என் மலர்tooltip icon

    தேனி

    • தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கிருஷ்ணாநகர் பகுதியில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது.
    • போலீசார் டைல்ஸ் கடை உரிமையாளர் கோகுல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கிருஷ்ணாநகர் பகுதியில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் முன்பாக உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருவர் 8 எண்ணிக்கையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை செலுத்தினார். இது குறித்து வங்கியின் நோடல் அலுவலர் கார்த்திக் போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் வங்கிக்கு செலுத்தப்பட்ட 500 ரூபாய் கள்ள நோட்டுகள் குறித்து வங்கி நிர்வாகத்தினர் கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்தனர். கள்ள நோட்டுகளில் சீரியல் எண்கள் மாற்றப்பட்டுள்ளதை வைத்து வங்கி அதிகாரிகளால் அவை கள்ள நோட்டுகள் என உறுதி செய்யப்பட்டது. இந்த நோட்டுகளை செலுத்தியவர் தேவாரம் மெயின் ரோட்டில் டைல்ஸ் கடை நடத்தி வரும் கோகுல் என தெரிய வந்தது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    இதனையடுத்து போலீசார் டைல்ஸ் கடை உரிமையாளர் கோகுல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் தன்னை தேடி வருவதை அறிந்ததும் கோகுல் தலைமறைவானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கம்பத்தில் ஒரு வீட்டில் கள்ள நோட்டுகள் அச்சடித்த கும்பல் சிக்கினர். தற்போது வங்கி ஏ.டி.எம்.மில் தொழிலதிபரே 500 ரூபாய் கள்ள நோட்டுகளை செலுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 62-ஆம் ஆண்டு அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டிகள் 15-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது.
    • லீக் சுற்று முறையில் நடைபெறும் போட்டியில் அதிக வெற்றிகளை பெறும் 2 அணிகள் நாளை இறுதிப்போட்டியில் பங்கேற்க உள்ளது.

    பெரியகுளம்:

    தேனிமாவட்டம் பெரியகுளத்தில் சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் சிதம்பர சூரியநாராயணன் நினைவு சுழற்கோப்பைக்கான 62-ஆம் ஆண்டு அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டிகள் 15-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது.

    நாக்அவுட் முறையிலான போட்டிகளில் முடிவு பெற்று நேற்று முதல் லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    2-ம் நாள் லீக் சுற்று போட்டியில் முதலில் இந்திய கப்பல் படை லோனாவாலா அணிக்கும் இந்திய விமானப்படை புதுடில்லி அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் இந்திய கப்பல் படை லோனாவாலா அணி 98க்கு 91 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது.

    இதனைத் தொடர்ந்து 2-வதாக லீக் சுற்று போட்டியில் கஸ்டம்ஸ் புனே அணிக்கும், பேங்க் ஆப் பரோடா பெங்களூர் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் 77க்கு 74 என்ற புள்ளிகள் அடிப்படையில் கஸ்டம்ஸ் புனே அணி வெற்றி பெற்றது.

    மேலும் லீக் சுற்று முறையில் நடைபெறும் போட்டியில் அதிக வெற்றிகளை பெறும் 2 அணிகள் நாளை இறுதிப்போட்டியில் பங்கேற்க உள்ளது.

    • கூடலூர் மெயின் பஜார் வீதி, பூக்கடை தெரு , கிழக்கு காய்கறி மார்க்கெட் ஆகிய இடங்களில் கழிவுநீர்களுடன் சேர்ந்து மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
    • ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீர் மற்றும் கழிவுநீர் தங்கு தடை இன்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கூடலூர்:

    கூடலூர் 2-ம் நிலை நகராட்சியாக இயங்கி வருகிறது. இங்கு மொத்தம் 21 வார்டுகள் உள்ளன .கூடலூர் மெயின் பஜார் வீதியில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதில் பெரும் பான்மையான இடங்களில் கழிவுநீர் கால்வாய் களை மறித்து கட்டிடங்களை கட்டி உள்ளனர்.

