search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Uniformed Personnel"

    • இன்று முதல் 3 நாட்கள் பயிற்சி வகுப்பு
    • வேலூர் மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் தொடர்பு கொள்ளலாம்

    வேலூர்:

    வடக்கு மண்டலத்தில் உள்ள அனைத்து காவல் மாவட்டங்களிலும் பணிபுரியும் காவல்துறை, சிறைத்துறை,தீயணைப்பு துறை உள்ளிட்ட சீருடை பணியாளர்களின் வாரிசுகள் மற்றும் இந்த மாவட்டங்களில் உள்ள அமைச்சு பணியாளர்களின் வாரிசுகளுக்கு தமிழ்நாடு காவல்துறை படைதலைவர் உத்தரவின்படி வருகிற 18, 19-ந் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் வேலூரில் நடைபெற உள்ளது.

    இதற்கு தகுதி உள்ளவர்களை தயார்படுத்தும் பொருட்டு இன்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பயிற்சி முகாம் வேலூரில் உள்ள டி.கே.எம். கலை கல்லூரியில் சிறப்பு பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்று விக்கப்படுகிறது.

    மேலும் தகவல்களுக்கு வேலூர் மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 2256802, 9498181231 -ல் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளன.

    • காலை 10 மணிக்கு தொடங்கிய எழுத்து தேர்வு மதியம் 12.40 மணி வரை நடைபெற்றது.
    • எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர் ‌‌. அதில் தகுதி பெறுபவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடைபெறும்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் இன்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பு வீரர்கள் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது. மொத்தம் 3552 பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த எழுத்து தேர்வு நடைபெற்றது.

    அதன்படி தஞ்சை மாவட்டத்தில் தேர்வுக்காக 12 ஆயிரத்து 217 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.மாவட்டத்தில் தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு கல்லூரி, அன்னை வேளாங்கண்ணி கல்லூரி உள்பட 7 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.

    தேர்வுக்காக காலை 9 மணிக்குள் தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களுக்கு வந்திருந்தனர். அவர்கள் தீவிர சோதனைக்கு பிறகு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    காலை 10 மணிக்கு தொடங்கிய எழுத்து தேர்வு மதியம் 12.40 மணி வரை நடைபெற்றது. இதை முன்னிட்டு தேர்வு மையங்களில் அனைத்துவித ஏற்பாடுகளும் செய்யப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். அதில் தகுதி பெறுபவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடைபெறும்.

    எழுத்துத் தேர்வு, உடல் தகுதி எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, சிறப்பு மதிப்பெண்கள் என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு செயல்முறை இருக்கும். தேர்வர்கள் இந்த 100 மதிப்பெண்களுக்கு பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் வேலை வழங்கப்பட உள்ளது.

    ×