search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "FERTILIZE"

    • நெற் பயிர்களில் ட்ரோன் மூலம் உயிர் உரம் தெளிக்கப்பட்டது
    • வறட்சியை தடுக்க விவசாயிகள் நடவடிக்கை

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் பகுதிகளில் நெற்பயிர்களில் வறட்சியைத் தடுக்கும் விதத்தில் தமிழகத்தில் முதல்முறையாக ட்ரோன் தெளிப்பான் மூலம் உயிர் உரம் தெளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அறந்தாங்கி தொகுதிக்குட்பட்ட ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய பகுதிகளில் 20 ஆயிரத்து 800 ஹெக்டர் பரப்பளவு கொண்ட விளை நிலங்களில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகின்ற நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் போதிய மழையின்றி விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

    முதல் தவணை உரம் இட்டு பயிர்கள் நல்ல வளர்ச்சி அடைந்திருந்த போதிலும் போதிய தண்ணீர் பற்றாக்குறையால் பயிர்கள் ஆங்காங்கே கருகத் தொடங்கியுள்ளன. இதனை சரி செய்யும் விதமாக வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை, தேசிய பயறு வகை ஆராய்ச்சி மையம் சார்பில் பயிர்களுக்கு உயிர் உரம் தெளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.இளஞ்சிவப்பு மெத்தைலோ பாக்டீரியம் எனும் உயிர் உரமானது தெளித்த 15 நாட்கள் வரை தண்ணீர் இன்றி வாடாமல் வளர்ச்சியடையும், அதனைத் தொடர்ந்து மீண்டும் 15 நாட்களுக்கு பிறகு உயிர் உரம் தெளிக்க வேண்டும். உயிர் உரம் தெளிக்கப்படுவதால் வறட்சியிலிருந்து பயிர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    முழுக்க முழுக்க துண்ணுயிர்களால் தயாரிக்கப்படும் உரம் என்பதால் விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் முதல் சோதனை ஓட்டமாக தமிழகத்தில் முதல் முறையாக மீமிசல் பழங்குளம் பகுதியில் 1200 ஏக்கர் பரப்பளவில் உயிர் உரம் அடிக்க திட்டமிட்டு ட்ரோன் தெளிப்பான் மூலம் உயிர் உரம் தெளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    இதில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, வட்டார வேளாண்மை அலுவலர் பிரவீனா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • உரங்களை மற்ற இடுபொருட்களுடன் இணைத்து விற்றால் உரிமம் ரத்து என தெரிவித்துள்ளார்
    • வேளாண்மை இணை இயக்குநர் எச்சரிக்கை

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது சம்பா சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சம்பா சாகுபடிக்கு தேயைhன உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் யூரியா 3248 மெட்ரிக் டன்கள், டி.ஏ.பி 1289 மெட்ரிக் டன்கள், பொட்டாஷ் 845 மெட்ரிக் டன்கள், காம்ளக்ஸ் உரங்கள் 5323 மெட்ரிக் டன்கள் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 443 மெட்ரிக் டன்கள் உரம் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    விவசாயிகளின் தேவைக்கு அதிகமாகவும், ஒரே நபரு க்கு அதிக அளவு உரமும் வழங்கக் கூடாது. குறிப்பிட்ட விவசாயியின் பெயரில் அதிகபடியாக உர விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சில்லரை விற்பனை உரிமம் இரத்து செய்யப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    உர விற்பனையாளர்கள் உர உரிமத்தில் அனுமதி பெறாத இடங்களில் உரத்தினை இருப்பு வைப்பதும், உரிமத்தில் அனுமதி பெறாத நிறுவனங்களின் உரங்களை கொள்முதல் செய்வதும் கூடாது. விவசாயம் மேற்கொள்ளாதவர்களுக்கு உரம் விற்பனை செய்யக் கூடாது. எனவே, திடீர் ஆய்வு செய்யும் போது மேற்காணும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உர விற்பனையாளர்களின் உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

    உரங்களுடன் வேறு இடுபொருட்களை இணைத்து விற்பனை செய்தாலோ அல்லது உர மூட்டையின் மேல் அச்சிடப்பட்ட அதிகபட்ச விற்பனை விலைக்கு மேல் விற்பனை செய்யப்பட்டாலோ சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை அல்லது மாவட்ட உரக் கண்காணிப்பு மையத்தை 04322-221666 என்ற எண்ணில் விவசாயிகள் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

    ×