என் மலர்tooltip icon

    தேனி

    • கூலித்தொழிலாளி, ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர் உள்பட 6 பேர் மாயமாகினர்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே பூதிப்புர த்தை சேர்ந்தவர் ராம்தாஸ் (வயது63). கூலித்தொழி லாளி. சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார்.

    இது குறித்து பழனிசெட்டி பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து முதியவரை தேடி வருகின்ற னர்.

    பழனிசெட்டிபட்டி அய்யப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி புவனேஸ்வரி (34). மகள்கள் பவித்ரா (13), கிருபா (12), சம்பவத்தன்று ரவிக்குமார் வேலைக்கு சென்று விட்டார். மாலை வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த மனைவி மற்றும் மகள்கள் மாயமாகி இருந்தனர். செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்ப ட்டிருந்தது. அக்கம் பக்கத்தில் விசாரித்தும் கிடைக்காததால் பழனி செட்டிபட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    பெரியகுளம் அருகே கும்பக்கரை பிரிவு பகுதியை சேர்ந்தவர் அழகுபாண்டி மனைவி கோகிலா (21). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட னர்.

    இந்த நிலையில் கோகிலா திடீரென மாயமானார். அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்கா ததால் பெரியகுளம்

    தேவதானப்பட்டியை சேர்ந்தவர் வீராச்சாமி (55). இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்றார். இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. பள்ளியில் விசாரித்தபோது விடுமுறை என்று கூறி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி லட்சுமி பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தேவதான ப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீராச்சாமியை தேடி வருகின்றனர்.

    • இருட்டில் மறைந்திருந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க முகமூடி அணிந்த வாலிபர் திடீரென தான் கையில் வைத்திருந்த கயிறால் அவரை கழுத்தை இறுக்கினார்.
    • கொள்ளையடிக்கும் நோக்கில் தனது வீட்டில் புகுந்த கொள்ளையன் தான் சுதாரித்துவிட்டதால் தன்னை தாக்கியதாகவும், அவரை பிடித்து கைது செய்யும்படியும் புகாரில் தெரிவித்திருந்தார்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகில் உள்ள முருக்கோடை கிராமத்தை சேர்ந்தவர் ராமர்(60). அ.தி.மு.க பிரமுகரான இவர் க.மயிலாடும்பாறை முன்னாள் யூனியன் சேர்மனாவார். சம்பவத்தன்று இரவு இவர் தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் நாய்குரைக்கும் சத்தம் கேட்கவே எழுந்து வந்தார்.

    அப்போது வீட்டின் கதவு திறந்துகிடந்தது. இதனால் அதிர்ச்சிஅடைந்து அங்கே சென்று பார்த்தார். அப்போது இருட்டில் மறைந்திருந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க முகமூடி அணிந்த வாலிபர் திடீரென தான் கையில் வைத்திருந்த கயிறால் அவரை கழுத்தை இறுக்கினார்.

    இதில் ராமர் விடுபட்டு கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். இதனையடுத்து அந்த வாலிபர் தான் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பிஓடிவிட்டார். இதுகுறித்து வருசநாடு போலீசில் ராமர் புகார் அளித்தார்.

    கொள்ளையடிக்கும் நோக்கில் தனது வீட்டில் புகுந்த கொள்ளையன் தான் சுதாரித்துவிட்டதால் தன்னை தாக்கியதாகவும், அவரை பிடித்து கைது செய்யும்படியும் புகாரில் தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து முகமூடி கொள்ளையனை தேடி வருகின்றனர்.

    • பன்னாட்டு நிறுவனத்துடன் சிறந்த பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு பன்னாட்டு நிறுவனங்களின் மென்பொருள் கட்டமைப்புக்களுடன் கூடிய பயிற்சியை மாணவர்களுக்கு அளித்து வருகிறது.
    • பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் முன்னனி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்ற 81 மாணவ-மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் நிர்வாகிகள் வழங்கினார்கள்.

    தேனி:

    தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். உறவின்முறை துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி செயலாளர் ராஜ்குமார் வரவேற்றார். கல்லூரி செயலாளர் மகேஸ்வரன் வாழ்த்துரை வழங்கினார்.