    இதனால் மழைக்காலங்களில் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் நேற்று மாலை கூடலூர் பகுதியில் பலத்த மழை பெய்தது .இதன் காரணமாக கூடலூர் மெயின் பஜார் வீதி, பூக்கடை தெரு , கிழக்கு காய்கறி மார்க்கெட் ஆகிய இடங்களில் கழிவுநீர்களுடன் சேர்ந்து மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலும் சாக்கடை கால்வாயில் செல்ல வழி இல்லாததால் சாலைகளில் கழிவுநீர் மற்றும் மழை நீர் குளம் போல் தேங்கியது.இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர். மேலும் வாகன ஓட்டிகளும் தவித்தனர். எனவே கூடலூர் நகராட்சி நிர்வாகம் உடனடியாக பஜார் வீதி பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீர் மற்றும் கழிவுநீர் தங்கு தடை இன்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    • சுற்றுச் சூழலுக்கான வாழ்க்கை முறை குறித்த பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியினை கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்து குப்பைகள் அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
    • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் கலெக்டர் ஷஜீவனா மாணவ-மாணவிகளுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.

    தேனி:

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட நிர்வாகம், தேனி-அல்லிநகரம் நகராட்சியின் சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் வளாகத்தில் சுற்றுச் சூழலுக்கான வாழ்க்கை முறை குறித்த பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியினை கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்து குப்பைகள் அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

    மேலும் மாவட்ட கலெக்டர் தலைமையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்த மிஷன் லைப் உறுமொழியினை அரசு அலுவலர்கள், பணியாளர்க ள் எடுத்துக் கொண்டனர். அதனைத்தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் மஞ்சள் பைகளை பொதுமக்கள், தன்னார்வலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கினார்.

    சுற்றுச்சூழல்களில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச் சூழலை மட்டுமன்றி, உயிரினங்களின் வாழ்வு க்கும் அச்சுறு த்தலாகவும் ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றது. நவீன விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக சுற்றுச் சூழல் மாசடைகிறது. சுற்றுச்சூழலை பாதுகாப்பது நாம் அனைவரின் முக்கிய பங்காகும்.

    பிளாஸ்டிக் பயன்பாட்டி னைத் தவிர்க்கும் பொருட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மஞ்சப்பை" இயக்கத்தை கடந்த டிசம்பர் 2021-ல் தொடங்கி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்த்திடும் பொருட்டு, பொது மக்களிடையே தொடர்ந்து "மீண்டும் மஞ்சப்பை" குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் கலெக்டர் ஷஜீவனா கலந்து கொண்டு இறுதி ஆண்டு பயின்ற மாணவ-மாணவிகளுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.

    முகாமில் 15 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு காலிப்பணி யிடங்களுக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்தனர். இறுதி ஆண்டு 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 130 மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    • தேனி கண்ணாத்தாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர், தேனியில் பழக்கடை நடத்தி வருகிறார்.
    • இருவரும் தேனி ரெயில் நிலைய குட்செட் வளாகத்தில் உள்ள குட்டைக்குள் பிணமாக கிடப்பது தெரியவந்தது.

    தேனி:

    தேனி சமதர்மபுரத்தைச் சேர்ந்தவர் சிவராஜ். விவசாயி. அவருடைய மகன் சிவசாந்தன் (வயது 12). இவர், தேனியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு 8-ம் வகுப்பு செல்ல இருந்தார்.

    தேனி கண்ணாத்தாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர், தேனியில் பழக்கடை நடத்தி வருகிறார். அவருடைய மகன் வீரராகவன் (12). இவரும், சிவசாந்தனுடன் 7-ம் வகுப்பு முடித்து 8-ம் வகுப்பு செல்ல இருந்தார்.

    நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து சைக்கிளில் வெளியே சென்றனர். இரவு வரை அவர்கள் வீடு திரும்ப வரவில்லை. இதனால் இருவரின் குடும்பத்தினரும் அவர்களை தேடினர்.

