என் மலர்
புதுக்கோட்டை
அரிமளத்தில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள்- வெள்ளி பொருட்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரிமளம்:
அரிமளத்தில் வைரவன்செட்டியார் தெருவை சேர்ந்தவர் வைரவன். இவர், தொழில் காரணமாக சென்னையில் வசித்து வருகிறார். இவருடைய மகன்கள் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரிமளத்திற்கு வந்த வைரவன், தங்கம், வெள்ளி நகைகளை வங்கி லாக்கரில் வைக்க சென்றுள்ளார். காலதாமதம் ஆனதால் நகைகளை லாக்கரில் வைக்க முடியாத நிலையில், அவற்றை வீட்டில் வைத்து விட்டு சென்னை சென்று விட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம மனிதர்கள் கதவை உடைத்து வைரவனின் வீட்டிற்குள் புகுந்து தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச்சென்றனர். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்து பார்வையிட்ட போலீசார், 15 பவுன் நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தனர். ஆனால் வைரவன் சென்னையில் இருப்பதால், திருட்டு போன நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்கள் குறித்தும், வைர நகைகள் ஏதாவது இருந்ததா என்பது பற்றியும் முழுமையாக தெரியவில்லை.
இது குறித்து வைரவனின் உறவினர் முத்து கொடுத்த புகாரின்பேரில் அரிமளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே திருட்டு நடந்த வீட்டை புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் பார்வையிட்டார்.
புதுக்கோட்டை, அறந்தாங்கி நகராட்சி பகுதிகளில் முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து இதுவரை ரூ.1½ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
கொரோனா எனும் உயிர்க்கொல்லி வைரசை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக அரசு முழுவீச்சில் இதற்கான பணிகளை மேற்கொண்டு போராடி வருகிறது. புதுக்கோட்டையிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் வெளியூர், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு தொற்று உறுதியானதால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
புதுக்கோட்டை நகரப்பகுதியில் ஒரு சிலருக்கு தொற்று ஏற்பட்டது. தீவிர சிகிச்சைக்கு பின் வீடு திரும்புவோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு ஒரு முதியவர் புதுக்கோட்டையில் பலியானார். கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பொதுமக்களிடம் பல்வேறு கட்டங்களாக அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், சிலர் இதனை கடைப்பிடிப்பதில்லை.
இந்த நிலையில் முக கவசம் அணிவதை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் மீண்டும் வலியுறுத்தி உள்ளது. மேலும் முக கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் முக கவசம் அணியாதவர்கள் மீது இதுவரை ரூ.60 ஆயிரமும், அறந்தாங்கி நகராட்சி பகுதியில் ரூ.85 ஆயிரமும் என ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பலர் முக கவசம் அணியாமல் வெளியில் சுற்றி வருகின்றனர். இதனை தடுக்க அடுத்ததாக நடவடிக்கை தீவிரமாவதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முக கவசம் அணியாதவர்கள் மீது போலீஸ் தரப்பில் நடவடிக்கை ஏதேனும் எடுக்கப்பட்டுள்ளதா? என போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது வாகன சோதனையின் போது முக கவசம் அணியாமல் வந்தவர்களை பிடித்து எச்சரித்து, மோட்டார் வழக்கு தொடர்பாக அபராதம் விதிக்கப்படுவதாகவும், முக கவசம் அணியாதவர்கள் மீது வழக்கு ஏதேனும் இதுவரை பதியப்படவில்லை, என்றும் கூறினர்.
கொரோனா எனும் உயிர்க்கொல்லி வைரசை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக அரசு முழுவீச்சில் இதற்கான பணிகளை மேற்கொண்டு போராடி வருகிறது. புதுக்கோட்டையிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் வெளியூர், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு தொற்று உறுதியானதால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
புதுக்கோட்டை நகரப்பகுதியில் ஒரு சிலருக்கு தொற்று ஏற்பட்டது. தீவிர சிகிச்சைக்கு பின் வீடு திரும்புவோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு ஒரு முதியவர் புதுக்கோட்டையில் பலியானார். கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பொதுமக்களிடம் பல்வேறு கட்டங்களாக அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், சிலர் இதனை கடைப்பிடிப்பதில்லை.
இந்த நிலையில் முக கவசம் அணிவதை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் மீண்டும் வலியுறுத்தி உள்ளது. மேலும் முக கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் முக கவசம் அணியாதவர்கள் மீது இதுவரை ரூ.60 ஆயிரமும், அறந்தாங்கி நகராட்சி பகுதியில் ரூ.85 ஆயிரமும் என ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பலர் முக கவசம் அணியாமல் வெளியில் சுற்றி வருகின்றனர். இதனை தடுக்க அடுத்ததாக நடவடிக்கை தீவிரமாவதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முக கவசம் அணியாதவர்கள் மீது போலீஸ் தரப்பில் நடவடிக்கை ஏதேனும் எடுக்கப்பட்டுள்ளதா? என போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது வாகன சோதனையின் போது முக கவசம் அணியாமல் வந்தவர்களை பிடித்து எச்சரித்து, மோட்டார் வழக்கு தொடர்பாக அபராதம் விதிக்கப்படுவதாகவும், முக கவசம் அணியாதவர்கள் மீது வழக்கு ஏதேனும் இதுவரை பதியப்படவில்லை, என்றும் கூறினர்.
