என் மலர்
வேலூர்
- இந்த கோவிலில் 1922, 1997, 2011 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
- இதற்கான பணிகளை மேற்கொள்ள 13 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
வேலூர் கோட்டையில் ஜலகண்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமாக பக்தர்கள் வருகின்றனர். இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக ஜலகண்டேஸ்வரர் கோவில் தர்மஸ்தாபனம் தலைவர் கலவை சச்சிதானந்தாசுவாமிகள், உபதலைவர்களான தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் டார்லிங் வெங்கடசுப்பு, ரமேஷ், பொருளாளர் சண்முகம், செயலாளர் சுரேஷ்குமார் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
புகழ்மிக்க ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 1922, 1997, 2011 ஆகிய ஆண்டுகளில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து 4-வது முறையாக இந்தாண்டு வருகிற ஜூன் மாதம் 25-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்ள 13 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவினரும் ஒவ்வொரு பணியை மேற்கொள்ள உள்ளனர். அதற்கு முன்பாக தங்க தகடுகளால் கொடிமரம், கலசங்கள், மூலவருக்கு சொர்ணபந்தனம் அமைக்கப்படுகிறது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஆதினங்கள், மடாதிபதிகள் உள்ளிட்ட ஆன்மிகவாதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- கடந்த சில மாதங்களாக 500, 700 ரூபாய் என சொற்ப அளவிலேயே மின் கட்டணம் வந்துள்ளது.
- ஒருவேளை அவர் தவறுதலாக வேறு மின் மோட்டாரை இயக்கி இருக்கலாம். இருப்பினும் இதுகுறித்து விசாரணை நடத்துகிறோம் என தெரிவித்தனர்.
வேலூர்:
வேலூர் விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவர், வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் சொந்த ஊருக்கு திரும்பினார்.
தொடர்ந்து, விவசாயம் செய்யலாம் என முடிவு செய்து, லத்தேரி அடுத்த காளாம்பட்டு பகுதியில் 2 ஏக்கர் நிலம் வாங்கினார். இதையடுத்து, அங்கு விவசாயம் செய்வதற்காக இலவச மின்சாரம் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால், கிடைக்காததால் மும்முனை மின் இணைப்பு பெற்றார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக 500, 700 ரூபாய் என சொற்ப அளவிலேயே மின் கட்டணம் வந்துள்ளது. கடந்த மாதம் 8 யூனிட் மின்சாரம் மட்டுமே அவர் பயன்படுத்தி இருந்ததாக தெரிகிறது.
ஆனால் அவருக்கு 7,275 ரூபாய் மின் கட்டணம் செலுத்தவேண்டும் என அறிவிப்பு வந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து லத்தேரி மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று அவர் கேட்ட போது, அங்கிருந்த ஊழியர்கள் சரியான பதில் அளிக்கவில்லை அதுமட்டுமின்றி.
பணத்தை செலுத்தியே ஆகவேண்டும் என திருப்பி அனுப்பியுள்ளனர்.
இதனால் செய்வதறியாது தவித்த சுந்தர்ராஜன், குறைந்த அளவு மின்சாரம் பயன்படுத்தியதற்கு அதிக கட்டணம் செலுத்த கூறியதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்றும், மெத்தனமாக பதிலளிக்கும் மின்வாரிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்தில் விசாரித்தபோது, விவசாய தேவைக்கு அனுமதி பெறும்போது மின் மோட்டாரின் வேகத்தை 5 எச்பி, 10 எச்பி என குறிப்பிட்டிருப்பார்கள்.
பிறகு அதை மாற்றி பயன்படுத்தினால் மின்பளு அதிகரிக்கும். அதற்கான கட்டணத்தை டிஜிட்டல் மீட்டர் தானாகவே பதிவு செய்துவிடும்.
ஒருவேளை அவர் தவறுதலாக வேறு மின் மோட்டாரை இயக்கி இருக்கலாம். இருப்பினும் இதுகுறித்து விசாரணை நடத்துகிறோம்' என தெரிவித்தனர்.
- கைரேகைகளையும் பதிவு செய்து கொள்ள வேண்டும்
- போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் அறிவுரை
வேலூர்:
தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தொடர்பான வதந்திகள் பரவியதால் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
மேலும் தமிழகத்தில் இது தொடர்பான பதற்றம் நிலவியது.
