என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • சேதமடைந்த கிணறு மதகு அகற்றப்பட்டு புதிதாக 3 கிணறு மதகுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் முழுவதும் ஏற்கனவே புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு விட்டது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். இந்த ஏரியின் அருகே நீரியல் ஆய்வுகூடம் உள்ளது. பூண்டி ஏரியில் தேங்கும் தண்ணீர் அங்குள்ள கிணறு மதகு வழியாக நீரியல் ஆய்வு கூடத்துக்கு செல்வது வழக்கம்.

    கடந்த ஆண்டு பெய்த கனமழைக்கு பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியது. அப்போது தண்ணீரின் அழுத்தத்தால் ஏரியின் அருகே உள்ள மதகு சேதமடைந்து நீரியல் ஆய்வுக்கூ டத்துக்குள் வெள்ளம் பாய்ந்தது.

    இந்த நிலையில் சேதமடைந்த கிணறு மதகு அகற்றப்பட்டு புதிதாக 3 கிணறு மதகுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ரூ. 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரிவரை உள்ள கால்வாயிலும் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு கரைகள் சீரமைக்கப்படுகின்றன.

    இதற்காக பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் முழுவதும் ஏற்கனவே புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு விட்டது. தற்போது பூண்டி ஏரியில் 609 மி.கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது. இதற்கிடையே பூண்டி கால்வாய் சீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை.

    தற்போது மழை பெய்ய தொடங்கி உள்ளதால் கால்வாய் வழியாக வரும் மழை நீரை பூண்டி ஏரியில் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. கால்வாயில் ஆங்காங்கே அடைப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. எனவே பருவமழை தீவிரம் அடைவதற்குள் கால்வாய் சீரமைப்பு பணிகளை முழுவதும் முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கடந்த 3 நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு, விட்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • புழல் ஏரிக்கு 65 கனஅடியாக இருந்த தண்ணீர் வரத்து தற்போது 196 கனஅடியாக அதிகரித்து இருக்கிறது.

    திருவள்ளூர்:

    சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி குடிநீர் ஏரிகளில் 6 ஆயிரத்து 754 மி.கன அடி தண்ணீர் உள்ளது.

    கடந்த 3 நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு, விட்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து உள்ளது. புழல் ஏரிக்கு 65 கனஅடியாக இருந்த தண்ணீர் வரத்து தற்போது 196 கனஅடியாக அதிகரித்து இருக்கிறது.

    இதே போல் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 108 கன அடியாக இருந்த தண்ணீர் வரத்து தற்போது 145 கன அடியாக உயர்ந்து இருக்கிறது. கன மழையாக தொடர்ந்து நீடித்தால் ஏரிகளுக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645மி.கனஅடி. இதில் 2,850 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. குடிநீர் தேவைக்காக ஏரியில் இருந்து 145 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மி.கனஅடி. ஏரியில் தற்போது 2,655 மி.கன அடி தண்ணீர் உள்ளது.ஏரியில் இருந்து 196 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கனஅடி. ஏரியில் தற்போது 609 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 95 கனஅடி தண்ணீர் வருகிறது. 50 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது.

    சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1,081 மி.கனஅடி. இதில் 140 மி.கனஅடிதண்ணீர் உள்ளது. ஏரிக்கு 26 கனஅடி தண்ணீர் வருகிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி முழுகொள்ளளவான 500 மி.கனஅடி நிரம்பி வழிகிறது. ஏரிக்கு நீர் வரத்து 193 கனஅடியாக அதிகரித்து உள்ளது. அந்த தண்ணீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

    இன்று காலையும் திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. திருவள்ளூர், பொன்னேரி, மீஞ்சூர், ஊத்துக்கோட்டை பகுதியில் விட்டு, விட்டு சாரல் மழை கொட்டியது.

    • புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மி.கனஅடி. ஏரியில் தற்போது 2,655 மி.கன அடி தண்ணீர் உள்ளது.
    • சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1,081 மி.கனஅடி. இதில் 138 கனஅடிதண்ணீர் உள்ளது.

    பூந்தமல்லி:

    சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.

    இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போதைய நிலவரப்படி குடிநீர் ஏரிகளில் 6 ஆயிரத்து 743 மி.கன அடி தண்ணீர் உள்ளது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும்புறநகர் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. நீர்வரத்து இல்லாமல் இருந்த செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 108 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    இதேபோல் புழல் ஏரிக்கு 65 கனஅடி தண்ணீர் வருகிறது. கன மழையாக தொடர்ந்து நீடித்தால் ஏரிகளுக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே செம்பரம்பாக்கம் ஏரி 78 சதவீதம் நிரம்பி காணப்படுகிறது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645மி.கனஅடி ஆகும். ஏரியில் தற்போது 2,845 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. குடிநீர் தேவைக்காக ஏரியில் இருந்து 143 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மி.கனஅடி. ஏரியில் தற்போது 2,655 மி.கன அடி தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 80 சதவீதம் ஆகும். ஏரியில் இருந்து 204 கனஅடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்படுகிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கனஅடி. ஏரியில் தற்போது 605 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 75 கனஅடி தண்ணீர் வருகிறது. 50 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது.

    சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1,081 மி.கனஅடி. இதில் 138 கனஅடிதண்ணீர் உள்ளது. ஏரிக்கு 10 கனஅடி தண்ணீர் வருகிறது. கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி முழுகொள்ளளவான 500 மி.கனஅடி நிரம்பி வழிகிறது. ஏரிக்கு வரும் 25 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

    • மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 ஜே.சி.பி. எந்திரம் மற்றும் 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • தப்பி ஓடிய 4பேரை தேடிவருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த கொட்டையூர் கிராமத்தில் சவுடு மண் கடத்தப்படுவதாக மப்பேடு போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் அங்கு சென்றபோது மண் திருட்டில் ஈடுபட்ட 5 பேரை மடக்கி பிடித்தனர்.

    மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 ஜே.சி.பி. எந்திரம் மற்றும் 2 லாரிகளை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய 4பேரை தேடிவருகிறார்கள்.

    • மகன் தற்கொலை செய்த துக்கம் தாளாமல் தந்தையும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • செல்போன் விளையாட்டால் ஒரு குடும்பமே நிலைகுலைந்து போனது.

    பூந்தமல்லி:

    குன்றத்தூரை அடுத்த பழந்தண்டலம், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சுந்தர்(வயது40). கார்பெண்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மகன் நவீன்குமார்(14). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.

    நவீன்குமார் அதிகமாக செல்போனில் கேம் விளையாடுவதை வாடிக்கையாக கொண்டு இருந்தான். இதனை அவரது தந்தை சுந்தர் அடிக்கடி கண்டித்து வந்தார். ஆனால் இதனை கண்டு கொள்ளாமல் நவீன்குமார் தொடர்ந்து செல்போனில் கேம் விளையாடினார்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த போது நவீன்குமார் செல்போனில் விளையாடிக்கொண்டு இருந்தார். இதனை தந்தை சுந்தர் கண்டித்து விட்டு வேலைக்கு வெளியே சென்றுவிட்டார். அப்போது சுந்தரின் மனைவியும் வெளியே சென்று இருந்ததாக தெரிகிறது.

    இதற்கிடையே தந்தை கண்டித்ததால் மனமுடைந்த நவீன்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் உள்ள அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரத்தில் சுந்தர் வீட்டுக்கு திரும்பி வந்த போது மகன் நவீன்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தான் கண்டித்ததால் தான் மகன் தற்கொலை செய்து இறந்து விட்டான் என்று நினைத்து சுந்தர் மனமுடைந்தார்.