புதுக்கோட்டையில் 1½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். சரக்கு வேன் டிரைவரை கைது செய்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை போஸ் நகரில் நேற்று காலை கணேஷ்நகர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆலங்குடி நோக்கி சென்ற சரக்கு வேன் ஒன்றை போலீசார் மடக்கி சோதனையிட்டனர். அதில் ரேஷன் அரிசி மூட்டை, மூட்டையாக இருந்தது. இது குறித்து டிரைவரிடம், போலீசார் விசாரணை நடத்தியபோது, ஆலங்குடியை சேர்ந்த தமிழரசன் என்பவருக்காக கொண்டு செல்வதாகவும், ரேஷன் அரிசியை பொதுமக்களிடம் இருந்து விலை கொடுத்து வாங்கி சேகரித்ததாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கணேஷ்நகர் போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வைரம் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
ரேஷன் அரிசியை விலை கொடுத்து வாங்கி ஏழைகளுக்கு கொரோனா நிவாரணமாக வழங்க இருப்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் சரக்கு வேன் டிரைவர் ஆலங்குடி படேல்நகரை சேர்ந்த பத்மநாதன் (வயது 40) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் சரக்கு வேனில் இருந்த 1½ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பொதுமக்களுக்கு விலையில்லாமல் வழங்கப்பட்ட ரேஷன் அரிசியை முறைகேடாக விலைக்கு வாங்கியது தொடர்பாக தமிழரசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை போஸ் நகரில் நேற்று காலை கணேஷ்நகர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆலங்குடி நோக்கி சென்ற சரக்கு வேன் ஒன்றை போலீசார் மடக்கி சோதனையிட்டனர். அதில் ரேஷன் அரிசி மூட்டை, மூட்டையாக இருந்தது. இது குறித்து டிரைவரிடம், போலீசார் விசாரணை நடத்தியபோது, ஆலங்குடியை சேர்ந்த தமிழரசன் என்பவருக்காக கொண்டு செல்வதாகவும், ரேஷன் அரிசியை பொதுமக்களிடம் இருந்து விலை கொடுத்து வாங்கி சேகரித்ததாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கணேஷ்நகர் போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வைரம் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
ரேஷன் அரிசியை விலை கொடுத்து வாங்கி ஏழைகளுக்கு கொரோனா நிவாரணமாக வழங்க இருப்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் சரக்கு வேன் டிரைவர் ஆலங்குடி படேல்நகரை சேர்ந்த பத்மநாதன் (வயது 40) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் சரக்கு வேனில் இருந்த 1½ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பொதுமக்களுக்கு விலையில்லாமல் வழங்கப்பட்ட ரேஷன் அரிசியை முறைகேடாக விலைக்கு வாங்கியது தொடர்பாக தமிழரசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தடைக்காலத்திற்கு பின்னர் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் வலையில் அதிக அளவில் மீன்கள், இறால்கள் சிக்கின.
கோட்டைப்பட்டினம்:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் உள்ள மீன்பிடி தளங்களில் இருந்து விசைப்படகுகளில் ஏராளமான மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி முதல் ஜூன் மாதம் 15-ந் தேதி வரை 61 நாட்களுக்கு, விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறையால் தடை விதிக்கப்படுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்தனர். மேலும் தங்கள் படகுகளில் உள்ள சிறிய பழுதுகளை சரி செய்தனர். மீன்பிடி தடைக்காலத்தில் இப்பகுதியில் உள்ள அனைத்து மீன் மார்க்கெட்டிலும் மீன்களின் விலை இரட்டிப்பாக அதிகரித்தது. மீன்பிடி சார்ந்த தொழில்கள் முடங்கின.
இந்நிலையில் மீன்பிடி தடைக்கால நாட்களை குறைத்து, கடந்த 1-ந் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம் என்று அரசு அறிவித்தது. ஆனால் தடைக்காலம் முடிந்த பின்னரே மீன்பிடிக்க செல்வதென விசைப்படகு மீனவர்கள் முடிவு செய்தனர். அதன்படி தடைக்காலம் முடிந்த நிலையில், ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இதில் சுமார் 800 விசைப்படகுகளில் டீசல், ஐஸ் கட்டி மற்றும் மீன்பிடி சாதனங்களை எடுத்துக்கொண்டு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆர்வத்துடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நீண்ட நாட்களுக்கு பின்னர் கடலுக்கு சென்றதால், அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தது போலவே, மீனவர்கள் வலையில் இறால்கள் மற்றும் நண்டுகள், மீன்கள் போன்றவை அதிக அளவில் சிக்கின. மீன்பிடித்துவிட்டு நேற்று காலை மீனவர்கள் கரைக்கு திரும்பினர்.
முன்னதாக மீன்களை வாங்கிச்செல்ல இப்பகுதியில் இரவில் இருந்தே உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் குவிய தொடங்கினர். இருப்பினும் ஊரடங்கு காரணமாக அதிக அளவில் வியாபாரிகள் வரவில்லை. மேலும் வழக்கமாக மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை ஏலம் விடுவது வழக்கம். ஆனால் ஊரடங்கு காரணமாக மீன்களை ஏலம் விட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று விசைப்படகு மீனவர்கள் பிடித்து வந்த மீன்கள், இறால்கள், நண்டுகள் போன்றவை குறைந்த விலைக்கே விற்கப்பட்டது.