இந்த நிலையில் தமிழக காவல்துறை மூலம் பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் காவலர் மன்றத்தில் வட மாநில தொழிலா ளர்களை வேலைக்கு அமர்த்திய நிறுவனத்தி னருக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தலைமை தாங்கி பேசியதாவது:-
வேலைக்கு அமர்த்தும் வடமாநில தொழிலா ளர்களின் அனைத்து ஆவணங்க ளையும் பெறவேண்டும். மேலும் அவர்களுக்கு பாதுகாப்பான சூழலையும் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
அவர்களின் குறைகளை கண்டறிந்து அதை நிவர்த்தி செய்ய வேண்டும். ஏதேனும் புகார்கள் இருந்தால் மாவட்ட காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வேலைக்கு அமர்த்தும் போது அவர்களின் கைரேகைகளையும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு இன்ஸ்பெக்டர்கள் ரஜினிகாந்த், ரவி உட்பட கலந்து கொண்டனர்.
- விவசாயிகள் விரக்தி
- மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ் தலைமையில் நடைப்பெற்றது.
மணல் கொள்ளை
இதில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துக்கொண்டு அவர்களின் துறைகளில் இருக்கும் திட்டங்கள் விவசாயிகளுக்கு எவ்வாறு பயன் பெறும் என்பதனை எடுத்துறைத்தார்கள்.
பரபரப்பாக நடந்த கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
பொய்கை பாலாற்று பகுதியில் அளவுக்கு அதிகமாக மணல் கடத்தப்படுவதாகவும், மேலும் அனுமதிக்கும் அளவை விட 30 மடங்கு அதிகமாக சுரண்டப்பட்டு வருகின்றனர்.
இதனால் விவசாயம் வெகுவாக பாதிக்கின்றது. வரும் மாதங்கள் கோடைக்காலம் என்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைய வாய்ப்பு உள்ளது. இவர்கள் அளவுக்கு அதிகமாக மணல் திருடப்படுவதால் விவசாயிகள் நாங்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை என புலம்புகின்றனர். உடனடியாக மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
மேலும் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் கூறினர். இதனையடுத்து துறை சார்ந்த அதிகாரிகள் கூறுகையில், வேளாண்துறையில் 3 வகையான மா செடிகளை இலவசமாக வழங்கப்படுகின்றன. இதில் 2.5 ஏக்கர் அளவு பரப்பளவு உடைய நிலத்திற்க்கு 156 செடிகள் கொடுக்கப்படுகிறது. இதற்க்கான ஆவனங்களை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் விவசாயிகளுக்கு 5 வகையான பயிர்களுக்கு காப்பிட்டு திட்டம் உள்ளது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் பயனடையலாம் என கூறினார்.
இதனையடுத்து தாசில்தார் கூறுகையில் -
அணைக்கட்டு தாலுக்காவிற்க்கு உட்பட்ட பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான புரம்போக்கு நிலத்தில் இருக்கும் சீம கருவேலம் மரங்கள் இலவசமாகவே யாருவேனுமானாலும் வெட்டி எடுத்துக்கொள்ளலாம்.
இவை தேவை என்றால் மனு ஒன்று கொடுத்து அதற்க்கான ஒப்புதல் படிவம் பெற்று இலவசமாக எவ்வளவு வேண்டும் என்றாலும் வெட்டிக் எடுத்துக்கொள்ளலாம் எனக் கூறினார்.
கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் கூட்டத்தை கவனிக்காமல் சிலர் போன்களை பார்த்துக்கொண்டு இருந்ததாலும், சிலர் உறங்கிக்கொண்டு இருந்ததாலும், சிலர் நாம் ஏன் வந்தோம் எனவே தெரியாமல் இருந்ததால் சிறிது நேரம் சலசலப்பும், பரபரப்பு எற்ப்பட்டது.
இதனால் விவசாயிகள் விரக்தி அடைந்தனர்.
- 108 கலசத்திற்க்கு பூஜைகள் நடத்தப்பட்டது.
- ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
அணைக்கட்டு:
அணைக்கட்டு அடுத்த குடிசை கிராமத்தில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமையான செல்வ விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் விழா நடைப்பெற்றது.
அணைக்கட்டு தாலுக்கா குடிசை கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதில் 2 நாட்களுக்கு முன்பாகவே அமைக்க ப்பட்ட யாகசாலையில் 4 கால பூஜைகள் செய்து, அங்கு வைக்குப்பட்டு இருந்த 108 கலசத்திற்க்கு பூஜைகள் நடத்தப்பட்டது.
