என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • கீழக்கரை செய்யது ஹமீதா கல்லூரியில் தொழில் முனைவோர் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் மேலாண்மை துறை தலைவர் அஜ்மல் கான் துறை சார்ந்த பேராசிரியர்கள், மாண வர்கள் செய்திருந்தனர்.

    கீழக்கரை

    கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மேலாண்மை துறை சார்பாக தொழில் முனைவோ ருக்கான வணிக யோசனைகள் குறித்த நிகழ்ச்சி கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜசேகர் தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார் கலந்து கொண்டு தொழில் மேம் பாட்டு செயல்முறையின் 6 படிகளான யோசனை உருவாக்கம், சந்தை ஆராய்ச்சி, சாத்தியக்கூறு ஆய்வு, வணிகத் திட்டம், நிறுவன தொடக்கம் மற்றும் வளர்ச்சி குறித்து மாணவ- மாணவிகளிடையே உரை யாற்றினார்.

    இளம் தொழில் முனை வோரான சிலம்பரசன் பேசுகையில், தொழில் முனைவோர் திறன்களை வளர்ப்பதற்கு தொடர்ந்து கல்வி மற்றும் அறிவு தேவைப்படுகிறது. உங்கள் தொழில் முனைவோர் திறன்களை மேம்படுத்து வதற்கான சிறந்த வழி,புதிய தகவல்களையும் உத்வேகத்தையும் தொடர்ந்து தேடுவதே ஆகும் என அறிவுறுத்தினார்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் மேலாண்மை துறை தலைவர் அஜ்மல் கான் துறை சார்ந்த பேராசி ரியர்கள், மாண வர்கள் செய்திருந்தனர்.

    • விசைப்படகை இயக்கியபோது திடீரென என்ஜினில் பழுது ஏற்பட்டது.
    • கடலோர காவல்படையில் இருந்த சில வீரர்கள் மீனவர்களின் படகில் ஏறி என்ஜின் பழுதை சரி செய்தனர்.

    மண்டபம்:

    ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் 5 பேர் ஒரு விசைப்படகில் நேற்று இரவு மீன் பிடிக்க சென்றனர். ராமேசுவரத்தில் இருந்து 5 நாட்டிகல் கடல் தொலைவில் மீனவர்கள் வலைகளை விரித்து மீன் பிடித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கரைக்கு புறப்பட ஆயத்தமானார்கள்.

    இதற்காக விசைப்படகை இயக்கியபோது திடீரென என்ஜினில் பழுது ஏற்பட்டது. உடனே மீனவர்கள் அதனை சரி செய்ய முயன்றனர். ஆனால் எந்த பலனுமில்லை. இதனால் மீனவர்கள் செய்வதறியாது தவித்தனர். பல மணிநேரம் நடுக்கடலில் மீனவர்கள் படகுடன் தத்தளித்தனர். மற்ற மீனவர்களும் அந்த பகுதியில் வரவில்லை.

    இந்த நிலையில் இந்திய கடலோர காவல்படையினர் அந்த பகுதியில் ரோந்து வந்தனர். தனியாக தத்தளித்து கொண்டிருந்த படகை பார்த்த கடலோர காவல்படையினர் படகின் அருகில் சென்று மீனவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் நடந்த விவரத்தை கூறினர். இதையடுத்து கடலோர காவல்படையில் இருந்த சில வீரர்கள் மீனவர்களின் படகில் ஏறி என்ஜின் பழுதை சரி செய்தனர்.

    இதையடுத்து மீனவர்களின் விசைப்படகு அங்கிருந்து புறப்பட்டு சென்றது. முன்னதாக கடலோர காவல்படையினருக்கு மீனவர்கள் நன்றி தெரிவித்தனர்.

    • மார்னிங் ஸ்டார் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் பேச்சு போட்டி நடந்தது.
    • 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் பசும்பொன்னில் உள்ள மார்னிங் ஸ்டார் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நேரு யுவகேந்திரா ,முத்தமிழ் அறக்கட்டளை இணைந்து யுவா சாம்வாட் என்ற நிகழ்ச்சியை நடத்தியது.

