என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ (வயது 55). கட்டிடம் மேஸ்திரி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை வேலை முடிந்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக நள்ளிரவு பாச்சல் பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயிலில் சிக்கி கொண்டார்.

    இதில் அவரது இடது கை துண்டானது. வலியால் அலறி துடித்து கொண்டிருந்த இளங்கோவின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.

    பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு துண்டான கையுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து துண்டான கையை ஐஸ் பாக்சில் வைத்து சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார் மீது லாரி மோதி வாலிபர் படுகாயம்
    • டிரைவரை கைது செய்ய கோரி போராட்டம்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சி, எல்.மாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தனசிங் மகன் ஆனந்தவேல் (வயது 37). காங்கிரஸ் பிரமுகர்.

    இவர் இன்று காலை தனது காரில் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே சென்றார். அப்போது பின்னால் வந்த லாரி கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் படுகாயம் அடைந்த ஆனந்தவேல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை கைது செய்ய கோரி வேலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சுரேஷ், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் கிருஷ்ணவேணி உள்ளிட்ட கட்சியினர் ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • தற்கொலையா? போலீஸ் விசாரணை
    • 1 வருடமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த கிரி சமுத்திரத்தை சேர்ந்தவர் பிரகாசம் (வயது 48). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி மகேஸ்வரி, மகன்கள் ரஞ்சித், வெங்கடேசன், கவுதமன்.

    இந்த நிலையில் பிரகாசம் கடந்த 1 வருடமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார். நேற்று காலை திடீரென வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இன்று காலை அதே பகுதியில் உள்ள மலை அடிவாரம் அருகே உள்ள வேப்ப மரத்தில் பிரகாசம் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். அந்த வழியாக சென்ற வர்கள் வாணியம்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரகாசத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாசம் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
    • காப்பு காட்டில் விடப்பட்டது

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே புள்ளானேரி கிராமத்தில் வசித்து வரும் கனகராஜ் என்பவரின் வீட்டினுள்ளே திடிரென சத்தத்துடன் பாம்பு நுழைந்தது இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியேறினார்.

    இது குறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் பதுங்கியிருந்த 5 அடி நீளமுள்ள சாரை பாம்பை பிடித்து திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    இதனை பெற்றுக் கொண்ட வனத்துறையினர் அருகில் உள்ள ஏலகிரி மலை காப்பு காட்டில் விட்டனர்.

    இதேபோல் நாட்டறம்பள்ளி அருகே சின்னூர் பகுதியில் வசித்து வரும் சீனு என்பவரின் வீட்டில் பாம்பு நுழைந்தது கண்டு உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ஞான ஒளிவு தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனை பெற்றுக் கொண்ட வனத்துறையினர் அருகில் உள்ள காப்பு காட்டில் விட்டனர்.

    • 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி மீது, பின்னால் சென்ற லாரி மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் பின்னால் சென்ற லாரியின் டிரைவர் ஆரணி இரும்பேடு பகுதியை சேர்ந்த முனிசாமி (வயது 55) உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூர் டவுன் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

    மேலும் லாரியில் சிக்கியிருந்து டிரைவரின் உடலை போராடி மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சாலை விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விவசாயி கைது
    • ஜெயிலில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த அடியத்தூர், தாயப்பன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சாமுடி மகன் ராகுல் (வயது 22).

    கட்டிட தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் மாலை அதே பகுதியை சேர்ந்த மையா என்கிற மகேந்திரன் (61) என்பவர் விவசாய நிலத்தில் உள்ள பம்ப் செட் டிரான்ஸ்பார்மரில் பழுதைசரிசெய்தபோது மின்சாரம் தாக்கி பலியானார்.

    இதைக் கண்ட மகேந்திரன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். ஆத்திரமடைந்த ராகுலின் உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு மகேந்திரன் வீட்டில் பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர்.

    இது குறித்து ராகுலின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக் குப்பதிவு செய்து மகேந்திரனை கைது செய்த னர். அவரை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • சிகிச்சை அளிக்க சென்ற டாக்டர்கள் பெண் மற்றும் குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • மன உளைச்சலில் இருந்த பெண், குழந்தை பிறந்ததும் அதனை கே.ஜி.எப். எடுத்து சென்று விற்பனை செய்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டார்.

    ஆம்பூர்:

    குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் 31 வயது பெண். இவர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் தனது அக்கா வீட்டில் தங்கி வந்தார்.

    அப்போது பெண்ணுக்கும், அவரது அக்கா கணவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டு பழகி வந்தனர்.

    இதில் கர்ப்பமான பெண்ணை அவரது உறவினர்கள் கடந்த 23-ந்தேதி பிரசவத்திற்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு நேற்று முன்தினம் இரவு பெண்ணிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை மற்றும் அவரது தாய் நேற்று காலை திடீரென அங்கிருந்து மாயமாகி விட்டனர்.

    சிகிச்சை அளிக்க சென்ற டாக்டர்கள் பெண் மற்றும் குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து டாக்டர்கள் உமராபாத் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் பெண்ணின் செல்போன் எண் சிக்னலை வைத்து தேடினர்.

    பெண் கர்நாடக மாநிலம் கே.ஜி.எப். பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் கே.ஜி.எப். விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அங்கு குழந்தையின் தாய் குழந்தையை வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் குழந்தையை மீட்டு, பெண் மற்றும் அவரது உறவினரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து போலீசார் கூறியதாவது:-

    ஆஸ்பத்திரியிலிருந்து குழந்தை மற்றும் அவரது தாய் திடீரென காணாமல் போனதால் அவரை யாரேனும் கடத்தி சென்றார்களா என்ற கோணத்தில் விசாரணை தொடங்கினோம்.

