என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை.
புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் திருக்கோயில் மாசிப் பெருவிழா,பிப்ரவரி 26ம் தேதி தொடங்கியது. அன்று துவங்கிய பூச்சொரிதல் விழாவின் ஒருபகுதியாக பக்தர்களால் முத்துமாரியம்மன் திருக்கோயிலுக்கு வழங்கப்பட்ட பூக்கள் அனைத்தும் அம்பாளுக்கு சாத்தப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு பூக்களைப் பிரசாதமாக வழங்கப்பட்டது.
அதன் பிறகு தேர் திருவிழா நடைபெற்றது. சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்துகொண்டு, தேரினை வடம்பிடித்து இழுத்தார். இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி , புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியா; முருகேசன், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், உதவி ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) அனிதா, வட்டாட்சியர் விஜயலெட்சுமி, அறங்காவலர்கள் குழுத்த லைவர் தவ.பாஞ்சாலன், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி, எஸ்.வி.எஸ். ஹீரோ மோட்டார்ஸ் நிர்வாக இயக்குநர் எஸ்.வி.எஸ்.ஜெயக்குமார் , தங்கம் கிளினிக் டாக்டர் ராமமூர் த்தி, ஸ்ரீ பார்வதி ஜுவல்லர்ஸ் உரிமையாளர் முருகராஜ், 9ஏ நத்தம்பண்ணை ஊராட்சி மன்ற தலைவர் ஏவிஎம்.பாபு, அண்ணாமலை ஆட்டோ ஏஜென்சி ஐயப்பன், பாஜக மேற்கு மாவட்ட தலைவா; விஜயகுமார், முன்னாள் தொழில்துறை பிரிவு மாநில செலயாளர் சரவணன், கவுன்சிலர்கள் காந்திமதி பிரேம்ஆனந்த், இராசு.க.கவிவேந்தன், ஸ்ரீ புவனேஸ்வரி ஜுவல்லர்ஸ் உரிமையாளர் வெங்கடேசன், விவிஎஸ்பி தங்கமாளிமை உரிமையாளா; சோலைசுப்பிரமணியன், கிங்ஸ் கேட்டரி ங் தாளாளர் சுந்தரவேல், குமரமலை ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.வி.செல்வராஜ், நெடுஞ்சாலை மற்றும் பொதுபணித்துறை அரசு முதல் நிலை ஒப்பந்தகாரர் எஸ்.வி. பெருமாள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- டிரைவர், கண்டக்டர் ஓட்டம் பிடித்தனர்
- நடுவழியில் பயணிகள் அவதி
பொன்னமராவதி,
புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு தனியார் பஸ் புறப்பட்டது. அந்த பஸ் பொன்னமராவதி சுந்தர சோழபுரம் ஜே.ஜே. நகர் பகுதியில் சென்ற போது அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிபத்து ஏற்பட்டது.இதில் கொன்னையூரை சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன் (வயது 65).அவரது மனைவி ஆனந்தி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். குணசேகரனின் கை, கால் தோள்பட்டையிலும் அவரது மனைவிக்கு காது மற்றும் தலைப்பகுதியிலும் காயம் ஏற்பட்டது.உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து காயப்படைந்த தம்பதியினரை மீட்டு ஆட்டோ மூலமாக சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய அந்த தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோர் கிராம மக்கள தங்களை தாக்கி விடுவார்கள் என பயந்து பேருந்தை விட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர்.அப்போது அந்த பஸ்ஸில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.அவர்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். பின்னர் அரை மணி நேரம் கழித்து அந்த வழியாக வந்த அரசு பஸ்ஸில் ஏறி பொன்னமராவதி புறப்பட்டு சென்றனர். இந்த விபத்து குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்ப வில்லை
- கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானார்
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள கொத்தகோட்டை ஊராட்சி தெற்கு தோப்புப பட்டியை சேர்ந்தவர் முத்துக்கருப்பன் மகள் அஸ்வதி. இவர் புதுக்கோட்டையில் உள்ள அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் கல்லூரி சென்ற அஸ்வதி மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நட்பு வட்டாரங்களில் தேடியும் அஸ்வதி கிடைக்காததால், முத்துகருப்பன் கொடுத்த புகாரி ன் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நதியா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடிவருகின்றனர்.
