என் மலர்
வேலூர்
- படிக்கட்டில் நின்று கொண்டிருந்த போது தடுமாறி கீழே விழுந்ததால் பரிதாபம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் பாகாயம் அருகே உள்ள பள்ளஇடையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 39) இவரது வீடு சாலை வரை அமைந்துள்ளது. இன்று காலை கிருஷ்ணமூர்த்தி வீட்டில் படிக்கட்டில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது லாரி ஒன்று வந்தது. அந்த நேரத்தில் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் எதிர்பாராத விதமாக லாரி கிருஷ்ணமூர்த்தி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிருஷ்ணமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது சம்பந்தமாக லாரி டிரைவர் சிவாஜி என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலெக்டர் அலுவலகத்தில் மனு
- பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாவதாக புகார்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒடுகத்தூர் பகுதியில் இருந்து வேலூருக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் வேலைக்காகா அரசு மற்றும் தனியார் பஸ்களில் வந்து செல்கின்றனர்.
இந்த பஸ்கள் புதிய பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு பழைய பஸ் நிலையம் வந்து ஒடுகத்தூர் பகுதிக்கு அணைக்கட்டு வழியாக சென்று வந்தன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக எவ்வித அறிவிப்பும் இல்லாமல் அனைத்து பஸ்களும் புதிய பஸ் நிலையத்திற்கு வராமல் பழைய பஸ் நிலையத்திலிருந்து மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றது.
இதனால் சென்னை, காஞ்சிபுரம், ஆந்திரா, பெங்களூர், திருப்பத்தூர், ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய மக்கள் மற்றும் அங்கிருந்து வரக்கூடிய மக்கள் புதிய பஸ் நிலையத்தில் இறங்கி ஒடுகத்தூர் பஸ்ஸை பிடிக்க முடியாமல், சிரமப்பட்டு ஆட்டோ அல்லது நகரப் பஸ்களை தேடி பிடித்து பழைய பஸ் நிலையத்திற்கு வந்து அவதிபடுகின்றனர்.
அதேபோல் ஒடுகத்தூர் பகுதியில் இருந்து மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் பழைய பஸ் நிலையத்தில் இறக்கி விடுவதால் அங்கிருந்து புதிய பஸ் நிலையம் செல்ல கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஓசூர் மற்றும் இளவம்பாடி வழியாக ஒடுகத்தூர் மற்றும் ஆலங்காயம் பகுதிக்கு இயக்கப்படும் பஸ்கள் அனைத்தும் வழக்கம் போல புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்க வேண்டும்.
ஒடுகத்தூர் பகுதிக்கு வருகின்ற அனைத்து பஸ்களும் புதிய பஸ் நிலையத்திலிருந்து இயக்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் லதா சார்பாக கலெக்டர் குமாரவேல் பாண்டியனிடன் கோரிக்கை மணு அளித்துள்ளனர்.
- சிகிச்சை பலனின்றி பரிதாபம்
- மனைவி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ்காரர் பலராமன் என்பவருடைய மனைவி ராஜாமணி இவர் கடந்த மாதம் 26-ந் தேதி இறந்து விட்டார்.
சவ ஊர்வலத்தின் போது உடன் வந்தவர்கள் பட்டாசுகளை ெவடித்துள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு வெடித்து சிதறி உள்ளது. அதன் தீப்பொறி வாகனத்தில் விழுந்து அதிலிருந்த பட்டாசுகளை வெடித்து சிதறின.
அப்போது அந்த வண்டியில் இருந்த கள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் (வயது 32) கே.வி.குப்பம் அடுத்த கீழ்ஆலத்தூர் நாகல் கிராமத்தைச் சேர்ந்த டில்லிபாபு (27) ஆகிய இருவர் மீதும் பட்டாசு விழுந்து வெடித்ததில் பலத்த காயம் அடைந்தனர்.
இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரபாகரன் சிகிச்சை பலனின்றி கடந்த 1-ந் தேதி பரிதாபமாக இறந்தார்.
