என் மலர்
திருப்பத்தூர்
- புகை மூட்டம் காணப்பட்டது
- 1 மணி நேரம் போராடி அணைத்தனர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் திடிரென தீ பற்றி மளமளவென எரிகிறது தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.
நாட்டறம்பள்ளி தாலுக்கா அலுவலகம் எதிரே உள்ள மைதானத்தில் நாட்டறம்பள்ளி பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள குப்பைகளை சேகரித்து குவிக்கப்பட்டுள்ளது.
இந்த குப்பை கிடங்கில் திடீரென தீ பற்றி எரிந்து, புகை மூட்டம் காணப்பட்டது. இதுகுறித்து பொது மக்கள் உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு ரமேஷ் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேரம் போராடி தண்ணீர் பீசி அடித்து தீயை முற்றிலுமாக அணைத்தனர்.
- தீயணைப்பு துறையினர் மீட்டனர்
- காட்டில் பத்திரமாக விட்டனர்
ஜோலார்பேட்டை:
கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் இக்பால். இவருக்கு சொந்தமான மாந்தோப்பு திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த பையனப்பள்ளி பகுதியில் உள்ளது.
இந்த மாந்தோப்பில் நேற்று தொழிலாளர்கள் கிழே விழந்து இருந்த மாங்காய்களை சேகரித்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென மலைப்பாம்பு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதன் பிறகு மாந்தோப்பில் வேலை செய்து கொண்டு இருந்த தொழிலாளர்கள் உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ரமேஷ் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்றனர். சுமார் 1 மணி நேரம் போராடி 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அதன் பிறகு வனத்துறையினர் அருகில் உள்ள காட்டில் பத்திரமாக மலை பாம்பை விட்டனர்.
- மகனை கைது செய்து அழைத்து சென்றதால் ஆத்திரம்
- கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
திருப்பத்தூர்:
போலீசாரை கண்டித்து, திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் பொன்னி யம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தாஜ். இவரது மனைவி யாஸ்மின் (வயது 44). இவர்களின் மகன் அப்சல் (25). இவர் மீது வெளி மாநில மதுபானங்கள் விற் றது உள்ளிட்ட பல வழக்கு கள் உள்ளதாக கூறப்படு கிறது. இந்தநிலையில் நேற்று காலையில் அப்சல் வீடடிற்கு போலீசார் சென்று சோதனை செய்த போது ரூ.2 ஆயிரம் மதிப்பிலான வெளிமாநில மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அப் சலை போலீசார் கைது செய்து அழைத்து செல்ல முயன்றனர். இதனால் அவரது தாயார் யாஸ்மின் போலீசாரிடம் வாக்குவா தத்தில் ஈடுபட்டார். ஆனாலும் போலீசார் அப்சலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
இதனால் ஆவேசம் அடைந்த யாஸ்மின் மண் எண்ணெய் கேனை எடுத்துக் கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று, போலீசார் எனது வீட்டிற்கு வரக்கூடாது எனவும், மகனை கைது செய்யக்கூடாது எனவும் கூறி தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அப்போது அங்கு பாதுகாப்புபணியிலிருந்த போலீசார் அவரை மீட்டனர். இதுகுறித்து தகவலறிந்த டவுன் போலீசார் கலெக் டர் அலுவலகத்திற்கு விரைந்து சென்று யாஸ் மினை விசாரித்து எச்சரித்து அனுப்பினர்.
போலீசாரை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 15 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி பேர்லீஸ் இன்ஸ்பெக்டர் மலர், சப்-இன்ஸ் பெக்டர்கள் நந்தகுமார், சுபாஷினி மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கொத்தூர் அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தனது வீட்டின் பின்புறம் மதுபாட்டில்கள் விற்றுக்கொண்டிருந்த கொத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜோதி என்பவரின் மகன் பாபு (வயது 38) என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- வீட்டில் இருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த சின்ன வரிகம் ரகுநாதபுரத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது 35). கூலி தொழிலாளி. இவர் நேற்று வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் இன்று காலை உமராபாத் பகுதியில் உள்ள கிணற்றில் குமரேசன் பிணம் மிதப்பதாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உமராபாத் போலீசார் குமரேசன் உடலை கிணற்றில் இருந்து மீட்டனர்.
பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து குமரேசன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதிகாரிகள் எச்சரிக்கை
- மீறி திருமணம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் 21 வயதான வாலிபருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது மதிக்கத்தக்க தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு திருமணம் நடைபெறுவதாக தகவல் வந்தது.
நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் வருவாய் துறையினர், ஆத்தூர் குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் குமார் மற்றும் போலீசார் வாலிபர் வீட்டிற்கு சென்று பெற்றோர்களை வரவழைத்து எச்சரிக்கை விடுத்து அறிவுரை வழங்கினர்.
சிறுமிக்கு திருமணம் செய்தால் பெற்றோர்கள் மீதும் திருமணத்தில் கலந்து கொள்ளும் உறவினர்கள் மீதும் சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
மீறி திருமணம் செய்தால் சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
பள்ளி மாணவியை மற்றும் அவரது குடும்பத்தினரை விசாரணை செய்ய சென்றனர்.
வீட்டில் யாரும் இல்லை இதனால் அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு தகவல் தெரிவித்து விட்டு சென்றனர்.
- 19 புதிய மனுதாரர்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்
- போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கினார்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடந்தது.