- அமைச்சர்கள் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீரமங்கலம் பேரூராட்சி தி.மு.க. சார்பில் கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு முதலமைச்சரின் 70-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், தி.மு.க. மாநில செய்தி தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்ட்டைன் ரவீந்திரன் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் பேசும் போது.கடந்த 10 ஆண்டுகளாக மின் இணைப்பு கேட்டு 4, லட்சத்து 25,000 பேர் காத்திருந்தனர். ஒரு விவசாயிகளுக்குக் கூட இலவச மின்சாரம் கொடுக்க வில்லை. கடந்த ஆட்சியில் விவசாயிகளுக்கு தக்கல் முறையில் பணம் கட்டி காத்திருக்க சொன்னார்கள் ஆனாலும் மின் இணைப்பு வழங்கப்பட வில்லை. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சராக மு. க. ஸ்டாலின் பொறுப்பு ஏற்றார்.அவரது 20 மாத ஆட்சியில் ஒன்னறைலட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்படி எல்லாருக்கும் எல்லாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் சிறந்த ஆட்சியை திராவிட மாடல் ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார் என்றார்.பின்னர் அமைச்சர் ரகுபதி பேசும் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது,இந்தியாவில் மாற்றம் வந்தால் தான் மக்களுக்கு நல்ல நிலைமை உண்டாகும். 2024-ம் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 40 இடங்களையும் ெவன்று மு. க. ஸ்டாலின் இந்தியாவினு டைய பிரதமரை நிர்ணயிக்கக்கூடிய ஒரு சக்தியாக இருப்பார். அது தமிழனுக்கும் பெருமை தமிழ்நாட்டிற்கு பெருமை. அத்தகைய முதலமைச்சர் நாம் பெற்றிருக்கின்றோம்.கடிகாரம் முள்ளுக்கு கூட ஓய்வு கிடைக்கும் ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் ஓய்வில்லாமல் பல்வேறு பணிகளை செய்து வருகிறார் என்று தெரிவித்தார்.
- அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்
- ந.புதூரில் புதிய ரேஷன் கடை திறக்கப்பட்டது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ந.புதூர் நியாயவிலைக் கடையினை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார்.பின்னர் அவர் பேசும் போது,தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அதன்படி பொதுமக்களுக்கு தேவையான இடங்களில் புதிய நியாயவிலை கடைகள் திறந்து வைப்பதன் மூலம் வீண் அலைச்சலை தவிர்ப்பதுடன் தரமான உணவு பொருட்களை வழங்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அதன்படி தற்போது திருமயம் அருகே கோட்டூர் ரேஷன் கடையில் இருந்து 519, ரேஷன் கார்டுகளை பிரித்து, ந.புதூரில் புதிய ரேஷன் கடை அமைக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திரபிரசாத், ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு (எ) சிதம்பரம்ரூபவ் அறந்தாங்கி சரக துணைப்பதிவாளர் ஆறுமுக பெருமாள், துணை பதிவாளர் (பொ.வி.தி) கோபால்ரூபவ் லெம்பலக்குடி, ஊராட்சிமன்றத் தலைவர் பாலு, அறங்காவலர் குழு உறுப்பினர் துரைராஜா மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
- வாராப்பூர் மாசி மக வைர தேரோட்டம் நடைபெற்றது
புதுக்கோட்டை:
வாராப்பூர் பெரிய அய்யனார், பாளையடி கருப்பண்ண சுவாமி கோவில் வைர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டும் இக்கோயிலின் மாசித் திருவிழா கடந்த 3ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து தினமும் மண்டகப்படி நடைபெற்று வந்தது.மார்ச் 11-தேதி பில்லி சோறு எரியும் திருவிழா நடைபெற்றது. முக்கியத் திருவிழாவான மாசி மகத் வைர தேரோட்டத் திருவிழா நடைபெற்றது. மா, பலா ,வாழை என முக்கனிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில், தேரில் சுவாமி வீற்றிருக்க வாணவேடிக்கை, மங்கல இசை முழங்க கோவிலைச் சுற்றி நான்கு வீதிகளிலும் வைரத்தேர் பவனி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.ததேர்திருவிழாவை முன்னிட்டு செம்பட்டிவிடுதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இளம்பெண்கள் மாநாடு
- பள்ளி நேரங்களில் நகரப் பேருந்துகளை அதிகரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
புதுக்கோட்டை,
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட இளம்பெண்கள் மாநாடு புதுக்கோட்டையில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டக்குழு உறுப்பினர் கஸ்தூரி தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் சுமதி மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாணவர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் கார்த்திகாதேவி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எம்.மகாதீர், செயலாளர் ஏ.குமாரவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட புதிய உபகுழுவை அறிமுகப்படுத்தி மாநில பொருளாளர் பாரதி சிறப்புரையாற்றினார். மாவட்ட அமைப்பாளராக சிவஸ்ரீ, துணை அமைப்பாளராக முத்துலெட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக மகாலெட்சுமி வரவேற்க, சிவஸ்ரீ நன்றி கூறினார்.பள்ளி நேரங்களில் பெண்களுக்கான நகரப் பேருந்துகளை அதிகரிக்க வேண்டும். பணியிடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும். சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் பெண்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அனைத்து கல்வி நிலையங்கள் மற்றும் அலுவலகங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் உள் புகார் கமிட்டி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- புதுக்கோட்டையில் தனியார் வேலை வாய்ப்பு முகாமில் பணி நியமன சான்றிதழ் வழங்கப்பட்டது
