என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது
    • விண்ணப்பங்கள் பெற்று உபகரணங்கள் வழங்கினார்.

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்தும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டம் மூலம் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு ஒன்றிய ஆணையர் தங்கராசு தலைமைவகித்தார். கிராம ஊராட்சி ஆணையர் குமரன் முன்னிலைவகித்தார். சமூகபாதுகாப்புத்திட்ட தாசில்தார் பழனிச்சாமி முகாமினை தொடங்கிவைத்து மாற்றுத்திறனாளிகளிடமிருந்து புதிய விண்ணப்பங்கள் பெற்று உபகரணங்கள் வழங்கினார்.

    மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலக செயல்திறன் உதவியாளர் சிவக்குமார், பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் கோகிலா, எழும்பு முறிவு மருத்துவர் நெடுங்கிள்ளி , மனநலமருத்துவர் அஜய், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் பிரவர்த்தனா, கண் மருத்துவர் அகல்யா ஆகியோர் பரிசோதனைசெய்து தேசிய அடையாள அட்டை, மருத்துவ உதவி, தேவையான உபகரணங்கள் எம்எஸ்ஐடி கிட் போன்றவைகள் வழங்கம்பணியில் ஈடுபட்டனர். இதில் துணைஆணையர்கள் கற்புக்கரசி, நல்லமுத்து, ராஜேந்திரன், சிறப்பாசிரியர்கள், தொண்டுநிறுவன பிரிநிதிகள், உள்ளிட்ட ஒன்றிய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • ஆலங்குடியில் தனிநபர் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
    • அதிகாரிகள்அதிரடி நடவடிக்கை

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வெண்ணாவல் குடி வருவாய்க்கு உட்பட்ட குருந்தடிமனை குக்கிராமத்தில் சாலை ஓரத்தில் இருந்த வரத்துவாரி புறம்போக்கு இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து குப்பைகளைக் கொட்டி வைத்திருந்தார். மேலும் அந்த பகுதியினர் அரசு இடத்தின் வழியாக பயன்படுத்தி வந்த பொதுப்பாதையையும் ஆக்கிரமித்திருப்பதாக ஆலங்குடி த ாசில்தாருக்கு புகார் வந்தது.

    இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் சம்பவ இடத்திற்கு சென்ற தாசில்தார் செந்தில்நாயகி, வெண்ணவால்குடி வருவாய் ஆய்வாளர் குப்புசாமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் உதவியாளர்கள், வருவாய் துறை அதிகாரிகள் குப்பையை அகற்றிவிடுமா று தனிநபரை எச்சரித்து விட்டு வந்தனர்.

    ஆனால், அந்த தனிநபர் ஆக்கிரமிப்பில் இருக்கும் குப்பைகளை அகற்ற முன்வராததால், நேற்று சம்பவ இடத்திற்குச் சென்ற வருவாய் து றையினர் ஆலங்குடி போலீசாரின் பாதுகாப்போடு ஆக்கிரமிக்கப்ப ட்ட புறம்போக்கு இடத்தில் இருந்த குப்பைகளையும், ஆக்கிரமிப்புகளையும் அகற்றினர்.

    • நெற் பயிர்களில் ட்ரோன் மூலம் உயிர் உரம் தெளிக்கப்பட்டது
    • வறட்சியை தடுக்க விவசாயிகள் நடவடிக்கை

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் பகுதிகளில் நெற்பயிர்களில் வறட்சியைத் தடுக்கும் விதத்தில் தமிழகத்தில் முதல்முறையாக ட்ரோன் தெளிப்பான் மூலம் உயிர் உரம் தெளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அறந்தாங்கி தொகுதிக்குட்பட்ட ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய பகுதிகளில் 20 ஆயிரத்து 800 ஹெக்டர் பரப்பளவு கொண்ட விளை நிலங்களில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகின்ற நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் போதிய மழையின்றி விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

