என் மலர்tooltip icon

    சேலம்

    • தமிழகத்தின் எல்லையை அடுத்துள்ள கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் மாதேஸ்வர சுவாமி கோவில் உள்ளது.
    • சிவராத்திரியை அடுத்த 3-ம் நாளில் தேர்த்திருவிழா நடைபெறும் .

    மேட்டூர்:

    தமிழகத்தின் எல்லையை அடுத்துள்ள கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் மாதேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சிவராத்திரி உற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். சிவராத்திரியை அடுத்த 3-ம் நாளில் தேர்த்திருவிழா நடைபெறும் .

    அதன்படி மாதேஸ்வரன் மலையில் சிவராத்திரி உற்சவம் இன்று தொடங்கியது. விழாவில் கர்நாடக மாநிலத்தில் இருந்து மட்டும் அல்லாமல் சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பது வழக்கம். இதையொட்டி தமிழகத்தில் இருந்து சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் தற்போது மேட்டுர் மீனவர் ராஜா கர்நாடக வனத்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தால் இரு மாநில எல்லையிலும் பதட்டம் நிலவுகிறது. போக்குவரத்து நிறுத்தப்பட்டு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாதேஸ்வரன் மலைக்கு செல்ல முடியாமல் 2 மாநில பக்தர்களும் தவிக்கின்றனர்.

    • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஆயிரம் கனஅடிக்கு கீழ் குறைந்துள்ளதால், அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    மேட்டூர்:

    கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது.

    ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. அதேசமயம் மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 1004 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 992 கன அடியாக சரிந்தது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஆயிரம் கனஅடிக்கு கீழ் குறைந்துள்ளதால், அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    நேற்று 103.83 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 103.81அடியாக குறைந்துள்ளது.

    • சேலம் வாலிபர் புதுப்பெண்ணை கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
    • புதுப்பெண் வீட்டுக்கு சென்ற வாலிபர் தகராறில் ஈடுபட்டார். மேலும் பெண்ணை தாக்கவும் முயன்றார்.

    குழித்துறை:

    அருமனை பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்னையில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.

    சென்னை என்ஜினீயருக்கும் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த மாதம் 18-ந் தேதி திருமணம் நடந்தது. இளம்பெண் பெங்களூருவில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். அங்கு சேலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரும் வேலை பார்த்தார். இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

    இதனால் பெண்ணின் திருமணமத்திற்கு சேலம் வாலிபரும், பெங்களூருவில் அவருடன் பணிபுரிந்தவர்களும் வந்தனர். மணமக்களை வாழ்த்தி விட்டு சென்றனர்.

    இந்நிலையில் சேலம் வாலிபர், புதுப்பெண்ணை கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் புதுப்பெண்ணிடம் கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு செல்லுமாறு கூறியுள்ளார். ஏன்? என்று புதுப்பெண் கேட்டபோது, அவர் திருமணம் செய்து கொண்டது பிடிக்கவில்லை எனவும், பெற்றோர் வீட்டுக்கு செல்லவில்லை என்றால் பெண்ணின் ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் பதிவிடுவேன் என்று மிரட்டி உள்ளார்.

    இதனால் பயந்து போன புதுப்பெண், சேலம் நண்பரின் செல்போன் எண்ணை பிளாக் செய்துவிட்டார். மேலும் இதுபற்றி கணவரிடமும் கூறினார்.

    இதற்கிடையே சேலம் நண்பரின் போனை புதுப்பெண் எடுக்காததால் அவர் சேலத்தில் இருந்து மீண்டும் மார்த்தாண்டம் வந்தார். இங்கு புதுப்பெண் வீட்டுக்கு சென்ற அவர், தகராறில் ஈடுபட்டார். மேலும் அந்த பெண்ணை தாக்கவும் முயன்றார்.

    இதனால் பயந்து போன பெண் அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களை கண்டதும் சேலம் வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி மார்த்தாண்டம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இது மார்த்தாண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தமிழக-கர்நாடக எல்லையான பாலாறு பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
    • சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள பாலாறு சோதனைச்சாவடியில் போக்குவரத்து முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளன.

