என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வளருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது
    • ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றியவர் சுப்பையா. இவர் 2009-ல் பச்சமுத்து என்பவருக்கு ரேஷன் கார்டு வழங்கலாம் என பரிந்துரை செய்வதற்கு ரூ.500 லஞ்சம் பெற்றுள்ளார். இது தொடர்பாக புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் சுப்பையா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். புதுக்கோட்டை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் குற்றம் சாட்டப்பட்ட சுப்பையாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    • வாலிபருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது
    • சிறுமிக்கு பாலியல் வன் கொடுமை

    புதுக்கோட்டை:

    கிருஷ்ணகிரிைய சேர்ந்தவர் அரசு (வயது 22). இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு தனியார் பேக்கரியில் வேலை செய்து வந்தார். கடந்த 2020-ல் 15 வயது சிறுமியை திருமணம் செய்து ெகாள்வதாக கூறி அவரை கடத்திச் ெசன்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து திருமயம் அனைத:து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அரசை கைது செய்தனர். புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பளித்தார். அதில், பாலியல் வன்கொடுமை செய்த அரசுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.2.5 லட்சம் அபராதமும் விதித்து அபராதத் தொகைகயை சிறுமிக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

    • பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்திற்கு தே.மு.தி.க.வின் ஆதரவு எப்போதும் உண்டு.
    • ஜனநாயகத்திற்கு முற்றிலுமாக ஒரு தேர்தல் நடந்தது என்றால் அது ஈரோடு இடைத்தேர்தல் தான்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆவின் பால் பிரச்சினைக்கு எதிர்க்கட்சி மேல் பழியை போடாமல் அமைச்சர் நாசர் மற்றும் தமிழக அரசுதான் விவசாயிகள் பிரரச்சினையை தீர்த்து ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்திற்கு தே.மு.தி.க.வின் ஆதரவு எப்போதும் உண்டு. சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு அதிகமாக உள்ளதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

    தேர்தல் நேரத்தில் நீட் தேர்வு ரத்து ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று கூறிய உதயநிதி தற்போது அனிதா பெயரில் மருத்துவமனையில் பெயர் பலகை திறந்தால் போதும் என்று நினைக்கிறார். இது கண்டனத்துக்குரியது.

    அகில இந்திய அளவில் நீட் தேர்வுக்கு ஆதரவு இருக்கும்போது, தமிழகத்தில் மட்டும் ரத்து செய்ய முடியுமா என்பது ஒரு கேள்விக்குறிதான். நீட் தேர்வை வைத்து அரசியல் செய்யாமல் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை குழப்பாமல் தமிழக அரசு நீட் பிரச்சினையில் நிலையான, தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும்.

    ஈரோடு கிழக்கு தேர்தலில் போட்டியிட பயந்து பல கட்சிகள் இருந்தபோது தைரியமாக தே.மு.தி.க. போட்டியிட்டது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேர்தலே கிடையாது. இதுவரை தமிழகத்தில் நடந்த இடைத்தேர்தல்களை மிஞ்சும் அளவிற்க்கு முறைகேடுகள் நடந்துள்ளது. தே.மு.தி.க. எவ்வளவோ இடைத்தேர்தலை சந்தித்துள்ளது.

    ஆனால் இதுபோன்ற இடைத்தேர்தலை நாங்கள் பார்த்தது இல்லை. மக்களை ஆடு, மாடுகள் போல பட்டியில் அடைத்து வைத்து கோடி கோடியாக செலவழித்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை தேர்ந்தெடுக்க வைத்துள்ளனர்.

    தற்போது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று கேள்விப்படும்போது மனது வருத்தமாக உள்ளது. நான் போட்டியிடவில்லை, எனக்கு உடல்நிலை சரியில்லை என்று அவர் கூறியபோதும் வம்படியாக இளங்கோவனை தேர்தலில் நிற்க வைத்து உள்ளது தி.மு.க.

    ஜனநாயகத்திற்கு முற்றிலுமாக ஒரு தேர்தல் நடந்தது என்றால் அது ஈரோடு இடைத்தேர்தல் தான். தேர்தல் ஆணையம் உள்ளதா என்ற கேள்விக்குறி தற்போது எழுந்துள்ளது.

    சொந்த கட்சி நிர்வாகிகளே காவல் நிலையத்திற்குள் புகுந்து அடித்து நொறுக்குவது, சொந்த கட்சி எம்.பி. வீட்டையே தாக்குதலுக்கு உள்ளாக்குவது தான் திராவிட மாடல். கலைஞர் உயிரோடு இருந்திருந்தால் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்குமா? இதற்கு முதலமைச்சர் பதில் கூற வேண்டும்.