இதனையடுத்து யாகம் வளர்க்கப்பட்ட புனித நீரை மேல்தளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்து கோயில் கோபுரத்தை அடைந்தது. பின்னர் கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டு இருந்த விமான கலசத்தின் மீது புனித நீர் தெளித்து தீபாரா தனை காட்டப்பட்டது.
பின்பு முலவருக்கு புனித நீரால் அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டது. இவ்விழா வை மேட்டுக்குடிகள் திருப்பதி, சாந்தகுமார், தர்மகத்தா கணபதி, முன்னால் ஊராட்சிமன்ற தலைவர் அண்ணாமலை ஆகியோர் தலைமைதாங்கி நடத்தி இருந்தனர்.
விழாவில் அணைக்கட்டு திமுக மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் குமாரபாண்டியன் ஆகியோர் உட்பட திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.
- மீன் பிடிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றார்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் அடுத்த துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது 73). இவர் கடந்த 6-ந் தேதி சித்தேரியில் உள்ள கல்குவாரி குட்டையில் மீன் பிடிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் சின்னத்தம்பியை பல்வேறு இடங்களில் தேடினர். சித்தேரி கல்குவாரி குட்டைபகுதியில் சின்னத்தம்பியின் ஆடைகள் இருந்தன. இதனால் அவர் கல்குவாரி தண்ணீரில் மூழ்கியிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.
இது குறித்து அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் வந்தனர். கல்குவாரியில் சின்னத்தம்பியை தேடும் பணி நடந்தது.
அரக்கோணம் பேரிடர் மீட்பு படையினர் கல்குவாரி குட்டையில் சின்னத்தம்பி உடலை தேடி வந்தனர். சுமார் 500 அடி ஆழம் என்பதால் 3 நாட்களாக தேடியும் உடல் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று காலை சின்னத் தம்பியின் உடல் தானாக மிதந்தது.
அரியூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- இன்று முதல் 3 நாட்கள் பயிற்சி வகுப்பு
- வேலூர் மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் தொடர்பு கொள்ளலாம்
வேலூர்:
வடக்கு மண்டலத்தில் உள்ள அனைத்து காவல் மாவட்டங்களிலும் பணிபுரியும் காவல்துறை, சிறைத்துறை,தீயணைப்பு துறை உள்ளிட்ட சீருடை பணியாளர்களின் வாரிசுகள் மற்றும் இந்த மாவட்டங்களில் உள்ள அமைச்சு பணியாளர்களின் வாரிசுகளுக்கு தமிழ்நாடு காவல்துறை படைதலைவர் உத்தரவின்படி வருகிற 18, 19-ந் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் வேலூரில் நடைபெற உள்ளது.
இதற்கு தகுதி உள்ளவர்களை தயார்படுத்தும் பொருட்டு இன்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பயிற்சி முகாம் வேலூரில் உள்ள டி.கே.எம். கலை கல்லூரியில் சிறப்பு பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்று விக்கப்படுகிறது.
மேலும் தகவல்களுக்கு வேலூர் மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 2256802, 9498181231 -ல் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளன.
- மேயர் சுஜாதா தகவல்
- வேலூரில் பிடிக்கப்படும் பகுதியில் மீண்டும் விடப்படும்
வேலூர்:
வேலூர் மாநகராட்சியில் நாய் தொல்லை தடுக்க மாநகராட்சி சார்பில் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
முதல் கட்டமாக 1200 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்துள்ளன.
இந்த நிலையில் வேலூர் முத்து மண்டபம் அருகே உள்ள நாய்களுக்கான கருத்தடை சிகிச்சை மையத்தை இன்று மாநகராட்சி மேயர் சுஜாதா ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
வேலூர் மாநகராட்சியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் திரியும் நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக இதுவரை 1132 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொ ள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மீண்டும் 1200 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ள ரூ.10 லட்சம் கூடுதலாக நிதி ஒதுக்க நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டுள்ளது.
அடையாளம்
ஒரு வார்டில் பிடிக்கப்படும் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அதே வார்டில் விடப்படுகிறது. அப்போது அந்த வார்டு பகுதியை சேர்ந்த மக்கள் எங்கள் பகுதியில் அதிகமான நாய்களை கொண்டு வந்து விடுகிறீர்கள் என்று புகார் தெரிவித்தனர்.
