என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? பரிசோதனை செய்வது சட்டப்படி குற்றமாகும்
    • திருப்பத்தூர் கலெக்டர் எச்சரிக்கை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியம் சின்னாரம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் ரூ. 29.4 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.

    இந்த புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தார். திருப்பத்தூர் எம்.எல்.ஏ., நல்லதம்பி, ஒன்றிய குழு தலைவர் திருமதி, ஊரக வளர்ச்சி திட்ட முகமை திட்ட இயக்குநர் செல்வ ராசு, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் விஜயகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அப்போது, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறியதாவது:-

    திருப்பத்தூர் மாவட்ட த்தை பொறுத்தவரையில் பாலின வித்தியாசம் அதிக அளவில் உள்ளது. இந்த வித்தியாசம் ஏற்பட்டதற்கு காரணம் சில நபர்கள் பெண் குழந்தையை வேண்டாம் என நினைக்கிறார்கள்.

    கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? பரிசோதனை செய்வது சட்டப்படி குற்றமாகும். யாராவது பரிசோதனை செய்வது தெரிய வந்தால், அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்படும்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை அறவே தவிர்க்க வேண்டும். உறவுகளுக்குள் திரும ணத்தையும் தவிர்க்க வேண்டும். குழந்தை திருமணத்தில் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்களோ, யாரை வைத்து திரு மணத்தை நடத்துகிறீர்களோ அவர்கள் அனைவருக்கும் சட்டப்படி தண்டனை வழங்கப்படும்.

    குழந்தை திருமணத்தில் அவர்களது வீட்டுக்கு சென்று வந்தால், அவர்களது வீட்டில் உணவு அருந்தினால், மொய் மட்டும் வைத்து விட்டு வந்தேன் என்றாலும் தண்டனை உண்டு.

    ஆகவே, குழந்தை திருமணத்தில் கலந்து கொள்வதும் குழந்தை திருமணத்தை சொல்லாமல் இருப்பதும் சட்டப்படி குற்றமாகும். இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வீட்டின் பூட்டை உடைத்து துணிகரம்
    • ஜெயிலில் அடைத்தனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 40), விவசாயி. இவர் கடந்த 17-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு, நிலத்தில் வேலை செய்ய சென்றார்.

    மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. இதில் மர்ம நபர்கள் யாரோ வீடு புகுந்து 8 பவுன் நகை, பணம் மற்றும் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

    இது குறித்து பன்னீர்செல்வம் ஆலங்காயம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் உள்ளிட்டவைகளை திருடிச் சென்ற, பன்னீர்செல்வம் பக்கத்து வீட்டை சேர்ந்த சந்துரு என்பவரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • ரோந்து பணியில் சிக்கினார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு கிராமத்தில் ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்குள்ள பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த, மனோஜ்குமார் (வயது 38) என்பவரை கைது செய்தனர்.

    இது குறித்து உமாரபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலை ஓர பாறை மீது வேன் மோதி 2 பேர் காயம்
    • போலீசார் அப்புறப்படுத்தினர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை, அத்தனாவூர் பகுதியில் உழவர்கள் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க நிறுவனம் உள்ளது.

    இங்கிருந்து 50 கிலோ விதம் 40 மூட்டை சாமையை கொள்முதல் செய்து திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பகுதியில் உள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு கொண்டு செல்ல வேனில் ஏற்றிக்கொண்டு மதியம் ஏலகிரி மலையில் இருந்து வந்து கொண்டிருந்தது.

    ஏலகிரி மலையில் உள்ள 5-வது வளைவு சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரெனவேன் பிரேக் பிடிக்கவில்லை. வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் திருவண்ணா மலை மாவட்டம் பெரும்பா க்கம் பகுதியை சேர்ந்த தனபால் என்பவரின் மகன் திருமலை (28) என்பவர் சாலையின் அருகே உள்ள பாறை மீது மோதி சாதுரியமாக வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

    இதனால் திருமலை மற்றும் கிளினராக இருந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவரின் மகன் ராமு (31) ஆகிய இருவரும் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஏலகிரி மலை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலைகளில் போக்குவரத்து பாதிப்பின்றி விபத்துக்குள்ளான வேனை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஒரு நாளைக்கு 5 காட்சிகள் மட்டுமே நடத்திட அரசு ஆணை
    • கலெக்டர் தகவல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பத்தூர் மாவட்டத்தில் லியோ திரை ப்படத்தினை திரையிடும் திரையரங்குகளில் நாளை முதல் வருகிற 24-ந் தேதி வரை கூடுதலாக சிறப்புக் காட்சி (ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள்) நடத்திடவும், தொடக்க காட்சி காலை 9 மணிக்கும் கடைசி காட்சி அடுத்த நாள் அதிகாலை 1.30 மணிக்கும் முடிவடையும் வகையில் திரையிடுமாறு அரசு ஆணைகள் வெளியிட்டுள்ளன.

    மேற்காணும் விதிமுறைகளை பின்பற்றவும், ஏதேனும் புகார்கள் இருப்பின் பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் கட்டுப்பாட்டு அறை (04179-222211) மற்றும் காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டு அறைக்கு (04179-221103) தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்
    • 60 அடி ஆழத்தில் இறங்கி உடலை மீட்டனர்

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி அடுத்த வெப்பாளம்பட்டியை சேர்ந்தவர் செல்வம் (வயது 50).கட்டிடம் மேஸ்திரி. இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர்.

    முதல் மனைவிக்கு ஒரு மகன், மகளும், 2-வது மனைவிக்கு 2 மகள்களும் உள்ளனர்.

    முதல் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். கடந்த 15-ந் தேதி வெளியே சென்று வருவதாக குடும்பத்தினரிடம் செல்வம் கூறிவிட்டு சென்றார்.

