என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிணற்றில் தொழிலாளி பிணம் மீட்பு
- வீட்டில் இருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த சின்ன வரிகம் ரகுநாதபுரத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது 35). கூலி தொழிலாளி. இவர் நேற்று வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் இன்று காலை உமராபாத் பகுதியில் உள்ள கிணற்றில் குமரேசன் பிணம் மிதப்பதாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உமராபாத் போலீசார் குமரேசன் உடலை கிணற்றில் இருந்து மீட்டனர்.
பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து குமரேசன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