கருத்து கேட்பு குழு பிரிவிலிருந்து பெறப்பட்ட திருப்தி அடையாத 15 மனுதாரர் களை நேரில் அழைத்தும், 19 புதிய மனுதாரர்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு, அவர்க ளின் குறைகளை கேட்டறிந்து அதற்கான உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கி னார்.
கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ் பெக்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- போலீசார் சோதனையில் சிக்கினர்
- 230 பாக்கெட்டுகள் பறிமுதல்
வாணியம்பாடி:
வாணியம்பாடி நியூடவுன் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அதி வேகமாக சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் கர்நாடகா மாநில மது பாக்கெட்டுகள் கடத்தி வந் தது தெரிய வந்தது.
விசாரணையில் காரில் வந்தவர்கள் ஜமுனாமரத்தூர் பகுதியை சேர்ந்த கோபி (வயது 20), குமரன் (24), மைக்கேல் (20), கதிர்வேல் (20) என்பதும், இவர்கள் கர்நாடக மாநில மது பாக்கெட்டுக் களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து அவர்க ளிடம் இருந்து 230 மது பாக் கெட்டுகளை போலீசார் பறி முதல் செய்தனர். மேலும் இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப்ப திவுசெய்து 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
- 3 இடங்களில் சிறுபாலங்கள் அமைக்கும் பணி நடக்கிறது
திருப்பத்தூர்:
திருப்பத்தூரில் இருந்து தர்மபுரி வரை செல்லும் சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக குனிச்சி, லக்கிநாயக்கன்பட்டி உள்ளிட்ட 3 இடங்களில் சிறுபாலங்கள் அமைக்கும் பணி நடக்கிறது. இதனால் வாகனங்கள் செல்வதற்கு அதன் அருகிலேயே மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் மாற்றுப்பாதையில் செல்ல ஒரே ஒரு இடத்தில் கூட தார் சாலை அமைக்கப்படவில்லை. 3 இடங்களிலுமே மண் நிரப்பப்பட்டு ஜல்லிக்கற்கள் மட்டுமே போடப்பட்டு பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் கரடுமுரடான மாற்றுப்பாதையில் சென்று வருகின்றன. இந்த மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்லும்போது, நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்க வாகனங்களில் செல் வோரின் கண்களில் மண்துகள்கள் விழுந்து இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.
மேலும் ஜல்லி கற்களில் இருசக்கர வாகனங்களில் செல் வோர் தவறி கீழே விழுந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறை, சம்பந்தப்பட்டதுறை அதிகா ரிகள் சிறு பாலங்கள் அமைக்கும் மூன்று இடங்களிலும் தார் சாலை அமைக்க வேண்டும் அல்லது காலை மாலை இரு வேளையிலும் டிராக்டர் மூலம் தண்ணீர் தெளிக்கவும், மாற் றுப்பாதையில் விபத்துக்கள் ஏற்படா வண்ணம் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ரோந்து பணியில் சிக்கினார்
- போலீசார் விசாரணை
வாணியம்பாடி:
வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மணல் கடத்தல் நடைபெறுவதை தடுக்கும் வகையில், போலீசார் தொடர் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், சப்- இன்ஸ்பெக்டர் மஞ்சுநா தன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர்.
அப்போது, மேல்குப்பம் பகுதியில் இருந்து மாட்டுவண்டியில் மணல் ஏற்றி வந்தநபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் அதேப்பகுதியை சேர்ந்த குணசேகரன் (வயது 52) என்பதும், பாலாறு பகுதியில் இருந்து மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை போலீ சார் கைது செய்து, மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்தனர்.
- பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகாமையில் உள்ள கடைகளில் சோதனை
- அறிவிப்பு பதாகை வைக்கவும் அறிவுரை
வாணியம்பாடி:
ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி தலை மையில், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல் துறை மற்றும் வாணியம்பாடி நகராட்சி பணியாளர்கள் இணைந்து உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, வாணியம் பாடி நகராட்சிக்குட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகாமையில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.
அப்போது விற்பனைக்கு வைத்திருந்த பான்பராக் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். மேலும் கடைகளில் உள்ள புகையிலை சம்பந்தப் பட்ட விளம்பரங்களை அப்புறப்படுத்தவும், புகை பிடிக்க தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிப்பு பதாகை வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
நகராட்சி ஆணையாளர் பொறுப்பு) சங்கர், மண்டல துணை தாசில்தார் விமல் மோகன், நகராட்சி சுகாதார ஆய் வாளர் செந்தில்குமார், சரவணன் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர், போலீசார், சுகாதார ஆய்வாளர்கள், வாணியம்பாடி நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர் கள் உடன் இருந்தனர்.
- 90 பாக்கெட் பறிமுதல்
- கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
கேத்தாண்டப்பட்டி அருகே கள்ளச்சாராயம் மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் பெயரில் நாட்டறம்பள்ளி போலிசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது கேத்தாண்டப்பட்டி அருகே கூத்தாண்டகுப்பம் பகுதியை சேர்ந்த பரத் (வயது 23). வல்லரசு (19) ஆகிய இருவரும் தங்களது வீட்டின் பின்புறம் தலா 45 பாக்கெட் கள்ளச்சாராயம் மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்களை மடக்கி பிடித்தனர்.
திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 2 பேரையும் ஜெயிலில் அடைத்தனர்.
மேலும் அவர்களிடமமிருந்து 90 கள்ள சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அழித்தனர்.