    இந்நிகழ்ச்சியில் 2047-ல் இந்தியா எவ்வாறு இருக்கும் என்றும், நமது இந்தியாவின் கலாச்சாரம் எவ்வாறு பாதுகாக்க பட வேண்டும் என்ற தலைப்பில் பேச்சு போட்டி நடைபெற்றது. சிறப்பு பேச்சாளராக மீனாட்சி சுந்தரம், அன்புதுரை, ஜெயசந்திரன், பாண்டீஸ்வரி,டெய்சி ராணி, சிறப்பு விருந்தி னார்களாக கமுதி ஒன்றிய தலைவர் தமிழ்செல்வி போஸ், பசும்பொன் ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணன், கியாஸ் உரிமையாளர் பாலா என்ற பதினெட்டாம்படியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கல்லூரி முதல்வர் அமலி வரவேற்றார்.கல்லூரி செயலாளர் சேசு மேரி, நேருயுவகேந்திரா தலைவர் பிரவீன்குமார் ஆகியோர் பேசினர்.விழா ஏற்பாடுகளை முத்தமிழ் அறக்கட்டளை உறுபினர்கள் சுரேஷ் கண்ணன், நாகராஜ் கண்ணன், வேலவன் ஆகியோர் செய்திருந்தனர்.

    விழாவின் முடிவில் முத்தமிழ் அறக்கட்டளை நிறுவனர் சபரிமலைநாதன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி இறகுபந்து போட்டியில் மாணவிகள் சாதனை படைத்தனர்.
    • முதல்வர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஆசிரியர் கள், அலுலவர்கள் பாராட்டினர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி அரங்கில் வட்டார அளவிலான இறகுப்பந்து போட்டி நடந்தது. இதில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவிகள் 17 வயது பிரிவில் ஜமீலாத் ஜெஸ்லா மற்றும் 19 வயது இரட்டையர் பிரிவில் மரியம் ரிஸ்னா, ராஜதனலட்சுமி ஆகியோரும் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர்.

    வெற்றி பெற்ற மாணவி யரை பள்ளி தாளாளர் எம் எம்.கே.முகைதீன் இப்ரா ஹிம், முதல்வர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஆசிரியர் கள், அலுலவர்கள் பாராட்டினர்.

    • நாட்டின் எல்லையை காப்பவர்களாக மீனவர்கள் இருக்கிறார்கள் என மத்திய மந்திரி எல்.முருகன் பேசினார்.
    • இந்திய பொருளாதாரத்தில் 8 சதவீதம் மீனவர்கள் பங்கு உள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத் தில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற் றும் பால் வளத்துறை மந் திரி புருஷோத்தம ரூபாலா 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் நேற்று காலை சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து தனுஷ்கோடி சென்று பார்வையிட்டார்.

    பின்னர் ராமேசுவரம் வந்த மத்திய மந்திரி புருஷோத்தம ரூபாலாவும், மத்திய இணை மந்திரி எல்.முருகனும் துறைமுக கடல் பகுதியில் மீன்வளத்துறை மூலம் நடைபெற்று வரும் துறைமுக சீரமைப்பு பணிகளை பார்வையிட்ட–னர். அப்போது முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும் உடன் இருந்தார்.

    அதன்பின்னர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறி–ய–தாவது:-

    சாகர் பரிக்கிரமா யாத்தி ரையானது கடந்த 4 மாதத் திற்கு முன்பு குஜராத்தில் தொடங்கி பல மாநிலங்களில் உள்ள கடற்கரையோர பகுதிகளில் உள்ள மீனவர்களை சந்தித்து வருகிறோம். தமி ழகத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி பகுதிகளுக்கு சென்று மீனவர்களை சந்தித்துவிட்டு, தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளை பார்த்துவிட்டு, திட்டங்களை ஆய்வு செய்தோம். ராமேசு வரத்தில் துறைமுக பணி களை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளோம்.

