search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் ஜூன் 25-ந்தேதி நடக்கிறது
    X

    வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் ஜூன் 25-ந்தேதி நடக்கிறது

    • இந்த கோவிலில் 1922, 1997, 2011 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
    • இதற்கான பணிகளை மேற்கொள்ள 13 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    வேலூர் கோட்டையில் ஜலகண்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமாக பக்தர்கள் வருகின்றனர். இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக ஜலகண்டேஸ்வரர் கோவில் தர்மஸ்தாபனம் தலைவர் கலவை சச்சிதானந்தாசுவாமிகள், உபதலைவர்களான தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் டார்லிங் வெங்கடசுப்பு, ரமேஷ், பொருளாளர் சண்முகம், செயலாளர் சுரேஷ்குமார் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    புகழ்மிக்க ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 1922, 1997, 2011 ஆகிய ஆண்டுகளில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து 4-வது முறையாக இந்தாண்டு வருகிற ஜூன் மாதம் 25-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்ள 13 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவினரும் ஒவ்வொரு பணியை மேற்கொள்ள உள்ளனர். அதற்கு முன்பாக தங்க தகடுகளால் கொடிமரம், கலசங்கள், மூலவருக்கு சொர்ணபந்தனம் அமைக்கப்படுகிறது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஆதினங்கள், மடாதிபதிகள் உள்ளிட்ட ஆன்மிகவாதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×