    கர்நாடக மாநிலம் அடிபாலாறு பகுதியில் கடந்த 14-ந்தேதி மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது வனத்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மீனவர் ராஜா பலியானார். அவரது உடல் காவிரி ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது. இதனால் தமிழக-கர்நாடக எல்லையான பாலாறு பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள பாலாறு சோதனைச்சாவடியில் போக்குவரத்து முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள மாதேஸ்வரன் மலை மற்றும் மைசூரு செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த ராஜா உயிரிழந்த நிலையில் இன்று காலை எல்லையை ஓட்டி உள்ள அடிபாலாறு வழியாக காவிரி ஆற்றில் ராஜா உடல் மிதந்து வந்தது.
    • கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் காவிரி கரையோரம் திரண்டனர் ராஜாவின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே தமிழக-கர்நாடக எல்லையில் அடிப்பாலாறு ஓடுகிறது. இந்த பகுதியில் பாலாறு, காவிரி ஆற்றுடன் இணையும் இடமாகும். இங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் யானைகளும், மான்களும் அதிக அளவில் உள்ளன.

    இங்குள்ள பாலாற்றங்கரையில் கடந்த 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு மீனவர்களான கொளத்தூர் காரைக்காடு பகுதியை சேர்ந்த காரவடையான் என்கிற ராஜா (வயது 45), செட்டிப்பட்டியை சேர்ந்த ரவி (40), இளையபெருமாள் (40) உள்பட 4 பேர் பரிசல் ஒன்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். மேலும் மான் வேட்டையிலும் ஈடுபட்டதாக தெரிகிறது.

    இந்த பகுதி கர்நாடக வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வனவிலங்குகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ள இடமாகும். அப்போது அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர், அவர்களை சுற்றிவளைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ராஜா மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதனால் அவர் சுருண்டு விழுந்தார். மற்றவர்கள் ஆற்றில் குதித்து தப்பி விட்டனர். ஆனால் ராஜா மட்டும் வீடு திரும்பவில்லை. ராஜா கதி என்ன? என்பது தெரியமால் இருந்து வந்தது.

    போலீசார் மற்றும் வனத்துறையினர் உள்ளூர் பகுதி பொதுமக்கள் உதவியுடன் அடிப்பாலாறு பாலாற்றங்கரை வனப் பகுதியில் ராஜாவை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் அவர் ஆற்றில் குதித்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் பாதாள சோதி சங்கிலி, மற்றும் கொக்கிகளை வீசி பாலாற்றில் தேடினர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    துப்பாக்கி சூடு நடந்து 4 நாட்கள் ஆன நிலையில் உறவினர்கள் சோகத்தில் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த ராஜா உயிரிழந்த நிலையில் இன்று காலை எல்லையை ஓட்டி உள்ள அடியாறு வழியாக காவிரி ஆற்றில் ராஜா உடல் மிதந்து வந்தது. இதை அறிந்த கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் காவிரி கரையோரம் திரண்டனர் ராஜாவின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். தீயணைப்பு வீரர்கள் காவிரி ஆற்றில் இறங்கி ராஜாவின் உடலை மீட்டனர். பின்பு பிரேத பரிசோதனைக்காக ராஜாவின் உடல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் தமிழக-கர்நாடக எல்லையில் இரு மாநில போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்ததால் தமிழக-கர்நாடக எல்லை கிராமங்களில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தனது பெற்றோரை நிஷா தேடி உள்ளார்.
    • 42 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கருப்பூர் பகுதியில் தனது பெற்றோரை, உறவினரை நிஷா, தனது கணவருடன் தேடி வருகிறார்.

    கருப்பூர்:

    டென்மார்க் பிலாங்சர் டார்பன் பகுதியை சேர்ந்தவர் பேட்டரிக் (வயது 45). இவரது மனைவி லீசி என்கிற நிஷா (44). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த 1980-ம் ஆண்டு நிஷா 3 வயது குழந்தையாக இருந்த போது சென்னை பல்லாவரம் மெட்ராஸ் கிறிஸ்டியன் குழந்தைகள் காப்பகத்தில் விடப்பட்டுள்ளார். பின்னர் அங்கு இருந்து டென்மார்க்கை சேர்ந்த சுற்றுலா பயணி ராஸ், என்பவர் தத்து எடுத்து சென்று டென்மார்க்கில் வளர்ந்துள்ளார்.

