என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஏரியில் பிணம் கிடப்பதாக போலீசாரை அலைக்கழித்த வாலிபர்
- ஏரி அருகே பெண்ணின் கிழிந்த புடவையும் மற்றும் சிறிய எலும்பு துண்டு கிடந்தது
- துர்நாற்றம் வீசாததால் பிணம் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என உறுதி செய்தனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அருகே டி.வீரப்பள்ளி பகுதியில் உள்ள ஏரி அருகே பெண் பிணம் இருப்பதாக அதே பகுதியை சேர்ந்த வாலிபர் திருவண்ணாமலையில் இருந்து கொண்டு ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு போன் மூலம் தகவல் கொடுத்தார்.தகவலின் பெயரில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி சப் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.
சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதி முழுவதும் தேடி பார்த்தும் எங்கும் பிணம் இருப்பதற்கான அறிகுறி இல்லை துர் நாற்றம் வீசவில்லை இதனால் பிணம் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என போலீசார் உறுதி செய்தனர்.
அதன் பிறகு ஏரி அருகே பெண்ணின் கிழிந்த புடவையும் மற்றும் சிறிய எலும்பு துண்டு கிடந்தது அது மனிதனின் எலும்பு துண்டு இல்லை என தெரிய வந்தது.
இதனால் போலீசார் சுமார் 1 மணி நேரமாக அப்பகுதி முழுவதும் தேடி பார்த்து எங்கும் பிணம் இல்லாததால் திரும்பிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.






