search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுகூட்டம் நடத்த அனுமதி மறுப்பு
    X

    பொதுகூட்டம் நடத்த அனுமதி மறுப்பு

    • வேங்கைவயல் விவகாரம் தொடர்பான பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது
    • அம்பேத்கர் மக்கள் இயக்கம் செயல் தலைவர் கண்டனம்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மர்ம ஆசாமிகள் அசுத்தம் செய்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் இது வரை கைது ெசய்ய வில்லை.

    வேங்கைவயல் பிரச்சனை தொடர்பாக அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பாக செயல் தலைவர் இளமுருகு முத்து தலைமையில் கீரனூரில் வரும் 19-ந் தேதி (ஞாயிற்று கிழமை) நடக்கவிருந்த கண்டன பொது கூட்டத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. இதற்கு கண்டம் தெரிவித்ததுடன் இதனை தொடர்ந்து அம்பேத்கர் மக்கள் இயக்கம் இன்று உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது என செயல் தலைவர் இளமுருகு முத்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×