    இந்த நிலையில் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களை காண வேண்டும் என்று அவருக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. இதை கணவரிடம் தெரிவித்துள்ளார். அவரும் சரி என்று கூறவே, நிஷாவும், அவரது கணவர் பேட்டரிக்கும், டென்மார்க்கில் இருந்து இந்தியா வந்துள்ளனர்.

    பூனேவில் உள்ள தனியார் தொண்டு நிறுவன இயக்குனர் அஞ்சலி பவார் என்பவரின் உதவியுடன் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தனது பெற்றோரை நிஷா தேடி உள்ளார். அவர் விழுப்புரம், தஞ்சை, கும்பகோணம், ஆகிய பகுதிகளில் தேடி அலைந்து விட்டு சேலம் மாவட்டம் கருப்பூருக்கு வந்துள்ளார்.

    42 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கருப்பூர் பகுதியில் தனது பெற்றோரை, உறவினரை நிஷா, தனது கணவருடன் தேடி வருகிறார்.

    பல்லாவரத்தில் உள்ள கிறிஸ்தவ காப்பகத்தில் 1980-ம் ஆண்டு என்னை சேர்த்தனர். 1982-ம் ஆண்டு டென்டார்க் தம்பதிகளான ராஸ்-முசன் என்னை தத்தெடுத்து டென்மார்க் அழைத்து சென்றனர். அங்கேய என்னை படிக்க வைத்து வளர்த்தனர். பின்னர் பேட்ரிக்கை திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    42 ஆண்டுக்கு முன்பு எனது பெயர் மீனாட்சி என்ற ஞாபகம் உள்ளது. பூர்வீகம் கபூர் அல்லது கருப்பூர் என தெரிகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தேடி வருகிறேன். மேலும் கருப்பூர் பகுதியில் உள்ள கோவில்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் சென்று எனது இளம் வயது ஞாபகங்கள் வருகிறதா? என தேடி உள்ளேன். ஆனால் பல இடங்களில் தேடியும் எனது பெற்றோர், உறவினர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் கண்டுபிடித்து விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகிலும் கருப்பூர் என்ற ஊர் உள்ளது. அங்கு சென்றும் பெற்றோர் பற்றி விசாரிக்க உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவர் குழந்தையாக இருந்தபோது எடுத்த புகைப்படம் கையில் வைத்துள்ளார். இந்த புகைப்படம் டென்மார்க் செல்வதற்கு பாஸ்போர்ட் எடுப்பதற்காக அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.

    இதைத் தொடர்ந்து நிஷா, தனது கணவருடன் கருப்பூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அங்கு இது பற்றி போலீசாரிடம் தெரிவித்து விட்டு பெற்றோரை நிஷா தொடர்ந்து தேடி வருகிறார்.

    3 வயதில் தத்து கொடுக்கப்பட்ட குழந்தை, 42 ஆண்டுகளுக்கு பிறகு தனது பெற்றோரை தேடி தாயகம் வந்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • தாரமங்கலம் அருகிலுள்ள தெசவிளக்கு கிராமம், பள்ளிகொண்டான் பாறை பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற உள்ளூர் பண்டிகையின் போது தகராறு ஏற்பட்டது.
    • இதனை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே மீண்டும் ஏற்பட்ட தகறாரில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள தெசவிளக்கு கிராமம், பள்ளிகொண்டான் பாறை பகுதியை சேர்ந்த

