search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடலூரில் ரோந்து பணியில் இருந்த ஏட்டு திடீர் மரணம்- தொடர் மரணங்களால் போலீசார் பீதி
    X

    கூடலூரில் ரோந்து பணியில் இருந்த ஏட்டு திடீர் மரணம்- தொடர் மரணங்களால் போலீசார் பீதி

    • உத்தமபாளையம் ஏ.எஸ்.பி மதுகுமாரி இரவு நேர ரோந்து பணிக்காக அபுகனி டிரைவராக சென்றார்.
    • கூடலூர் தெற்கு போலீசில் பணிபுரிந்த கிட்டுராஜன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பணியின் போதே உயிரிழந்தார்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் அபுகனி(40). இவரது மனைவி ஷகிலாபேகம். இவர்களுக்கு ஒரு மகள், 3 மகன்கள் உள்ளனர். ஷகிலாபேகம் குமுளிபகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    அபுகனி கூடலூர் தெற்கு போலீசில் ஏட்டாக வேலைபார்த்து வந்தார். இதனால் அவர்கள் குடும்பத்துடன் குமுளி அருகே உள்ள தாமரைக்கண்டம் பகுதியில் வசித்து வந்தனர்.

    இந்தநிலையில் உத்தமபாளையம் ஏ.எஸ்.பி மதுகுமாரி இரவு நேர ரோந்து பணிக்காக அபுகனி டிரைவராக சென்றார். நள்ளிரவு 12 மணியளவில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற போலீசார் அவரை மீட்டு உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    கூடலூர் தெற்கு போலீசில் பணிபுரிந்த கிட்டுராஜன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பணியின் போதே உயிரிழந்தார். இதேபோல் பிரபு என்ற போலீஸ்காரர் 2 மாதத்திற்கு முன்பு உயிரிழந்தார். தொடர்ந்து 3 மரணங்கள் ஏற்பட்டுள்ளதால் போலீசார் பீதி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், பொதுவாகவே போலீசாருக்கு பணிச்சுமை அதிகம். சில இடங்களில் பணியிடங்கள் காலியாக உள்ளது நிரப்பபடவில்லை. போலீசார் பற்றாக்குறையால் அவர்களுக்கு மேலும் பணிச்சுமை ஏற்படுகிறது. இதன்காரணமாக மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். பெரும்பாலும் விடுமுறை எடுக்க முடியாததால் குடும்பத்திலும் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.

    இதன் காரணமாகவே உடல்நலக்குறைவு ஏற்பட்டு திடீர் மரணங்கள் நிகழ்கிறது. எனவே போலீசாருக்கு மனநல ஆலோசனை மற்றும் போதிய அளவு ஓய்வு வழங்கவேண்டும் என்றனர்.

    Next Story
    ×