அதை தடுக்கும் வகையில் வார்டு வாரியாக பிடிக்கப்படும் நாய்களுக்கு வெவ்வேறு நிறங்களில் நெற்றியில் பெயிண்ட் அடிக்கப்படும்.சிகிச்சை முடிந்த பின்னர் அந்தந்த வார்டுகளில் அந்தந்த நாய்கள் விடப்படும்.
இதுவரை 40 வார்டுகளில் நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை மேற்கொள்ள ப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 வார்டுகளிலும் நாய்கள் பிடிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படும். அதன் பின்னர் விடுபட்ட நாய்களை பிடித்து கருத்தடை சிகிச்சை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- வி.ஐ.டி.யில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் தேன்மொழி ஐ.பி.எஸ். பேச்சு
- 50 சதவிகித பெண்கள் பணியாற்றிட வேண்டும்
வேலூர்:
வேலூர் விஐடியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு மாநில குற்றப் புலனாய்வுத்துறை, காவல்துறையின் தலைவரான தேன்மொழி ஐபிஎஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
சர்வதேச மகளிர் தின விழா
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
பெண்களுக்கு சரியான உரிமையும், தகுந்த மரியாதையையும் கொடுக்க வேண்டும். பெண்கள் எப்பொழுதும் தங்களை சுற்றி விழிப்புடன் இருக்க வேண்டும். பெண்கள் தியாகத்துக்கும் மட்டும் பிறக்கவில்லை வாழ்க்கையை வாழ்வதற்கும் தான் எனக் கூறினார். விஐடி வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
திருவள்ளுவர் பெண்மையைப் பற்றி உயர்வாகத்தான் கூறியுள்ளார். உலகில் 193 நாடுகள் உள்ளன, இதில் உலகளவில் பெண்கள் 12 பேர் பிரதம மந்திரியாகவும், 17 பெண்கள் குடியரசு தலைவராகவும் உள்ளனர்.
நாட்டில் பாராளுமன்றம், நாடாளுமன்றம் மற்றும் சட்டசபையில் பெண்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வேண்டும். அதேபோல் பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்.
நாட்டில் பெண் குழந்தைகளின் கல்வி இன்னும் அதிகரிக்க வேண்டும், பெண், கல்வி பயில்வதில் நாம் பின்தங்கி உள்ளோம், குறிப்பாக உயர்கல்வியில். பெண் குழந்தைகள் பள்ளி கல்வி படிக்கும்போதே நின்று விடுகிறார்கள், இது ஆபத்தானது இதற்கு நிரந்தர நடவடிக்கை நாம் எடுக்க வேண்டும்.
நம் நாட்டில் பாராளுமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் 14 பெண்கள், சட்டசபையில் 8 பெண்கள் தான் உள்ளனர். அதேபோல் இந்திய குடிமைப் பணியான ஐ.ஏ.எஸ்.ல் 13 சதவிகிதம், ஐ பி எஸ்இல் 9 சதவிகிதம், ஐஎஃப்எஸ் இல் 8 சதவிகிதம் பெண்கள் தான் உள்ளனர். இந்த நிலை எதிர்வரும் காலங்களில் பன்மடங்காக உயர வேண்டும்.
அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை மூலம் இதுவரை 7000-க்கும் அதிகமான மாணவ, மாணவிகளின் கல்வி பயில்வதற்கு உதவி உள்ளோம்.
இந்த அறக்கட்டளை மூலம் உதவி பெற்றவர்களில் 66 சதவிகிதம் பெண்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
நம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைய குறைந்தபட்சம் 50 சதவிகித பெண்கள் பணியாற்றிட வேண்டும் எனக் கூறினார்
விஐடி துணைத்தலைவர் ஜி.வி. செல்வம் வாழ்த்துரை வழங்கினார்.
அவர் பேசியதாவது:-
மனிதனின் வாழ்க்கை பெண்கள் இல்லாமல் முழுமை யடைவதில்லை, பெண்கள், ஆண்களுக்கு தாயாக, சகோதரியாக, மனைவியாக மற்றும் குழந்தையாக உள்ளனர். குறிப்பாக பெண் குழந்தைகள் வேண்டும்.