- 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை கலைஞர்கருணாநிதி அரசு மகளிர்கலைக் கல்லூரியில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக (ம) நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தின. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்எஸ்.ரகுபதி வழங்கினார்.இந்நிகழ்வு மாவட்ட கலெக்டர்கவிதா ராமு, தலைமையில் நடைபெற்றது.பின்னர்சட்டத்துறை அமைச்சர்தெர ிவித்ததாவது, புதுக்கோட்டை மாவட்டத்தில் 3-வது முறையாக நடைபெற்று வரும் இந்த தனியா ர்துறை வேலை வாய்ப்பு முகாமில் உற்பத்தி த்துறை, சேவைத்துறை, சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கான பணியா ளர்களை தேர்தெடுத்தனர். இம்முகாம் மூலமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுமார்2500-க்கும் மேற்பட்ட வேலைநாடுனர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.என்று அவர் பேசினார்.இம்முகாமில், அயல்நா ட்டு வேலைவாய்ப்பிற்கான பதிவு வழிகாட்டல், சுயதொழில், வங்கி கடன் உதவிகள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து பிரத்தியேக அரங்கம் அமைத்து ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்தனர்.இந்நிகழ்வில், மண்டல இணை இயக்குநர்(வேலைவாய்ப்பு) இர.தேவேந்திரன், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர்திலகவதி செந்தில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மோ.மணிகண்டன் (தொ.வ.), பெ.வேல்முருகன், கல்லூரி முதல்வர்பா.புவனேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்எஸ்.உலகநாதன், வட்டாட்சியர் விஜயலெட்சுமி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- 8ம் தேதி வீட்டை விட்டு சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை
- வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்
ஆலங்குடி,
ஆலங்குடி கம்பர் தெருவைச்சேர்ந்த சண்முகராமு மனைவி புவனேஸ்வரி (வயது 33). இவர் தனது மகள் மூன்று வயது உள்ள ஸ்ரீஆசினி பெண் குழந்தையுடன் கடந்த 8-ந்தேதி வீட்டில் இருந்து மாயமானார்.இந்நிலையில் அக்கம் பக்கம் மற்றும் உற்றார் உறவினர்களிடமும் பல்வேறு இடங்களிலும் தேடிப் பார்த்து தாயும் மகளையும் காணவில்லை. இதனைத்தொடர்ந்து புவனேஸ்வரி தந்தை சுப்பிரமணியன் மகன் சண்முக பிரபு ( வயது 45) என்பவர் ஆலங்குடி போலீசில் புகார் மனு கொடுத்தார்.புகார் மனுவை பெற்றுக்கொண்ட ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்குப்பதிவு செய்து காணாமல் போன தாயும் குழந்தையையும் தேடி வருகின்றனர். தாய் தனது மூன்று வயது பெண் குழ ந்தையுடன் வீட்டிலிருந்து காணாமல் போனது ஆலங்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பார்சல் சர்வீஸ் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்
- உடலை கைப்பற்றிய போலீசார், வேனை பறிமுதல் செய்த விசாரணை
ஆலங்குடி,
ஆலங்குடி அருகே உள்ள வேங்கிடகுளம் நடுத்தெருவை சேர்ந்த கரு ப்பையா மகன் பிச்சை (வயது 48 ). இவரது மனைவி வேணி இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இவர் வம்பனில் ஷிவானி ஏஜென்ஸ் சொட்டு நீர் பாசன கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் ஆலங்குடி பட்டுக்கோட்டை சாலையில் உள்ள பூச்சிக்கடை யிலிருந்து ஆலங்குடியை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.அப்போது பின்னால் வந்த பார்சல் சர்வீஸ் சரக்கு வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட பிச்சைஇரத்த காயங்களுடன் சாலையோரம் கிடந்துள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆலங்கு டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து வடகாடு போலீசார் வழக்கு பதிந்து தனியார் பார்சல் சர்வீஸ் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
- புதுக்கோட்டையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பேரணியுடன் நடைபெற்றது
- பெண்கள் முடிவெடுக்கும் இடத்திற்கு முன்னேறி வரவேண்டும் என்று உறுதி
புதுக்கோட்டை,
சிஐடியு,தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம்,அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலச் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் புதுக்கோட்டை யில் உலக மகளிர் தினவிழா பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.கருத்தரங்கில் கலந்து கொண்டு மாதர் சங்க மாநில செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய் சிறப்புரையாற்றினார்.அனைத்திலும் பெண்களுக்கு 50விழுக்காடு இடஒதுக்கீடு வேண்டும். முடிவெடுக்கும் இடத்தில் பெண்கள் இருக்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்பது கிடையாது. ஆண்களுக்கு அதிகமாகவும் பெண்களுக்கு குறைவாகவும் அளித்து வஞ்சிக்கப்படுகிறோம். கேரளாவில் சம வேலைக்கு சமஊதியம்வழங்கும்போது தமிழகத்தில் ஏன் சாத்தியம் இல்லை என்றார்.கருத்தரங்கிற்கு சிஐடியு மாநில செயலாளர் எஸ்.தேவமணி விவசாயத்தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி மாதர் சங்க மாவட்டச்செயலாளர் பி.சுசிலா ஆகியோர் தலைமை வகித்தனார். விவசாயத்தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் எம்.சின்னதுரை எம்எல்ஏ. சிஐடியுமாநில துணைத் தலைவர் எம்.லெட்சுமி ஆகியோர்சி றப்புரையாற்றினர்.விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பொன்னச்சாமி, விதொசமாவட்டப் பொருளாளர் கே.சண்முகம்ரூபவ் சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர்சி.மாரிக்கண்ண, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.மகாதீர், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஜி.கிரிஜா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக புதுக்கோட்டை பேருந்து நிலைத்திலிருந்து கருத்தரங்கம் நடைபெற்ற கே.எம்.மஹால் வரை பேரணி நடைபெற்றது.