மேலும் அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த டில்லி பாபு நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார். சவ ஊர்வலத்தில் பட்டாசு வீசிய சம்பவத்தில் காயமடைந்த இருவரும் இறந்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இறந்து போன டில்லிபாபுக்கு ரம்யா என்ற மனைவியும் 2 பெண் குழந்தையும் உள்ளது தற்போது ரம்யா 8 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
- மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கியுள்ளனர்
குடியாத்தம்:
குடியாத்தம், அடுத்த வி.டி.பாளையம், டி.பி. பாளையம் கிராமங்கள் ஆந்திர மாநில வனப்பகுதியை ஒட்டியபடி உள்ளது.கடந்த சில நாட்களாக யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வந்தது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 5 யானைகள் கொண்ட கூட்டம் வி.டி.பாளையம் கிராமத்தில் குடியிருப்பு பகுதி அருகே முகாமிட்டு பிளிறியபடி இருந்தது.
இதனால் அச்சமடைந்த விவசாயிகள் வெளியில் வர பயந்து கொண்டு வீடுகளுக்குள்ளேயே தஞ்சம் அடைந்தனர்.அந்த யானைகள் பயிர்களை சேதப்படுத்தியது.
விவசாயி பாபுவின் ஏராளமான மாமரங்கள், விவசாயி கோவிந்தசாமியின் கேழ்வரகு பயிர்களை நாசம் செய்தது.
பல ஆயிரம் மதிப்பிலான பயிர்கள் சேதம் அடைந்தன. இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த வனத்துறையினர் கிராம மக்கள் விவசாயிகள் துணையுடன் யானைகளை பட்டாசுகள் வெடித்தும் மேளங்கள் அடித்தும் அடர்ந்த ஆந்திர காட்டுப் பகுதிக்குள் விரட்டி விட்டனர்.
அடிக்கடி இப்பகுதிக்குள் மாலை நேரங்களில் யானைகள் கூட்டமாக வருவதால் கிராம மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். மாலை நேரத்திலேயே கிராம மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கியுள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில் பல மாதங்களாக யானைகள் தொல்லை இல்லாமல் இருந்தது. ஆந்திர மாநில வனப்பகுதியில் யானைகள் கூட்டம் முகாமிட்டு இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டியபடி உள்ள தமிழக பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து தொடர்ந்து சேதத்தை ஏற்படுத்துகிறது.
யானைகள் மீண்டும் விளை நிலங்களுக்குள் புகுந்த சம்பவங்களால் விவசாயிகள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
யானைகளை அடர்ந்த ஆந்திர வனப்பகுதிக்குள் விரட்டப்படாவிட்டால் இப்பகுதி விவசாயிகள் அரசியல் கட்சிகள் துணையுடன் போராட்டத்தில் ஈடுபடவும், உயர் அதிகாரிகளிடம் மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தனர்.
- சிறைத்துறை டி.ஜி.பி. தகவல்
- சுயமாக தொழில் தொடங்க கடனுதவிகளும் வழங்க ஏற்பாடு
வேலூர்:
தமிழ்நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு கணினி பயிற்சி வழங்க சிறைச்சாலை தோறும் கணினி மையங்கள் அமைக்கப்படும் என சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி தெரிவித்தார்.
வேலூர் ஆப்காவில் தென்னிந்திய உயர் சிறை அதிகாரிகளுக்கான சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தமிழக சிறைத்துறை டிஜிபி அமரேஷ்பூஜாரி கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு கணிப்பொறி பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு சிறைகளிலும் 30 கணினி கொண்ட கணினி பயிற்சி மையம் அமைக்கப்படும். தொண்டு நிறுவனங்களின் மூலம் கணினி பயிற்சியாளர்கள் கொண்டு சிறை கைதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி பெற்ற சிறைவாசிகள் சிறையில் இருந்து வெளியில் சென்று சுயமாக கணினி மையம் தொடங்க அவர்களுக்கு கடனுதவிகளும் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
சிறையில் உள்ள கழிவறைகள் பழையதாகவும், தூய்மையற்றதாகவும் உள்ளது. அதனை புனரமைக்க கணக்கெடுப்பு நடத்தி இந்த ஆண்டு புனரமைக்கப்படும். அடுத்த ஆண்டு புதிய கழிவறைகள் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் மேலும் புதிதாக சிறைகளில் 12 பெட்ரோல் பங்க்குகள் திறப்பதற்கான இடம் தேர்வு நடைபெற்று வருகிறது.
