search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "celebratio"

    • ஓணம் பண்டிகை கொண்டாட்டப்பட்டது.
    • மேற்பார்வையாளர் சபியுல்லா ஆகியோர் செய்திருந்தனர்.

    பனைக்குளம்

    ராமநாதபுரம் அருகே உள்ள செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் ஓணம் பண்டி கையை முன்னிட்டு கல்லூரியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    முன்னதாக கல்லூரி வளாகத்தில் உள்ள டாக்டர் இ.எம். அப்துல்லா கலை யரங்கத்தில் மத நல்லிணக்க ஒற்றுமைகளை வெளிப் படுத்தும் அளவில் கல்லூரி மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து ஓணம் பண்டிகையை கொண்டாடி னர்.

    முன்னதாக கல்லூரியின் தாளாளர் செல்லதுரை அப்துல்லா மற்றும் ராமநாதபுரம் செய்யது அம்மாள் மெட்ரிக் மேல் தலைப்பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டு ஓணம் பண்டிகை வாழ்த்து தெரிவித்தனர்.தொடர்ந்து கல்லூரி முதல்வர் பாலகி ருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகள் குத்துவிளக்கு ஏற்றி, வண்ண பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர். இதில் சிறந்த கோலங்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழ ங்கப்பட்டன. அதன் பின்னர் மாண விகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. நிகழ்ச்சியை (ஐ.கி.யூ.ஏ.சி.) பிரிவின் தலைவர் அன்வர் ஷாகின் ஒருங்கி ணைத்தார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது, மேற்பார்வை யாளர் சபியுல்லா ஆகியோர் செய்திருந்தனர். 

    ×