என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • திருவண்ணாமலை கிரிவல பாதையில் கட்டப்பட்டுள்ளது
    • ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்

    வேங்கிகால்:

    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கட்டப்பட்டுள்ள அருணகிரிநாதர் மணி மண்டபம் திறப்பு விழா வருகிற 20-ந் தேதி நடைபெற உள்ளது.

    இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமை தாங்குகிறார்.மணிமண்ட விழாக்குழு தலைவர் மா.சின்ராஜ் வரவேற்கிறார். செயலாளர் அமரேசன் விளக்க உரையாற்றுகிறார்.

    துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகிக்கிறார்.

    அருணகிரிநாதர் மணி மண்டபத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்து பேசுகிறார்.

    அரசு முதன்மைச் செயலாளர் மணிவாசன், இந்து சமய அறநிலை யத்துறை கமிஷ்னர் முரளிதரன், கலெக்டர் பா.முருகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், தொழிலாளர் நல திறன் மேம்பாட்டுத் துறை அரசு பிரதிநிதி இரா.ஸ்ரீதரன், சி.என்.அண்ணாதுரை எம்.பி, செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர் தரணிவேந்தன், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி, எஸ்.அம்பேத்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதிசீனிவாசன், வெற்றித் தமிழர் பேரவை தலைவர் ப.கார்த்தி வேல்மாறன், நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், ஒன்றியக்குழுத் தலைவர் கலைவாணி கலைமணி, எஸ்கேபி கல்விக்குழும தலைவர் கு.கருணாநிதி, முன்னாள் எம்.எல்.ஏ மணிவர்மா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை அருணாசலேஸ்வரர் கோவில் இணை கமிஷ்னர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், உறுப்பினர்கள் ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள், மீனாட்சி சுந்தரம் மற்றும் அருணகிரிநாதர் மணி மண்டப விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    • மாவட்ட செயலாளர் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்பு
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கீழ்பென்னாத்தூர்:

    திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட இராஜன்தாங்கல் ஊராட்சி தலவாய்குளம் பகுதியில் அ.தி.மு.க.வின் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு கீழ்பென்னாத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.பாஷ்யம் தலைமை தாங்கினார்.

    ஒன்றிய செயலாளர் கீழ்பென்னாத்தூர் (வடக்கு) தொப்பளான், துரிஞ்சா புரம் ஜெயபிரகாஷ், மாவட்ட கவுன்சிலர் சாந்தி கண்ணன், நகர செயலா ளர்கள் வேட்டவலம் செல்வ மணி, கீழ்பென்னா த்தூர் முருகன், ஒன்றிய, பொருளாளர் இளங்கோ வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் தொகுதி செயலாளர் தட்சணா மூர்த்தி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான எஸ். இரா மச்சந்திரன் கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ கண்ணன், ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன், முன்னாள் ஒன்றிய செயலாளர் மோகன், ஒன்றிய கவுன்சிலர் வெண்ணிலா சங்கர், ஒன்றிய துணைச் செயலாளர் வேடநத்தம் ஏழுமலை, தகவல் தொழில் நுட்ப பிரிவு முகில்வ ண்ணன், ராஜபாண்டியன், பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அம்பேத்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு
    • பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

    வந்தவாசி:

    வந்தவாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.5 கோடி செலவில் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் தற்போது கட்டப்பட்டு வருகிறது. தரைத்தளத்தில் 50 படுக்கைகளுடன் கொண்ட அவசர சிகிச்சை பிரிவும், முதல் தளத்தில் அறுவை சிகிச்சை பிரிவும் அமைய உள்ளது.

    இந்த நிலையில் உங்கள் தொகுதியில் முதல்வன் திட்டத்தின் கீழ் வந்தவாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.5.75 கோடி செலவில் புதிய கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. கூடுதல் கட்டிடத்தில் டயாலிசிஸ் சிகிச்சை பிரிவு, சி.டி. மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பிரிவுகள் அமைய உள்ளது.

    ஏற்கனவே ரூ.5 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் அருகிலேயே இந்த புதிய கூடுதல் கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இந்த இடத்தை எஸ்.அம்பேத்குமார் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு செய்தார். அப்போது கட்டிட வரைபட பணிகளை விரைந்து முடிக்கும்படி வந்தவாசி நகராட்சி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

    ஆய்வின்போது நகரமன்றத் தலைவர் எச்.ஜலால், நகராட்சி ஆணையர் எம்.ராணி, பொறியாளர் சரவணன், தி.மு.க. நகரச் செயலாளர் ஆ.தயாளன், நகர்மன்ற துணைத் தலைவர் க.சீனுவாசன், நகர்மன்ற உறுப்பினர்கள் ம.கிஷோர்குமார், அன்பரசு, ரிஹானா, சையத்அ ப்துல்கரீம், கோ.மகேந்திரன், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • புகார்களுக்கு 1098 எண்ணில் அழைக்கலாம்
    • ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்

    ஆரணி:

    ஆரணி டவுனில் அரசு பெண்கள் மேல்நி லைப்பள்ளி இயங்கி வருகிறது.