நடப்பு நிதி ஆண்டில் சிறைச்சாலைகளில் உள்ள கழிவறைகள் மறு சீரமைக்கப்பட்டு வருவதா கவும் சிறைச்சாலைகளில் விரைவில் புதிய கூடுதல் கழிப்பறைகள் கட்டப்படும் என அமரேஷ் பூஜாரி தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பள்ளிப் பருவத்திலே மாணவர்கள் அன்பாகவும், இனிமையாகவும் மற்றவர்களுடன் பேச கற்றுக்கொள்ள வேண்டும்.
- கடினமான விஷயங்களை இனிமையாக அடுத்தவர்களுக்கு கூற வேண்டும்.
வேலூர்:
வி.ஐ.டி. பல்கலைக்கழக குழுமத்தின் அங்கமான வேலூர் சர்வதேச பள்ளி, சென்னையை அடுத்த கேளம்பாக்கம், காயார் பகுதியில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
வேலூர் சர்வதேச பள்ளியின் முதலாம் ஆண்டு விழா பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது.
ஆண்டு விழாவிற்கு இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
பள்ளிப் பருவத்திலே குழந்தைகள் சகிப்புத்தன்மை, அனுதாபம், சரியான முடிவு எடுத்தல், மனிதநேயம், மனித உறவுகளுக்கு முக்கியத்துவம் மற்றும் பணிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது சரியாக கவனிக்க வேண்டும்.
கால இடைவேளையில் பாடங்களை திரும்பத்திரும்ப படிக்க வேண்டும். வகுப்பறையில் கவனமாக இருந்தால் தேர்வை கண்டு குழந்தைகள் பயப்பட தேவையில்லை. நம்பிக்கையை வளர்த்துக் கொண்டால் தேர்வில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் வெற்றி பெறலாம்.
பள்ளிப் பருவத்திலே மாணவர்கள் அன்பாகவும், இனிமையாகவும் மற்றவர்களுடன் பேச கற்றுக்கொள்ள வேண்டும். கடினமான விஷயங்களை இனிமையாக அடுத்தவர்களுக்கு கூற வேண்டும். முடியாது என்பதை கூட இனிமையான முறையில் கூற மாணவர்கள் பழகிக் கொள்ள வேண்டும்.
பள்ளிப்பருவத்திலே மாணவர்கள் சரியான முடிவை எடுக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். வாழ்வில் பல்வேறு கடினமான சூழ்நிலையை நாம் சந்திக்க நேரிடும், அவ்வாறு இன்னல்களை நாம் சந்திக்கும்போது சரியான முடிவை தகுந்த நேரத்தில் எடுக்கும்போது நாம் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு செல்வோம். இவ்வாறு முடிவு எடுக்கும் திறனை மாணவர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வேலூர் சர்வதேச பள்ளியின் தலைவரும் வி.ஐ.டி. துணைத்தலைவருமான ஜி.வி. செல்வம் ஆண்டு விழாவை தலைமையேற்று நடத்தி பேசுகையில்:-
வேலூர் சர்வதேச பள்ளியின் நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பள்ளி குழந்தைகளை நாட்டின் சிறந்த குடிமகனாக வளர கடினமாக உழைக்கிறார்கள்.
அதே நேரத்தில் நல்லொழுக்கம், நற்பண்பு மற்றும் நல்ல குணங்களோடு மாணவர்கள் வளர ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். நற்பண்பு என்பது நாம் கற்கும் கல்விக்கு ஈடானது.