இதனால் போதிய விலை கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். வழக்கமாக மீன்களை வாங்க வரும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற வெளிமாநில வியாபாரிகள் ஊரடங்கு காரணமாக வரவில்லை. இதனால் பரபரப்பாக காணப்படும் மீன்பிடி தளம் கூட்டமின்றிகாணப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் உள்ள மீன்பிடி தளங்களில் இருந்து விசைப்படகுகளில் ஏராளமான மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி முதல் ஜூன் மாதம் 15-ந் தேதி வரை 61 நாட்களுக்கு, விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறையால் தடை விதிக்கப்படுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்தனர். மேலும் தங்கள் படகுகளில் உள்ள சிறிய பழுதுகளை சரி செய்தனர். மீன்பிடி தடைக்காலத்தில் இப்பகுதியில் உள்ள அனைத்து மீன் மார்க்கெட்டிலும் மீன்களின் விலை இரட்டிப்பாக அதிகரித்தது. மீன்பிடி சார்ந்த தொழில்கள் முடங்கின.
இந்நிலையில் மீன்பிடி தடைக்கால நாட்களை குறைத்து, கடந்த 1-ந் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம் என்று அரசு அறிவித்தது. ஆனால் தடைக்காலம் முடிந்த பின்னரே மீன்பிடிக்க செல்வதென விசைப்படகு மீனவர்கள் முடிவு செய்தனர். அதன்படி தடைக்காலம் முடிந்த நிலையில், ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இதில் சுமார் 800 விசைப்படகுகளில் டீசல், ஐஸ் கட்டி மற்றும் மீன்பிடி சாதனங்களை எடுத்துக்கொண்டு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆர்வத்துடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நீண்ட நாட்களுக்கு பின்னர் கடலுக்கு சென்றதால், அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தது போலவே, மீனவர்கள் வலையில் இறால்கள் மற்றும் நண்டுகள், மீன்கள் போன்றவை அதிக அளவில் சிக்கின. மீன்பிடித்துவிட்டு நேற்று காலை மீனவர்கள் கரைக்கு திரும்பினர்.
முன்னதாக மீன்களை வாங்கிச்செல்ல இப்பகுதியில் இரவில் இருந்தே உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் குவிய தொடங்கினர். இருப்பினும் ஊரடங்கு காரணமாக அதிக அளவில் வியாபாரிகள் வரவில்லை. மேலும் வழக்கமாக மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை ஏலம் விடுவது வழக்கம். ஆனால் ஊரடங்கு காரணமாக மீன்களை ஏலம் விட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று விசைப்படகு மீனவர்கள் பிடித்து வந்த மீன்கள், இறால்கள், நண்டுகள் போன்றவை குறைந்த விலைக்கே விற்கப்பட்டது.
இதனால் போதிய விலை கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். வழக்கமாக மீன்களை வாங்க வரும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற வெளிமாநில வியாபாரிகள் ஊரடங்கு காரணமாக வரவில்லை. இதனால் பரபரப்பாக காணப்படும் மீன்பிடி தளம் கூட்டமின்றிகாணப்பட்டது.
பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் சொத்து பிரச்சினையில் அவரை கழுத்தை நெரித்து கொன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆவூர்:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா, ஆவூர் அருகே உள்ள எஸ்.மேலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45). இவர் மாத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சகுந்தலா(41). இவரது சொந்த ஊர் ஆவூர் அருகே உள்ள சூரியூரை சேர்ந்த அருங்கால்பட்டி என்ற கிராமம் ஆகும். இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதால் கடந்த 10 வருடங்களாக சகுந்தலா, முருகேசனை பிரிந்து மகன் மற்றும் மகளுடன் சூரியூர் ஊராட்சி ஆலங்குளத்தில் வீடு கட்டி குடியிருந்து வந்தார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சகுந்தலா தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இதற்கிடையே முருகேசன் தனது மனைவியை பார்ப்பதற்காக ஆலங்குளத்தில் உள்ள வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். மேலும் கடந்த ஒரு மாதமாக ஆலங்குளத்தில் உள்ள வீட்டிலேயே தங்கியிருந்து முருகேசன் வேலைக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் முருகேசன் எஸ்.மேலப்பட்டியில் உள்ள தனது நிலத்தை விற்பனை செய்ய ஏற்பாடு செய்தார். அதற்கு தனது மகன், மகள், மனைவி ஆகியோர் சேர்ந்து கையெழுத்து போட்டு எழுதி கொடுக்க வேண்டும் என்று சகுந்தலாவிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 11-ந் தேதி இரவும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மறுநாள் காலை வாயில் நுரை தள்ளியபடி சகுந்தலா தனது வீட்டில் இறந்து கிடந்தார்.
அக்கம், பக்கத்தினர் இது குறித்து மாத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். வாயில் நுரை தள்ளியிருந்ததால், அவர் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதி, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தற்கொலை என வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் சகுந்தலா கழுத்து நெரிக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து தலைமறைவான முருகேசனை தேடி வந்தனர்.
