search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடியாத்தம் தொகுதி
    X
    குடியாத்தம் தொகுதி

    குடியாத்தம் தொகுதி கண்ணோட்டம்

    குடியாத்தம் சட்டமன்ற தொகுதி வேலூர் மாவட்ட எல்லையில், ஆந்திர மாநில எல்லையை ஒட்டியபடி அமைந்துள்ளது.
    குடியாத்தம் நகரம் வழியாக பலமனேர், சித்தூருக்கும், குடியாத்தம், பேரணாம்பட்டு வழியாக வி.கோட்டா, குப்பத்துக்கும் தினமும் ஏராளமான வாகனங்கள் ஆந்திர மாநிலத்திற்கு சென்று வருகிறது.

    குடியாத்தம் தொகுதியில் குடியாத்தம் நகராட்சி, குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் 21 ஊராட்சிகள், பேரணாம்பட்டு நகராட்சி, பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் 34 ஊராட்சிகள் ஆகியவற்றை உள்ளடங்கியுள்ளது. குடியாத்தத்தில் ஏராளமான தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளதால் குட்டி சிவகாசி என்ற சிறப்பு உள்ளது. குடியாத்தம், பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் முக்கிய தொழில்களாக விவசாயம், கைத்தறி, தீப்பெட்டிகள், பீடி, தென்னைநார் உள்ளிட்ட தொழிற்சாலைகள், காலணி தயாரிக்கும் தொழிற்சாலைகள், தோல் தொழிற்சாலைகள் உள்ளன.

    குடியாத்தம் தொகுதி

    குடியாத்தம் தொகுதியில் ஆதிதிராவிடர்கள், இஸ்லாமியர்கள், செங்குந்த முதலியார்கள், வன்னியர்கள், நாயுடுகள், யாதவர்கள், செட்டியார்கள் என அனைத்து சமுதாயத்தினரும் பெருமளவு உள்ளனர்.

    1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தபோது டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்ட இந்திய தேசியக்கொடி குடியாத்தத்தில் பட்டுத்துணியால் நெய்து தரப்பட்டது.

    குடியாத்தம் தொகுதி

    காமராஜரை இடைத்தேர்தலில் வெற்றி பெற செய்து முதல்-அமைச்சர் பதவியில் அமர்த்தி அழகு பார்த்த தொகுதி.

    குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் கடந்த தேர்தலின்போது 290 வாக்குச்சாவடிகள் இருந்தது. தற்போது ஆயிரம் பேருக்கு ஒரு வாக்குச்சாவடி என மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. இதனால் கூடுதலாக 118 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு மொத்தம் 408 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    குடியாத்தம், பேரணாம்பட்டு தாலுகா பகுதிகள் இந்த தொகுதியில் இடங்கியுள்ளன.

    குடியாத்தம் தொகுதி

    மொத்தம் 2 லட்சத்து 87 ஆயிரத்து 684 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்கள் 1,39,342 பேர், பெண்கள் 1,48,302 பேர், மூன்றாம் பாலித்தவர்கள் 40 பேர் உள்ளனர்.

    இந்த தொகுதியில் முதலியார் சமுதாய ஓட்டுகள் 70 ஆயிரத்துக்கும் மேல் உள்ளது. இது தவிர வன்னியர், ஆதிதிராவிடர் வாக்குகள் தலா 50 ஆயிரத்துக்கும் மேல் உள்ளன. இஸ்லாமியர்கள், நாயுடு சமுதாய வாக்காளர்கள் கனிசமாக உள்ளனர்.

    பொதுமக்களின் எதிர்பார்ப்பு

    வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டதால் குடியாத்தம் தாலுகா தலைமை மருத்துவமனையை வேலூர் மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்ற வேண்டும். குடியாத்தம் பகுதியில் ஏராளமான எந்திரம் மற்றும் குடிசை தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளதால் சிட்கோ மூலமாக தீப்பெட்டி தொழிற்சாலைக்கு தேவையான குளோரைடு, மெழுகு பேப்பர் மற்றும் தீக்குச்சிக்கு தேவையான மரங்களை இறக்குமதி செய்ய வேண்டும்.

    குடியாத்தம் தொகுதி

    குடியாத்தம் பகுதியில் ஜவுளி, பூங்கா அமைக்க வேண்டும். கைத்தறி மற்றும் விசைத்தறிக்கு தேவையான நூல்களுக்கும், உற்பத்தி செய்யப்படும் லூங்கிகளுக்கும் விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும். குடியாத்தம் பகுதியில் கயிறு வாரியத்தின் கிளை அமைக்க வேண்டும். பெரிய பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியாத்தம் பகுதியில் அரசு ஐ.டி.ஐ. அமைக்க வேண்டும்.