    இந்தநிலையில், இருவரும் தேனி ரெயில் நிலைய குட்செட் வளாகத்தில் உள்ள குட்டைக்குள் பிணமாக கிடப்பது தெரியவந்தது. தீயணைப்பு படையினர் வந்து மாணவர்களின் உடல்களை மீட்டனர்.

    இதுதொடர்பாக தேனி போலீசார் நடத்திய விசாரணையில், வீரராகவன், சிவசாந்தன் ஆகியோர் கொக்கு பிடித்து விளையாடப் போவதாக சிலரிடம் கூறிக் கொண்டு அந்த பகுதிக்கு வந்ததாகவும், கொக்கு பிடிக்க முயன்றபோது தண்ணீருக்குள் தவறி விழுந்து பலியாகி இருக்கலாம் என்றும் தெரியவந்தது.

    • கூட்டத்தில் வண்டல் மண் எடுக்கும் விவசாயிகள் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் மற்றும் தாங்கள் எடுத்துச் செல்லும் வாகனத்தின் எண்களை பதிவு செய்து கொண்டு வண்டல் மண் எடுத்து பயன்பெறலாம்.
    • துறை அலுவலர்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று பதிவு செய்ய இருப்பதால் விவசாயிகள் இதனை பயன்படுத்தி பயனடைய வேண்டும் என தெரிவித்தார்.

    தேனி:

    ஆண்டிபட்டி அருகே வைகை அணை, அரசு தென்னை நாற்று பண்ணையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் முன்னிலையில் நடைபெற்றது.

    கூட்டம் தொடங்குவதற்கு முன்பு வைகை அணை, அரசு தென்னை நாற்றுப் பண்ணையில் தேனி மாவட்ட த்தல் விவசாயி களுக்கு தென்னையில் ஏற்படும் பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து முன்னேற்பாடாக தோட்டக்கலைக் கல்லூரி பேராசிரியர்கள் எடுத்துரை த்தனர்.

    கூட்டத்தில் தேனி மாவட்டத்திற்கு உழவு மானியம் கிடைக்க வழிவகை செய்திடவும், தேங்காய்க்கு உலர்களம் மற்றும் மா விவசாயிகளுக்கு சிப்பம் கட்டும் அறை அமைத்திடவும், கெங்குவார்பட்டியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைத்திடவும், மேகமலை விவசாயிகளுக்கு பட்டா வழங்கிடவும், பெரியகுளம் சோத்து ப்பாறை அணையில் மீன் வளர்ப்பு செய்திடவும், குன்னூர் பகுதியில் உள்ள விவசாயிகள் பயன்பெற ராஜவாய்க்காலில் தடுப்பணை அமைத்து தரவும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உரம் விலை அதிகமாக விற்பனை செய்யப்படுவதாகவும், விவசாயிகளுக்கு தேவை யான உரம் இருப்பு வைத்திட வும், செங்குளத்துப்பட்டி பகுதியில் உழவர் உற்பத்தி யாளர் நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட செயல்படாமல் இருக்கும் தொகுப்பு இயந்திரங்களை மாவட்ட தொழில் மையம் மூலம் சரி செய்திடவும்,

    மேலும் ஆண்டிபட்டி பகுதியில் காளவாசல் மற்றும் கனிம வளங்கள் அதிகளவில் எடுக்கப்படுவ தால் விவசாய நிலம் மற்றும் விளை பொருட்கள் உற்பத்தி குறைவதால் இதனை தடுத்திட புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், முருக மலை பகுதியில் விவசாய நிலங்களுக்கு செல்ல தார்சாலை மற்றும் விவசாய நிலங்களில் செல்லும் கழிவுநீர் வாய்க்காலை மாற்றி அமைத்துதரவும், குப்பைகளை விவசாய நிலங்கள் மற்றும் நீர் நிலைகளில் கொட்டுவதினை தடுத்திட உரிய நட வடிக்கைகள் மேற்கொள்ள வும், ஆண்டிபட்டி கோழி க்காரன் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றி வரைபடத்துடன் புலத்தணிக்கை அறிக்கை வழங்கிட வேண்டும்.