    ஏற்கனவே தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியதுபோல் தற்போது புதுச்சேரியில் பெண் குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வைப்புத்தொகை அளிக்கப்படும் என்று கூறியுள்ளனர். அமைச்சர்கள் பலரும் மக்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு அவர்கள் நடவடிக்கை உள்ளது, இதுதான் திராவிட மாடல்.

    பேராசிரியர் ஒருவரை நடுரோட்டில் அடித்து இழுத்துச் சென்று அவர்களிடம் இருந்து நகைகளை பறித்து செல்லும் சம்பவமும் நடந்துள்ளது. தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை.

    அ.தி.மு.க. பிளவுபட்டு இருப்பது கட்சியை பலவீனப்படுத்தும். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே தி.மு.க.வை வீழ்த்த முடியும். ஒரே கூட்டணியில் இருந்து கொண்டு அ.தி.மு.க., பா.ஜ.க. விமர்சனம் செய்து கொள்வது இரண்டு கட்சியின் வளர்ச்சிக்கும் தடையாக இருக்கும்.

    பன்னிரண்டாம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 50,000 மாணவர்களுக்கு மேல் தேர்வு எழுத வராதது குறித்து, அதுவும் தமிழ் தேர்வு எழுத வராதது குறித்து தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை உடனடியாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழை வைத்து அரசியல் செய்யும் அனைத்து அரசியல்வாதிகளும், அரசும் இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மக்கள் மத்தியில் தேர்தல் குறித்த நம்பகத்தன்மை குறைந்து வருவது போல், மாணவர்கள் மத்தியில் தேர்வு குறித்த நம்பகத்தன்மை குறைந்து வருவதால் தான் தற்போது 12 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுது வராமல் உள்ளனர். அரசு 100 சதவீதம் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு உண்டான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திடீர் என அலுவலகத்திற்குள் புகுந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்
    • ஆய்வாளர் வீட்டின் பூட்டை உடைத்தும் சோதனை நடைபெற்றது

    ஆலங்குடி.

    ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இதில், ஆய்வாளராக நல்லதம்பி பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை 4.30 மணியளவில் திடீரென இந்த அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜவகர் பாபு, பீட்டர் தலைமையிலான போலீசார் வந்து சோதனையில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, ஆய்வாளர் வீட்டில் பூட்டை உடைத்து சோதனையில் ஈடுபட்டனர் மேலும். அலுவலக சோதனையில், சில ஆவணங்கள் சிக்கியதாக கூறப்ப டுகிறது.

    • வேங்கைவயல் விவகாரம் தொடர்பான பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது
    • அம்பேத்கர் மக்கள் இயக்கம் செயல் தலைவர் கண்டனம்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மர்ம ஆசாமிகள் அசுத்தம் செய்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் இது வரை கைது ெசய்ய வில்லை.

    வேங்கைவயல் பிரச்சனை தொடர்பாக அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பாக செயல் தலைவர் இளமுருகு முத்து தலைமையில் கீரனூரில் வரும் 19-ந் தேதி (ஞாயிற்று கிழமை) நடக்கவிருந்த கண்டன பொது கூட்டத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. இதற்கு கண்டம் தெரிவித்ததுடன் இதனை தொடர்ந்து அம்பேத்கர் மக்கள் இயக்கம் இன்று உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது என செயல் தலைவர் இளமுருகு முத்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • முடி திருத்துவோர் நல சங்கம் மாவட்ட தலைவர் கிரு ஷ்ணமூர்த்தி தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
    • கோவில் முடி எடுக்கும் தொழிலாளர்களையும் தவில் இசை கலைஞ ர்களையும் அரசு ஊழியர்களாக நியமிக்க வலியுறுத்தல்

    ஆலங்குடி,

    ஆலங்குடியில் மருத்துவர் சமூக நல சங்கத்தினர் மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாத னிட ம் மனு அளித்தனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினரும் அமைச் சருமான சிவ.வீ.மெய்யநாதனிடம் தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடி திருத்துவோர் நல சங்கம் மாவட்ட தலைவர் கிரு ஷ்ணமூர்த்தி தலைமையில் மனு அளிக்கப்பட்டது.

    கோரிக்கைகளான....எங்கள்சமூகத்தை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வகுப்பி ல் சேர்க்க வேண்டும். ஆந்திர பிரதேச அரசு வழங்கி உள்ளது போல் நமது அரசும் பிசிஆர் ஆக்ட் வழங்க வேண்டும்.