காரணம் வயதான காலத்தில் பெண் குழந்தைகள் தான் பெற்றோர்களை அன்புடன் கவனித்துக் கொள்வார்கள். அதேபோல் பெண்களிடம் நம் கற்றுக் கொள்ளக்கூடிய விஷயங்களில் முக்கியமானவை சேவை மற்றும் தியாகம். விஐடியில் பெண்களுக்கு தகுந்த உரிமை மற்றும் மரியாதை கொடுக்கப்படுகிறது என்றார்.
விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாநில குற்றபுலனாய்வு துறை, காவல் துறை தலைவர் தேன்மொழி ஐபிஎஸ் மற்றும் விஐடி வேந்தர் டாக்டர் கோ. விசுவநாதன் பரிசுகளை வழங்கினார்கள்.
சிறப்பு விருந்தினராக சிப்லா நிறுவனத்தின் உதவி இயக்குனர் மீனாட்சி சின்கா, விஐடி துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன், பதிவாளர் மற்றும் மாணவர் நலன் இயக்குனர்கள் பங்கேற்றனர்.
- மரத்திலிருந்து எப்படி தண்ணீர் வரும்? என்ற பிரமிப்போடு அக்கம்பக்கத்து தெருவைச் சேர்ந்தவர்களும் பார்த்து சென்றனர்.
- மரத்திலிருந்து ஒரு மணி நேரம் முதல் சுமார் 3 மணி நேரம் வரை தண்ணீர் பீய்ச்சி அடித்தது.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பள்ளிகொண்டா சாலையில் உள்ள வேப்பூரில் புளிய மரத்திலிருந்து திடீரென தண்ணீர் வரத் தொடங்கியதால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சியோடு பார்வையிட்டு சென்றனர்.
குடியாத்தம் பள்ளிகொண்டா சாலையில் உள்ள வேப்பூர் கிராமத்தில் புளிய மரம் ஒன்று உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மரத்தில் திடீரென்று தண்ணீர் வர தொடங்கியது. இதனைக் கண்டு இந்த பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். அருகாமையில் இருந்த அக்கம்பக்கத்தினர் அந்த தண்ணீரை குடங்களில் பிடித்து மகிழ்ந்தனர்.
அதேபோல மரத்திலிருந்து எப்படி தண்ணீர் வரும்? என்ற பிரமிப்போடு அக்கம்பக்கத்து தெருவைச் சேர்ந்தவர்களும் பார்த்து சென்றனர்.
சிறிது நேரம் கழித்து தண்ணீர் தானாகவே நின்று போனது. இது ஒரு அதிசய நிகழ்வாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த மரத்திலிருந்து தண்ணீர் வரும் வீடியோ வைரலானது.
மரத்திலிருந்து ஒரு மணி நேரம் முதல் சுமார் 3 மணி நேரம் வரை தண்ணீர் பீய்ச்சி அடித்தது.
இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், மழையின் காரணமாக மரத்தில் வெற்றிடத்தில் நீர் தேங்கி இருக்கும்.அந்த நீர் கூட வெளியேறியிருக்கலாம் என்றனர்.
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த உள்ளாட்சி நிர்வாகத்தினர் ஆய்வு செய்தனர். மரத்தின் கீழே செல்லும் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக அதிக அழுத்தத்தில் தண்ணீர் வெளியேறி மரத்தில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்தனர்.
குழாயில் தண்ணீர் வரும் போதெல்லாம் புளிய மரத்திலிருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து வருகிறது.
இதனை அந்த வழியாக செல்லும் வாகனங்கள் ஓட்டிகள் ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர். மேலும் பலர் அதன் அருகில் நின்று செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.
குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய வேண்டுமென அந்த பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி
- சட்டம் ஒழுங்கு முறையாக இல்லை என குற்றச்சாட்டு
வேலூர்:
வேலூரில் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு போட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணியின் பணபலம், அதிகார பலத்தையும் கடந்து அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் சுமார் 44 ஆயிரம் வாக்குகள் அளித்திருப்பது சாதாரண மக்களின் வாக்குகள் இன்னும் அ.தி.மு.க கூட்டணியின் பக்கம் இருப்பதையே காட்டுகிறது.