6 வருட கடின முயற்சிக்குப் பின்பு அனைத்து அம்சங்களுடன் வேலூர் சர்வதேச பள்ளி உருவானது. பல்வேறு நாடுகளுக்கு சென்று பல்வேறு பள்ளிகளை பார்வையிட்ட பிறகுதான் வேலூர் சர்வதேச பள்ளி உருவாக்கப்பட்டது.
வேலூர் சர்வதேச பள்ளி இயற்கையோடு படிக்கும் சூழலாக குழந்தைகளுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கலை மற்றும் விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பரிசுகளை வழங்கினார். விழாவில் பள்ளியின் அறக்கட்டளை உறுப்பினர் அனுஷா செல்வம், பள்ளியின் இயக்குனர் சஞ்சீவி, ஆலோசகர் சீனிவாசன், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- ரஞ்சித் குமாருக்கு ஆதரவாக அவரது நண்பர் ஏழுமலை என்பவர் வந்தார். இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
- நிர்மல் குமார் தரப்பினர் கத்தியால் ரஞ்சித் குமார் மற்றும் ஏழுமலையை குத்தினர்.
வேலூர்:
வேலூர் காகிதப்பட்டறை மேலாண்ட தெருவை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 23) மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இவர் வேலூரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்தார்.
அதே மாணவியை தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த நிர்மல் குமார் என்ற வாலிபரும் காதலித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ரஞ்சித்குமார், நிர்மல் குமார் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.
சம்பவத்தன்று நிர்மல் குமார் வேலூர் புதிய பஸ் நிலையம் பாலாற்றின் கரையோரம் நின்று கொண்டிருந்தார். அந்த பகுதிக்கு ரஞ்சித் குமார் வந்தார்.
அப்போது இருவருக்கும் இடையே மாணவியை காதலிப்பது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து நிர்மல் குமார் அவரது நண்பர்களான ரெட் என்கிற ராம்குமார், அருண்குமார், பிரவீன் குமார் ஆகியோரை அழைத்தார். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
ரஞ்சித் குமாருக்கு ஆதரவாக அவரது நண்பர் ஏழுமலை என்பவர் வந்தார். இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது நிர்மல் குமார் தரப்பினர் கத்தியால் ரஞ்சித் குமார் மற்றும் ஏழுமலையை குத்தினர்.
இதில் ரஞ்சித் குமாருக்கு மார்பு மற்றும் வயிறு பகுதியில் கத்திக்குத்து விழுந்தது. ஏழுமலைக்கு தலை மற்றும் கைகளில் கத்தியால் வெட்டினர்.
படுகாயம் அடைந்த இருவரும் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நர்சரி பிரைமரி பள்ளிகள் நலச் சங்க நிர்வாகிகள் போராட்டம் அறிவிப்பு
- 23 பள்ளிகளுக்கு மட்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ்நாடு நர்சரி பிரைமரி பள்ளிகள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில் தனியார் பள்ளிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு நர்சரி பிரைமரி பள்ளிகள் நலச் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் விஜயகுமார் கூறியதாவது:
வேலூர் மாவட்டத்தில் புதுப்பித்தல் அங்கீகாரம் பெறுவதற்காக 98 நர்சரி பள்ளிகள் 42 மெட்ரிக் பள்ளிகள் சார்பில் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளன.இந்த மனுக்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டு அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
ரூ.25 ஆயிரம் வழங்கிய நர்சரி பள்ளிகள், 50 ஆயிரம் வழங்கிய மெட்ரிக் பள்ளிகள், ரூ.ஒரு லட்சம் வரை வழங்கிய சிபிஎஸ்சி பள்ளிகள் என மொத்தம் 23 பள்ளிகளுக்கு மட்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் பணத்தைப் பெற்றுக் கொண்டு அங்கீகாரம் வழங்கி வருகிறார். அவர் ஆய்வுக்கு வரும்போது கூட லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் விண்ணப்பித்துள்ள நர்சரி மெட்ரிக் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்காவிட்டால் 2000 பேரை திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கலெக்டர் தகவல்
- வேலூர் நேதாஜி மைதானத்தில் நடந்து வருகிறது
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் மாபெரும் புத்தகத் திருவிழா மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுநூலகத் துறையின் சார்பில் நேதாஜி மைதானத்தில் கடந்த 24-ந் தேதி முதல் தொடங்கி நடைப்பெற்று வருகிறது.
