search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் கொலை வழக்கில் தந்தை, மகன் கைது
    X

    வாலிபர் கொலை வழக்கில் தந்தை, மகன் கைது

    • சீட்டு பணம் தகராறில் விபரீதம்
    • 2 பேரையும் ஜெயிலில் அடைத்தனர்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கீழ்மிட்டாளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் ( வயது 22).

    இவர் தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெய்பிரகாஷை, மர்ம கும்பல் சிலர் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    தகவல் அறிந்த உமராபாத் போலீசார் விரைந்து வந்து, ஜெயபிரகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை சம்பந்தமாக தந்தை - மகன் உள்பட 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் பெரியவரிகம் பகுதியைச் சேர்ந்த ஷூ கம்பெனி தொழிலாளி மாணிக்கம் (21) மற்றும் அவரது தந்தை ராஜ்குமார் (44) ஆகியோர் சீட்டு பணம் தகராறு காரணமாக ஜெயபிரகாஷை கொலை செய்தது தெரிய வந்தது.

    இதனை அடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×