    கோவில் முடி எடுக்கும் தொழிலாளர்களையும் தவில் இசை கலைஞ ர்களையும் அரசு ஊழியர்களாக நியமிக்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    அப்போது மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் ஆலங்குடி நகர நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் இணைந்து மனு அளித்தனர்.

    • அன்னதானத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
    • பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி சுமந்து வந்து சாமி தரிசனம் செய்தனர்

    புதுக்கோட்டை

    திருவப்பூர்முத்துமாரியம்மன் திருவிழா பூச்சொரிதல் விழா நடைபெற்றது. பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி உள்ளிட்டவைகளை தலையில் சுமந்து வந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்காக ஆயிரக்கணக்கான நீர் மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தது. பானக்கம், கஞ்சி , நீர் மோர், பழங்கள் மற்றும் அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. திருக்கோகர்ணம் இல்லத்தில் நடந்த அன்னதானத்தை தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும் அமைச்சர் மெய்யநாதன் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை .முத்துராஜா, ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  

    • கறம்பக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது
    • கல்லூரியில் பயின்று வரும் மாற்று திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மருதன்கோன் விடுதியில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கல்லூரியில் பயின்று வரும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டியை கல்லூரியின் முதல்வர் முனைவர் சந்திர வதனம் மலர்கள் அனைத்தும் மலர்ந்து மனம் வீசுவது போல் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல அவர்களும் போட்டியில் வெற்றி பெறுவார்கள் என்று கூறி விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார். போட்டியில் கல்லூரியில் பயின்று வரும் அனைத்து துறையை சேர்ந்த 20 மாற்றுத்திறனாளி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் முனைவர் சுலோக்சனா தமிழ் துறை தலைவர் ரவி ஆங்கிலத் துறை தலைவர் முனைவர் கிருஷ்ணசாமி உடற்கல்வி இயக்குனர் மற்றும் பேராசிரியர்கள் தமிழ்ச்செல்வி சத்தியமூர்த்தி உமா மகேஸ்வரர் பாண்டி மாரியம்மாள் சுதாகர் மற்றும் அனைத்து துறை மாணவ மாணவியர்கள் கல்லூரி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • விராலிமலை செக்போஸ்டில் முகாம் நடைபெற்றது
    • முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாடு

    விராலிமலை, 

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை செக்போஸ்டில் சிவிபி அறக்கட்டளை மற்றும் ஜோசப் ஆரஞ்ச் கண் பரிசோதனை மையம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.இந்த முகாமை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தனது சிவிபி அறக்கட்டளை மூலம் ஏற்பாடு செய்திருந்தார்.இதில் மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு கண்புரை, சக்கரைநோய், மற்றும் கண்நீர் அழுத்த நோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து போன்ற நோய்களுக்கு இலவச சிகிச்சை அளித்தனர்.இதில் கலந்துகொண்ட கண் குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. இம்முகாமில் கண் குறைபாடுகள் உள்ள பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை முதல் மருந்துகள் வரை முழுவதுமே இலவசமாக வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆவின் சேர்மன் பழனியாண்டி, மாவட்ட கவுன்சிலர் சிவசாமி, ஒன்றிய செயலாளர் நாகராஜ், விராலிமலை ஊராட்சி மன்ற துணை தலைவர் தீபன் சக்ரவர்த்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் மணிகண்டன்,கல்குடி அய்யப்பன், ஆவின் ராஜா, ஐடி விங்க் அப்பு மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    • குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
    • வெள்ள பாதிப்பு நிவாரண நிதி ரூ.23 கோடி வழங்க உள்ளதாக தகவல்

