என் மலர்
நீங்கள் தேடியது "தடகள போட்டிக்கான தேர்வு"
- வருகிற 3-ந் தேதி நடக்கிறது
- நுழைவு கட்டணம் ரூ.50 செலுத்தி முன் பதிவு செய்ய வேண்டும்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் மாநில அளவிலான தடகளப் போட்டியில் திருப்பத்தூர் மாவட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்க வருகின்ற செப்டம்பர் 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)திருப்பத்தூர் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பாக மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள போட்டி நடைபெற உள்ளது.
இதில் 14,16,18 மற்றும் 20 ஆகிய வயது உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஆன தடகள போட்டிகள் நடைபெறும்
இப்போட்டிகளில் வெற்றி பெறற்றவர்கள் நாமக்கல் மாவட்டதில் செப்டம்பர் 14,15,16,17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள மாநில அளவிலான ஜூனியர் தடகள போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.
எனவே கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் பின் வரும் கைபேசி எண்களில் தொடர்பு கொள்ள கைபேசி எண்கள் 9443966011,9443429456, இமெயில் tdaatirupatturdt@gmail.com பங்கேற்கும் வீரர்கள் நுழைவு கட்டணம் ரூ.50 செலுத்தி முன் பதிவு செய்ய வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.