    விழாவில் கல்லூரி முதல்வர் மதளைசுந்தரம் பேசுகையில், மாணவர்களிடையே வேலைவாய்ப்பு பெறுவது, கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் பன்னாட்டு நிறுவனத்துடன் சிறந்த பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு பன்னாட்டு நிறுவனங்களின் மென்பொருள் கட்டமைப்புக்களுடன் கூடிய பயிற்சியை மாணவர்களுக்கு அளித்து வருகிறது.

    புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலமாக இன்டொன்ஷிப் மற்றும் வேலைவாய்ப்பு பெற ஆக்கபூர்வமான முறையில் கல்லூரியில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை பேராசிரியர்கள் அனைத்து துறை மாணவர்களும் வேலைவாய்ப்பு பெறுவதற்கு திறனறியும் தேர்வு, குரூப் டிஸ்கசன், எழுத்து தேர்வு, நேர்முக தேர்வை தயக்கமின்றி அணுகுவதற்கும், ஆங்கிலத்தில் பேசுவதற்கான பயிற்சிகள் போன்றவற்றை மாணவர்களுக்கு சிறந்த முறையில் அளிக்கப்பட்டு ஆண்டு தோறும் 80 சதவீதம் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்கிறோம் என்று பேசினார்.

    விழாவின் போது கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் கார்த்திகேயன் வேலைவாய்ப்பு துறையின் அறிக்கையினை சமர்பித்தார். மேலும் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் முன்னனி நிறுவனங்களான ஜோஹோ, டேட்டா பேட்டன்ஸ், டி.சி.எஸ், நியாமோ, வெப்ரக்ஸ், ஜோபின்-ஜிஸ்மி. ப்ளிப்ஸ். எஸ்.எம்.ஐ. பின்னக்கல், டீம் கம்யூட்டர்ஸ், டைமண்ட்க்ளாஸ். சுயர்சாப்ட் சொலியூசன்ஸ். ஸ்பைகா டெக், மெலன் வென்சர்ஸ், அப்போலா, டி.என்.டி. ஐ.ஜே.எல், இமெர்ஜ் டெக். க்யூப்-ஸ்கொயர், மேஜிக் ரிச். எட்ரிக்கல் இன்ஜினியரிங், எம்ப்ளையன் எலக்ட்ரா இ.வி. கோ-ஸ்கில், டெஸோமெட்ரிக். நார்டில். எம்.எஸ் சாப்ட்வேர் சொலியூசன்ஸ், கம்யூட்ரா போன்ற நிறுவனங்களில் 81 மாணவ-மாணவிகள் வேலைவாய்ப்பை பெற்றனர். கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின்

    பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் முன்னனி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்ற 81 மாணவ-மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் நிர்வாகிகள் வழங்கினார்கள்.

    விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், கல்லூரி துணை முதல்வர் மாதவன். வேலைவாய்ப்பு பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி, பேராசிரியர்கள், அனைத்து கல்வி நிறுவனங்களின் செயலாளர்கள், இணைச்செயலாளர்கள், கல்வி நிறுவனங்களின் கமிட்டி உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி இணைச்செயலாளர் நவீன்ராம் நன்றி கூறினார்.

    • படுகாயம் அடைந்தவரை பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் தென்கரையை சேர்ந்தவர் ஆசிக்அகமது (வயது26). இவருடைய மனைவி ஆப்ரின் (25). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மாமனார் வீட்டில் தங்கி கேட்டரிங் சர்வீசில் சமையல் வேலை செய்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டு மாடியில் பாத்திரங்களை வைக்க சென்றபோது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த ஆசிக்அகமதுவை பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து தென்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • தமிழகத்தைச் சார்ந்த 3093 மாணவ - மாணவியர்க ளுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு ள்ளது.
    • 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையிலும், 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்க ப்படும்.

    தேனி:

    மத்திய அரசின் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் தகுதியான மாணவர்கள் குறிப்பிட்ட காலக்கெடு விற்குள் விண்ணப்பித்து எழுத்துத் தேர்வின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெற்று பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்து ள்ளார்.

    2023-24 ஆம் ஆண்டின் நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர், பழங்குடியினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவி த்தொகை திட்டம் அறிவிக்க ப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சார்ந்த 3093 மாணவ - மாணவியர்க ளுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு ள்ளது.

