search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
    X

    மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

    • விவசாயி கைது
    • ஜெயிலில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த அடியத்தூர், தாயப்பன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சாமுடி மகன் ராகுல் (வயது 22).

    கட்டிட தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் மாலை அதே பகுதியை சேர்ந்த மையா என்கிற மகேந்திரன் (61) என்பவர் விவசாய நிலத்தில் உள்ள பம்ப் செட் டிரான்ஸ்பார்மரில் பழுதைசரிசெய்தபோது மின்சாரம் தாக்கி பலியானார்.

    இதைக் கண்ட மகேந்திரன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். ஆத்திரமடைந்த ராகுலின் உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு மகேந்திரன் வீட்டில் பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர்.

    இது குறித்து ராகுலின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக் குப்பதிவு செய்து மகேந்திரனை கைது செய்த னர். அவரை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×