நேற்று பேராம்பூர் குளத்துக்கரை அருகே பதுங்கியிருந்த முருகேசனை மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், கோவிந்தராஜ் ஆகியோர் பிடித்து சென்று போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், முருகேசன் தனது சொத்தை விற்பதற்கு சகுந்தலா தடையாக இருந்ததால் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், முருகேசனை கைது செய்து கீரனூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா, ஆவூர் அருகே உள்ள எஸ்.மேலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45). இவர் மாத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சகுந்தலா(41). இவரது சொந்த ஊர் ஆவூர் அருகே உள்ள சூரியூரை சேர்ந்த அருங்கால்பட்டி என்ற கிராமம் ஆகும். இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதால் கடந்த 10 வருடங்களாக சகுந்தலா, முருகேசனை பிரிந்து மகன் மற்றும் மகளுடன் சூரியூர் ஊராட்சி ஆலங்குளத்தில் வீடு கட்டி குடியிருந்து வந்தார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சகுந்தலா தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இதற்கிடையே முருகேசன் தனது மனைவியை பார்ப்பதற்காக ஆலங்குளத்தில் உள்ள வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். மேலும் கடந்த ஒரு மாதமாக ஆலங்குளத்தில் உள்ள வீட்டிலேயே தங்கியிருந்து முருகேசன் வேலைக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் முருகேசன் எஸ்.மேலப்பட்டியில் உள்ள தனது நிலத்தை விற்பனை செய்ய ஏற்பாடு செய்தார். அதற்கு தனது மகன், மகள், மனைவி ஆகியோர் சேர்ந்து கையெழுத்து போட்டு எழுதி கொடுக்க வேண்டும் என்று சகுந்தலாவிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 11-ந் தேதி இரவும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மறுநாள் காலை வாயில் நுரை தள்ளியபடி சகுந்தலா தனது வீட்டில் இறந்து கிடந்தார்.
அக்கம், பக்கத்தினர் இது குறித்து மாத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். வாயில் நுரை தள்ளியிருந்ததால், அவர் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதி, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தற்கொலை என வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் சகுந்தலா கழுத்து நெரிக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து தலைமறைவான முருகேசனை தேடி வந்தனர்.
நேற்று பேராம்பூர் குளத்துக்கரை அருகே பதுங்கியிருந்த முருகேசனை மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், கோவிந்தராஜ் ஆகியோர் பிடித்து சென்று போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், முருகேசன் தனது சொத்தை விற்பதற்கு சகுந்தலா தடையாக இருந்ததால் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், முருகேசனை கைது செய்து கீரனூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
கல்லூரி மாணவி கவுரவக்கொலை செய்யப்பட்டதாக அவருடைய காதலன் போலீஸ் சூப்பிரண்டிடம் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையை அடுத்த திருவரங்குளம் அருகே உள்ள இடையன்வயலை சேர்ந்த நாகேஷ்வரனின் மகள் சாவித்ரி (வயது 19). இவர் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் பி.எஸ்சி., விலங்கியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவரும், தோப்புக்கொல்லையை சேர்ந்த பெயிண்டராக பணிபுரியும் விவேக் (20) என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு சாவித்ரி வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் சாவித்ரிக்கு வீட்டில் திருமண ஏற்பாடு செய்து வந்தனர். இதுகுறித்து, அவர் காதலன் விவேக்கிடம் தகவல் தெரிவித்தார். இருவரும் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்து கொள்வதற்காக காரில் கோவைக்கு புறப்பட்டு சென்றனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கார் சென்று கொண்டிருந்தது. அங்கு சோதனைச்சாவடியில் காரை போலீசார் மறித்து சோதனையிட்டனர். அப்போது 2 பேரும் காதல் திருமணம் செய்து கொள்வதற்காக செல்வதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 2 பேரையும் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து, அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர்.
இதில் விவேக்கிற்கு 21 வயது நிரம்ப இன்னும் 4 மாதங்கள் இருந்ததால், சாவித்ரியை அவரது பெற்றோருடன் வீட்டிற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி நள்ளிரவு வீட்டில் சாவித்ரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது உடல் உடனடியாக எரிக்கப்பட்டு விட்டதாகவும் விவேக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து விவேக் மற்றும் மாதர் சங்கத்தினர், சி.ஐ.டி.யூ.வினர், இந்திய மாணவர் சங்கத்தினர், தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் உள்ளிட்ட அமைப்பினர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்தி குமாரை நேற்று முன்தினம் சந்தித்து ஒரு புகார் மனு அளித்தனர்.
அதில், சாவித்ரி தற்கொலை செய்திருக்கமாட்டார் எனவும், அவர் கவுரவக்கொலை செய்யப்பட்டிருப்பார் எனவும், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற அவர் ஆலங்குடி போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சாவித்ரி தரப்பினர், அவர் தற்கொலை செய்ததாகவும், உடனடியாக உடல் எரிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உடல் எரிக்கப்பட்டதாக திருவரங்குளம் கிராம நிர்வாக அதிகாரி இளையராஜா, ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் காதலித்து வந்த நிலையில் காதலி திடீரென இறந்ததும், அவர் கவுரவக்கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என வெளியான தகவலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில் சாவித்ரிக்கு வீட்டில் திருமண ஏற்பாடு செய்து வந்தனர். இதுகுறித்து, அவர் காதலன் விவேக்கிடம் தகவல் தெரிவித்தார். இருவரும் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்து கொள்வதற்காக காரில் கோவைக்கு புறப்பட்டு சென்றனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கார் சென்று கொண்டிருந்தது. அங்கு சோதனைச்சாவடியில் காரை போலீசார் மறித்து சோதனையிட்டனர். அப்போது 2 பேரும் காதல் திருமணம் செய்து கொள்வதற்காக செல்வதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 2 பேரையும் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து, அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர்.