    குடியாத்தத்தை தலைமையிடமாக கொண்டு கல்வி மாவட்டம் உருவாக்க வேண்டும். அக்ராவரம், மீனூர்நடுகெட்டை பகுதியில் மேம்பாலம் அமைத்து தரவேண்டும். குடியாத்தத்தில் சுற்றுச்சாலை (ரிங்ரோடு) அமைத்து தரவேண்டும்.

    நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க செதுக்கரை பகுதியில் இருந்து ஆற்றங்கரை ஓரமாக நெல்லூர்பேட்டை வரை சாலை அமைக்க வேண்டும். மழைக்காலங்களில் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து சென்றால் கெங்கையம்மன் தரைப்பாலத்தில் போக்குவரத்து நடைபெறும். எனவே கெங்கையம்மன் தரை பாலத்தை மேம்பாலமாக கட்ட வேண்டும். மேலும் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேல்பட்டி சாலையில் வரும் வாகனங்கள் நகருக்குள் நுழையாமல் பேரணாம்பட்டு ரோட்டில் இணைப்பதற்கு மாற்று வழியை அமைக்க வேண்டும்.

    பேரணாம்பட்டு அருகே பத்தலபல்லி அணை திட்டப்பணியை விரைந்து முடித்தால் பேரணாம்பட்டு பகுதியில் இணைந்து வருவதாலும் பேரணாம்பட்டு நகரம் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை தீரும். பேரணாம்பட்டில் சார்நிலை கருவூலம் ஏற்படுத்த வேண்டும்.

    குடியாத்தம் தொகுதி

    விழுப்புரம்- மங்களூரு தேசிய நெடுஞ்சாலையானது பேரணாம்பட்டு பகுதியில் இணைந்து வருவதாலும் பேரணாம்பட்டு, ஆம்பூர் மாநில நெடுஞ்சாலையானது. ஆம்பூர் ராஜீவ் காந்தி சிலை அருகில் இணைவதால் நெடுஞ்சாலையை ஏற்படுத்தினால் பேரணாம்பட்டு, ஆம்பூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும்.

    பேரணாம்பட்டில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் தமிழக எல்லையில் அமைந்துள்ள அரவட்லா மலைக்கிராம சாலையை சீரமைக்க வேண்டும்.

    பேரணாம்பட்டு ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்கு காவிரி குடிநீர் திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும். பேரணாம்பட்டு பகுதியில் மத்திய அரசின் தொழிற்நுட்ப கல்லூரி, அரசு மகளிர் கல்லூரி ஏற்படுத்தி தரவேண்டும். சிப்காட் தொழிற்பேட்டை ஏற்படுத்தி வேலைவாய்ப்பு உருவாக்கி தரவேண்டும். பேரணாம்பட்டில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் ஏற்படுத்த வேண்டும்.

    மாவட்ட எல்லையின் கடைசி பகுதியாக பேரணாம்பட்டு பகுதி உள்ளது. வேலூர் மாவட்ட எல்லை மாச்சம்பட்டில் முடிவடைகிறது. ஆனால் மாச்சம்பட்டு பகுதியானது திருப்பத்தூர் மாவட்டம் உமராபாத் போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்டுள்ளதால் குழப்பம் ஏற்படுகிறது. போலீஸ் நிலையம் எல்லையை வரையறை செய்ய வேண்டும். ஆந்திரா, கர்நாடக மாநில எல்லைகளுக்கு அருகில் அமைந்திருப்பதால் பேரணாம்பட்டில் தாலுகா போலீஸ் நிலையம் ஏற்படுத்த வேண்டும்.மேற்கண்டவை உள்பட பல கோரிக்கைகள் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்:-

    குடியாத்தம் தொகுதி
    குடியாத்தம் தொகுதி

    1962- மணவாளன்- காங்கிரஸ்
    1967- கோதண்டராமன்- கம்யூனிஸ்டு
    1971- துரைசாமி- தி.மு.க.
    1977- கோதண்டராமன்- கம்யூனிஸ்டு 
    1980- சுந்தரம்- கம்யூனிஸ்டு
    1984- கோவிந்தசாமி- காங்
    1989- சுந்தரம்- மா.கம்யூ
    1991- தண்டாயுதபாணி- காங்
    1996- தனபால்- தி.மு.க.
    2001- சூரியகலா- அ.தி.மு.க.
    2006- லதா- மா.கம்யூ
    2011- லிங்கமுதது- கம்யூ
    2016- ஜெயந்தி பத்மநாபன்- அ.தி.மு.க.
    2019- காத்தவராயன்- தி.மு.க. (இடைத்தேர்தல்)
    Next Story
    ×