    இங்குள்ள மீனவர்கள் ராமேசுவரம் கடல் பகுதியில் புதிய துறை முகம் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து மாநில அரசு ஆய்வு நடத்தி வருவதால் அந்த ஆய்வு முடிந்த பின்னர் இதுபற்றி முடிவு செய்யப்ப டும். ஏர் ஆம்புலன்ஸ் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு உள்ள தமிழக மீனவர்களின் படகு களை மத்திய வெளியுறவு துறை மூலம் மீட்க நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    கன்னியாகுமரி, தூத்துக் குடி, திருநெல்வேலி ஆகிய பகுதி மீனவர்களை சந்தித்த போது மீனவர்கள் வைத்த பிரதான கோரிக்கை என்ன வென்றால், கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும்போது மீனவர்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் உடன டியாக அவர்களை மீட்டு காப்பாற்ற வசதியாக ஏர் ஆம்புலன்ஸ் வசதி வேண்டு மென்று கோரிக்கை வைத் துள்ளனர். இது குறித்து அரசிடம் பேசி ஏர் ஆம்பு லன்ஸ் கொண்டுவர நடவ டிக்கை எடுக்கப்படும்.

    ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்லும் மீனவர்கள் மற்ற மாநிலங்களில் உள்ள கடல் பகுதிக்கு செல்லும்போது, அந்த துறைமுகப் பகுதிக்குள் சென்று படகுகளை நிறுத்த வசதியாக குறிப்பாக ஒடிசா, குஜராத், மங்களூரு போன்ற கடல் பகுதிகளுக்கு சென் றால் அங்குள்ள துறைமு கத்தில் படகுகளை நிறுத்த வசதியாக தேசிய அடையாள அட்டை வேண்டுமென கேட்டுள்ளனர்.

    இந்த கோரிக்கை குறித் தும் பரிசீலனை செய்யப்ப டும். ரூ.38,500 கோடி நிதி பிரதமர் மோடி, மீன்வளத்து றைக்கு மட்டும் ரூ.38 ஆயிரத்து 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தால் ஏராள மான பணிகள் நடந்துள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் ரூ.1500 கோடி நிதி ஒதுக் கப்பட்டுள்ளது. இந்திய பொருளாதாரத்தில் 8 சத வீதம் மீனவர்களின் பங்கு உள்ளது. நாட்டை காப்ப வர்களாகவும், நாட்டின் எல்லையை காப்பவர்களா கவும் மீனவர்கள் இருந்து வருகின்றனர்.

    மீனவர்கள் முன்னேற்றத் துக்காகவே மத்திய அரசு நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் ஆழ்கடல் மீன்பிடி படகு களை வழங்கியுள்ளது. அதை மீனவர்கள் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். இருநாட்டு குழு தமிழக மீனவர்கள் பிரச்சி னைக்கு நிரந்தர தீர்வு காண இந்தியா-இலங்கை என இருதரப்பிலும் அதிகாரிகள் மட்டத்திலும், அமைச்சர்கள் மட்டத்திலும் குழு அமைக் கப்பட்டுள்ளது. இதுவரை அதிகாரிகள் மட்டத்தில் கூட்டம் நடைபெற்றுள்ளது.

    கொரோனா உள்ளிட்ட சூழ்நிலையால் இருநாட்டு அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற வில்லை. அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடை பெற வேண்டும் என்று வெளியுறவுத்துறை மூலம் கேட்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. கச்சத்தீவு விவகாரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை. கச்சத்தீவை யார் தாரை வார்த்தது என்பது அனை வருக்குமே தெரியும். கச்சத் தீவை மீட்பது குறித்து உரிய நேரத்தில் அதற்கான நடவ டிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மீன்வளத்துறை துணை இயக்குனர் பிரபாவதி, பா.ஜ.க. மாவட்ட தலைவர் தரணி முருகேசன், மாவட்ட பார்வையாளர் முரளிதரன், நகர் தலைவர் ஸ்ரீதர் உள் ளிட்ட பலர் உடன் இருந்த னர். விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள் சேசு ராஜா, தேவதாஸ், எமெரிட், சகாயம், நாட்டு படகு மீனவர் சங்க தலைவர் எஸ்.பி.ராயப்பன் ஆகியோர் மீன்வளத்துறை மத்திய மந்திரியிடம் மீனவர்களின் கோரிக்கைகளை விளக்கி கூறினர்.