    இத்திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் விண்ண ப்பதாரர்களின் (மாணவ/ மாணவியர்கள்) பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்துக்குள் இருத்தல் வேண்டும். 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையிலும், 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்க ப்படும். மாணவர்கள் நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இத்தேர்விற்கு 10.08.2023 க்குள் இணைய தள முகவரியில் விண்ண ப்பிக்க வேண்டும். விண்ண ப்பத்தி ல் திருத்தம் மேற்கொள்ள 12.08.2023 முதல் 16.08.2023 வரை கால அவகாசம் வழங்கப்ப டும்.

    எழுத்துத் தேர்வு 29.09.2023 அன்று நடை பெறும். விண்ணப்பத்துடன் கைப்பேசி எண், ஆதார் எண், ஆதார் இணைக்க ப்பட்ட வங்கிக் கணக்கு எண், வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்க ளுக்கு இணையதள முகவரி யை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ஷஜீ வனா, தெரிவித்துள்ளார்.

    • உத்தமபாளையம் ஏ.எஸ்.பி மதுகுமாரி இரவு நேர ரோந்து பணிக்காக அபுகனி டிரைவராக சென்றார்.
    • கூடலூர் தெற்கு போலீசில் பணிபுரிந்த கிட்டுராஜன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பணியின் போதே உயிரிழந்தார்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் அபுகனி(40). இவரது மனைவி ஷகிலாபேகம். இவர்களுக்கு ஒரு மகள், 3 மகன்கள் உள்ளனர். ஷகிலாபேகம் குமுளிபகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    அபுகனி கூடலூர் தெற்கு போலீசில் ஏட்டாக வேலைபார்த்து வந்தார். இதனால் அவர்கள் குடும்பத்துடன் குமுளி அருகே உள்ள தாமரைக்கண்டம் பகுதியில் வசித்து வந்தனர்.

    இந்தநிலையில் உத்தமபாளையம் ஏ.எஸ்.பி மதுகுமாரி இரவு நேர ரோந்து பணிக்காக அபுகனி டிரைவராக சென்றார். நள்ளிரவு 12 மணியளவில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற போலீசார் அவரை மீட்டு உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    கூடலூர் தெற்கு போலீசில் பணிபுரிந்த கிட்டுராஜன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பணியின் போதே உயிரிழந்தார். இதேபோல் பிரபு என்ற போலீஸ்காரர் 2 மாதத்திற்கு முன்பு உயிரிழந்தார். தொடர்ந்து 3 மரணங்கள் ஏற்பட்டுள்ளதால் போலீசார் பீதி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், பொதுவாகவே போலீசாருக்கு பணிச்சுமை அதிகம். சில இடங்களில் பணியிடங்கள் காலியாக உள்ளது நிரப்பபடவில்லை. போலீசார் பற்றாக்குறையால் அவர்களுக்கு மேலும் பணிச்சுமை ஏற்படுகிறது. இதன்காரணமாக மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். பெரும்பாலும் விடுமுறை எடுக்க முடியாததால் குடும்பத்திலும் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.

    இதன் காரணமாகவே உடல்நலக்குறைவு ஏற்பட்டு திடீர் மரணங்கள் நிகழ்கிறது. எனவே போலீசாருக்கு மனநல ஆலோசனை மற்றும் போதிய அளவு ஓய்வு வழங்கவேண்டும் என்றனர்.

    • சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானார்.
    • புகாரின்பேரில் மாயமான கல்லூரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி ஸ்ரீராம் நகர் மேற்கு தெருவைச் சேர்ந்த முருகன் மகள் கனிமொழி (வயது 19). தந்தை இறந்து விட்ட நிலையில் குணா என்பவரது பராமரிப்பில் இருந்து வந்தார். இவர் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானார். பல இடங்க ளில் தேடியும் கிடைக்காத தால் தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    • நகையை பறிமுதல் செய்த போலீசார் அதனை சுருளியம்மாளிடம் ஒப்படைத்தனர்.
    • ஒரு பெண்ணே மூதாட்டியின் மேல் மிளகாய் பொடியை தூவி நகை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் மணிநகரைச் சேர்ந்தவர் முனியாண்டி மனைவி சுருளியம்மாள் (வயது 65). இவர் இன்று காலை தனது வீட்டில் இருந்து அருகே உள்ள தெருவுக்கு ரைஸ்மில்லில் மாவு அரைக்க சென்று கொண்டு இருந்தார். அவரை பின் தொடர்ந்து ஒரு பெண் வந்தார். அதனை கவனிக்காத சுருளியம்மாள் ரைஸ்மில் நோக்கி சென்று கொண்டு இருந்தபோது திடீரென அவர் மீது மிளகாய் பொடியை தூவி அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன தங்க செயினை பறித்துக் கொண்டு ஓட முயன்றார். இதனால் சுருளியம்மாள் கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த பெண்ணை பிடித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் விசாரணையில் நகையை பறித்தது மந்தை குளத்தைச் சேர்ந்த முருகன் மனைவி ஜோதி (39) என தெரிய வந்தது. இதனையடுத்து நகையை பறிமுதல் செய்த போலீசார் அதனை சுருளியம்மாளிடம் ஒப்படைத்தனர். பட்ட பகலில் பெண்ணிடம் நகை பறித்து தப்பி ஓட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கம்பம் நகரில் பொதுவாக போதை ஆசாமிகள் மற்றும் வழிப்பறி திருடர்கள் அதிகரித்து வந்த நிலையில் தற்போது ஒரு பெண்ணே மூதாட்டியின் மேல் மிளகாய் பொடியை தூவி நகை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • பலத்த காற்று வீசியதால் தாக்கு பிடிக்க முடியால் மரங்கள் நெடுஞ்சாலையில் முறிந்து விழுந்தன.
    • சின்னமனூர் வனச்சரகத்தினர் ஹைவேவிஸ் மலைப் பகுதியில் செல்லும் நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சி அமைந்துள்ளது.

    இங்கு மேகமலை, மணலாறு, வெண்ணியாறு, மகாராஜா மெட்டு உள்ளிட்ட 7 மலை கிராமங்கள் உள்ளன. இப்பகுதிக்கு சின்னமனூரிலிருந்து மகாராஜா மெட்டு வரை 52 கி.மீ நெடுஞ்சாலை செல்கிறது.

    இந்நிலையில் பலத்த காற்று வீசியதால் தாக்கு பிடிக்க முடியால் மரங்கள் நெடுஞ்சாலையில் முறிந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    எனவே சின்னமனூர் வனச்சரகத்தினர் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் செல்லும் நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக விழுந்தியுள்ள மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பள்ளி கட்டிட சீரமைப்பு மற்றும் மராமத்து பணிகளுக்காக பள்ளியின் சுற்றுச்சுவர் அகற்றப்பட்டு தற்போது மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது.
    • அங்கன்வாடி மைய கட்டிட வளாக முன்புறமும் மாலை மற்றும் இரவு வேலைகளில் மதுபான பிரியர்களின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகின்றது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி குப்புநாயக்கன்பட்டி அருகே அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இதன் அருகில் அங்கன்வாடி மையம் மற்றும் கோவில் அமைந்துள்ளது. இந்தத் தொடக்கப் பள்ளியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி கட்டிட சீரமைப்பு மற்றும் மராமத்து பணிகளுக்காக பள்ளியின் சுற்றுச்சுவர் அகற்றப்பட்டு தற்போது மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இப்பகுதியில் உள்ள 2 மதுபான கடைகளில் மது வாங்கிக் கொண்டு இரவு வேளைகளில் மதுபான பிரியர்கள் இந்தப் பள்ளி வளாகத்திற்குள் அமர்ந்து மது அருந்தி விட்டு அங்கேயே குடிபோதையில் தங்கி விடுகின்றனர்.

    மேலும் குடித்துவிட்டு காலி பாட்டில்களை பள்ளி வளாகத்திற்கு உடைத்து செல்வதால் பள்ளிக்கு வரும் சிறுவர் சிறுமிகள் பாதிக்கப்படுகின்றனர்.

    மேலும் அருகில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிட வளாக முன்புறமும் மாலை மற்றும் இரவு வேலைகளில் மதுபான பிரியர்களின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகின்றது.