    ரவி (வயது 29). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குமரவேல் (32) என்பவருக்கும் இடையே கடந்த வாரம் நடைபெற்ற உள்ளூர் பண்டிகையின் போது தகராறு ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே மீண்டும் ஏற்பட்ட தகறாரில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதுபற்றி இருதரப்பை சேர்ந்த குமரவேல், சத்யராஜ்,ரவி, இருசாகவுண்டர், கிருஷ்ணம்மாள் ஆகியோர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 4 ஏ.டி.எம்.களை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. மீண்டும் இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள பல்வேறு வங்கிகளின் பிரதிநிதிகளுடன் போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
    • கூட்டத்திற்கு ஏற்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சபாபதி தலைமை வகித்தார். இதில், 10 வங்களின் பொது மேலாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ஏற்காடு:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம்.களை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. மீண்டும் இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதையடுத்து, சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள பல்வேறு வங்கிகளின் பிரதிநிதிகளுடன் போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினர். கூட்டத்திற்கு ஏற்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சபாபதி தலைமை வகித்தார். இதில், 10 வங்களின் பொது மேலாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதில், வங்கி, ஏ.டி.எம் மையங்களில் உள்ள பணத்தைக் கண்காணிக்க, மறைமுக காமிராக்களை நிறுவ வேண்டும். முகத்தை அடையாளம் காண உதவும் மென்பொருள் அடங்கிய காமிராக்களை அனைத்து ஏ.டி.எம்.களிலும் பொருத்த வேண்டும். ஏ.டி.எம்.களை உடைக்கப்படும்போது எச்சரிக்கை மணி வங்கியில் மட்டுமின்றி, அருகில் உள்ள போலீஸ் நிலையங்களிலும் ஒலிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது. அவற்றை உடனடியாக செயல்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.

    இக்கூட்டத்தில் உதவி ஆய்வாளர்கள் ஆனந்தன், குணசேகரன், பரந்தாமன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    • புதுப்பாளையம் குடியிருப்பு பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் கழிவுநீர், வெளியேற போதிய வடிகால் சதியில்லாததால், தெற்கு புறத்திலுள்ள இணைப்புச் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த இடத்தில் சாலை பெயர்ந்து குண்டு குழியுமானதோடு, போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத அளவிற்கு சேறும் சகதியுமாக பழுதடைந்து கிடக்கிறது.
    • இதனால், இப்பகுதியை கடந்து செல்ல முடியாமல், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    வாழப்பாடி:

    சேலம்– உளுந்துார்பேட்டை இடையே தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தில், வாழப்பாடி பேரூராட்சிக்கு முத்தம்பட்டியில் இருந்து மத்துார் வரையிலான ஏறக்குறைய 4 கி.மீ., துாரத்திற்கு இருவழி புறவழிச்சாலை அமைக்கப்பட்டது.

    இச்சாலையில் இருந்து, போக்குவரத்து முக்கியத்தும் வாய்ந்த வாழப்பாடி– தம்மம்பட்டி சாலை மற்றும் வாழப்பாடி பேரூராட்சி குடியிருப்பு பகுதிகளையும் இணைக்கும் வகையில், சிங்கிபுரம் ராம்கோ சிமெண்ட் நிறுவன பங்களிப்புடன் தன்னிறைவு திட்டத்தின் கீழ், வாழப்பாடி பேரூராட்சி காமராஜ் நகரில் இருந்து புதுப்பாளையம் வரை, புறவழிச்சாலையின் இருபுறமும் இணைப்புச்சாலை அமைக்கப்பட்டது.

    தம்மம்பட்டி மற்றும் நாமக்கல் மாவட்டம் மங்களபுரம் சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் இச்சாலை வழியாகவே சேலம்-–உளுந்துார்பேட்டை தேசிய நெடுஞ்சாலையை அடைகின்றன. இதுமட்டுமின்றி, சிங்கிபுரம் சிமெண்ட் தொழிற்சாலைக்கு வரும் கனரக வாகனங்களும், வாழப்பாடி நகர்ப்புற குடியிருப்பு பகுதிக்கு செல்லும் அனைத்து ரக வானங்களும் இந்த இணைப்புச் சாலையிலேயே சென்று வருகின்றன.

    இந்நிலையில், புதுப்பாளையம் குடியிருப்பு பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் கழிவுநீர், வெளியேற போதிய வடிகால் வசதியில்லாததால், தெற்கு புறத்திலுள்ள இணைப்புச் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த இடத்தில் சாலை பெயர்ந்து குண்டு குழியுமானதோடு, போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத அளவிற்கு சேறும் சகதியுமாக பழுதடைந்து கிடக்கிறது.