இதில் விவேக்கிற்கு 21 வயது நிரம்ப இன்னும் 4 மாதங்கள் இருந்ததால், சாவித்ரியை அவரது பெற்றோருடன் வீட்டிற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி நள்ளிரவு வீட்டில் சாவித்ரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது உடல் உடனடியாக எரிக்கப்பட்டு விட்டதாகவும் விவேக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து விவேக் மற்றும் மாதர் சங்கத்தினர், சி.ஐ.டி.யூ.வினர், இந்திய மாணவர் சங்கத்தினர், தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் உள்ளிட்ட அமைப்பினர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்தி குமாரை நேற்று முன்தினம் சந்தித்து ஒரு புகார் மனு அளித்தனர்.
அதில், சாவித்ரி தற்கொலை செய்திருக்கமாட்டார் எனவும், அவர் கவுரவக்கொலை செய்யப்பட்டிருப்பார் எனவும், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற அவர் ஆலங்குடி போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சாவித்ரி தரப்பினர், அவர் தற்கொலை செய்ததாகவும், உடனடியாக உடல் எரிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உடல் எரிக்கப்பட்டதாக திருவரங்குளம் கிராம நிர்வாக அதிகாரி இளையராஜா, ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் காதலித்து வந்த நிலையில் காதலி திடீரென இறந்ததும், அவர் கவுரவக்கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என வெளியான தகவலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை அருகே விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பு ஏற்பட்டது.
ஆவுடையார்கோவில்:
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே செங்காமை ஊராட்சி மேல வசந்தனூர் கிராமத்தில் உள்ள கண்மாய் ஏரியில் நேற்று விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டதாக சமூக வலைத்தளமான வாட்ஸ்-அப்பில் படத்துடன் தகவல் பரவியது. இது குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள், திருப்புனவாசல் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் அங்கு அப்பகுதி பொதுமக்களும் திரண்டனர்.
அப்போது அங்கு கருவேல மரங்கள், முட்புதர்கள் எரிந்து கொண்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் சிலர் விமானம் பறந்து போனதாகவும், அது தான் வெடித்து விழுந்து தீப்பிடித்திருக்கலாம் என்றும் கூறினர்.
இதற்கிடையே இந்த சம்பவம் பற்றிய தகவல் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரியின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து அவர் இது பற்றி கூறுகையில், “விமானம் விபத்துக்குள்ளானதாக பரவிய தகவல் முற்றிலும் பொய்யானது. இது போன்று தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ” என்றார்.
இதற்கிடையே ஏரியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதை போன்று சமூக வலைத்தளத்தில் வெளியான புகைப்படம் கலிபோர்னியாவில் நடந்த சம்பவம் என தெரியவந்துள்ளது. அந்த புகைப்படத்துடன், வாட்ஸ்-அப்பில் ஒரு ஆடியோவில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள ஏரியை குறிப்பிட்டு பதிவிட்டு சிலர்பரப்பி உள்ளனர். புரளி ஏற்படுத்தியவர்கள் மீது புதுக்கோட்டை மாவட்ட போலீசார் நடவடிக்கை எடுக்க தயராகி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே செங்காமை ஊராட்சி மேல வசந்தனூர் கிராமத்தில் உள்ள கண்மாய் ஏரியில் நேற்று விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டதாக சமூக வலைத்தளமான வாட்ஸ்-அப்பில் படத்துடன் தகவல் பரவியது. இது குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள், திருப்புனவாசல் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் அங்கு அப்பகுதி பொதுமக்களும் திரண்டனர்.
அப்போது அங்கு கருவேல மரங்கள், முட்புதர்கள் எரிந்து கொண்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் சிலர் விமானம் பறந்து போனதாகவும், அது தான் வெடித்து விழுந்து தீப்பிடித்திருக்கலாம் என்றும் கூறினர்.
இதற்கிடையே இந்த சம்பவம் பற்றிய தகவல் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரியின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து அவர் இது பற்றி கூறுகையில், “விமானம் விபத்துக்குள்ளானதாக பரவிய தகவல் முற்றிலும் பொய்யானது. இது போன்று தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ” என்றார்.
இதற்கிடையே ஏரியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதை போன்று சமூக வலைத்தளத்தில் வெளியான புகைப்படம் கலிபோர்னியாவில் நடந்த சம்பவம் என தெரியவந்துள்ளது. அந்த புகைப்படத்துடன், வாட்ஸ்-அப்பில் ஒரு ஆடியோவில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள ஏரியை குறிப்பிட்டு பதிவிட்டு சிலர்பரப்பி உள்ளனர். புரளி ஏற்படுத்தியவர்கள் மீது புதுக்கோட்டை மாவட்ட போலீசார் நடவடிக்கை எடுக்க தயராகி வருகின்றனர்.
ஊராட்சி தலைவரின் கணவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியதாக வாலிபரை போலீசார் கைது செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னமராவதி:
பொன்னமராவதி ஒன்றியம் ஆர்.பாலக்குறிச்சி ஊராட்சி வைரவன்பட்டியை சேர்ந்தவர் பெரியபொண்ணன். இவர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். தற்போது அவருடைய மனைவி, ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இந்நிலையில் பெரியபொண்ணனுக்கு கொரோனா தொற்று இருப்பதாக, அதே ஊரை சேர்ந்த ராமலிங்கத்தின் மகன் கோவேந்தன்(வயது 35) சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது.