    இவர்கள் குடித்துவிட்டு உடைத்துச் செல்லும் கண்ணாடி பாட்டில்களால் அங்கன்வாடிக்கு வரும் பச்சிளம் குழந்தைகள் காலில் கண்ணாடி துண்டுகள் குத்தி காயம் ஏற்பட்டு வருகிறது.

    இதுகுறித்து பலமுறை போலீசாரிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வீட்டில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. சற்றும் எதிர்பாராத நிலையில் தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது.
    • தீ விபத்து குறித்து பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட தென்கரையில் நல்லமணி என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. சற்றும் எதிர்பாராத நிலையில் தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது. இதனால் வீட்டில் இருந்த நல்லமணி மற்றும் அவரது குடும்பத்தினர் அலறிய டித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர்.

    மேலும் அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இது குறித்து பெரியகுளம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தீயணைப்பு வாகனம் வருவதற்கு முன்பாக பெரும்பாலும் பொதுமக்களே தீயை அணைத்து கட்டுப்படுத்தி னர்.

    மேலும் தீ பற்றிய உடன் அங்கு இருந்த மின்வாரிய பணியாளர்கள் மின்சார த்தை துண்டித்தனர்.

    இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த ஏராளமான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. மேலும் இந்த தீ விபத்து குறித்து பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பேரூராட்சியின் 7 ரேஷன் கடைகள் மூலம் பணியாளர்களைக் கொண்டு 7 கிராமத்தில் உள்ள பயனா ளர்களுக்கு நேரடியாக விண்ணப்பங்கள் வழங்க ப்பட்டது.
    • சிவில் சப்ளை அதிகாரிகளும், பஞ்சாயத்து யூனியன் பணியாளர்கள் மூலம் முகாமில் விண்ண ப்பங்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

    சின்னமனூர்:

    உத்தமபாளையம் வருவாய் வட்டத்தின் கீழ் உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள ஹைவே விஸ் பேரூராட்சியில் மேக மலை, மணலாறு, அப்பர் மணலாறு, வெண்ணியாறு, மகாராஜா ெமட்டு, இரவங்கலாறு உள்ளிட்ட 7 மலை கிராமங்கள் உள்ளன. இதில் 895 குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர்.

    தமிழக அரசு அறிவித்து ள்ள மகளிர் உரிமை த்தொகை பெறுவதற்கான திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக தேனி மாவட்ட த்தில் 24 -7 -2023 முதல் 4-8 -2023 வரை முகாம்கள் நடத்தப்படுகிறது.

    அதன் அடிப்படையில் உத்தமபாளையம் வருவாய் வட்டத்தின் கீழ் வரும் ஹைவேவிஸ் பேரூராட்சி உள்ளடக்கிய 7 கிராமங்க ளுக்கும் முதற்கட்ட முகா ம்கள் பேரூராட்சி அலுவலக த்தில் ஒரு இடத்தில் மட்டும் நடைபெறுதாக இருந்தது. பேரூராட்சியில் உள்ள ஏழு கிராமங்களும் 10 முதல் 15 கி.மீ. தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    மேலும் வாகன போக்கு வரத்தும் குறைவாகவே உள்ளது. இதனைத் ெதாட ர்ந்து இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் மற்றும் தி.மு.க. பேரூர்செயலாளர் கணேசன் ஆகியோர் மாவட்ட கலெக்டர் கவன த்துக்கு கொண்டு சென்ற னர். கலெக்டர் உத்தரவுப்படி தகுதியுள்ள அனைவரும் பயன்பெறும் பொருட்டு மகளிர் உரிமைத் தொகை முகாம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, பேரூராட்சியின் 7 ரேஷன் கடைகள் மூலம் பணியா ளர்களைக் கொண்டு 7 கிராமத்தில் உள்ள பயனா ளர்களுக்கு நேரடியாக விண்ணப்பங்கள் வழங்க ப்பட்டது.

    மேலும் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டு அந்தந்த பகுதியில் உள்ள மக்களுக்கு விண்ணப்ப பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

    உத்தமபாளையம் வட்ட வழங்கல் அலுவலர் பாண்டி மற்றும் சிவில் சப்ளை அதிகாரிகளும், பஞ்சாயத்து யூனியன் பணியாளர்கள் மூலம் முகாமில் விண்ண ப்பங்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

    ×