இந்த புத்தகத் திருவிழாவில் தென்னிந்திய பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் சங்கத்தின் ஒருங்கி ணைப்போடு 67 பதிப்பகங்களின் சார்பில் 104 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மாபெரும் புத்தகத் திருவிழாவில் அரங்குகள் நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட்டு வருகிறது.
மேலும், ஒவ்வொரு நாட்களிலும் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவியர்கள் பயன்படும் வகையில் மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை சிறந்த பேச்சா ளர்களின் சொற்பொ ழிவுகள், பட்டிமன்றம் மற்றும் அறிவு சார்ந்த பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இன்றுடன் நிறைவடைய இருந்த புத்தகத் திருவிழா பொதுமக்கள் மற்றும் புத்தக ஆர்வலர்களின் கோரிக்கையினை ஏற்று வருகிற 12-ந் தேதி ஞாயிற்றுக் கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள், மாணவ-மாணவியர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் என அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி புத்தக அரங்குகளை பார்வையிட்டு தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி படித்து பயனடையுமாறு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
- கலெக்டர் தொடங்கி வைத்தார்
- ஏராளமாேனார் கலந்து கொண்டனர்
வேலூர்:
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறையின் பயனாளர்களான முதல் 6 மாதம் வரை கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தை களின் தாய்மார்களுக்கு 2 ஊட்டச்சத்து பெட்டகங்களும் 6 மாதம் வரை மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தை களின் தாய்மார்களுக்கு ஒரு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குவது, மேலும் 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு 8 வாரங்களுக்குப் சத்தான ஊட்டச்சத்து வழங்கி குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்துவதாகும்
வேலூர் மாவட்டத்தில் முதல் 6 மாதம் வரை கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 215 குழந்தை களின் தாய்மார்களுக்கு 430 எண்ணிக்கையிலான ஊட்டச்சத்து பெட்டகம் தொகுப்பும், 0 மாதம் முதல் 6 மாதம் வரை மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1206 குழந்தைகளின் தாய்மார்களுக்கு 1206 எண்ணிக்கையிலான ஊட்டச்சத்து பெட்டகம் தொகுப்பும், மொத்தம் 1636 ஊட்டச்சத்து பெட்டகம் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
மேலும் 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1027 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தினை வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கி "ஊட்டச்சத்தை உறுதிசெய்" திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட முழுவதும் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்க படுகிறது.
- போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்
- பொதுமக்கள் வலியுறுத்தல்
வேலுார்:
வேலுாரில் அதிகரித்து வரும் வாகன பெருக்கம் காரணமாக, நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. கர்நாடக, ஆந்திரா மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களும், சேலம், பெங்களூர், சென்னை இணைப்பு பகுதியானதால் அனைத்து வாகனங்களும் வேலுார் வழியாகவே செல்கின்றன.
இதனால், நகரின் இதயப்பகுதியான கிரீன் சர்க்கிளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
இதனால், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்பவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். இதை தடுக்கவேண்டும், நெரிசலை தவிர்க்க மாற்று வழிகளை கையாள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஆனாலும், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியாமல் அதிகாரிகள் தவியாய் தவித்தனர்.
இதையடுத்து, கடந்த ஆண்டு போக்குவரத்து நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டது. கிரீன் சர்க்கிளில் வாகனங்கள் முற்றுகையிடுவதை தடுக்க, சர்வீஸ் லைன்களில் திருப்பி விடப்பட்டன. ஆனால், இது மேலும் சிக்கலை ஏற்படுத்தியது.
