search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்துக்குமார சாமி கோவில் தேரோட்டம்
    X

    முத்துக்குமார சாமி கோவில் தேரோட்டம்

    • அன்னம், ஆடு, மயில், நாகம் ஆகிய வாகனங்களில் சாமி வீதி உலா
    • பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் டவுன் முத்துக்குமாரசாமி கோவிலில் 17-ம் ஆண்டு வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து விநா யகர் பூஜை, வாஸ்து சாந்தி நடைபெற்றது. அன்னம், ஆடு, மயில், நாகம் ஆகிய வாகனங்களில் வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமார சாமி வீதி உலா நடைபெற்றது. திருக்கல்யாணமும் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நடந்தது. கே.எம்.சுப்பிரமணியம், டாக்டர் லீலா சுப்பிரமணியம், ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் எம்.நவீந்திரன், அரசு ஆசிரியர் எஸ். மகேஸ்வரி ரவீந்திரன் ஆகியோர் தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    இதில் என்.வி.எஸ். சங்க தலைவர் எஸ்.ராஜா, துணைத் தலைவர் டி.கே.எஸ். ஐயப்பன் உள்பட ஏராளமான பொதுமக் கள் கலந்து கொண்டு தேர் இழுத்தனர்.

    Next Story
    ×