search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The boy was seriously injured"

    • தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தான்
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி காதர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பைசல்.

    இவரது மகன் அம்தான் (வயது 6). இவன் நேற்று மாலை வீட்டின் மாடி படிக்கட்டில் ஏறிஇறங்கி விளையாடிக்கொண் டிருந்தான். அப்போது படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே வீட்டில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு வாணியம்பாடி அரசு மருத் துவமனையில் சேர்த்தனர்.

    பிறகு மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட் டான். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தான்.

    இது குறித்து டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×