    • ரூ.127.71 கோடி மதிப்பில் பல்நோக்கு கடல்பாசி பூங்கா அமைக்க மத்திய மந்திரி அடிக்கல் நட்டார்.
    • ஆண்டுதோறும் 1000 நபர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தை விரிவுபடுத்திட வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் வட்டம்,வழமாவூரில் மீன்வளத்துறையின் மூலம் பல்நோக்கு கடல்பாசி பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் மத்திய இணை மந்திரி முருகன் முன்னிலை வகித்தார். மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தலைமை தாங்கி ரூ.127.71 கோடி மதிப்பீட்டில் அமைய வுள்ள பல்நோக்கு கடற்பாசி பூங்காவுக்கு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    விழாவில் அவர் பேசியதாவது:-

    பிரதமர் நரேந்திரமோடி மீன்வளத்துறையின் மூலம் பல்வேறு திட்டங்களை வழங்கி பொருளாதார முன்னேற்றம் பெரும் துறைகளில் ஒன்றாக மீன்வளத்துறை இருந்து வருகிறது. அதன் தொடர்ச்சி யாக சாகர் பரிக்ரமா கடல்பயணம் திட்டம் துவங்கப்பட்டு கடல் மார்க்கம் வழியாக மீனவ மக்களை சந்தித்து அவர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் நிறைவேற்றும் வகையில் இப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ராமேசுவரம் கடற்கரை ஒட்டிய மீனவ மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.127.71 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு கடற்பாசி பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா துவங்கப்பட்டுள்ளது.

    இத்திட்டம் இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் தான் துவங்கப்பட்டுள்ளது.என்பது பெருமைக்குரிய ஒன்றாகும்.இத்திட்டத்தின் மூலம் 6 மாவட்ட மீனவர் மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெற்று பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது.

    மேலும் மீன்வளத் துறையின் மூலம் கடந்த 9 ஆண்டுகளில் ரூ.38 ஆயிரத்து 500 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கி நலத் திட்டங்கள் வழங்கப்பட் டுள்ளது.

    விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு பயன் பாட்டில் உள்ளது போல் மீனவர்களுக்கும் கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படுகிறது.ராமநாதபுரம் மாவட்டத்தில் 374 பேர் இத்திட்டத்தில் பதிவு செய்து அவர்களுக்கு ரூ.4,71,000/- நிதியுதவி வழங்கப்பட்டு பயன்பெற்று வருகிறார்கள்.இதை மேலும் விரிவுபடுத்தி ஆண்டுதோறும் 1000 நபர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தை விரிவுபடுத்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதனைத் தொடர்ந்து 10 பயனாளிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டுகளை மத்திய அமைச்சர்கள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மத்திய மீன்வளத்துறை இணைச்செயலாளர் நீத்துப்பிரசாத்,மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் பழனிச்சாமி, மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன், உதவி கலெக்டர் (பயிற்சி) சிவானந்தம், பா.ஜ.க மாவட்ட தலைவர் தரணி ஆர்.முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தூர்ந்துபோன கடைமடை கால்வாய்; 100 ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
    • 100 ஏக்கர் பாதிப்பு ஏற்படக் கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் நாரணமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட வடக்கனேந்தல் யூனியன் கண்மாயை நம்பி அப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

    சுமார் 100 ஏக்கரில் நெல், மிளகாய் விவசாயம் செய்து வரக்கூடிய சூழ்நிலையில் வானம் பார்த்த பூமியான அங்கு மழை பெய்தால் மட்டுமே நரியனேந்தல், அரசனூர் கண்மாயில் இருந்து வடக்குனேந்தல் கண்மாய்க்கு நீர்வரத்து வரும். வடக்கநேந்தல் கண்மாய் 4 கடை மடையை கொண்டது. இந்த மடைகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.கட்டிய சில வருடங்களி லேயே மடைகள் அனைத்தும் சேதம் அடைந்து முழுவது மாக இடிந்தது.

