என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த வெலக்கல் நத்தம் பகுதியில் துணை மின் நிலையமும், அதன் அருகில் மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகமும் செயல்படுகிறது.

    அதிக மின்கட்டனம்

    இந்த மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட சந்திரபுரம், மல்லபள்ள, வெலக்கல்நத்தம், பஞ்சாயத்து உள்ளிட்ட பகுதி களில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் மின்கட்ட ணம் வழக்கத்தை விட அதிக மாக இந்த முறை வந்துள்ள தாக கூறப்படுகிறது. இதுகு றித்து பலமுறை மின்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் இது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த 3 பஞ்சா யத்தை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் வெலக்கல்நத்தம் மின் வாரிய அலுவலகத்தை முற்றுகை யிட்டு உதவி செயற்பொறியாளர் பிரபுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    சாலை மறியல்

    பின்னர் அவர்கள் திடீ ரென ஜெயபுரம் வழியாக வெலக்கல்நத்தம் செல்லும் சாலையில் அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறிய லில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது மின்துறை அதி காரிகளிடம் பேசி உடனடி யாக நடவடிக்கை எடுக்கட் படும் என்று கூறியதன் பேரில் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    • புழுதி கிளம்புவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது
    • குடிநீர் தட்டுப்பாட்டால் அவதி

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மின்னூர் ஊராட்சியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தின் வழியாக விண்ணமங்கலம் மலைப்பகுதியில் செயல்படும் கல்குவாரிக்கு தினமும் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது.

    வாகனங்கள் போக்குவரத்து காரணமாக அந்தப் பகுதியில் புழுதி கிளம்புவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. எனவே இந்த கிராமத்தின் வழியாக வாகனங்கள் சென்றுவர அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் அந்தப் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டி மீது கல்குவாரியில் இருந்து வந்த லாரி மோதியது. இதனால் குடிநீர் தொட்டி பழுதடைந்ததால், அந்தப் பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள், அந்த வழியாக வந்த லாரிகளை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை
    • மழை காலங்களில் இறந்தவர் உடலை அடக்கம் செய்வதில் சிக்கல்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம்,பாணாவரம் அடுத்த போளிப்பாக்கம் ஊராட்சியில் பிள்ளையார்குப்பம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் மயானம் பல ஆண்டுகளாக இல்லாததால் இறந்தவர் உடலை ஓடைக்கால்வாயில் அடக்கம் செய்து வருவதில் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது.

    குறிப்பாக தொடர் மழை காலங்களில் இறந்தவர் உடலை அடக்கம் செய்வதிலும், இறுதி காரியங்கள் செய்வதிலும் இப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

    இதனால் கிராம மக்கள் மயானத்திற்கு இடம் ஒதுக்கி தரக்கோரி பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று மயானத்திற்கு இடம் தரக்கோரி அப்பகுதி மக்கள் கையில் மண்டை ஓட்டுடன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மளமளவென பற்றி அனைத்து பொருட்கள் மீதும் பரவியது
    • வெடிக்கும் முன்பே தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி சந்தை ஜின்னா பாலம் அருகே தனியார் உணவகம் ஒன்று இயங்கி வருகிறது.

    இங்கு நேற்று வழக்கம் போல் மதிய உணவு தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது கியாஸ் சிலிண்டர் திடீரென தீ பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. மளமளவென பற்றிய தீ அருகே இருந்த அனைத்து பொருட்கள் மீதும் பரவியுள்ளது.

    இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த, பொதுமக்கள் மற்றும் அருகே இருந்த மற்ற கடைக்காரர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

    உடனடியாக இந்த தீ விபத்து குறித்து வாணியம்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு,

    தீயணைப்பு வீரர்கள் மற்றும் டவுன் போலீசார் அங்கு சென்று தீ பிடித்து எரிந்த சிலிண்டர் வெடிக்கும் முன்பே தீயை அணைத்தனர்.

    இதனால், அப்பகுதியில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    • வாலிபர் சிக்னலை உடைத்ததை கவனிக்காமல் இருந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.
    • நாட்டையே உலுக்கிய ஒடிசா ரெயில் விபத்து நடந்த நேரத்தில் வாலிபர் சிக்னலை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் இன்று காலை ரெயிலுக்காக பயணிகள் ஏராளமானோர் காத்திருந்தனர்.

    அப்போது மது போதையில் தள்ளாடியபடி வாலிபர் ஒருவர் பிளாட்பாரத்தில் நடந்து சென்றார்.

    ரெயில் நிலையத்தில் ஓரத்தில் உள்ள சிக்னல் கம்பம் அருகே சென்று கம்பத்தை மேலும் கீழுமாக பார்த்தார்.

    அங்கிருந்த கற்களை எடுத்து சிக்னல் கம்பத்தில் உள்ள சிவப்பு மற்றும் பச்சை நிற விளக்குகள் மீது எறிந்தார்.

    இதில் விளக்குகள் சேதம் அடைந்தன. மேலும் மின்கம்பத்திலும் கற்கள் பட்டு சத்தம் கேட்டது.

    இதனை கண்ட போலீசார் விரைந்து ஓடி சென்று வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர் திருப்பத்தூர் பிரான் லைனை சேர்ந்த கோகுல் (வயது 30) என்பது தெரியவந்தது. அப்போது கோகுல்ராஜ் கூறுகையில்:-

    திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வருகிறேன். காதலி என்னிடம் பேசவில்லை. எனக்கு காதல் தோல்வி ஏற்பட்டு விட்டது.

    ஆத்திரமடைந்த நான் ரெயில் சிக்னல் கம்பத்தின் மீது கற்கள் வீசினேன் என்றார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலிபர் சிக்னலை உடைத்ததை கவனிக்காமல் இருந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.