    பெண் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனையடுத்து பெண் ஆம்பூர் பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி வந்தார்.

    அக்காவின் கணவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதால் கர்ப்பமானார். பெண்ணை அவரது உறவினர்கள் கேலி கிண்டல் செய்வார்கள் என பயந்தனர்.

    இதனால் மன உளைச்சலில் இருந்த பெண், குழந்தை பிறந்ததும் அதனை கே.ஜி.எப். எடுத்து சென்று விற்பனை செய்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டார்.

    இதுகுறித்து பெண், அவரது உறவினர்களிடம் என் அண்ணனுக்கு பயந்து நான் குழந்தையை வேறொரு நபரிடம் கொடுத்துள்ளேன் எனக்கூறி நாடகமாடி உள்ளார்.

    பெண்ணிடம் தொடர்ந்து விசாரித்ததில் குழந்தையை விற்பனை செய்தது தெரிய வந்தது. குழந்தையை மீட்டு அவரிடம் ஒப்படைத்ததோடு அறிவுரைகள் வழங்கியுள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • போலீசில் புகார்
    • கிளினிக்கை பூட்டி சீல் வைத்தனர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே மிட்டாளம் பகுதியில் மருத்துவ படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு ஒருவர் சிகிச்சை அளிப்பதாக ஆம்பூர் அரசு மருத்துவமனை டாக்டர் உமராபாத் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் அப்பகுதியில் போலீசார் விசா ரணை நடத்தினர்.

    அப்போது மருத்துவ படிப்புமுடிக் காமல் கிளினிக் வைத்து பொதுமக்க ளுக்கு மருத்துவம் பார்த்த வாணியம் பாடியை அடுத்த பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த நாகராஜ் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் கிளினிக்கை பூட்டி சீல் வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்தனர்
    • கடைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனை அதிகரித்திருப்பதாக சமூக ஆர்வ லர்கள் புகார் அளித்து வந்தனர்.

    அதன்பேரில் மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் வெ.கோபாலகிருஷ்ணன் தலைமையில், திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு,துப்புரவு ஆய்வாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் திருப் பத்தூர் பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை குறித்து அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அப்பகுதியில் உள்ள கடைகளில் சுமார் 95 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் வெ.கோபாலகிருஷ் ணன் கூறுகையில் மாவட்டம் முழுவதும் இச்சோதனை தொடர்ந்து நடைபெறும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ கூடாது.

    மீண்டும் இதுபோன்ற தடைசெய்யப்பட்ட பிளாஸ் டிக் பொருள்களை விற்பனை செய்யும் கடைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதோடு, வழக்கு பதியப்படும் என்றார்.

    • வருகிற 3-ந் தேதி நடக்கிறது
    • நுழைவு கட்டணம் ரூ.50 செலுத்தி முன் பதிவு செய்ய வேண்டும்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் மாநில அளவிலான தடகளப் போட்டியில் திருப்பத்தூர் மாவட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்க வருகின்ற செப்டம்பர் 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)திருப்பத்தூர் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பாக மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள போட்டி நடைபெற உள்ளது.

    இதில் 14,16,18 மற்றும் 20 ஆகிய வயது உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஆன தடகள போட்டிகள் நடைபெறும்

    இப்போட்டிகளில் வெற்றி பெறற்றவர்கள் நாமக்கல் மாவட்டதில் செப்டம்பர் 14,15,16,17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள மாநில அளவிலான ஜூனியர் தடகள போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

    எனவே கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் பின் வரும் கைபேசி எண்களில் தொடர்பு கொள்ள கைபேசி எண்கள் 9443966011,9443429456, இமெயில் tdaatirupatturdt@gmail.com பங்கேற்கும் வீரர்கள் நுழைவு கட்டணம் ரூ.50 செலுத்தி முன் பதிவு செய்ய வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

    • வருவாய் துறை அதிகாரிகள் அகற்றினர்
    • அரசு புறம்போக்கு இடம் என்பது உறுதியானது

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த பணந்தோப்பில் வசிப்பவர் தேவேந்திரன் (வயது 44) இவர் கூலி வேலை செய்து வருகிறார்.

    இவர் நேற்று பணந்தோப்பு புறம்போக்கில் சிமெண்டு சீட் கொட்டகை அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக நாட்டறம்பள்ளி தாசில்தார் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தாசில்தார் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி உத்தரவிட்டார் இதனையடுத்து நாட்டறம்பள்ளி வருவாய் அலுவலர் வனிதா தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அந்த இடம் அரசு புறம்போக்கு இடம் என்பது உறுதியானது இதனையடுத்து வருவாய் துறையினர் சிமெண்டு கொட்டகை அமைத்திருந்ததை அகற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மின்சாரத்துறை அதிகாரிகள் உத்தரவு
    • கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றியதால் நடவடிக்கை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் தோல் தொழிற்சாலை இயங்கி வருகிறது.இந்த தொழிற்சாலை கழிவுநீரை முறையாக சுத்திகரிக்காமல் நேரடியாக அருகில் இருந்த நிலத்தில் விடுவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து கழிவு நீரை நிலத்தில் வெளியேற்றிய தோல் தொழிற்சாலையின் மின் இணைப்பை துண்டிக்க மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட பொறியாளர் அதிரடி உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து மின்சாரத்துறை அதிகாரிகள் தொழிற்சாலையின் மின் இணைப்பை துண்டித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    ×