    இதனால், இப்பகுதியை கடந்து செல்ல முடியாமல், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுமட்டுமின்றி இப்பகுதியில் ஏற்பட்டுள்ள ராட்சத பள்ளத்தில் சிக்கி வாகனங்கள் பழுதடைந்து வருகின்றன. எனவே, பழுதடைந்து கிடக்கும் இணைப்புச் சாலையை சீரமைக்க, தேசிய நெடுஞ்சாலை மற்றும் வாழப்பாடி பேரூராட்சி நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

    • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • நீர்வரத்து குறைந்ததால், நேற்று 103.85 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று 103.83 அடியாக சரிந்துள்ளது.

    மேட்டூர்:

    கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது.

    ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. அதேசமயம் மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 1,142 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1,004 கன அடியாக சரிந்தது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்து குறைந்ததால், நேற்று 103.85 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று 103.83 அடியாக சரிந்துள்ளது.

    • 4 மாவட்ட கலெக்டர்களுடன் வளர்ச்சி பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
    • முதல்வரின் முகவரித் திட்டத்தின் கீழ் பெறப்பட்டு நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் குறித்தும் துறைவாரியாக தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    சேலம்:

    சேலம் கலெக்டர் அலுவலகத்தில் 4 மாவட்ட கலெக்டர்களுடன் வளர்ச்சி பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது கிராமப்புற பகுதிகளில் கட்டப்படும் வீடுகளின் பணிகள் முன்னேற்றம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்தும் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் முதல்வரின் முகவரித் திட்டத்தின் கீழ் பெறப்பட்டு நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் குறித்தும் துறைவாரியாக தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. காலை உணவு திட்ட செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட கலெக்டருடன் ஆலோசனை செய்த முதல் - அமைச்சர் ஸ்டாலின், அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி பயில மாதம் ரூ.ஆயிரம் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

    மேலும் பட்டா மாறுதல், இணையவழி பட்டாக்கள் வழங்குதல், ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை நில எடுப்பு செய்யப்பட்டுள்ள காலி மனைகளில் வீட்டுமனை பட்டா வழங்குதல், மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குதல் உள்ளிட்ட பணிகள் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்தார்.

    • கள ஆய்வில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் 2 நாள் பயணமாக நேற்று சேலம் வந்தார்.
    • அப்போது பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    சேலம்:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் 2 நாள் பயணமாக நேற்று சேலம் வந்தார். காமலாபுரம் விமான நிலையத்திற்கு விமானத்தில் வந்த அவர், திடீரென ஓமலூர் தாலுகா அலுவலகத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அந்த கோரிக்கை மனுக்களை பரிசீலனை செய்த முதல்-அமைச்சர் உடனடியாக அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அதன்படி, கொல்லப்பட்டியை சேர்ந்த ராஜம்மாள் என்பவருக்கு இலவச வீட்டு மனை பட்டாவை நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் வைத்து வழங்கினார். முத்துநாயக்கன்பட்டியை சேர்ந்த முரளிதரன் என்பவருக்கு கிராம நத்தம் கூட்டுப்பட்டாவிலிருந்து பட்டா மாறுதல் ஆணை வழங்கப்பட்டது.

    இதேபோல் தீண்டமங்கலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கோமதி என்பவருக்கு தையல் எந்திரம், செல்லப்பிள்ளை குட்டையை சேர்ந்த கணவரால் கைவிடப்பட்ட சித்ரா என்பவருக்கு உதவி தொகைக்கான ஆணையையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    இது குறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் எதிர்பார்க்காத வகையில் முதல்-அமைச்சர் வந்தார். அவரிடம் மனுக்களை கொடுத்தோம். காலையில் மனுக்களை பெற்றுவிட்டு மாலையில் தொடர்பு கொண்டு நலத்திட்ட உதவிகளை பெற வருமாறு அழைத்தனர். இதனை நாங்கள் எதிர்பார்க்க வில்லை. முதல்-அமைச்சர் நலத்திட்டத்தையும் வழங்கினார். இது எங்களுக்கு பேருதவியாக அமைந்துள்ளது என தெரிவித்தனர்.

    ×