    நாட்டையே உலுக்கிய ஒடிசா ரெயில் விபத்து நடந்த நேரத்தில் வாலிபர் சிக்னலை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 14 கொண்டை ஊசி வளைவுகளில் இயற்கை காட்சிகளையும் ரசித்து கொண்டு சுற்றுலா பயணிகள் செல்கின்றனர்
    • படகுகள் காலியாக உள்ளன

    ஜோலார்பேட்டை:

    ஏலகிரி மலையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.

    ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் எப்பொழுதும் ஒரே சம சீதோசன நிலையில் ஏற்படுவதால் தமிழக மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளி நாட்டினர் இருந்து சுற்றுலா பயணி அதிக அளவில் கவர்ந்து வருகின்றன.

    மேலும் மா, பலா, வாழை விளையும் முக்கனிகளில் விளையும் இடமாகவும் ஏலகிரி மலை உள்ளது பொன்னேரி மலையடிவாரத்தில் இருந்து ஏலகிரி மலைக்கு செல்ல 14 கொண்டை ஊசி வளைவுகளில் இயற்கை காட்சிகளையும் ரசித்து கொண்டு சுற்றுலா பயணிகள் செல்கின்றனர்.

    மேலும் ஏலகிரி மலையில் படகு சவாரி, செயற்கை நீர்வீழ்ச்சி, பூங்கா, முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களை கண்டு களித்து செல்கின்றனர் ஏலகிரி மலையில் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான படகு சவாரி இல்லம் ஏலகிரி மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்கின்றன.

    கோடை விடுமுறை முடிந்து மற்றும் வார விடுமுறையான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரும் என எதிர்பார்த்த நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது.

    மேலும் சனிக்கிழமை அன்று வந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை விட நேற்று ஞாயிற்றுக்கிழமை சற்று குறைவாகவே சுற்றுலா பயணிகள் காணப்பட்டனர்.

    இதனால் படகு சவாரி செய்யும் இல்லத்தில் சுற்றுலா பயணிகள் குறைவாக இருந்தனர் படகுகள் காலியாக உள்ளனர்.

    • ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

    திருப்பத்தூர்:

    நாட்றம்பள்ளி அடுத்த திரியாலம் ஊராட்சி டிவி துரைசாமி நகரில் உள்ள ஸ்ரீ பச்சையம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் மூலஸ்தானத்தில் பச்சையம்மன் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பச்சையம்மன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ. டி.கே. ராஜா எம்.எல்.ஏ.க்கள் தேவராஜ், நல்லதம்பி, உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    • தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தான்
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி காதர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பைசல்.

    இவரது மகன் அம்தான் (வயது 6). இவன் நேற்று மாலை வீட்டின் மாடி படிக்கட்டில் ஏறிஇறங்கி விளையாடிக்கொண் டிருந்தான். அப்போது படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே வீட்டில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு வாணியம்பாடி அரசு மருத் துவமனையில் சேர்த்தனர்.

    பிறகு மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட் டான். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தான்.

    இது குறித்து டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சீட்டு பணம் தகராறில் விபரீதம்
    • 2 பேரையும் ஜெயிலில் அடைத்தனர்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கீழ்மிட்டாளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் ( வயது 22).

    இவர் தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெய்பிரகாஷை, மர்ம கும்பல் சிலர் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    தகவல் அறிந்த உமராபாத் போலீசார் விரைந்து வந்து, ஜெயபிரகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை சம்பந்தமாக தந்தை - மகன் உள்பட 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் பெரியவரிகம் பகுதியைச் சேர்ந்த ஷூ கம்பெனி தொழிலாளி மாணிக்கம் (21) மற்றும் அவரது தந்தை ராஜ்குமார் (44) ஆகியோர் சீட்டு பணம் தகராறு காரணமாக ஜெயபிரகாஷை கொலை செய்தது தெரிய வந்தது.

    இதனை அடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    • வைகாசி மாத பிரமோற்சவம் முன்னிட்டு நடந்தது
    • பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் துத்திப்பட்டு ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள பிந்துமாதவர் ஆலய வைகாசி மாத பிரமோற்சவம் முன்னிட்டு இன்று காலை கருட சேவை ஊர்வலம் உற்சவம் நடந்தது.

    இந்த விழாவில் வாணியம்பாடி ஆம்பூர் திருப்பத்தூர் மாவட்டம் பகுதியில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கீழ் மிட்டாளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 22). இவர் தனியார் ஷூ கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு ஜெயபிரகாசை அதே பகுதியில் மர்ம கும்பல் சிலர் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்று விட்டனர்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயபிரகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் கொலை சம்பந்தமாக தந்தை- மகன் உள்பட 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி நடந்தது
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி வட்டம் கொத்தூர் கிராமம் சேர்ந்தவர் முருகன் இவரது மகன் வீரமணி (வயது32) இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

    இவருக்கும் வாணியம்பாடி அடுத்த ஒரு கிராமத்தில் வசித்து வரும் 14 வயதுடைய சிறுமிக்கும் கடந்த 31-ந் தேதி குழந்தை திருமணம் நடைபெறுவதாக தகவல் வந்தது.

    நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் தலைமையில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பாலு, வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி கிராம நிர்வாக அலுவலர் சரவணன் மற்றும் நாட்டறம்பள்ளி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் ஆகியோ ர்களுடன் இணைந்து மணமகன் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி சிறுமி திருமணம் நடந்தது.

    இதனையடுத்து வருவாய் துறையினர் மணமகன் வீரமணி மற்றும் அவரது பெற்றோர்களை நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×