு போய்க்கொண்டுள்ளது என்று துரைமுருகன் பேசியுள்ளார்.

    வேலூர்:

    வேலூர் தொகுதி தி.மு.க.வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. இதில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசியதாவது:-

    இந்தியாவில் ஜநாயகம் ஒவ்வொரு மாநிலத்திலும் கண்ணை மூடிக்கொண்டு கோமா நிலைக்கு போய்க்கொண்டுள்ளது. மேற்கு வங்கத்தில் மம்தாவை கூட ஸ்டெக்சரில் படுக்க வைத்துவிட்டது.

    ஆனால் ஆண்மை சிங்கமாக எழுந்து நிற்கிற மு.க.ஸ்டாலின் மட்டும் தான் சுதந்திர வீரனாக இந்தியாவில் இருக்கிறார்.

    இந்தியாவில் சுதந்திரத்தை விரும்புகிறவர்கள் மு.க.ஸ்டாலின் ஆட்சி வரவேண்டும் என்று கருதுகிறார்கள். அதனால் தான் கருணாநிதி இருந்த போதே மாறுபட்டிருந்த கம்யூனிட்ஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தை, காங்கிரஸ் என யார்? யார்? ஜனநாயத்தை விரும்புகிறார்களோ அவர்கள் நம்மோடு கரம் கோர்த்து நிற்கிறார்கள்.

    ஜனநாயத்தை காக்கும் வல்லமை மு.க.ஸ்டாலினுக்கு தான் உண்டு என்று இந்திய நாடு மகத்தான நம்பிக்கையோடு உள்ளது. அந்த நம்பிக்கைக்கு உயிரூட்ட வேண்டும் என்றால் அவரது கரத்தை பலப்படுத்த வேண்டும்.

    கரத்தை வலம்படுத்த நாம் வெற்றி பெற வேண்டும். கடந்த 10 ஆண்டு காலம் இருண்ட ஆட்சி நடந்துள்ளது. ஒரு இம்மி அளவு முன்னேற்றத்தை அது தந்திருந்தால் கூட சற்று பாராட்டலாம்.

    தி.மு.க.வுக்குள் சண்டை இருந்தால் இப்போது நிறுத்துங்கள், தேர்தலுக்கு பின் தொடருங்கள். கட்சிக்கு துரோகம் செய்தவர்களுக்கு இடம் கொடுக்காது தி.மு.க. 24 மணி நேரம் அல்ல 12 மணி நேரத்திற்குள் தூக்கி எறியப்படுவார்கள்.

    தி.மு.க.வில் இருக்கும் வரை தான் மரியாதை. இதில் இல்லாவிட்டால் அனாதை பிணம் போல தான். கட்சியை நினைத்து பகைமையை மறக்க வேண்டும். தற்போது நாம் வெற்றி பெற்றால் வீரர்கள். தோற்று விட்டால் அடிமையை விட கேவலமானவர்கள்.

    இவர் அவர் பேசினார்.

    Next Story
    ×