    முதல் தவணை உரம் இட்டு பயிர்கள் நல்ல வளர்ச்சி அடைந்திருந்த போதிலும் போதிய தண்ணீர் பற்றாக்குறையால் பயிர்கள் ஆங்காங்கே கருகத் தொடங்கியுள்ளன. இதனை சரி செய்யும் விதமாக வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை, தேசிய பயறு வகை ஆராய்ச்சி மையம் சார்பில் பயிர்களுக்கு உயிர் உரம் தெளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.இளஞ்சிவப்பு மெத்தைலோ பாக்டீரியம் எனும் உயிர் உரமானது தெளித்த 15 நாட்கள் வரை தண்ணீர் இன்றி வாடாமல் வளர்ச்சியடையும், அதனைத் தொடர்ந்து மீண்டும் 15 நாட்களுக்கு பிறகு உயிர் உரம் தெளிக்க வேண்டும். உயிர் உரம் தெளிக்கப்படுவதால் வறட்சியிலிருந்து பயிர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    முழுக்க முழுக்க துண்ணுயிர்களால் தயாரிக்கப்படும் உரம் என்பதால் விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் முதல் சோதனை ஓட்டமாக தமிழகத்தில் முதல் முறையாக மீமிசல் பழங்குளம் பகுதியில் 1200 ஏக்கர் பரப்பளவில் உயிர் உரம் அடிக்க திட்டமிட்டு ட்ரோன் தெளிப்பான் மூலம் உயிர் உரம் தெளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    இதில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, வட்டார வேளாண்மை அலுவலர் பிரவீனா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • அன்னவாசல் குறிஞ்சி இல்ல காதணி விழா நடைபெற உள்ளது
    • முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் பங்கேற்பு

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை அன்னவாசல் குறிஞ்சி பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் குறிஞ்சி ஆர். சாலை மதுரம், அன்னவாசல் பேரூராட்சி தலைவர் சாலை பொன்னம்மா மதுரம் தம்பதியரின் மகன் செல்வன் சாலை கோகுலனின் காதணி விழா அன்னவாசல் அம்மா திடலில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை)நடைபெறுகிறது.

    விழாவில் அன்னவாசல் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வி.என். முத்தமிழ்செல்வன் வரவேற்று பேசுகிறார். இதில் முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், மாவட்ட கழக (வடக்கு) செயலாளரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமை தாங்குகிறார். தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் பி.கே. வைரமுத்து, வடக்கு மாவட்ட கழக அவைத் தலைவர் வி. ராமசாமி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா. சின்னத்தம்பி, புதுக்கோட்டை கம்பன் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வி.ஆர். கார்த்திக் தொண்டைமான், ஆர்.நெடுஞ்செழியன், வெங்கடேஸ்வரா கல்வி நிறுவன நிர்வாகி கவிஞர் தங்கம் மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம், மதர் தெரசா கல்வி நிறுவன தாளாளர் ஆர்.சி.உதயகுமார், அன்னவாசல் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் சாம்பசிவம், மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர். சுப்பையா, பாசறை ஒன்றிய செயலாளர் கே. கே. பாலசுப்பிரமணியன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் வி.டி.ஆர். காந்தி ஆகியோர் முன்னிலை வைக்கிறார்கள்.

    மேலும் பல்வேறு நிலைகளில் உள்ள கட்சியின் நிர்வாகிகள், தொழிலதிபர்கள், நண்பர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள் விழாவுக்கான ஏற்பாடுகளை குறிஞ்சி ஆர். சாலை மதுரம், சாலை பொன்னம்மா மதுரம் ஆகியோர் இணைந்து செய்துள்ளனர்.

    • கருவேப்புலாம்பட்டி கிராமத்திற்கு தினசரி பஸ் சேவை வழங்கப்படும் என்ற பொதுமக்களிடம் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
    • பணிமனை முற்றுகை போராட்டம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கருவேப்புலாம்பட்டி கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பம் வசித்து வருகின்றன.

    இந்நிலையில் ஊருக்கு காலை மற்றும் மாலை என 2 வேளையும் பஸ்கள் இயக்கப்படடது. காலை வரும் பேருந்தில் அதிக கூட்டம் இருப்பதால் நாள்தோறும் பள்ளி , கல்லூரி மாணவர்களும், வேலைக்குச் செல்லும் மக்கள் அதில் பயணிக்காக முடியாமல் அவதி அடைந்து வந்தனர்.