    முற்றிலும் மடைகள் தூர்ந்து போனதால் சிறிய துளை கூட இல்லாத அள விற்கு மணல் மூடி உள்ளது.இதனால் கண்மாயில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. கடந்த 2 வருடங்க ளாக மாவட்ட கலெக்டர் உள்பட சம்பந்தப்பட்ட அதி காரிகளிடம் மடைகளை பராமரிப்பு செய்து கொடுக்க கோரி பல்வேறு மனுக்கள் கொடுத்தும் இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

    விவசாய காலம் தொடங்குவதற்கு முன்பாக 4 மடையையும் பராமரிப்பு செய்து கொடுத்தால் மட்டுமே இந்த ஆண்டு விவசாயம் செய்ய முடியும்.கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் கடுமையாக பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு அதிகாரிகளின் அலட்சியத்தால் மடையை சீரமைக்காததால் இந்த ஆண்டும் விவசாயம் சுமார் 100 ஏக்கர் பாதிப்பு ஏற்படக் கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

    • பொதுமக்களிடம் குறைகளை கலெக்டர் கேட்டறிந்தார்.
    • தடையின்றி செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அவர்களிடம் கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே மேலாய்க்குடி கிராமத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் பொதுமக்களை நேரடியாக சந்தித்தார். அப்போது அரசின் திட்டங்கள் பெற்று கிடைக்கிறதா? என கேட்ட றிந்தார். மேலும் பல்வேறு துறையின் மூலம் வழங்கப் படும் அரசு நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணப் பித்து அரசின் திட்டங்களை பெற்று பயன்பெறுமாறு அவர்களிடம் கலெக்டர் கேண்டு கொண்டார்.

    பின்னர் கிராமத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் வருவாய்த்துறை சான்றுகள் உரிய காலத்தில் கிடைக்கப்பெறுகிறதா?, ரேசன் கடைகளில் சரியாக பொருட்கள் வழங்கப்படு கிறதா? குடிநீர் விநியோகம் சரியாக இருக்கிறதா? என கேட்டறிந்தார்.

    கோரிக்கைகள் நிறை வேறுவதில் காலதாமதம் ஏற்பட்டால் தகவல் கொடுக்குமாறும், தொடர்புடைய அலுவ லர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தர விடப்படும் என்றும் அவர்களிடம் கலெக்டர் உறுதியளித்தார். மேலும் கிராம வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் தடையின்றி செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அவர்களிடம் கூறினார்.

    • அதிக விளைச்சல் பெற சான்று பெற்ற விதைகளை பயன்படுத்த வேண்டும் என்று வேளாண் அதிகாரி கூறினார்.
    • அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் வேளாண் பணிகள் தொடங்க உள்ளன. எனவே விவசாயி களுக்குத் தேவையான விதைகளை உற்பத்தி செய்வதோடு மட்டுமன்றி போதிய அளவு இருப்பும் உள்ளது. மாவட்டத்தில் விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு நெல் விதையின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட் டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத் தில் உள்ள விவசாயிகள் அதிக விளைச்சல் பெற சான்று பெற்ற விதைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நல்ல லாபகர மான வேளாணமைக்கு நல்ல விதை ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை, ஒருங்கி ணைந்த பயிர் பாதுகாப்பு ஆகியன இன்றியமையாதது. இதில் முக்கியமானது ஆதார நல் விதையாகும்.

    நல்ல விதை அல்லது தரமான விதை எனப்படு வது பாரம்பரிய குணங்க ளையும் அதிக பட்ச முளைப்புத்திறனையும் பெற்றிருக்கும். பிற ரகங்கள் மற்றும் களை செடிகளின் விதை இல்லாமலும் பூச்சி நோய் தாக்கம் இல்லாமலும் மண் மற்றும் செடிகளின் பாகங்கள் இல்லாமல் விதை சான்றுத் துறையால் சான்று செய்யப்படும் விதைகளாக இருக்க வேண்டும்.

    வல்லுநர் விதை (மஞ்சள் அட்டை பொருத்தப்பட்டது) மற்றும் ஆதார நல் விதை (வெள்ளை அட்டை பொருத்தப்பட்டது) உபயோகித்து விவசாயியின் வயலின் உற்பத்தியாளரால் சாகுபடி செய்யப்படுகிறது. பயிர் பூக்கும் தருணத்தில் 15 நாட்கள் முன்னதாக விதை சான்றளிப்புத் துறை யால் விதைப்பண்ணையாக பதிவு செய்யப்படுகிறது.