இது குறித்து பெரியபொண்ணன், உலகம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி வழக்குப்பதிவு செய்து, கோவேந்தனை கைது செய்தார்.
அறந்தாங்கி பகுதியில் முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து இதுவரை ரூ.85 ஆயிரம் அபராதமாக வசூல் செய்யப்பட்டு உள்ளது.
அறந்தாங்கி:
கொரோனா தொற்று பரவலை தடுக்க பொதுமக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில் அறந்தாங்கி நகராட்சிக்கு உட்பட்ட பட்டுக்கோட்டை சாலை, புதுக்கோட்டை சாலை, பேராவூரணி சாலையில் உள்ள காய்கறி மார்க்கெட் பகுதியில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள், இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் என முக கவசம் அணியாதவர்களிடம் நகராட்சி சுகாதாரத்துறையினர் ரூ.100 அபராதம் விதித்து, வசூல் செய்தனர். அறந்தாங்கி பகுதியில் முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து இதுவரை ரூ.85 ஆயிரம் அபராதமாக வசூல் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். இதற்கான முன்னேற்பாடுகளில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
கோட்டைப்பட்டினம்:
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளங்களில் இருந்து சுமார் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல் மாதம் 14-ந் தேதி முதல் ஜூன் மாதம் 15-ந் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மூலம் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால் விசைப்படகுகள் மூலம் கடலுக்கு சென்று மீன்பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து வழக்கம்போல் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. அதற்கு முன்பிருந்தே விசைப்படகுகள் கடலுக்கு செல்லாததால், மீன்பிடி தடைக்கால நாட்களை குறைத்து, கடந்த 1-ந் தேதி முதல் விசைப்படகுகள் மூலம் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இருப்பினும் ஊரடங்கு சமயத்தில் வெளியூர் சென்ற மீனவர்கள், தாங்கள் தொழில் செய்யும் பகுதிக்கு வராததாலும், மீனவர்கள் பிடித்து வரும் இறாலை வாங்குவதற்கு ஏற்றுமதி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் வராததாலும், புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடந்த 1-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இந்நிலையில் நாளை(சனிக்கிழமை) முதல் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். நீண்டநாட்களுக்கு பின்னர் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதால், அதற்கான முன்னேற்பாட்டு பணிகளில் மீனவர்கள் நேற்று ஈடுபட்டனர். இதில் தங்கள் விசைப்படகுகளை தண்ணீர் ஊற்றியும், கிருமி நாசினி தெளித்தும் சுத்தம் செய்தனர்.
மேலும் மீன்பிடிக்க தேவையான வலை, ஐஸ்பெட்டி, டீசல் போன்றவற்றை கடற்கரையில் இருந்து சிறிய படகு மூலம் எடுத்துச் சென்று கடலுக்குள் நங்கூரம் இட்டு நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகளில் ஏற்றினர். பல மீனவர்கள் தங்களின் விசைப்படகுகளுக்கு மாலை அணிவித்து சிறப்பு வழிபாடுகள் செய்தனர். மேலும் ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் கடற்கரையில் மீனவர்கள் தங்கள் வலைகளை சரிசெய்தும், விசைப்படகின் உதிரிபாகங்களான பலகை போன்றவற்றை பொறுத்தியும் வருகின்றனர்.
இது குறித்து ஜெகதாபட்டினம் விசைப்படகு மீனவர்கள் கூறுகையில், வழக்கமாக மீன் தடை காலத்தில் எங்களது விசைப்படகுகளை கரைக்கு ஏற்றி, பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், படகுகளில் முழுமையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. இருப்பினும் அத்தியாவசிய பணிகளை மேற்கொண்டோம். கொரோனா பாதிப்பால் படகுகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்துள்ளோம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளங்களில் இருந்து சுமார் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல் மாதம் 14-ந் தேதி முதல் ஜூன் மாதம் 15-ந் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மூலம் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால் விசைப்படகுகள் மூலம் கடலுக்கு சென்று மீன்பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து வழக்கம்போல் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. அதற்கு முன்பிருந்தே விசைப்படகுகள் கடலுக்கு செல்லாததால், மீன்பிடி தடைக்கால நாட்களை குறைத்து, கடந்த 1-ந் தேதி முதல் விசைப்படகுகள் மூலம் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இருப்பினும் ஊரடங்கு சமயத்தில் வெளியூர் சென்ற மீனவர்கள், தாங்கள் தொழில் செய்யும் பகுதிக்கு வராததாலும், மீனவர்கள் பிடித்து வரும் இறாலை வாங்குவதற்கு ஏற்றுமதி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் வராததாலும், புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடந்த 1-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இந்நிலையில் நாளை(சனிக்கிழமை) முதல் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். நீண்டநாட்களுக்கு பின்னர் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதால், அதற்கான முன்னேற்பாட்டு பணிகளில் மீனவர்கள் நேற்று ஈடுபட்டனர். இதில் தங்கள் விசைப்படகுகளை தண்ணீர் ஊற்றியும், கிருமி நாசினி தெளித்தும் சுத்தம் செய்தனர்.