    பள்ளி கல்வி துறை சார்பில் "குழந்தை திருமணம் இல்லா" உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது.

    தலைமை ஆசிரியை தாமரைசெல்வி தலைமை தாங்கினார். இதில் ஆசிரியைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். குழந்தை திருமணம் இல்லா உறுதி மொழியை பள்ளி மாணவிகள் எடுத்து கொண்டனர்.

    இது தொடர்பான புகார்களுக்கு 1098 எண்ணில் அழைத்து புகார் தெரிவிக்கலாம் என மாணவிகளுக்கு அறிவுரை களை வழங்கினர்.

    • கட்சி வெற்றிக்கு தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும்
    • துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேச்சு

    கீழ்பென்னாத்தூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி முகவர்க ளுக்கான ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    பெ.சு.தி சரவணன் எம். எல் ஏ தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், ரா.ராஜேந்திரன், மாரிமுத்து ராமஜெயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் துரிஞ்சாபுரம் ஒன்றிய செயலாளர் வி.பி.அண்ணாமலை வரவேற்று பேசினார்.

    கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் இசை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்துகொண்டார். சிறப்புரையாற்றினார்.

    அவர் பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் வருகிற 21 மற்றும் 22-ந்தேதிகளில் திருவண்ணாமலை நகருக்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.

    மாவட்ட எல்லையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஒன்றிணைந்து கலந்து கொண்டு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.

    வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி முகவர்களாக உள்ளவர்கள் பொதுமக்களிடம் சென்று, 6-வது முறையாக தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள தி.மு.க. ஆட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என எடுத்துரைக்க வேண்டும்.

    நாடாளுமன்றத் தேர்தலில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் நமது வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வாக்குச்சாவடி முகவர்கள் களப்பணி ஆற்றிட வேண்டும்.

    கட்சி தொண்டர்கள் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும். இன்றைக்கு பெண்களுக்கான ஆட்சி நடந்து வருகிறது. பெண்கள் அதிக அளவில் வரும் தேர்தலில் வாக்களிக்க நமது கட்சி நிர்வாகிகள் களப்பணியாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில், ஒன்றிய குழு தலைவர்கள் அய்யாக்கண்ணு, தமயந்தி ஏழுமலை, பேரூராட்சி செயலாளர் வேட்டவலம் முருகையன் கீழ்பென்னாத்தூர் அன்பு மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் கீழ்பென்னாத்தூர் நகர செயலாளர் அன்பு நன்றி கூறினார்.

    • ஆண்கள் சட்டையை தீயிட்டு கொளுத்தினால் திருஷ்டி கழிந்து விடும் என்று வதந்தியை பரப்பி உள்ளனர்.
    • ஒருவரை பார்த்து ஒருவர் என பல வீடுகளில் ஆண் குழந்தைகளின் துணிகள் எரிக்கப்பட்டன.

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த புளியரம்பாக்கம் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் இந்த முறை புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை சரியாக தெரியவில்லை. நேரத்தில் பிறக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

    இதனால் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஆண் குழந்தைக்கு நோய் நொடி ஏற்படும் என்றும் தெரிவித்தனர்.

    மேலும் ஆண்கள் சட்டையை தீயிட்டு கொளுத்தினால் திருஷ்டி கழிந்து விடும் என்று வதந்தியை பரப்பி உள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் ஆண் குழந்தைகள் அணிந்திருந்த துணிகளை வீட்டின் வாசல் முன்பு போட்டு நள்ளிரவில் தீயிட்டு கொளுத்தினர்.

    ஒருவரை பார்த்து ஒருவர் என பல வீடுகளில் ஆண் குழந்தைகளின் துணிகள் எரிக்கப்பட்டன.

    மகாளய அமாவாசை சரியான நேரத்தில் வராததால் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பழைய துணிகளை தீயிட்டுக் கொளுத்தி திருஷ்டி கழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • படுகாயம் அடைந்த சதீஷ்குமார் மனைவி காவியா(32) திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • பிரேத பரிசோதனை முடிந்ததும் இறந்தவர்களின் உடல்களுக்கு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பக்கிரிபாளையம் பகுதியில் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    இந்த கோர விபத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள தும்கூர் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சீனிவாசன் (வயது 60), மலர் (55), மணிகண்டன் (40), ஹேமந்த் (35), சதீஷ்குமார் (40), சர்வேஸ்வரன் (6), சித்து (3) ஆகிய 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மேலும் படுகாயம் அடைந்த சதீஷ்குமார் மனைவி காவியா(32) திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இறந்தவர்கள் உடல்கள் அனைத்தும் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியிலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    பிரேத பரிசோதனை முடிந்ததும் இறந்தவர்களின் உடல்களுக்கு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

    இதனைத் தொடர்ந்து கலெக்டர் முருகேஷ், போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மு.பெ.கிரி எம்.எல்.ஏ, நகர மன்ற துணைத் தலைவர் ராஜாங்கம் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    தொடர்ந்து 7 பேரின் உடல்கள் அரசு மரியாதையுடன் தனித்தனி வாகனம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

    • எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலத்தை அடுத்த சந்தவாசல் சி.சி.ரோட்டில் தனி யார் திருமண மண்டபம் அருகே அந்த வழியாக நடந்து சென்ற 70 வயது மூதாட்டி அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்து சந்தவாசல் போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டி உடலை பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இறந்த மூதாட்டியார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

    இது குறித்தும், விபத்துக்கு காரணமான வாகனம் மற்றும் தப்பிய டிரைவர் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
    • சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது

    வந்தவாசி:

    வந்தவாசி பகுதியில் நேற்று மாலை திடீரென பலத்த மழை பெய்தது. வெண்குன்றம், பாதிரி, அம்மையப்பட்டு, மும்முனி, சத்யா நகர், இந்திரா நகர், கீழ்சாத்தமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியதால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி யது.

    சுமார் 2 மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவா னது. பலத்த மழை பெய்த தால் விவசாயிகளும் பொது மக்களும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த கீழ் புதுப்பாக்கத்தை சேர்ந்தவர் லட்சுமிபதி (வயது 31). ஏ.சி. மெக்கானிக். இவரது மனைவி நித்யா (25). ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். லட்சுமிபதிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மனைவி நேற்று வேலைக்கு சென்று இருந்த நேரத்தில் திடீரென லட்சுமிபதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த செய்யாறு போலீசார் லட்சுமிபதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தகவல் அறிந்த மேல் செங்கம் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
    • கடப்பாரை போன்ற கம்பிகளை கொண்டு காரை உடைத்து 7 பேர் உடல்களை மீட்டனர்.

    செங்கம்:

    கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள டூம்கூரை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது குடும்பத்தினர் 7 பேருடன் நேற்று காரில் மேல் மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு வந்தனர். கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு இன்று காலை ஊருக்கு காரில் புறப்பட்டு சென்றனர்.

    காரில் மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் 2 சிறுவர்கள் உட்பட 8 பேர் இருந்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள அந்தனூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது.

    அப்போது எதிரே திருவண்ணாமலை நோக்கி லாரி ஒன்று வந்தது.

    எதிர்பாராத விதமாக கார் லாரி நேருக்கு நேர் பயங்கரமாக மோதின.

    இதில் கார் முழுவதும் நொறுங்கியது. காரில் இருந்தவர்கள் உடல் நசுங்கி சின்னாபின்னமானார்கள்.

    இந்த விபத்தில் காரில் இருந்த 2 சிறுவர்கள் ஒரு பெண் மற்றும் 4 ஆண்கள் காருக்குள்ளேயே துடிதுடித்து இறந்தனர். ஒரு பெண் பலத்த காயமடைந்தார்.

    இந்த கோர விபத்தை கண்ட வாகன ஓட்டிகள் பதறி அடித்துக் கொண்டு ஓடினர். சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இருபுறமும் இருந்து வந்தவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த மேல் செங்கம் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    காருக்குள் பலத்த காயத்துடன் துடிதுடித்துக் கொண்டிருந்த பெண்ணை மீட்டனர். அவரை ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    காருக்குள் மணிகண்டன் உள்பட 7 பேரும் உடல் சிதைந்த நிலையில் பிணமாக சிக்கி இருந்தனர். கடப்பாரை போன்ற கம்பிகளை கொண்டு காரை உடைத்து 7 பேர் உடல்களை மீட்டனர் .

    மீட்கப்பட்ட உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிறகு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

    சுமார் 1½ மணி நேரம் மீட்பு பணிகள் நடந்தது. அதற்குப் பிறகு திருவண்ணாமலை பெங்களூர் சாலையில் போக்குவரத்து சீரானது.

    பலியானவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் திருவண்ணாமலையை நோக்கி விரைந்து வந்தனர்.

    விபத்து நடந்த இடத்தில் திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பெண்ணை பார்வையிட்டு ஆறுதல் கூறினார். அவருக்கு அனைத்து விதமான சிகிச்சையும் அளிக்க தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு உத்தரவிட்டார்.

    இறந்தவர்கள் விவரம் வருமாறு;-

    மணிகண்டன் (வயது42). ஹேமநாதன் (41). சின்னப்பா, மலர், சதீஷ்குமார், சர்வேஸ்வரன் (7), சித்தார்த் (3), இந்த விபத்து தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது
    • கண்ணமங்கலம் அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் திருவண்ணாமலையில் நடந்த மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டனர்.

    இதில் 19 வயதுக்குட்பட்ட உயரம் தாண்டுதலில் ராகுல், 400 மீ ஓட்டப்பந்தயத்தில் இளங்கோவன் ஆகியோர் முதலிடமும், 1500 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் கிஷோர் மூன்றாமிடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    மேலும் ராகுல், இளங்கோவன் ஆகிய இருவரும் மாநில அளவில் நடக்க உள்ள விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளதாக உடற்கல்வி இயக்குனர் கார்த்திகேயன் தெரிவித்தார். அப்போது உடற்கல்வி ஆசிரியர் அன்புகுமரன் உடனிருந்தார்.

    ×