இதன்தொடர்ச்சியாக, அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும், அதன்பிறகு வரக்கூடிய தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரணியை வீழ்த்தி வெற்றி பெறக்கூடிய சூழ்நிலையை அ.தி.மு.க, பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகள் முதலிலேயே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதேசமயம், தற்போது பா.ஜ.க.வில் இருந்து நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் சேர்வது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒரு கட்சியில் இருந்து நிர்வாகிகள் வேறு கட்சிக்கு செல்வது வழக்கமானதுதான். ஆனால், கூட்டணிக்கு உள்ளேயே கட்சி மாறுவது உகந்ததல்ல என்பதை அவர்கள் உணர வேண்டும். எனவே, அதிமுக, பாஜக பிரச்னைக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
தமிழகத்தில் அ.தி.மு.க 2-வது பெரிய கட்சி அல்ல, அதுதான் முதல் கட்சியும் முதன்மையான கட்சியுமாகும். அதேபோல், இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் நிலையை வடமாநிலங்களில் நடந்து முடிந்த தேர்தல்கள் எடுத்துக்காட்டியுள்ளன. அந்தவகையில், மத்திய பாஜக மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இவ்வாய்ப்பை தமிழக மக்கள் நலனுக்காக கூட்டணி கட்சிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழக மக்கள் அரசியலையும், அரசியல் வாதிகளையும் நன்கு புரிந்து வைத்துள்ளனர். அந்தவகையில், திமுக ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது அரசியல் லாபத்துக்கானது என்பதை உணர்ந்துள்ளனர்.
தமிழகத்துக்கு வரும் வடமாநில தொழிலாளர்கள் மீதான அச்சுறுதல்களை தடுக்க தமிழக அரசு மேற்கொண்டுள்ள பணி தாமதமானதாகும். உளவுத்துறை இன்னும் விழிப்புடன் செயல்பட்டிருக்க வேண்டும்.
தற்போது தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களின் பங்கு எல்லா துறைகளிலும் முக்கியம் என்றாகிவிட்டது. வருங்காலங்களில் வடமாநிலத் தொழிலா ளர்களுக்கு பாதுகாப்பை அரசு உறுதி செய்திட வேண்டும்.
எந்த பணியாக இருந்தாலும் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும், அதன் பிறகு மற்ற மாநிலத்தவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முறையாக இல்லை. கொலை, கொள்ளை, திருட்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அரசின் கடமை. நெய்வேலி அனல்மின்நிலையத்திற்கு மேலும் நிலம் கையகப்படுத்தக்கூடாது. ஏற்கனவே நிலம் கையகப்படுத்திய வர்களுக்கு 100 சதவீதம் வேலை வாய்ப்பு அளித்து பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வு காண வேண்டும்.
கடலோரங்களில் கச்சா எண்ணை கசிவதால் மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க குறைந்த காலத்தில் அந்த குழாய்களை சரிசெய்து நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும்.
மகளிர்தான் நாட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாகும். மத்திய, மாநில அரசுகள் மகளிருக்கு அளிக்க வேண்டிய சலுகைகளை உரிய காலத்தில் அளித்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும்.
அதேசமயம், மகளிர் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இது அரசியல் கிடையாது. தனிமனித ஒழுக்கத்தை ஏற்படுத்த வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்.
தவறு செய்ப வர்களுக்கு குறுகிய காலத்தில் தூக்கு தண்டனை வழங்க வேண்டும். சூதாட்ட பிரச்னைகளுக்கு முடிவு கட்டவில்லை என்றால் அது எந்த ஆட்சியாக்கும் நல்லதல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது வேலூர் மாநகர மாவட்ட தலைவர் ஆர்.கே.மூர்த்தி உள்பட பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.
- நெஞ்சு வலி ஏற்பட்டு பரிதாபம்
- அதிகாரிகள், போலீசார் அஞ்சலி
வேலூர்:
வேலூர் முள்ளிப்பா ளையம் கே.கே. நகரை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 50) வேலூர் சிறப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
கடந்த மாதம் முதல்-அமைச்சர் வேலூர் வருகையின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போதுக்கு அவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். தொடர்ந்து தனியார் ஆஸ்பத்திரியில் மருத்துவப் பரிசோதனை செய்து வந்தார்.
கடந்த 6-ந் தேதி அவரை மருத்துவப் பரிசோதனைக்கு வருமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் அவரால் செல்ல முடியவில்லை.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த நரசிம்மன் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்தார்.
அவரது உடலுக்கு போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் அஞ்சலி செலுத்தினர்.
இன்ஸ்பெக்டர் நரசிம்மனுக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும் 15 வயதில் ஒரு மகன், 8 மற்றும் 3 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் பள்ளியில் படித்து வருகின்றனர்.