மேலும் மீன்பிடிக்க தேவையான வலை, ஐஸ்பெட்டி, டீசல் போன்றவற்றை கடற்கரையில் இருந்து சிறிய படகு மூலம் எடுத்துச் சென்று கடலுக்குள் நங்கூரம் இட்டு நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகளில் ஏற்றினர். பல மீனவர்கள் தங்களின் விசைப்படகுகளுக்கு மாலை அணிவித்து சிறப்பு வழிபாடுகள் செய்தனர். மேலும் ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் கடற்கரையில் மீனவர்கள் தங்கள் வலைகளை சரிசெய்தும், விசைப்படகின் உதிரிபாகங்களான பலகை போன்றவற்றை பொறுத்தியும் வருகின்றனர்.
இது குறித்து ஜெகதாபட்டினம் விசைப்படகு மீனவர்கள் கூறுகையில், வழக்கமாக மீன் தடை காலத்தில் எங்களது விசைப்படகுகளை கரைக்கு ஏற்றி, பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், படகுகளில் முழுமையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. இருப்பினும் அத்தியாவசிய பணிகளை மேற்கொண்டோம். கொரோனா பாதிப்பால் படகுகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்துள்ளோம்.
நாங்கள் வழக்கமாக 24 மணி நேரம் கடலில் தொழில் செய்வோம். ஆனால் தற்போது ஏற்றுமதி நிறுவனங்களில் பணியாற்றிய வெளிமாநிலத்தவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதாலும், விமான சேவை இல்லாததால், வெளிநாடுகளுக்கு கடல் உணவுகளை முழுமையாக ஏற்றுமதி செய்ய முடியாததாலும், தற்போது ஏற்றுமதி நிறுவனங்களின் வேண்டுகோளை ஏற்று கடலில் 12 மணி நேரம் மட்டுமே தொழில் செய்ய முடிவு செய்துள்ளோம்.
அதன்படி நாளை(சனிக்கிழமை) பகல் 1 மணிக்கு ஜெகதாபட்டினம் கடற்கரையில் இருந்து விசைப்படகுகள் கடலுக்கு புறப்பட்டு செல்லும். மீன்களை பிடித்துக் கொண்டு, ஞாயிற்றுக்கிழமை காலை மீனவர்கள் கரை திரும்புவார்கள். இவ்வாறு 12 மணி நேரம் மட்டும் தொழில் செய்வதால் எங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும், என்றனர்.
புதுக்கோட்டையில் காவல்நிலையத்தை மாமியார் வீட்டோடு ஒப்பிட்டு டிக்டாக் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் செம்பட்டிவிடுதி காவல்நிலைய போலீசார் கடந்த 3-ந்தேதி வாகன சோதனையில் ஈடுபட்ட போது வெள்ளாளவ் விடுதியைச் சேர்ந்த பாலைய என்ற வாலிபர் முக கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்ததால் போலீசார் அவரின் வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை ஒப்படைக்க ஜாமீன்தாரர் 2 பேரை அழைத்து வருமாறு கூறியுள்ளனர்.
அதன்படி பாலையா தனது நண்பர்களான நெருஞ்சிபட்டியைச் சேர்ந்த வெற்றிவேல் மற்றும் மகேந்திரனை ஜாமீன் கையெழுத்து போடுவதற்கான காவல்நிலையம் அழைத்து வந்தார். ஜாமீன் கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வந்த வெற்றிவேல் டிக் டாக் வீடியோ ஒன்றை பதிவு செய்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அந்த காவல்நிலையத்தை மாமியார் வூட்டோடு ஒப்பிடும் வகையில் வசனங்கள் இடம்பெற்று இருந்தது.
இதனை தொடர்ந்து காவல் நிலையத்தை தவறாக சித்தரித்து டிக் டாக் வீடியோ பதிவிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்ட நெருஞ்சிப்பட்டியைச் சேர்ந்த வெற்றிவேலையும் வீடியோ பதிவு செய்த அவரது நண்பர் மகேந்திரன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் செம்பட்டிவிடுதி காவல்நிலைய போலீசார் கடந்த 3-ந்தேதி வாகன சோதனையில் ஈடுபட்ட போது வெள்ளாளவ் விடுதியைச் சேர்ந்த பாலைய என்ற வாலிபர் முக கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்ததால் போலீசார் அவரின் வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை ஒப்படைக்க ஜாமீன்தாரர் 2 பேரை அழைத்து வருமாறு கூறியுள்ளனர்.
அதன்படி பாலையா தனது நண்பர்களான நெருஞ்சிபட்டியைச் சேர்ந்த வெற்றிவேல் மற்றும் மகேந்திரனை ஜாமீன் கையெழுத்து போடுவதற்கான காவல்நிலையம் அழைத்து வந்தார். ஜாமீன் கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வந்த வெற்றிவேல் டிக் டாக் வீடியோ ஒன்றை பதிவு செய்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அந்த காவல்நிலையத்தை மாமியார் வூட்டோடு ஒப்பிடும் வகையில் வசனங்கள் இடம்பெற்று இருந்தது.