    விதைப்பண்ணை பூக்கும் தருணத்திலும், முதிர்ச்சி பருவத்திலும் விதைச்சான்று அலுவ லரால் வயலில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆய்வின்போது வயல் தரம் மற்றும் விதைத்தரம் குறித்து பரிந்துரைக்கப்பட்ட தரம் இருந்தால் மட்டுமே விதைப் பண்ணைகளில் இருந்து விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு அரசால் அங்கீகாரம் செய்யப்பட்ட விதை சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. அங்கு கழிவுகள் நீக்கப்பட்டு சுத்த மான ஒரே மாதிரியான விதைகள் பிரிக்கப்படு கின்றன.

    இது தவிர சுத்திகரிக்கப் பட்ட விதைக் குவியல்களில் விதை மாதிரி எடுக்கப்பட்டு விதை பரிசோதனை நிலை யத்திற்கு அனுப்பப் படுகிறது. பகுப்பாய்வில் தேறிய விதைக் குவியலுக்கு சான்றட்டை பொருத்தப் பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. எனவே விவசாயிகள் இதை முழுமையாக தெரிந்து கொண்டு சான்று பெற்ற விதைகளை மட்டுமே பயன் படுத்தி பலன் அடைய லாம்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி தெரி வித்துள்ளார்.

    • ஓணம் பண்டிகை கொண்டாட்டப்பட்டது.
    • மேற்பார்வையாளர் சபியுல்லா ஆகியோர் செய்திருந்தனர்.

    பனைக்குளம்

    ராமநாதபுரம் அருகே உள்ள செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் ஓணம் பண்டி கையை முன்னிட்டு கல்லூரியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    முன்னதாக கல்லூரி வளாகத்தில் உள்ள டாக்டர் இ.எம். அப்துல்லா கலை யரங்கத்தில் மத நல்லிணக்க ஒற்றுமைகளை வெளிப் படுத்தும் அளவில் கல்லூரி மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து ஓணம் பண்டிகையை கொண்டாடி னர்.

    முன்னதாக கல்லூரியின் தாளாளர் செல்லதுரை அப்துல்லா மற்றும் ராமநாதபுரம் செய்யது அம்மாள் மெட்ரிக் மேல் தலைப்பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டு ஓணம் பண்டிகை வாழ்த்து தெரிவித்தனர்.தொடர்ந்து கல்லூரி முதல்வர் பாலகி ருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகள் குத்துவிளக்கு ஏற்றி, வண்ண பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர். இதில் சிறந்த கோலங்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழ ங்கப்பட்டன. அதன் பின்னர் மாண விகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. நிகழ்ச்சியை (ஐ.கி.யூ.ஏ.சி.) பிரிவின் தலைவர் அன்வர் ஷாகின் ஒருங்கி ணைத்தார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது, மேற்பார்வை யாளர் சபியுல்லா ஆகியோர் செய்திருந்தனர். 

    • கடந்த சில வாரங்களாக ஏற்றுமதி நிறுவனங்கள் மீன்களுக்கு போதிய விலையை தரவில்லை என கூறப்படுகிறது.
    • கேரளாவில் தற்போது இறால், காரல், சூடை போன்ற மீன் வரத்துகள் அதிகரித்துள்ளது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் வாரத்தில் 3 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். இதன் மூலம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலைவாய்ப்பை பெறுகின்றனர்.

    ஒவ்வொரு முறையும் கடலுக்கு சென்று வரும்போது விலை உயர்ந்த இறால், நண்டு, கணவாய் உள்ளிட்ட பலவகை ரக மீன்கள் கிடைக்கும். டன் கணக்கில் பிடிக்கப்படும் மீன்களை ஏற்றுமதி நிறுவனங்கள் மொத்தமாக கொள்முதல் செய்து அதனை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கிறது.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ஏற்றுமதி நிறுவனங்கள் மீன்களுக்கு போதிய விலையை தர வில்லை என கூறப்படுகிறது. இதனால் மீனவர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். கடலுக்கு சென்று வந்த செலவுக்குகூட போதவில்லை. எனவே விலையை உயர்த்தி தரக்கோரி மீனவர்கள் ஏற்றுமதி நிறுவனங்களிடம் வலியுறுத்தினர். ஆனால் அதனை ஏற்க மறுத்ததாக தெரிகிறது.

