தஞ்சை மாவட்டத்தில் 7 மையங்களில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு

காலை 10 மணிக்கு தொடங்கிய எழுத்து தேர்வு மதியம் 12.40 மணி வரை நடைபெற்றது.எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர் ‌‌. அதில் தகுதி பெறுபவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடைபெறும்.
தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு கல்லூரியில் தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வு நடைபெற்றது.
தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு கல்லூரியில் தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வு நடைபெற்றது.
Published on

தஞ்சாவூர்:

தமிழகத்தில் இன்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பு வீரர்கள் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது. மொத்தம் 3552 பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த எழுத்து தேர்வு நடைபெற்றது.

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் தேர்வுக்காக 12 ஆயிரத்து 217 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.மாவட்டத்தில் தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு கல்லூரி, அன்னை வேளாங்கண்ணி கல்லூரி உள்பட 7 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.

தேர்வுக்காக காலை 9 மணிக்குள் தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களுக்கு வந்திருந்தனர். அவர்கள் தீவிர சோதனைக்கு பிறகு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

காலை 10 மணிக்கு தொடங்கிய எழுத்து தேர்வு மதியம் 12.40 மணி வரை நடைபெற்றது. இதை முன்னிட்டு தேர்வு மையங்களில் அனைத்துவித ஏற்பாடுகளும் செய்யப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். அதில் தகுதி பெறுபவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடைபெறும்.

எழுத்துத் தேர்வு, உடல் தகுதி எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, சிறப்பு மதிப்பெண்கள் என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு செயல்முறை இருக்கும். தேர்வர்கள் இந்த 100 மதிப்பெண்களுக்கு பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் வேலை வழங்கப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com