- ஆரோக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகை சிறைப்பிடித்து, அதிலிருந்த 4 மீனவர்களையும் கைது செய்தனர்.
- கைதான 16 பேர் மீதும் எல்லைதாண்டி வந்ததாக கூறி வழக்குப்பதிவு செய்தனர்.
அறந்தாங்கி:
தமிழகத்தில் ராமேசுவரம், புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் தினமும் கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறார்கள். விசைப்படகுகள் மட்டுமின்றி நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு சென்று வருகிறார்கள்.
இதற்கிடையே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தபோதும் அவர்களை எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்கள் தொடர்ந்து சிறைப்பிடித்து வருவதோடு, படகுகளையும் பறிமுதல் செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.
அவ்வாறு இதுவரை சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் இருநாட்டு நல்லுறவை பேணும் வகையில் விடுதலை செய்யப்பட்ட போதிலும், மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படவில்லை. இதனால் வாழ்வாதாரம் பாதித்த ஏராளமானோர் மீன்பிடி தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு மத்திய அரசை இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க தொடர்ந்து வற்புறுத்தி வந்தாலும் சிறைப்பிடிப்பு சம்பவங்கள் தொடர் கதையாகவே இருக்கிறது.
இந்த நிலையில் நேற்று கடலுக்கு சென்ற தமிழக மீனவர்கள் 16 பேரை, இரண்டு விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றுள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:-
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து நேற்று காலை 7 மணியளவில் மீன்துறை அலுவலக அனுமதியுடன் 172 விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. இதில் ஆரோக்கியராஜ் (வயது 54) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவர் மற்றும் அசோக் (28), கருப்பு (22), சக்தி (20) ஆகிய 4 பேரும் சென்றிருந்தனர்.
அவர்கள் நள்ளிரவில் சுமார் 12 மணி முதல் 2 மணி வரை இந்திய கடல் எல்லையான நெடுந்தீவை அடுத்த அனலைத்தீவு அருகே வலைகளை விரித்து மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். கரையில் இருந்து சுமார் 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்தபோது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான 3 குட்டி ரோந்து கப்பல்கள் மின்னல் வேகத்தில் வந்தன.
இதைப்பார்த்ததும் மீனவர்கள் அச்சத்தில் தங்களது வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள். ஆனால் அவர்களின் படகுகளை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர் கடலில் விரித்திருந்த வலைகளை அறுத்து சேதப்படுத்தியுள்ளனர். மேலும் மீனவர்களையும் சரமாரியாக தாக்கி விரட்டி அடித்துள்ளனர்.
இதில் ஆரோக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகை சிறைப்பிடித்து, அதிலிருந்த 4 மீனவர்களையும் கைது செய்தனர்.
இதேபோல் நாகப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மற்றொரு விசைப்படகையும் சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர் அதிலிருந்த 12 மீனவர்களையும் கைது செய்தனர். கைதான 16 பேர் மீதும் எல்லைதாண்டி வந்ததாக கூறி வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் அவர்களை இலங்கையில் உள்ள பருத்தித்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் பகுதி மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் அறிந்து சக மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
கடந்த சில மாதங்களாக நிம்மதியாக கடலுக்கு சென்றுவந்த நிலையில் மீண்டும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் நடவடிக்கை மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக மத்திய, மாநில கைதான தமிழக மீனவர்கள் 16 பேரை மீட்கவும், படகுகளை கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.