    மேலும் மாலை நேரத்தில் வரும் பேருந்து கடந்து சில நாட்களாக முறையாக இயக்கப்படாமல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வருவதால் இரவு நேரங்களில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து பலமுறை பொன்னமராவதி பேருந்து பணிமனையில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திரண்டு வந்து தினசரி பஸ்களை இயக்க வலியுறுத்தி பொன்னமராவதி போக்குவரத்து பணிமனையை முற்றுகையிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னமராவதி காவல் ஆய்வாளர் தனபாலன் மற்றும் பணிமனை மேலாளர் ஆகியோர் பொதுமக்களிடம் இனிவரும் காலங்களில் முறையாக பேருந்து இயக்கப்படும் என பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அங்கிருந்த மக்கள் கலைந்து சென்றனர்.

    • தெரு நாய்களை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    • பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் திரியும்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சியில், சட்டமன்ற அலுவலகம், காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தி னசரி இந்த அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர்.

    இந்த சூழலில், ஆலங்குடி பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் 48 கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு பணி நிமித்தமாக வந்து செல்கின்றனர்.

    இந்த அலுவலக வளாகத்தில் கூட்டம் கூட்டமாக நாய்கள் கூட்டம் சுற்றி வருகின்றன. இந்த நாய் கூட்டம் வட்டாட்சியர் அலுவலகம் வரும் பொதுமக்களை விரட்டுவதோடு கடிக்கவும் பாய்வதால் பொதுமக்க ள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.

    இரு சக்கர வாகனங்களில் வருவோரை பேருந்து நிலையம் வரை குறைத்துக் கொண்டே துரத்திச் செல்வதால் வட்டாட்சியர் அலுவலக வளாகத்திற்கு வரவே பொதுமக்கள் அஞ்சி நடுங்கும் சூழல் ஏற்பட் டுள்ளது. பொதுமக்கள் மட்டும் இன்றி, வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரி யும் ஊழியர்கள் உட்பட அனைவரையும் நாய்கள் தொந்தரவு செய்து வருகின்றன.

    நாய் பிரச்சினைக்கு ஆலங்குடி பேரூராட்சி நிர்வாகம் விரைந்து செ யல்பட்டு நிரந்தர தீர்வு ஏற்படுத்தித் தரவேண்டு என பொதுமக்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள் எதிர்பார்ப்புடன் காத் திருக்கின்றனர்.

    • சிறு வயது முதலே பளுதூக்கும் போட்டியில் ஆர்வம் கொண்டிருந்த லோகப்பிரியா மாவட்ட, மாநில அளவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார்.
    • கல்லுக்காரன்பட்டியில் லோகப்பிரியாவின் தந்தை மறைவால் வெற்றியை கொண்டாட முடியாமல் கிராம மக்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    கந்தர்வகோட்டை:

    காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகள் நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் நடைபெற்று வருகிறது. இதில் வலுதூக்கும் போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாட்டிலிருந்து 11 வீரர்கள்-வீராங்கனைகள் சென்றுள்ளனர்.

    தமிழக அரசு சார்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்களுக்கு வாழ்த்து கூறி அனுப்பி வைத்திருந்தார். கடந்த நவம்பர் மாதம் 28-ந்தேதி தொடங்கிய போட்டிகள், வருகிற 4-ந்தேதி வரை நடக்கிறது.

    போட்டியில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த 11 பேரில் 10-க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு பதக்கங்களை குவித்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். இதில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வீராங்கனை லோகப்பிரியாவும் ஒருவர் ஆவார்.

    கந்தர்வகோட்டை அருகே கல்லுக்காரன்பட்டியை சேர்ந்த செல்வமுத்து-ரீட்டா மேரி தம்பதியின் மூத்த மகளான லோகப்பிரியா தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள கரம்பயம் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இதற்காக பெற்றோரும் தற்போது பட்டுக்கோட்டையில் வசித்து வந்தனர். சிறு வயது முதலே பளுதூக்கும் போட்டியில் ஆர்வம் கொண்டிருந்த அவர் மாவட்ட, மாநில அளவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார்.

    தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்ற லோகப்பிரியா நேற்று நடந்த பளுதூக்கும் போட்டியில் 52 கிலோ எடை பிரிவில், 350 கிலோ எடையை தூக்கி லோகேஸ்வரி தங்கப்பதக்கம் வென்றார். இதற்கிடையில் லோகேஸ்வரியின் தந்தை செல்வமுத்து நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் மாரடைப்பால் இறந்தார்.

    தந்தை இறந்த செய்தியை மகளுக்கு தெரிவித்தால் மகள் போட்டியில் தோல்வி அடைந்து விடுவார் என்று எண்ணிய அவரது தாய் ரீட்டா மேரி தனது மகளுக்கு தந்தை இறந்த செய்தியை தெரிவிக்க வேண்டாம் என கூறிவிட்டார். தங்கம் வென்ற அவர் வெற்றி மகிழ்ச்சியில் இருந்து வந்தார்.

    இதற்கிடையே அவருக்கு அவரது தந்தை இறந்த செய்தி தெரிவிக்கப்பட்டது. தங்கம் வென்ற மகிழ்ச்சி 5 நிமிடம் கூட நீடிக்கவில்லை. அவரது தந்தை இறந்த செய்தி பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இதனால் அவர் அங்கு கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதையடுத்து போட்டிக்கு சென்ற வீரர்கள் அவரை அரவணைத்து ஆறுதல் கூறி தேற்றினர்.

    அப்போது வீராங்கனை லோகப்பிரியா கூறுகையில், தங்கம் வாங்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த தந்தை, நான் தங்கம் வாங்கிதைப் பார்க்க கூட இல்லாமல் போய்விட்டாரே. தங்கத்தை வென்று விட்டேன், தந்தையை இழந்து விட்டேன் என துடித்தார். இது அங்கிருந்தவர்களின் மனதை கலங்கவைத்தது.

    அதேவேளையில், அவர் பிறந்த மண்ணான கல்லுக்காரன்பட்டியில் லோகப்பிரியாவின் தந்தை மறைவால் வெற்றியை கொண்டாட முடியாமல் கிராம மக்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இதற்கிடையே இறந்த செல்வமுத்துவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. வறுமையில் வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள் வேலைவாய்ப்பு வழங்க முன்வரவேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வீட்டின் கதவை உடைத்து 9 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    • வயலில் களையெடுக்க சென்று விட்டனர்

    புதுக்கோட்டை:

    அறந்தாங்கி அருகே திட்டக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 35). இவரது வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் நேற்று அவருக்கு சொந்தமான வயலில் களையெடுக்க சென்று விட்டனர்.

    இந்நிலையில் ராமச்சந்திரன் வீட்டின் வழியாக சென்றவர்கள் அவர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து ராமச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அவர் வீட்டிற்கு விரைந்து வந்தார்.

    பின்னர் அவர் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 9 பவுன் நகையை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் நாகுடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் கதவை உடைத்து 9 பவுன் நகையை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்."

    • நமணசமுத்திரத்தில் மழைக்கால மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் நடந்தது

    புதுக்கோட்டை

    தமிழக முதலமைச்சரின் மருத்துவ காப்பீடுதிட்டத்தின் கீழ் மழைக்கால மருத்துவ முகாம் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தலின்படி, டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் கே.ஹெச்.சலீம் வழிகாட்டுதலின்படி டீம் மருத்துவமனை சார்பில் புதுக்கோட்டை, நமணசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.

    முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் முத்துலெட்சுமி தலைமை தாங்கினார். முகாமில் தற்போதைய காலக்கட்டத்தில் நிலவி வரும் நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை பற்றியும், டெங்கு, பன்றிக்காய்ச்சல் போன்ற வைரஸ் காய்ச்சலால் ஏற்படும் சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, வயிறுவலி, எலும்புவலி, மயக்கம் ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவனைகளை அனுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் குடிநீரை காய்ச்சி பருக வேண்டும், கை, கால்களை சுத்தமாக அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும், சத்துநிறைந்த பழங்கள், காய்கறிகளை உண்ண வேண்டும், அதிக எண்ணெயில் வறுத்து, பொரித்த உணவுகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும், மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் முககவசம் அணியவும், சிறிதளவு சமூக இடைவெளியுடன் இருந்தால் நோய்த் தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கலாம் என்று மருத்துவர் விளக்கி கூறினார். டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இருக்கை மருத்துவர் சூர்யபிரகாஷ் அனைவருக்கும் பரிசோதனையும் ஆலோசனையும் வழங்கினார். முகாமில் இரத்த அழுத்தம், உயரம், எடை, உடல் வெப்ப அளவு போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டது.

    இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை டீம் மருத்துவமனையின் பொது மேலாளர் ஜோசப் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் மதுபாலன் செய்திருந்தனர். நிகழ்ச்சி முடிவில் காப்பீடு திட்ட ஒருங்கினைப்பாளர் பாண்டியராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.

    • மாணவ- மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது
    • வன உயிரின வார விழா போட்டிகளில் வெற்றி பெற்ற

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், வனத்துறையின் சார்பில், வன உயிரின வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்.

    தமிழ்நாடு வனத்துறையின் மூலம் அக்டோபர் முதல் வாரத்தில் கொண்டாடப்படும் 'வன உயிரின வார விழா" முன்னிட்டு 2022-ஆம் ஆண்டிற்கான வன உயிரின வார விழா போட்டிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் களுக்கு இடையே நடத்தப்பட்டது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து அதிகளவு மாணவ, மாணவியர்கள் கலந்துக்கொண்டனர். இப்போட்டியானது மாணவர்கள் வனத்துறை தொடர்பான புரிந்துணர் களையும், அவர் களின் பங்கெடுப்புகள் குறித்தும் ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வாரத்தில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் நடத்தப்பட்ட போட்டிகளில் கலந்துக்கொண்டு வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு இன்றையதினம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்கள்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் பிரபா, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, மாவட்ட கல்வி ஆய்வாளர்கள் குரு.மாரிமுத்து, சாலைசெந்தில், புதுக்கோட்டை வனக்கோட்ட அனைத்து வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக்காப்பாளர் கள் மற்றும் வன ஊழியர்கள் கலந்துகொண்டனர். 

    • மாணவ, மாணவியர்களுக்கான கலை நிகழ்ச்சி ேபாட்டிகள் நடைபெற்றன.
    • உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மீமிசலில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாணவ மாணவியர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. மீமிசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், வட்டார மேற்பார்வையாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெகதீசன் முன்னிலை வகித்தார்.விழாவில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளோடு சக மாணவர்கள் இணைந்து நடனம், பாட்டு, கவிதைகள் வாசிப்பது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விழாவில் ஒன்றியக்குழு உறுப்பினர் ரமேஷ், ரோட்டரி சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக விழாவை முன்னிட்டு மாணவ, மாணவியர்களுக்கான நடைபெற்ற ஓட்டப்பந்தயம், பாட்டிலில் நீர் நிரப்புதல், முறுக்கு கடித்தல், இசை நாற்காலி, பந்து தூக்கி எறிதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், நினைவுக்கேடயம், பரிசுகள் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர் சிறப்பு பயிற்றுனர்கள், இயன்முறை மருத்துவர் ஆகியோர் செய்திருந்தனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் குணசீலன் கூறினார்.

    • கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்கப்பட்டது
    • மீட்பு குழுவினருக்கு பொதுமக்கள் பாராட்டு

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே உள்ள எம்.ராசியமங்கலம் பகுதியில் வசிப்பவர் ஜோதிவேல். இவருக்கு சொந்தமான 80 அடி ஆழம் உள்ள தண்ணீரில்லா கிணற்றில், அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு விழுந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு நிலைய மீட்பு குழுவினர், கிணற்றில் இறங்கி ஆட்டை உயிருடன் மீட்டு, உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். பொதுமக்கள் மீட்பு குழுவினருக்கு நன்றி தெரிவித்தனர்.

    ×