என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாதிரி வாக்கு சாவடி மையத்தில் விழிப்புணர்வு
- மாணவர்களிடையே எதிர்கால வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து அறிவுரை
- அதிகாரிகள் உடனிருந்தனர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்கு சாவடி மையத்தில் மாதிரி வாக்கு சாவடி மையம் அமைத்து விழிப்புனர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி கலந்து கொண்டு பள்ளி மாணவர்களிடையே எதிர்கால வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறிவுரைகள் வழங்கினர்.
இதனை தொடர்ந்து திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் பானுமதி படிவம் 6 மற்றும் 7 இன் முக்கியத்துவம் குறித்து அறிவுரைகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார், தேர்தல் பணி வட்டாட்சியர் மண்டல துணை வட்டாட்சியர் நடராஜன், வருவாய் ஆய்வாளர்கள் அன்னலட்சுமி, வனிதா கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் உள்பட வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.
Next Story