    இதனால் நஷ்டம் ஏற்படுவதாக கூறி ராமேசுவரம் மீனவர்கள் இன்று (2-ந் தேதி) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்தனர்.

    அதன்படி இன்று காலை ராமேசுவரத்தில் வேலை நிறுத்தம் தொடங்கியது. ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார கடற்கரை பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராமேசுவரம் துறைமுகம் வேலைநிறுத்தம் காரணமாக வெறிச்சோடி காணப்பட்டது.

    கேரளாவில் தற்போது இறால், காரல், சூடை போன்ற மீன் வரத்துகள் அதிகரித்துள்ளது. ஏற்றுமதி நிறுவனங்கள் அங்கு குறைந்த அளவில் மீன்களை கொள்முதல் செய்கிறது. ராமேசுவரத்தில் மீன்களை வாங்க வியாபாரிகள் முன்வரவில்லை என கூறப்படுகிறது.

    இதுகுறித்து ராமேசுவரம் மீனவர்கள் கூறுகையில், ஒவ்வொரு முறையும் மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ காரல் மீன் ரூ.40-க்கு வாங்கிய வியாபாரிகள் தற்போது அதனை ரூ.20-க்கு கேட்கின்றனர். சூடை மீனும் ரூ.20 ஆக குறைந்துள்ளது.

    சங்காயம் வகை மீன்கள் ரூ.23-க்கு விற்கப்பட்ட நிலையில் ரூ.17-க்கு கேட்கப்படுகிறது. இதுபோன்று பல்வேறு ரக மீன்கள் குறைந்த விலைக்கு கேட்கப்படுவதால் மீனவர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. கடலுக்கு சென்றும் போதிய வருமானம் இல்லை. இதனால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.

    விசைப்படகு மீனவர்கள் மட்டும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். நாட்டு படகு மீனவர்கள் இன்று வழக்கம்போல் கடலுக்கு சென்று மீன் பிடித்தனர்.

    • ராமேசுவரம் மீனவர்கள் சவுதி அரேபியா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருகிறார்கள்.
    • ராமேசுவரத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் இன்று நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் வாரத்தில் 3 நாட்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறார்கள். இதேபோல் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு சென்று வருகின்றனர்.

    இதில் ராமேசுவரம் மீனவர்களுக்கு பல டன் கணக்கில், பல்வேறு வகையான மீன்கள் கிடைக்கின்றன. உள்ளூர் தேவைகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் இங்கிருந்து மீன்கள் பதப்படுத்தி அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் ராமேசுவரம் மீனவர்கள் சவுதி அரேபியா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்தும் வருகிறார்கள்.

    அவ்வாறு மீனவர்களிடம் இருந்து மீன்களை வாங்கி ஏற்றுமதி வணிகம் செய்துவரும் நிறுவனங்கள் போதிய விலை தருவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. அந்த நிறுவனங்கள் தங்களுக்குள் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்திக்கொண்டு விலையை நிர்ணயம் செய்து கொள்கிறது.

    இதனால் மீனவர்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். பல்வேறு சிரமங்களுக்கு இடையே மீனவர்கள் பிடித்து வரும் விலை உயர்ந்த ஏற்றுமதி தரம் வாய்ந்த மீன்களுக்கு குறைந்த விலை கிடைப்பதால் வாழ்வாதாரம் நலிவடைந்து விட்டதாகவும், உரிய விலை கிடைக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோதிலும் ஏற்றுமதி நிறுவனங்கள் கண்டுகொள்ளவில்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தனர்.

    இதனை கண்டித்து ராமேசுவரத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் இன்று நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே மீன்பிடி தடைக்காலத்திற்கு பிறகு கடலில் ஏற்பட்ட மாறுபட்ட நீரோட்டத்தால் மீன்கள் வரத்தும் குறைந்துள்ள நிலையில் மீனவர்கள் அறிவித்துள்ள இந்த காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×