    அறந்தாங்கி ,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கோட்டாட்சியர் சொர்ணராஜ் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் பகுதி குறை நிறைகளை கோரிக்கையாக முன்வைத்தனர்.அப்போது தமிழ்நாடு மாநில தென்னை விவசாயிகள் கூட்டமைப்பு செயலாளர் செல்லத்துரை பேசுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்தாண்டு அறுவடை நேரத்தில் பெய்த தொடர்மழையால் நெற்கதிர்கள் நீரில் மூழ்கி சேதமானது, இதனை அதிகாரிகள் மூலம் பாதிக்கப்பட்ட இடங்களை உரிய கணக்கெடுத்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ரூ23 கோடி வெள்ள நிவாரண நிதி வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது, அதற்கு விவசாயிகள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்,அதே சமயத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.அதனை தொடர்ந்து கல்லணைக்கால்வாய் பாசனதாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்க துணைச் செயலாளர் தென்றல் கருப்பையா கூறுகையில்,பெருமகளூர் ஏரிக்கு தெற்கு வரத்து வாரியில் முடியனாறு பிரிவில் சருக்கை கட்ட வேண்டும், இதனால் ராயன்வயல், ஆவுடையாணி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்க ஏதுவாக இருக்கும் என்றார். தொடர்ந்து ஏரி பாசன சங்கத் தலைவர்களின் கூட்டமைப்பு சங்க தலைவர் சுப்பையா பேசுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் வறட்சிக்கு காரணமான தைல மரங்களை அகற்ற வேண்டும் என்ற வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வாயிலாக தடை உத்தரவு பெறப்பட்டும் இதுவரை அவ்வகையான மரங்கள் பயிரிடப்பட்டு வருகிறது. இதனை தடுத்து நிறுத்தி தைல மரங்களை அடியோடு அகற்ற வேண்டும், மேலும் வேலி கருவை மரங்களையும் அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார்.இதே போன்று விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அதற்கு அந்தந்த துறை அதிகாரிகள் விளக்கமளித்தும் ,எதிர்வரும் காலங்களில் நிலைமை சரி செய்யப்படும் என உறுதியளித்தனர்.கூட்டத்தில் வட்டாட்சியர்கள் பாலகிருஷ்ணன், வில்லியம்மோசஸ், துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மோசடி தொடர்பாக 22க்கும் மேற்பட்ட வழக்கு
    • 4 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை

    ஆலங்குடி.

    புதுக்கோட்டை மாவட்டம்ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ஆலங்குடி ஆண்டிகுளத்தைச் சேர்ந்த நெல்லைமகன் பன்னீர் செல்வம்(வயது 60).இவர் மீது 22க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் உள்ள நிலையில் இன்று ஆண்டிக்குளத்தில் உள்ள பன்னீர்செல்வத்தின் வீடு, அவரது அலுவலகம் உள்ளிட்ட நான்கு இடங்களிலும் சென்னை வீட்டிலும் சோதனை நடைபெற்றது.சென்னை குற்றப் பிரிவு உதவி காவல் ஆணையர் ஜான் விக்டர் தலைமையில் மூன்று இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசார் சோதனை நடத்தி வருகின்ற னர். மோசடி வழக்கு தொடர்பாக இந்த, அதிரடி சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது.இந்த திடீர் சோதனை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் பங்கேற்பு
    • சிறப்பு அழைப்பாளராக திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப வீரபாண்டியன் கலந்து கொண்டார்

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திரு வரங்குளம் மேற்கு ஒன்றியம் ஆலங்குடி பேரூர் கழக சார்பில் ஆலங்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. தலைமை செயற்குழு உறுப்பினர் செல் வம் அனைவரையும் வரவேற்றார் . திருவரங்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் கேபிகேடி தங்கமணி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், சிறப்பு அழைப்பாளராக திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப வீரபாண்டியன் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் பேசும் போது,அழியாநிலையில் 40 கோடி மதிப்பீட்டில் 40 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குடோன் அமைக்கப்பட்டுள்ளது. ஆலங்குடியில் 15 கோடி மதிப்பீட்டில் செட்டிகுளம், கல்லுக்குண்டு கரை குளம், தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. புறவழிச்சாலைக்கு 75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த புறவழிச்சாலை பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.அமைச்சர் ரகுபதி பேசும் போது,ஆன்லைன் சூதாட்டத்தால் 44 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு குடும்பங்களை சீரழித்து வரும் ஆன்லைன் விளையாட்டை தடை செய்வதற்கான சட்ட மசோதா வை சட்டசபையில் நிறைவேற்றி மீண்டும் அனுப்ப உள்ளோம். இன்னும் 50 ஆண்டுகளுக்கு தி.மு.க.வை யாரும் அசைத்துக்கூட பார்க்க முடியாது என்றார்.கூட்டத்தில், மாவட்ட துணைச் செயலாளர் ஞான இளங்கோவன், மு ன்னாள் எம்எல்ஏ கவிதைபித்தன், திருவரங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் வடிவேல், மாவட்ட கவுன்சிலர் உஷா செல்வம், தி ஒன்றிய குழு பெருந்தலைவர் வள்ளியம்மை, பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம், துணைத்தலைவர் ராஜேஸ்வரி பழனிகுமார், கீரமங்கலம் பேரூராட்சி சிவக்குமார், ஆலங்குடி பேரூராட்சி கவுன்சிலர்கள், நகரத்துணை செயலாளர் செங்கோல், ஊராட்சி மன்ற தலைவர்கள் உட்பட பலர் கல ந்துகொண்டனர். நகரச்செயலாளர் பழனிகுமார் நன்றி கூறினார்.

    ×