இதனை தொடர்ந்து காவல் நிலையத்தை தவறாக சித்தரித்து டிக் டாக் வீடியோ பதிவிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்ட நெருஞ்சிப்பட்டியைச் சேர்ந்த வெற்றிவேலையும் வீடியோ பதிவு செய்த அவரது நண்பர் மகேந்திரன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டையில் கள்ளநோட்டு அச்சடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் கீழ 3-ம் வீதி பெருமாள் கோவில் அருகே உள்ள சந்தையில் காய்கறிகள் வாங்க வந்த 3 பேர், ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டை கொடுத்து சென்றதாக கணேஷ்நகர் போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் அழகம்மாள் தலைமையில் போலீசார் நேற்று காலை கணேஷ்நகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குறிப்பிட்ட பதிவெண் கொண்ட காரை மடக்கி பிடித்தனர். பின்னர் காரில் இருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் புதுக்கோட்டை கே.எல்.கே.எஸ்.நகரை சேர்ந்த ஜெயராஜ் (வயது 52), பனையப்பட்டியை சேர்ந்த பழனியப்பன் (53), காந்திநகர் 6-ம் வீதியை சேர்ந்த வேலு (50) ஆகியோர் என தெரிந்தது. மேலும் ஜெயராஜ் கள்ளநோட்டுகளை அச்சடித்து பழனியப்பன், வேலு ஆகியோர் மூலம் மாற்ற முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், ஜெயராஜ், புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை வாங்கி வந்து புதுக்கோட்டையில் அரசு மதுபான கடை பார்களுக்கு வினியோகம் செய்த வழக்கில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கைதானவர். அவர் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அங்கு ஏற்கனவே கள்ளநோட்டு வழக்கில் கைதான ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஜெயராஜ் சிறையில் இருந்து வெளியே வந்ததும், கள்ளநோட்டு அச்சடிக்கும் தொழிலை தொடங்க முற்பட்டார். அதேநேரத்தில் ஏற்கனவே சிறையில் பழக்கமான நபரும் ஜாமீனில் வெளியே வந்தார். இதையடுத்து 2 பேரும் சேர்ந்து புதுக்கோட்டையில் ஒரு அறை எடுத்து கள்ளநோட்டுகளை அச்சடிக்க தொடங்கி உள்ளனர். ரூ.50, ரூ.500, ரூ.2 ஆயிரம் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டுள்ளனர் என்றனர்.
கைதான 3 பேரிடம் இருந்து கத்தை, கத்தையாக கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அதனை தயாரிக்க பயன்படுத்திய எந்திரங்களும், கணினிகளும் கைப்பற்றப்பட்டது. மேலும் அவர்கள் பயன்படுத்தி வந்த காரையும் பறிமுதல் செய்தனர். மொத்தம் ரூ.7 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஏற்கனவே மார்க்கெட்டில் ஒரு 2 ஆயிரம் ரூபாய்கள்ளநோட்டு சிக்கியிருந்தது. கைதான 3 பேரையும் சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
புதுக்கோட்டையில் கீழ 3-ம் வீதி பெருமாள் கோவில் அருகே உள்ள சந்தையில் காய்கறிகள் வாங்க வந்த 3 பேர், ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டை கொடுத்து சென்றதாக கணேஷ்நகர் போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் அழகம்மாள் தலைமையில் போலீசார் நேற்று காலை கணேஷ்நகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குறிப்பிட்ட பதிவெண் கொண்ட காரை மடக்கி பிடித்தனர். பின்னர் காரில் இருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் புதுக்கோட்டை கே.எல்.கே.எஸ்.நகரை சேர்ந்த ஜெயராஜ் (வயது 52), பனையப்பட்டியை சேர்ந்த பழனியப்பன் (53), காந்திநகர் 6-ம் வீதியை சேர்ந்த வேலு (50) ஆகியோர் என தெரிந்தது. மேலும் ஜெயராஜ் கள்ளநோட்டுகளை அச்சடித்து பழனியப்பன், வேலு ஆகியோர் மூலம் மாற்ற முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், ஜெயராஜ், புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை வாங்கி வந்து புதுக்கோட்டையில் அரசு மதுபான கடை பார்களுக்கு வினியோகம் செய்த வழக்கில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கைதானவர். அவர் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அங்கு ஏற்கனவே கள்ளநோட்டு வழக்கில் கைதான ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஜெயராஜ் சிறையில் இருந்து வெளியே வந்ததும், கள்ளநோட்டு அச்சடிக்கும் தொழிலை தொடங்க முற்பட்டார். அதேநேரத்தில் ஏற்கனவே சிறையில் பழக்கமான நபரும் ஜாமீனில் வெளியே வந்தார். இதையடுத்து 2 பேரும் சேர்ந்து புதுக்கோட்டையில் ஒரு அறை எடுத்து கள்ளநோட்டுகளை அச்சடிக்க தொடங்கி உள்ளனர். ரூ.50, ரூ.500, ரூ.2 ஆயிரம் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டுள்ளனர் என்றனர்.
கைதான 3 பேரிடம் இருந்து கத்தை, கத்தையாக கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அதனை தயாரிக்க பயன்படுத்திய எந்திரங்களும், கணினிகளும் கைப்பற்றப்பட்டது. மேலும் அவர்கள் பயன்படுத்தி வந்த காரையும் பறிமுதல் செய்தனர். மொத்தம் ரூ.7 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஏற்கனவே மார்க்கெட்டில் ஒரு 2 ஆயிரம் ரூபாய்கள்ளநோட்டு சிக்கியிருந்தது. கைதான 3 பேரையும் சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.