ஏனெனில், சர்வீஸ் சாலையில் மெக்கானிக் ஷெட்டுகள் அதிகளவில் இருப்பதால், வாகன போக்குவரத்து சிக்கலுக்கு தீர்வு எட்டப்படாமலே இருக்கிறது. இதை தவிர்க்க, இப்போது போக்குவரத்து நடக்கும் கிரீன் சர்க்கிள் பகுதியிலிருந்து சேண்பாக்கம் ரயில்வே மேம்பாலம் வரையும், அங்கிருந்து புது பஸ் ஸ்டாண்ட் வரை உள்ள சர்வீஸ் லைன்கள் இப்போது உள்ள 5 மீட்டர் அகலத்தை 8.5 மீட்டராக அதிகரிக்கப்படும். இதனால், போக்குவரத்து எளிதாகும் என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்திருந்தார். கடந்த ஆகஸ்டு மாதமே அதற்கான பணிகள் தொடங்கும் என கூறியிருந்தார்.
ஆனால், இன்று வரை அதற்கான எந்த பணிகளுக்கான முகாந்திரமும் தென்படவில்லை. இதுகுறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறுகையில், ''கிரீன் சர்க்கிள் அளவு குறைப்பது, சர்வீஸ் லைன் அகலத்தை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு ஸ்கெட்ச் போட்டு தந்தோம். தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் (நகாய்) பங்கு வருகிறது. அதனால், அந்த திட்ட அறிக்கையை நகாய் ரீஜினல் ஆபீசருக்கு அனுப்பினோம். பலமுறை தொடர்ந்து இது குறித்து பேசி வருகிறோம்.
வேலுார் வந்த மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை இணை அமைச்சரிடமும் இப்பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறோம். அவர் 'டெக்னிக்கல்' ரிப்போர்ட் வாங்கிக் கொடுங்கள்' என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார். அதைத்தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். உடனடியாக சாலை விரிவாக்கத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். விரைவில் பணிகள் தொடங்க முயற்சித்து வருகிறோம்' என்றார்.
- வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்கள் பரபரப்பு புகார்
- 120 பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது.
இதில் அண்ணா ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் ஆட்டோ டிரைவர்கள் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
வேலூர் புதிய பஸ் நிலையம் செல்லியம்மன் கோவில் நுழைவு வாயில் அருகே அண்ணா ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் என்ற பெயரில் முறையாக பதிவு செய்து ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தோம். இதில் 120 டிரைவர்கள் ஆட்டோ ஒட்டி வருகிறோம்.
தொழிற்சங்க விதிமுறைகளை மீறி எங்களின் ஆட்டோ ஸ்டாண்டு அருகே இன்னொரு ஸ்டாண்டு வைத்தனர்.
மேலும் சிலருடன் கூட்டு வைத்துக்கொண்டு புதிதாக போர்டு வைத்து ஆட்டோ ஸ்டாண்ட் உருவாக்க முயற்சி செய்து வருகிறார்கள். இதனால் எங்கள் 120 ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாராதரம் பாதிக்கும்.
அந்த இடத்தில் ஆட்டோ ஸ்டாண்ட் வைக்க எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். புதியதாக ஆட்டோ ஸ்டாண்ட் வைக்க அனுமதி வழங்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
கொசப்பேட்டை எஸ்எஸ்கே மானியம் பகுதியைச் சேர்ந்த கவிதா என்பவர் அளித்த மனுவில் எனது கணவர் கடந்த 2018 -ம் ஆண்டு இறந்து விட்டார். எனவே நலிந்தோர் நிதி உதவி பிரிவின் கீழ் அரசு உதவி பெற விண்ணப்பித்தேன். இதுவரை நிதி உதவி வரவில்லை.
ஆனால் தாலுகா அலுவலகத்தில் கேட்டால் நீங்கள் நிதி உதவி பெற்று விட்டீர்கள் என்று கூறுகின்றனர். வங்கி கணக்கிலும் பணம் எதுவும் வரவில்லை. எனவே என்னுடைய நலிந்தோர் உதவி தொகை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.