    இதைத்தொடர்ந்து தானும் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

    இதற்கிடையே சுந்தரின் அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். அவர்கள் நவீன்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடப்பைத கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் நவீன்குமாரின் உடலை இறக்கி அருகில் உள்ள அறையில் வைத்தனர். மேலும் சுந்தருக்கு ஆறுதல் கூறினர். ஆனாலும் தன்னால் தான் மகன் தற்கொலை செய்து கொண்டான் என மனவேதனையில் இருந்த சுந்தர் திடீரென தனது கையை கத்தியால் அறுத்து கொண்டு மகன் தற்கொலை செய்த அதே அறைக்குள் சென்றார். பின்னர் மகன் தற்கொலை செய்த அதே கயிற்றில் சுந்தரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அடுத்தடுத்து நடந்த இந்த தற்கொலையை கண்டு வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    இது குறித்து குன்றத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து தற்கொலை செய்த சுந்தர், அவரது மகன் நவீன்குமார் ஆகிய இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மகன் தற்கொலை செய்த துக்கம் தாளாமல் தந்தையும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. செல்போன் விளையாட்டால் ஒரு குடும்பமே நிலைகுலைந்து போனது.

    • சோழவரம், எஸ்.பி.கே.நகர் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தார்.
    • ராஜேஸ்வரியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பெரியபாளையம்:

    சிறுவாபுரி முருகன் கோவில் பிரசித்தி பெற்றது. கடந்த மாதம் இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது மண்டலாபிஷேகம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் பங்கேற்க தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் சோழவரம், எஸ்.பி.கே.நகர் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி (வயது 66) என்பவர் நேற்று இரவு சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அவர் தரிசனம் முடித்ததும் கோவிலின் பின்புறத்தில் உள்ள இருக்கையில் தூங்கினார். இதனை அங்கிருந்த ஊழியர்கள் கவனிக்கவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை கோவிலை சுத்தம் செய்ய பணியாளர்கள் வந்தபோது ராஜேஸ்வரியை எழுப்ப முயன்றனர். அப்போது அவர் இறந்து இருப்பது தெரிந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கோவில் ஊழியர்கள் ஆரணி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து ராஜேஸ்வரியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ராஜேஸ்வரி எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    • சோழவரம் அருகே உள்ள செம்புலிவரம், செங்காளம்மன் கோவில் அருகே போலீசார் வாகன சோதனை.
    • 3 கார்களை நிறுத்தி சோதனை செய்த போது அதில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

    செங்குன்றம்:

    சோழவரம் அருகே உள்ள செம்புலிவரம், செங்காளம்மன் கோவில் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது பெங்களூரில் இருந்து வந்த 3 கார்களை நிறுத்தி சோதனை செய்த போது அதில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதுதொடர்பாக சந்திராராம், நாராயன்லால், ஜெயபால், கணேசன், தங்க மாரியப்பன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 95 ஆயிரம் ரொக்கம், 100 கிலோ புகையிலை பொருட்கள், 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அவர்களுடன் தொடர்பில் உள்ள குட்கா கடத்தல் கும்பல் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    • உடல்நிலை பாதிக்கப்பட்ட தனலட்சுமி ஆஸ்பத்திரிக்கு செல்ல கணவரை அழைத்தார்.
    • மனவேதனை அடைந்த தனலட்சுமி வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள அள்ளிகுழி கிராமம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் நேதாஜி. இவரது மனைவி தனலட்சுமி (வயது25). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    உடல்நிலை பாதிக்கப்பட்ட தனலட்சுமி ஆஸ்பத்திரிக்கு செல்ல கணவர் நேதாஜியை அழைத்தார். ஆனால் அவர் உடன் வர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த தனலட்சுமி வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து பென்னலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டிராக்டரின் பின் சக்கரத்தில் சிக்கிய ஓசூர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • கிருஷ்ண காந்த் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    திருத்தணி:

    பள்ளிப்பட்டு அடுத்த குமாரராஜா பேட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் ஓசூர்(வயது28). கிருஷ்ண காந்த் (27). இருவரும் மோட்டார் சைக்கிளில் பள்ளிப்பட்டு நோக்கி சென்றனர். திருத்தணி அடுத்த வி.கே.என். கண்டிகை அருகே வளைவில் திரும்பிய போது அவ்வழியே கரும்பு ஏற்றி சென்ற டிராக்டர் திடீரென மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் டிராக்டரின் பின் சக்கரத்தில் சிக்கிய ஓசூர் சம்பவ இடத்திலேயே பலியானார். கிருஷ்ண காந்த் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதனால் அதிர்ச்சி அடைந்த டிராக்டர் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து திருத்தணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆவடியை அடுத்த கோவர்தனகிரி,பொதிகை நகர், பவானி அம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் சாவித்திரி.
    • கொலையுண்ட சாவித்திரி சிலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து இருந்ததாக தெரிகிறது.