    மேலும் கண்டமனூர், புதுக்குளம் தூர்வார வேண்டும், பஞ்சாயத்து கழிவுகள் நீர்நிலைகளில் கலப்பதினை தடுத்திடவும், ஆண்டிபட்டி பகுதியில் வறட்சி அதிகமாக இருப்ப தால் முல்லை பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் கொண்டுவரவும், தடுப்பணை அமைத்து தரவும் தொடக்க வேளா ண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் முருங்கைக்கு வழங்கப்படும் கடன் தொகையை 6 மாதத்திலிருந்து 1 வருடமாக உயர்த்தி டவும், வெடி வைத்து கனிம வளங்கள் எடுக்கப்படுவதால் போர்வெல் பாதிப்படைவ தாகவும், நிலத்தடி நீர்மட்டம் குறைவதாகவும் இதனை கனிம வளத்துறை அலுவ லர்கள் ஆய்வு செய்து தடுத்திடவும், மொட்ட னூத்து, மயிலாடும்பாறை ஆகிய பகுதிகளில் கண்மா ய்கள் மற்றும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர் சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவ சாயிகள் முன் வைத்தனர்.

    விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அதன் விபரத்தினை சம்மந்தப்பட்ட விவசாயிகளுக்கு தெரிவிக்கு மாறு அனைத்து துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    மேலும் கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்த தாவது:-

    கோட்ட அளவில் விவசாயிகளுக்கு விவசாயி கள் குறைதீர் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. எனவே இந்த கூட்டத்தில் வண்டல் மண் எடுக்கும் விவசாயிகள் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் மற்றும் தாங்கள் எடுத்துச் செல்லும் வாகனத்தின் எண்களை பதிவு செய்து கொண்டு வண்டல் மண் எடுத்து பயன்பெறலாம்.

    விவசாயிகள் தங்களின் பட்டா, சிட்டா போன்ற ஆவணங்களை இணைய தளத்தில் இம்மாத இறுதி க்குள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதால் துறை அலுவலர்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று பதிவு செய்ய இருப்பதால் விவசாயிகள் இதனை பயன்படுத்தி இணையதளத்தில் பதிவு செய்து பயனடைய வேண்டும் என தெரி வித்தார்.

    • இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் கூடலூர் நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.
    • கூடலூர் நகர பகுதியில் உள்ள 21 வார்டுகளுக்கும் தினசரி 52 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது.

    கூடலூர்:

    கம்பம் பள்ளத்தாக்கு பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கடந்த 1955-ம் ஆண்டு கூடலூர் அருகே உள்ள லோயர்கேம்பில் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக அங்கு குடிநீரேற்றுநிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இத் திட்டம் மூலம் கூடலூர், கம்பம் , உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம் ஆகிய பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்களுக்கு வினி யோகம் செய்யப்படுகிறது. கோடை காலங்களில் பெரியாறு அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு குடிநீருக்காக குறைந்த அளவு தண்ணீர் திறக்க ப்படும். அந்த நேரங்களில் கம்பம், கூடலூர் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கம்.

    இந்நிலையில், கோடை காலத்தில் கூடலூர் நகர ப்பகுதிகளில் தடையில்லா குடிநீர் வழங்க கூடலூர் நகராட்சி உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்பு நிதி மற்றும் இயக்குதலும் பராமரித்தலும் திட்டத்தின் கீழ் ரூ.13 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செயல்ப டுத்தப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளது.

    இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் கூடலூர் நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி நேற்று கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    குடிநீர்வடிகால்வாரிய உதவிபொறியாளர் ராஜேஷ், கூடலூர் நகர்மன்ற தலைவர் பத்மாவதி லோகன் துரை, நகராட்சி ஆணையர் காஞ்சனா, பொறியாளர் வரலட்சுமி ஆகியோரிடம் பொறுப்புக்கான ஆணையை வழங்கினார். இந் நிகழ்ச்சியில் கூடலூர் தி.மு.க நகரசெயலாளர் லோகந்துரை, நகராட்சி மேலாளர் ஜெயந்தி, மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இத்திட்டம் மூலம் கூடலூர் நகர பகுதியில் உள்ள 21 வார்டுகளுக்கும் தினசரி 52 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது. இதனால் கூடலூர் நகர பகுதி மக்களுக்கு தடையில்லா குடிநீர் வழங்கப்படும் என அதிகாரகள் தெரிவித்தனர்.

    • பாபாஜி காலனியை சேர்ந்த நாகராஜ் என்பவர் தனது வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது தெரிய வந்தது.
    • நாகராஜை கைது செய்து கள்ளச்சாராய விற்பனையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையான குமுளி அருகே வெள்ளாரம் குன்று பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக வண்டிப்பெரியாறு, கலால்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி இன்ஸ்பெக்டர் அனீஸ் தலைமையில் போதை தடுப்பு அலுவலர்கள் பென்னிஜோசப், ராஜ்குமார், கலால் அலுவலர்கள் அனீஸ், சசிகலா, சிபின் ஆகியோர் அடங்கிய குழுவினர் அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது பாபாஜி காலனியை சேர்ந்த நாகராஜ் என்பவர் தனது வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரது வீட்டில் நடத்திய சோதனையில் சமையல் அறையில் இருந்து 2 பிளாஸ்டிக் குடங்களில் வைக்கப்பட்டிருந்த 50 லிட்டர் சாராய ஊறல், ஒரு லிட்டர் சாராயம் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்கான உபகரணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் நாகராஜை கைது செய்து கள்ளச்சாராய விற்பனையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    • க.விலக்கு பகுதியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள் சரியாக பணிக்கு வருவதில்லை என புகார் எழுந்தது.
    • பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் ஒப்புதலுடன் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    ஆண்டிபட்டி:

    தேனி அருகே க.விலக்கு பகுதியில் அரசு மருத்துவ க்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த ஆஸ்பத்தி ரிக்கு தேனி மாவட்டம் மட்டுமல்லாது கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 32 பேர் தலைகாய சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களை பரிசோதித்து சிகிச்சை அளிக்க நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணத்துவம் பெற்ற டாக்டர்கள் கல்லூரி ஆஸ்பத்திரியில் தங்கியிருக்க வேண்டும்.

    ஆனால் 2018-ம் ஆண்டு பணியில் சேர்ந்த டாக்டர் சந்தானகிருஷ்ணன் தேனி மருத்துவக்கல்லூரிக்கு வருவதில்லை. வருகை பதிவிற்கான பயோமெட்ரிக் பதிவு செய்வதும் இல்லை என புகார் எழுந்தது. விபத்தில் பாதிக்கப்பட்டு தலைக்காய சிகிச்சைக்காக மதுரைக்கு பரிந்துரை செய்யப்படுபவர்களில் பலர் வழியிலேயே உயிரி ழக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே அவர் மீது நட வடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து ஆஸ்பத்திரி மருத்துவத்துறை அதிகாரி கள் கூறுகையில்,

    டாக்டர் சந்தான கிருஷ்ணன் தேனி மருத்துவ க்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு முறையாக பணிக்கு வருவதில்லை என பலமுறை பொதுமக்கள் புகார் அளித்தனர். இதுகுறித்து விளக்க குறிப்பாணை அனுப்பப்பட்டது. ஆனால் இதற்கு முறையான பதிலை அளிக்காத அவர் நேரிலும் விளக்கம் அளிக்கவில்லை. இதனால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு பரிந்துரை செய்யப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மேலும் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதால் டாக்டர் சந்தானகிருஷ்ணன் மீது பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் ஒப்புதலுடன் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் முறையாக பணியாற்றாததால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.எனவே டாக்டர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றனர்.