    இன்று காலை அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் கிணற்றின் அருகே சென்று பார்த்தனர். அப்போது செல்வம் பிணமாக மிதந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வாணியம்பாடி தாலுகா போலீசுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 60 அடி ஆழ கிணற்றில் இறங்கி செல்வம் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்கள் லாரியை நிறுத்தினர்
    • போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பணுர் அருகே உள்ள சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் தாறுமாறாக கன்டெய்னர் லாரியை டிரைவர் ஓட்டி சென்றுள்ளார்.

    இதை கண்ட பின்னால் வ ந்த மற்ற வாகனங்களின் டிரைவர்கள் பீதியடைந்து வாகனங்களை நிறுத்தினர்.

    இதனால் அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் நிலவியது.

    இதை பார்த்த பொதுமக்கள் லாரியை நிறுத்தினர். மேலும் டிரைவரை பிடித்து போலீசாரை வரவழைத்து டிரைவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து அம்பலூர் போலீசார் கன்டெய்னர் லாரியை பறிமுதல் செய்தனர். விபத்து ஏற்படும் வகையில் குடி போதையில் கன்டெய்னர் லாரியை ஒட்டிய டிரைவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    • பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்
    • 50 சதவீத மானியமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு உள்நாட்டு மீனவர்களின் மீன்பிடி திறனை மேம்படுத்தவும், அவர்களின் வருவாயினை பெருக்கிட ஏதுவாக, உள்நாட்டு மீனவர்களுக்கு 50 சதவீத மானியத்தில் மீன்பிடி உபகரணங்களான வலைகள் மற்றும் பரிசல்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    உள்நாட்டு நீர்நிலைகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு மீன்பிடி வலைகள் அலகு ஒன்றிற்கான விலை ரூ.20 ஆயிரத்தில் 50 சதவீத மானியமாக ரூ.10 ஆயிரம் மற்றும் மீன்பிடி பரிசல் அலகு ஒன்றிற்கான விலை ரூ.20 ஆயிரத்தில் 50 சதவீத மானியமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

    இத்தி ட்டத்தின் வாயிலாக ஏற்கனவே கடந்த 3 ஆண்டு களுக்குள் வலை மற்றும் பரிசல்கள் பெற்ற வர்கள் விண்ண ப்பிக்க தகுதிய ற்றவர்கள். இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் வாங்கும் வலை மற்றும் பரிசல்கள் உரிய ஆய்வுக்கு பின்னரே மானியத்தொகை பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

    திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் உள்நாட்டு மீனவர்கள், மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் இந்த செய்தி வெளியிட்டு நாளிலிருந்து வெளிவந்த ஒரு வார காலத்திற்குள் வேலுார் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக முகவரி எண் 16, 5-வது மேற்கு குறுக்கு தெரு காந்தி நகர், காட்பாடி, வேலுார்-632006 என்ற முகவரியில் செயல்பட்டு வரும் அலுவலகத்தை தொலைப்பேசி வாயிலாகவோ அல்லது நேரில் சென்று தேவையான விவரங்களை பெற்று பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • குழந்தை இல்லாத ஏக்கத்தில் விபரீதம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த பெத்தூர் பகுதியை சேர்ந்தவர் சாம்குமார், இவரது மனைவி சோனியா (வயது 23) இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

    சோனியாவிற்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் மன உளைச்சலில் காணப்பட்டார்.

    இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி சோனியா வீட்டில் இருந்த மாத்திரைகளை அதிகமாக தின்று தற்கொலைக்கு முயன்றார்.

    இதை கண்ட அவருடைய கணவர் சோனியாவை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நேற்று மாலை சிகிச்சை பலனின்றி சோனியா பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது
    • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;-

    அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்களின்கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வித்தி ட்டத்தின்கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிறபடிப்புகளுக்கு பெற்றோரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    நிகழாண்டில் புதுப்பித்தல் மாணவர்கள் https://ssp.tn.gov.in இணையதள முகவரியில் சென்று ஆதார் எண்ணை அளித்து இணைக்க செய்ய வேண்டும். இதில் ஏதாவது இடர்பாடு ஏற்படும் பட்சத்தில் தங்கள் கல்லூரி யில் உள்ள கல்வி உதவித் தொகை உதவியாளரை ஆதார் எண் நகலுடன் அணுக வேண்டும்.

    கல்வி உதவித்தொகை புதுப்பித்தலுக்கான இணையதளம் நாளை முதல் செயல்படத் தொடங்கும்.

    இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித் தொகை உதவியாளரையோ அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தையோ தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ரூ.10 லட்சத்து 54 ஆயிரத்து 500 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது
    • அதிகாரிகள் ஆய்வு செய்தனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தனி ஊராட்சியாக உள்ளது. இந்த மலை கிராமத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர்.

    இதில் மங்களம் கிராமத்திற்கு செல்லும் சாலை பழுதடைந்து குண்டு, குழியுமாக காணப்பட்டது.

    அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    மக்களின் கோரிக்கையை ஏற்று என்.என்.டி. நிதி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்து 54 ஆயிரத்து 500 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிதாக சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது.

    இதனை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீகிரிவேலன், துணைத் தலைவர் திருமால், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி செந்தில்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • சாலையின் வளைவில் திரும்பியபோது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வெங்கடசமுத்திரம் அடுத்த கோவிந்தாபுரத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 60). ஆம்பூரில் உள்ள கடையில் டெய்லராக வேலை செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு செல்வதற்காக கோவிந்தாபுரம் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார். சாலையின் வளைவில் திரும்பும் போது எதிரே வந்த மாட்டி வண்டியின் மீது எதிர்பாராத விதமாக இவர் ஓட்டி வந்த பைக் மோதியது.

    இதில் அவர் பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மோகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×