    திருநின்றவூர்:

    ஆவடியை அடுத்த கோவர்தனகிரி,பொதிகை நகர், பவானி அம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் சாவித்திரி (வயது71). இவர் தனியாக தங்கி இருந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் உள்ள அறையில் சாவித்திரி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலையில் பலத்த காயம் இருந்தது. இதுகுறித்து ஆவடி போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளி குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இதில் சாவித்திரியை கொலை செய்தது அதே பகுதியைச் சேர்ந்த கார்பெண்டரான முனுசாமி (55) என்பது தெரிந்தது. இதையடுத்து முனுசாமியை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பணத் தகராறில் இந்த கொலை நடந்து இருப்பது தெரிய வந்தது.

    கொலையுண்ட சாவித்திரி சிலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து இருந்ததாக தெரிகிறது. இதற்கு முனுசாமி உதவியாக இருந்து உள்ளார். சம்பவத்தன்று சாவித்திரியின் விட்டுக்கு வந்த முனுசாமி பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த முனுசாமி அருகில் கிடந்த இரும்பு கம்பியால் சாவித்திரியின் தலையில் தாக்கி உள்ளார். இதில் பலத்த காயம்அடைந்த அவர் இறந்து இருப்பது தெரியவந்தது.

    இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? வேறு யாரேனும் உதவினார்களா? என்று கைதான முனுசாமியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மோட்டார்சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பரிமளா கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்தனர்.
    • காயமடைந்த முத்தமிழ் செல்வி திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    திருவள்ளூர்:

    திருத்தணியை அடுத்த கே.ஜி.கண்டிகை, சித்தூர் சாலையை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி முத்தமிழ் செல்வி. இருவரும் மோட்டார்சைக்கிளில் திருத்தணி சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். திருத்தணி மாதா கோயில் அருகே சென்றபோது பின்னால் மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென பரிமளா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்தனர்.

    இதில் நிலைதடுமாறிய முத்தமிழ்செல்வி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் அங்கு திரண்டனர். உடனே கொள்ளையர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். காயமடைந்த முத்தமிழ் செல்வி திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 5-வது முறையாக மாவட்ட செயலாளராக தேர்வு
    • தி.மு.க.வினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தி.மு.க. அமைப்பு தேர்தலில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    தொடர்ந்து 5-வது முறையாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து திருவண்ணா மலை தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்ச ருமான எ.வ.வேலு நேற்று திருவண்ணா மலைக்கு வந்தார்.

    பின்னர் அவர், புதிய நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்களுடன் காரில் ஊர்வலமாக சென்று முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி, பெரியார், அண்ணா, காந்தி, காமராஜர் ஆகிய தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு பொது மக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கினார். பின்னர் கட்சி அலுவலகத்தில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்தார்.

    அப்போது அமைச்சர் எ.வ.வேலுக்கு மாலைகள், சால்வைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, அவைத்தலைவர் த.வேணுகோபால், மாநில மருத்துவ அணி துணைத்த லைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், வடக்கு மாவட்ட செயலாளர் தரணிவேந்தன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, சரவணன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், மாவட்ட துணைத்தலைவர் பிரியா விஜயரங்கன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், ஒன்றியக்குழு தலைவர்கள் கலைவாணி, பரிமளா கலையரசன், பொன்னி சுந்தரபா ண்டியன், ஒன்றிய செயலாளர்கள் மு.பன்னீர்செல்வம், கோ.ரமேஷ், பி.கோவிந்தன், ஆராஞ்சி ஆறுமுகம், மாவட்ட அரசு வழக்கறிஞர் கே.வி.மனோகரன், கூட்டுறவு வங்கியின் சட்ட ஆலோசகர் வெற்றி டிஜிட்டல் கார்த்திகேயன், அருணை கன்ஸ்ட்ரக்சன் துரை வெங்கட் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×