    • கணவருடைய சகோதரர் அடிக்கடி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
    • புகாரின்பேரில் கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள குமணன்ெதாழு வெம்பூர் மேற்குதெருவை சேர்ந்த மணீஸ்வரன் மனைவி மேகலா(34). இவர்கள் கடந்த 2011-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    இவர்களுக்கு 2 பெண்குழந்தைகள் வாய்பேச இயலாத நிலையில் உள்ளனர். இந்நிலையில் கணவர் மணீஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து வரதட்சணை கேட்டு மேகலாவை கொடுமைப்படுத்தி வந்தனர்.

    வரதட்சணை வாங்கி வராததால் அடித்து உதைத்து குழந்தைகளை தங்கள் வசம் வைத்துக்கொண்டனர். மேலும் மணீஸ்வரனின் சகோதரர் கோவிந்தசாமி அடிக்கடி மேகலாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    இதுகுறித்து ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மேகலா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வரதட்சணை கொடுமைப்படுத்திய கணவர் மணீஸ்வரன், அவரது சகோதரர் கோவிந்தசாமி, தந்தை வேலுச்சாமி, தாய் எட்டியம்மாள், உறவினர்கள் மகேஸ்வரி, கவிதா ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வருசநாடு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக தார் சாலை அதிக அளவில் சேதம் அடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்றதாக மாறிவிட்டது.
    • வருசநாடு வாலிப்பாறை இடையே விடுபட்ட பகுதிகளில் புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு முதல் வாலிப்பாறை வரை தார் சாலை அமைந்துள்ளது. இதில் குறிப்பிட்ட அளவிலான தார் சாலை பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே அந்த பகுதிகளில் புதிய தார் சாலை அமைக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.

    இதனால் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் வனத்துறையினர் குறிப்பிட்ட அளவிலான பகுதிக்கு மட்டும் தார் சாலை அமைக்க தற்போது வரை தொடர்ந்து அனுமதி மறுத்து வருகின்றனர். இதனால் அந்த பகுதிகளில் மட்டும் தார் சாலை அதிக அளவில் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக மாறியது.

    இதற்கிடையே கடந்த வாரம் வருசநாடு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக தார் சாலை அதிக அளவில் சேதம் அடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்றதாக மாறிவிட்டது. எனவே இரவு நேரங்களில் பைக் விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் தார் சாலை சேதமடைந்த பகுதியில் ஆட்டோ, மினி வேன் உள்ளிட்ட சிறிய அளவிலான வாகனங்கள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

    குறிப்பாக வருசநாடு முருக்கோடை இடையே சாலை அதிக அளவில் சேதமடைந்து விட்டதால் ஆட்டோக்களில் பொதுமக்களை ஏற்றி செல்ல முடியவில்லை. இதனால் அந்த பகுதியில் பொதுமக்களை இறக்கிவிட்டு குறிப்பிட்ட தொலைவு நடந்த சென்று மீண்டும் ஆட்டோக்களில் ஏற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வனத்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருசநாடு வாலிப்பாறை இடையே விடுபட்ட பகுதிகளில் புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஊனத்தை கேலி செய்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளி வாலிபரை சரமாரியாக வெட்டியதால் கைது செய்யப்பட்டார்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகே சில்ல மரத்துப்பட்டியை சேர்ந்தவர் மோகன்(56). இவர் மாற்றுத்திறனாளி யாவார். அதேபகுதியை சேர்ந்த ரமேஷ்(39) என்ற வாலிபர் மோகனின் உடல் ஊனத்தை கேலி, கிண்டல் செய்து வந்தார். இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் மோகன் அவரது உறவினரை தகாத வார்த்தைகளால் திட்டி கொண்டிருந்தார். மோகன் தன்னைத்தான் திட்டுவதாக நினைத்து அருகில் இருந்த அரிவாளை எடுத்து ரமேசை சரமாரியாக வெட்டி ச்சாய்த்தார்.

    இதில் படு காயமடைந்த ரமேஷ் போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×