search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிணற்றில் ஆண் பிணம் மீட்பு
    X

    கிணற்றில் ஆண் பிணம் மீட்பு

    • தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்
    • 60 அடி ஆழத்தில் இறங்கி உடலை மீட்டனர்

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி அடுத்த வெப்பாளம்பட்டியை சேர்ந்தவர் செல்வம் (வயது 50).கட்டிடம் மேஸ்திரி. இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர்.

    முதல் மனைவிக்கு ஒரு மகன், மகளும், 2-வது மனைவிக்கு 2 மகள்களும் உள்ளனர்.

    முதல் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். கடந்த 15-ந் தேதி வெளியே சென்று வருவதாக குடும்பத்தினரிடம் செல்வம் கூறிவிட்டு சென்றார்.

    இன்று காலை அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் கிணற்றின் அருகே சென்று பார்த்தனர். அப்போது செல்வம் பிணமாக மிதந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வாணியம்பாடி தாலுகா போலீசுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 60 அடி ஆழ கிணற்றில் இறங்கி செல்வம் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×